சிறப்பு கட்டுரை
Published:Updated:

மழலை வரம் தரும் அச்வத்த ஸ்தோத்திரம்!

மழலை வரம் தரும் அச்வத்த ஸ்தோத்திரம்!

ஜாதகத்தில் 5ம் இடம் என்பது புத்திர ஸ்தானம் ஆகும். நவகிரகங்களில் முதல் சுபக் கிரகமான குரு, புத்திர காரகன் எனப்படுவார். புத்திரகாரகனான குருவும் புத்திர ஸ்தானாதிபதியான 5ம் வீட்டோனும் பலம் குறைந்து 6, 8, 12ம் இடங்களில் இருக்கும்போது, புத்திரத் தடை ஏற்படும்.

மழலை வரம் தரும் அச்வத்த ஸ்தோத்திரம்!

 இதுபோன்று மேலும் பல ஜாதகக் குறைபாடுகளால் புத்திர சம்பத்து இல்லாத தம்பதிகள், அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது சிறப்பு. அப்படி வலம் வரும்போது சொல்ல வேண்டிய அச்வத்த

மழலை வரம் தரும் அச்வத்த ஸ்தோத்திரம்!

ஸ்தோத்திரம் ஒன்று உண்டு. இதை ஜபித்துக் கொண்டே ஏழு எண்ணிக்கைக்கு குறையாமல், 108 எண்ணிக்கை வரையிலும் அரச மரத்தை வலம் வருவதால், விரைவில் புத்திர சம்பத்து உண்டாவதுடன், வயிற்றுவலி முதலான உபாதைகளும் நீங்கும்.

இந்த அச்வத்த ஸ்தோத்திரம் 11 ஸ்லோகங் கள் கொண்டது. இதை முழுவதையும் ஜபிக்க இயலாவிட்டாலும் 5வது ஸ்லோகத்தை மட்டுமாவது ஜபித்து, அரச மரத்தை வலம் வந்து வழிபடலாம். அந்த ஸ்லோகம் உங்களுக்காக...

மூலதோ ப்ரஹ்மரூபாய மத்யதோ விஷ்ணுருபிணே

அக்ரத: ஸிவரூபாய வ்ருஷராஜாயதே நம:

கருத்து: அடியில் பிரம்மதேவ ரூபமாகவும், நடுவில் விஷ்ணு ரூபமாகவும், மேற்பகுதி சிவரூபமாகவும் திகழும்... மரங்களுக்கு அரசனான தங்களை வணங்குகிறேன்.

அபர்ணா, சென்னை- 91