ஜனவரி-19 முதல் பிப்ரவரி-1 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்
நேர்மையாளர்களே!

உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 10-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்றிருப்பதால், உங்களின் நிர்வாகத் திறன் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண வரவு உண்டு. வீடு கட்ட பூமி பூஜை போடுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்து வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மகளுக்கு நல்ல வரன் அமை யும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.
புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயல்வீர்கள். நட்பு வகையில் நல்ல செய்தி கேட்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் உண்டு.
குரு 6-ல் மறைந்திருப்பதால், அடுக்கடுக்காக செலவுகள், ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு வேலைச்சுமை, சில நேரங்களில் தூக்கமின்மை வந்து செல்லும். 7-ல் செவ்வாய் நிற்பதால், வாழ்கைத்துணையுடன் வீண் பிரச்னைகள் எழலாம்; எதிர்மறை எண்ணங்கள், வீண் சந்தேகம், மனஸ்தாபம் போன்றவை வரக்கூடும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும்.
கடின உழைப்பால் இலக்கை எட்டும் காலம் இது.
எதிர்நீச்சல் போடுபவர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் முன்மொழியப் படும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு கட்ட அப்ரூவலுக்கு அனுப்பியிருந்த கட்டட வரைபடத்துக்கு முறைப்படி அனுமதி கிடைக்கும்.
ஆனாலும், 7-ல் சனி நிற்பதால், சில நேரங்களில் சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம்.
செவ்வாய் 6-ல் நிற்பதால், வாழ்க் கைத் துணைவர் வழியில் உதவி உண்டு. சகோதரருக்கு திருமணம் முடியும். வழக்கு சாதகமாகும். புதன் சாதகமாக இருப்பதால், பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். சூரியன் 9-ம் வீட்டில் தொடர்வதால், தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். சேமிப்புகள் கரையும். குரு அதிசாரத்தில் 5-ல் நிற்பதால், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். வேலையாட்கள் எதிர்த்துப் பேசுவார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் மதிப் பார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.
தடைப்பட்ட காரியங்கள் முடியும் வேளை இது.
வள்ளல் குணம் உள்ளவர்களே!

தைரிய ஸ்தானமான 3-ம் வீட்டில் ராகு அமர்ந்ததால், சவாலான விஷயங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். வி.ஐ.பி.்களால் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த பணம் வரும்.
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். 5-ல் செவ்வாய் நிற்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சனி 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்களால் உதவிகள் உண்டு. பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால், எதிரிகளின் தொல்லை நீங்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு.
வியாபாரத்தில் வாடிக்கையாளர் களைக் கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூ லாகும். புது பங்குதாரர் இணைவார். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.
விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் நேரம் இது.
மனசாட்சி உள்ளவர்களே!

யோகாதிபதியான செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், சகோதரர்கள் உங்களின் உண்மையான அன்பை, பாசத்தைப் புரிந்து கொள்வார்கள். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
சுக்ரனும், புதனும் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதுடன், சூரியனும் 7-ல் நிற்பதால், வேனல் கட்டி, தொண்டை வலி, சளித் தொந்தரவு, தலைவலி வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தந்தை வழியில் உதவிகள் உண்டு.
குரு பகவான் சாதகமாக இல்லாததால், கடன் கொடுப்பது வாங்குவது போன்றவற்றைத் தவிர்க் கவும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
வியாபாரத்தில், நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் தரப்பில் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். பங்குதாரர்களிடம் வீண் பிரச்னைகள் வேண்டாம். அவர்களை அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில், கடுமை யான பணிகளும் வேலைச் சுமைகளும் இருந்தாலும் உங்களுக்கு மேலதிகாரி யின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம், சக ஊழியர்களின் செயல்பாடுகளில், அவர்களது சொந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். அவர் களைக் குறை கூறுவதையும் தவிர்க்க வும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.
பக்குவமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.
தன்மானம் மிக்கவர்களே!

ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பண பலம் உயரும். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.
கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்னியம் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தரு வீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புதன் சாதகமாக இருப்பதால், உறவினர், நண்பர்களின் ஆதரவு பெருகும்.
செவ்வாய் ராசிக்கு 3-ம் வீட்டில் இருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். சகோதரர்கள் மதிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய சொத்து வாங்கு வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், நெஞ்சுவலி, செரிமானக் கோளாறு, வாழ்க்கைத் துணைக்கு டென்ஷன், மன இறுக்கம் வந்து செல்லும்.
வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் புதுப் பொறுப்பை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கலைத் துறையினரே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.
திடீர்த் திருப்பங்கள் நிகழும் நேரம் இது.
மண் வாசனை மாறாதவர்களே!

