<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ந</strong></span>ல்ல வேலை, கைநிறைய சம்பளம், உத்தியோகத்தில் உயர்வு, அதிகாரிகளிடமும் நிர்வாகத்திடமும் நல்ல பெயரும் புகழும் கிடைக்க ஜாதகத்தில் குருபலம் தேவை. இதற்கெல்லாம் காரகத்துவம் உடையவர் குரு பகவான்தான். குரு பார்க்கக் கோடி புண்ணியம் என்றும், குரு கொடுப்பதில் வல்லவர் என்றும், வித்தை ஞானம், புகழ், கீர்த்தி, பெருமை, செல்வாக்கு, மேன்மை, செல்வம் ஆகியவற்றை வாரி வழங்குபவர் குரு என்றும் ஜோதிடக் கிரந்தங்கள் கூறுவதைக் காணும்போது, குருவின் திருவருளால் நல்லதொரு வேலை வாய்ப்பையும் நாம் பெற முடியும் என்று அறியலாம்.<br /> <br /> ஜாதக ரீதியாக குருபகவான் ஒவ்வொருவரது வாழ்விலும் 16 ஆண்டுகள் தனது தசையை நடத்திச் செல்கிறார். அவரை வழிபட, நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும்.</p>.<p>மேலும், குரு சில அம்சங்களில் தனது பலனைத் தராமலும் இருப்பார். அதாவது, ஜீவன ஸ்தானதிபதி 6, 8, 12-ல் மறைந்து பகை- நீசம் பெற்று, சுபர் சேர்க்கை இல்லாமல் பாவ கிரகங்களின் பார்வை ஏற்பட்டால், பணி நிரந்தரமாக அமையாமல் போகலாம். அதேபோன்று லக்னம், 12 ஆகிய இடங்களில் எது அமைந்தாலும், சூரியனும் செவ்வாயும் கூடி நின்றால், சில காலம் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு, சுமாரான பணிக்குச் செல்ல நேரிடும்.<br /> <br /> 10-க்கு உடைய கிரகம் 4-ல் அமர்ந்திருக்க... அந்த ஜாதகர் தன் அறிவாலும் ஆற்றலாலும் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கும்போது, திடீரென பதவி பறிபோகும் நிலைக்கு ஆளாவார். இதற்கு, மகரத்தில் பலவீனம் அடைந்த குரு காரணமாகி விடுவார். இதுபோன்ற தருணங்களில், குரு பகவானை வழிபட்டு, நல்ல பலன்களை அடையலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எப்படி வழிபடுவது?</strong></span><br /> <br /> மனைப் பலகை ஒன்றைச் சுத்தம் செய்து, அதன் மீது குரு யந்திரக் கட்டத்தை அரிசி மாவால் வரைந்துகொள்ள வேண்டும் (படத்தில் உள்ளது போன்று). ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள எண்களின் மீது நான்கு கொண்டைக்கடலை வைத்து, கட்டத்தின் மையத்தில் நெய் தீபம் ஏற்றிவைக்க வேண்டும். குருபகவான் திருவுருவப் படம் இருந்தால், பூ-பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பிப்பது விசேஷம்! அதேபோன்று சந்தனம், மலர்கள் சாற்றப்பட்ட குரு யந்திரத்தையும் மனைப் பலகையின் ஓரத்தில் சாய்த்து வைத்துக்கொள்ளவும்.<br /> <br /> முதலில், ‘ஓம் கம் கணபதயே நம:’ என மூன்று முறை கூறி விநாயகரை வழிபட வேண்டும். பிறகு, ‘ஓம் நம ப்ரணவார்த்தாய சுத்த ஜ்ஞானைக மூர்த்தயே நிர்மலாய ப்ரசாந்தாய தட்சிணாமூர்த்தயே நம:’ என்ற ஸ்லோகத்தையும் மூன்று முறை கூறி, ஆதிகுருவாம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவானைத் துதிக்கவேண்டும். பின்னர்...<br /> <br /> <em>ஓம் அறிவுறுவே போற்றி<br /> ஓம் அடைக்கலமே போற்றி<br /> ஓம் அருளாளனே போற்றி<br /> ஓம் ஆதி பகவனே போற்றி<br /> ஓம் ஆதாரனே போற்றி<br /> ஓம் ஆனந்த உருவே போற்றி<br /> ஓம் பணிக்குருவே போற்றி<br /> ஓம் பாதுகாப்பாளனே போற்றி<br /> ஓம் கலைக் குருவே போற்றி<br /> ஓம் மஞ்சள் பிரியனே போற்றி<br /> ஓம் குணநிதியே போற்றி<br /> ஓம் தியான மூர்த்தியே போற்றி<br /> ஓம் தென்முக நாயகனே போற்றி<br /> ஓம் நான்மறைப் பொருளே போற்றி<br /> ஓம் கங்காதரனே போற்றி<br /> ஓம் காவலாய் இருப்பவனே போற்றி<br /> ஓம் தனுர் நாதனே போற்றி<br /> ஓம் தயை புரிவாய் போற்றி</em><br /> <br /> - என போற்றி நாமாவளிகள் கூறி வணங்கி, மஞ்சள் மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து, ஆரத்தி காட்டவேண்டும்.