தொடர்கள்
Published:Updated:

புத்தக விமரிசனம்

புத்தக விமரிசனம்


சிறப்பு கட்டுரை
புத்தக விமரிசனம்


ஜடாரண்ய க்ஷேத்திரங்கள்

புத்தக விமரிசனம்

ஆசிரியர் கே. சாய்குமார்
வெளியீடு 16/28,
2-வது மெயின்ரோடு,
ஜெய்நகர், அரும்பாக்கம்,
சென்னை - 600 106
போன் 044-2475 7212
பக்கங்கள் 28 விலை ரூ.12/-

'ஷட்' என்றால் ஆறு; ஆரண்யம் என்றால் காடு. இதுவே மருவி ஆற்காடு என்றானது. ஆக, ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் எனும் இந்த நூல், வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத் தலங்களைச் சொல்கிறது. அகத்தியர், காஸ்யபர் முதலான ஏழு முனிவர்கள் வழிபட்ட தலங்களின் பெருமைகள் மற்றும் உள்ள ஆலயங்களின் விவரங்கள், அர்ச்சகர்களின் தொலைபேசி எண்கள் எனத் தந்துள்ள விதம் பாராட்டுக்கு உரியது!


ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணன் துதிகள்

புத்தக விமரிசனம்

தொகுப்பு டி. ரங்கச்சாரி
வெளியீடு புதிய எண்.49,
பழைய எண்.36,
கீழச் சித்திரை வீதி,
ஸ்ரீரங்கம், திருச்சி - 6
போன் 0431-2433 584
பக்கங்கள் 32 விலை ரூ.10/-

வைஷ்ணவப் பெருமக்களால் கொண்டாடப்படும் ஸ்ரீமத் பாகவதத் தில், கண்ணனைப் போற்றி வணங்கும் வகையிலான துதிகளை விவரிக்கிறது இந்த நூல். குந்தி, பீஷ்மர், அக்ரூரர் மற்றும் முசுகுந்தர் முதலானோர் ஸ்ரீகிருஷ்ணரை எப்படித் துதித்தனர் என்பதை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்குகிறார் ஆசிரியர். இன்னும் தெளிவாக, விவரமாக, அதிக பக்கங்களுடன் தந்திருக்கலாம். நல்ல முயற்சி!


சக்தினி பாதம்

புத்தக விமரிசனம்

ஆசிரியர் பிரபோதரன் சுகுமார்
வெளியீடு அயக்கிரீவா பதிப்பகம்
108/76, பெரிய தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005
போன் 044-2844 4275
பக்கங்கள்208 விலை ரூ.90/-

யற்கையும் மனிதனும் ஒன்றே; பிரபஞ்சத்துக்கும் உடலுக்கும் தொடர்பு உண்டு; சித்தர்களும் ரிஷிகளும் கையாண்ட ஸ்ரீவித்தை, யோக மார்க்கம் ஆகியவற்றை விவரிக்கும் நூல். பஞ்சபூத கட்டமைப்புடன் உள்ள தேகம், அதன் ஒவ்வொரு சக்தியும் சூழலும் என்ன, பிரம்ம தத்துவம், வித்யா தத்துவம், ஆத்ம தத்துவம், தேக தத்துவம், சுவாச நிலை, ஸ்ரீவித்யா உபாசனையின் முக்கிய நிலையான சோடச நிலை என சகலத்தையும் விவரித்துள்ளார் ஆசிரியர்.


ராமாயணம் (ஹரி கதாகாலட்சேபம்) சி.டி.

புத்தக விமரிசனம்

வெளியீடு த்வனி ஆடியோ,
43/30, பிளாட் - 15,
3-வது தெரு, அபிராமபுரம்,
சென்னை - 600 018
போன் 044- 2499 6963
விலை ரூ.299/-

சனையுடன் கதாகாலட்சேபம் செய்வதில், திருவையாறு அண்ணாஸ்வாமி பாகவத ருக்கு தனியிடம் உண்டு. ஸ்ரீராம ஜனனம், சீதா கல்யாணம், கைகேயி வரம், சபரி மோட்சம், சுக்ரீவ பட்டாபிஷேகம், ஹனுமன் இலங்கைப் பிரவேசம், விபீஷண சரணாகதி, ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்... என கதையும் பாடலும், நையாண்டியும் சோகமும் கலந்து சொல்லப்பட்ட இந்த ராமாயண கதாகாலட்சேபம், 4 டிஸ்க்கு களாக தரப்பட்டுள்ளது; அருமையான முயற்சி. பெரியவர்கள், வெளிநாட்டு நட்பு மற்றும் உறவுகள், குழந்தைகள் ஆகியோருக்குப் பரிசாகத் தரலாம்.

புத்தக விமரிசனம்