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சூரியன் 5-ல் இருப்பதால், பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. சனி வலுவாக 3-ல் அமர்ந்திருப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வேற்று மொழி இனத்தவரால் ஆதாயம் உண்டு.
2-ல் செவ்வாய் தொடர்வதால், தவிர்க்க முடியாத செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். பார்வைக் கோளாறு வந்து செல்லும். சகோதரர் களுடன் பகைமை வரக்கூடும். அதிசாரத்தில் குரு பகவான் ராசிக்குள் அமர்ந்திருப்பதால், குடும்பத்தில் சலசலப்புகள், காய்ச்சல், கை, கால் வலி வந்து போகும். எனினும், புது நட்பு மலரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி லாபம் கணிசமாக உயரும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் காலம் இது.
கலாரசிகர்களே!

ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், தொட்ட காரியம் துலங்கும். கல்வி யாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப நிகழ்ச்சி, பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.
அரசால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர் உதவியாக இருப்பார். சுக்ரன் சாதகமாக இருப்பதால், உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். வாழ்க்கைத் துணை வழியில் உதவி கிடைக்கும்.
ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் எதிலும் நம்பிக்கையின்மை, வீண் கவலைகள், ஒருவித படபடப்பு, சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். 12-ல் குரு பகவான் நிற்பதால், தூக்கம் குறையும். பழைய கடன்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலை யாட்களை மாற்றுவீர்கள். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தி யோகத்தில் நேரம்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே, என்று ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய தருணம் இது.
சொன்ன சொல் தவறாதவர்களே!

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்ட நாள் கனவு நனவாகும். பழுதான வண்டியை மாற்று வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நி யோன்யம் நிலவும். ஈகோ பிரச்னை தீரும். பழுதான மின்னணு சாதனங் களை மாற்றுவீர்கள்.
யோகாதிபதி சூரியன் 3-ல் நிற்பதால், புது வேலை கிடைக்கும். அரசாங்க வேலைகள் உடனே முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும்.
ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால், மனதில் கலக்கமும், சின்னச் சின்ன ஏமாற்றங்களும் வந்த வண்ணமிருக்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்; கொடுக்கல் வாங்கலில் மிகக் கவனம் தேவை.
வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவர். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.
சமயோசித புத்தியால் சாதிக்கும் வேளை இது.
தர்மத்துக்குத் தலை வணங்குபவர்களே!

2-ல் சூரியன் நிற்பதால், பேச்சில் நிதானம் தேவை. அவசரப்பட்டுப் பேசி மற்றவர்களின் எதிர்ப்பைத் தேடிக்கொள்ளும் நிலை ஏற்படும். கண்பரிசோதனை செய்துகொள்வது அவசியம். பல் வலி சரியாகும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணைவர் வழியில் செல்வாக்கு கூடும். புது வேலை அமையும். பூர்வீகச் சொத்தை புதுப்பிப் பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை தந்து முடிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது, வீடு மாறுவது போன்ற முயற்சிகள் நிறைவேறும்.
கல்யாண பேச்சுவார்த்தை சுமுக மாக முடியும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். கேது 3-ம் வீட்டில் இருப்பதால், வீடு, மனை வாங்க கடன் கிடைக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்து வீர்கள்.
பணியாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும்.
சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரம் இது.
மென்மையாகப் பழகுபவர்களே!

குரு சாதகமாக இருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.
வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், வேலைச்சுமை, காரியத் தாமதம் வந்து செல்லும். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். எட்டில் நிற்கும் ராகுவும், 2-ல் நிற்கும் கேதுவும் உங்களின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும். பிறரின் தவறுகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லவும்.
ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல் பட்டவர்களை ஒதுக்குவீர்கள். தடைப் பட்ட உயர்கல்வியைத் தொடர்வீர்கள். வியாபாரத்தில் கூடுதலாக லாபம் பெறுவீர்கள்.
வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் பரவலாகப் பாராட்டிப் பேசப்படும்.
தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் வேளை இது.
இரக்க குணம் உள்ளவர்களே!

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். ராசிக்கு 12-ல் சூரியன் நிற்பதால், உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து போகும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். ராசிநாதன் சனிபகவான் 10-ல் நிற்பதால், மனோபலம் அதிகரிக்கும். கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
குரு 8-ல் நிற்பதால், வீண் விரயம், வேலைச்சுமை, திடீர்ப் பயணங்கள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால், அசதி, சோர்வு, வயிற்றுப் புண், வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள் வந்து போகும்.
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் தவறை அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.
முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களே!

சூரியன் லாப வீட்டில் நிற்பதால், மேல் மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகும். பண வரவு உயரும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.
குடும்பத்தில் மதிப்பு கூடும். பிள்ளைகள் உங்கள் மனம் அறிந்து நடந்துகொள்வர். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ், செல்போன் வாங்குவீர்கள். ராகு 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்த்தவர்கள் மனம் திருந்தி உங்களிடம் மன்னிப்புக் கேட்பார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள்.
7-ல் குரு நிற்பதால், சொந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். 8-ல் செவ்வாய் தொடர்வதால், சகோதர வகையில் பிணக்குகள், சொத்துச் சிக்கல்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.
புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் தருணம் இது.