<br /> <br /> பிறகு, குரு மூல மந்திரத்தை 32 முறை படிக்கவேண்டும். அதன் பிறகு, பிரகஸ்பதி கவசத்தை ஒருமுறை படிப்பது விசேஷம். இந்தப் பூஜையை வியாழக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்யவும். அத்துடன், மூலமந்திரத்தையும் தியானத்தையும் தினமும் சொல்லி வர வேண்டும். விரைவில் வேலையில் அமர வேண்டும் என்று கருதுபவர்கள், ஐந்து மஞ்சள் வண்ண மலர்கள் வைத்து வெற்றிலை- பாக்கு, பழம் நிவேதனம் செய்து, 45 தினங்கள் இந்த பூஜையைத் தொடரலாம்.<br /> <br /> இந்த பூஜையால் விரைவில் நல்ல வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடத்துக்கு இட மாற்றம், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடம் அங்கீகாரம், நல்ல பெயர், பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியம் முதலானவை தாமதம் இல்லாமல் கிடைத்தல் ஆகிய பலன்களைப் பெறலாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மூல மந்திரம்</strong></span><br /> <em>ஓம் ஸ்ரீம் கும் நமோ பகவதே ஸ்ரீத்யான ரூபிணே<br /> சிந்முத்ராங்கித ரூபே உத்யோக குரவே ஸ்ரீம் கும்<br /> மம நட்சத்திர ராசௌ மம ஜென்ம ஸ்திர உத்யோகம்<br /> குரு குரு ஸ்வாஹா</em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> பிரஹஸ்பதி கவசம்</strong></span><br /> <em>ப்ருஹஸ்பதி சிர: பாது லலாடம் பாதுமே குரு<br /> கர்ணௌ சுரகுரு: பாது: நேத்ரேமே அபீஷ்ட தாயக:<br /> நாசாம்பாது சுராசார்ய ஜிஹ்வாமே வேதபாரக:<br /> முகம் மே பாது ஸர்க்ஞா: புஜவ்பாது சுபப்ரத<br /> கரௌ வஜ்ரதர: பாது பக்ஷளமே பாதுகிஷ்பதி<br /> ஸ்தனௌமே பாதுவாகீச குஷிம்மே சுபலக்ஷண:<br /> நாபிம்பாது அநீதிக்ஞ கடிம்மே பாதுசர்வத:<br /> ஊரூமே பாது புண்யாத்மா ஜங்கேமே ஜ்ஞாநத ப்ரபு:<br /> பாதௌமே பாதுவிஸ்வாத்மா ஸர்வாங்கம் ஸர்வதா குரு</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ந</strong></span>ல்ல வேலை, கைநிறைய சம்பளம், உத்தியோகத்தில் உயர்வு, அதிகாரிகளிடமும் நிர்வாகத்திடமும் நல்ல பெயரும் புகழும் கிடைக்க ஜாதகத்தில் குருபலம் தேவை. இதற்கெல்லாம் காரகத்துவம் உடையவர் குரு பகவான்தான். குரு பார்க்கக் கோடி புண்ணியம் என்றும், குரு கொடுப்பதில் வல்லவர் என்றும், வித்தை ஞானம், புகழ், கீர்த்தி, பெருமை, செல்வாக்கு, மேன்மை, செல்வம் ஆகியவற்றை வாரி வழங்குபவர் குரு என்றும் ஜோதிடக் கிரந்தங்கள் கூறுவதைக் காணும்போது, குருவின் திருவருளால் நல்லதொரு வேலை வாய்ப்பையும் நாம் பெற முடியும் என்று அறியலாம்.<br /> <br /> ஜாதக ரீதியாக குருபகவான் ஒவ்வொருவரது வாழ்விலும் 16 ஆண்டுகள் தனது தசையை நடத்திச் செல்கிறார். அவரை வழிபட, நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும்.</p>.<p>மேலும், குரு சில அம்சங்களில் தனது பலனைத் தராமலும் இருப்பார். அதாவது, ஜீவன ஸ்தானதிபதி 6, 8, 12-ல் மறைந்து பகை- நீசம் பெற்று, சுபர் சேர்க்கை இல்லாமல் பாவ கிரகங்களின் பார்வை ஏற்பட்டால், பணி நிரந்தரமாக அமையாமல் போகலாம். அதேபோன்று லக்னம், 12 ஆகிய இடங்களில் எது அமைந்தாலும், சூரியனும் செவ்வாயும் கூடி நின்றால், சில காலம் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு, சுமாரான பணிக்குச் செல்ல நேரிடும்.<br /> <br /> 10-க்கு உடைய கிரகம் 4-ல் அமர்ந்திருக்க... அந்த ஜாதகர் தன் அறிவாலும் ஆற்றலாலும் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கும்போது, திடீரென பதவி பறிபோகும் நிலைக்கு ஆளாவார். இதற்கு, மகரத்தில் பலவீனம் அடைந்த குரு காரணமாகி விடுவார். இதுபோன்ற தருணங்களில், குரு பகவானை வழிபட்டு, நல்ல பலன்களை அடையலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எப்படி வழிபடுவது?</strong></span><br /> <br /> மனைப் பலகை ஒன்றைச் சுத்தம் செய்து, அதன் மீது குரு யந்திரக் கட்டத்தை அரிசி மாவால் வரைந்துகொள்ள வேண்டும் (படத்தில் உள்ளது போன்று). ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள எண்களின் மீது நான்கு கொண்டைக்கடலை வைத்து, கட்டத்தின் மையத்தில் நெய் தீபம் ஏற்றிவைக்க வேண்டும். குருபகவான் திருவுருவப் படம் இருந்தால், பூ-பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பிப்பது விசேஷம்! அதேபோன்று சந்தனம், மலர்கள் சாற்றப்பட்ட குரு யந்திரத்தையும் மனைப் பலகையின் ஓரத்தில் சாய்த்து வைத்துக்கொள்ளவும்.<br /> <br /> முதலில், ‘ஓம் கம் கணபதயே நம:’ என மூன்று முறை கூறி விநாயகரை வழிபட வேண்டும். பிறகு, ‘ஓம் நம ப்ரணவார்த்தாய சுத்த ஜ்ஞானைக மூர்த்தயே நிர்மலாய ப்ரசாந்தாய தட்சிணாமூர்த்தயே நம:’ என்ற ஸ்லோகத்தையும் மூன்று முறை கூறி, ஆதிகுருவாம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவானைத் துதிக்கவேண்டும். பின்னர்...<br /> <br /> <em>ஓம் அறிவுறுவே போற்றி<br /> ஓம் அடைக்கலமே போற்றி<br /> ஓம் அருளாளனே போற்றி<br /> ஓம் ஆதி பகவனே போற்றி<br /> ஓம் ஆதாரனே போற்றி<br /> ஓம் ஆனந்த உருவே போற்றி<br /> ஓம் பணிக்குருவே போற்றி<br /> ஓம் பாதுகாப்பாளனே போற்றி<br /> ஓம் கலைக் குருவே போற்றி<br /> ஓம் மஞ்சள் பிரியனே போற்றி<br /> ஓம் குணநிதியே போற்றி<br /> ஓம் தியான மூர்த்தியே போற்றி<br /> ஓம் தென்முக நாயகனே போற்றி<br /> ஓம் நான்மறைப் பொருளே போற்றி<br /> ஓம் கங்காதரனே போற்றி<br /> ஓம் காவலாய் இருப்பவனே போற்றி<br /> ஓம் தனுர் நாதனே போற்றி<br /> ஓம் தயை புரிவாய் போற்றி</em><br /> <br /> - என போற்றி நாமாவளிகள் கூறி வணங்கி, மஞ்சள் மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து, ஆரத்தி காட்டவேண்டும்.<br /> <br /> பிறகு, குரு மூல மந்திரத்தை 32 முறை படிக்கவேண்டும். அதன் பிறகு, பிரகஸ்பதி கவசத்தை ஒருமுறை படிப்பது விசேஷம். இந்தப் பூஜையை வியாழக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்யவும். அத்துடன், மூலமந்திரத்தையும் தியானத்தையும் தினமும் சொல்லி வர வேண்டும். விரைவில் வேலையில் அமர வேண்டும் என்று கருதுபவர்கள், ஐந்து மஞ்சள் வண்ண மலர்கள் வைத்து வெற்றிலை- பாக்கு, பழம் நிவேதனம் செய்து, 45 தினங்கள் இந்த பூஜையைத் தொடரலாம்.<br /> <br /> இந்த பூஜையால் விரைவில் நல்ல வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடத்துக்கு இட மாற்றம், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடம் அங்கீகாரம், நல்ல பெயர், பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியம் முதலானவை தாமதம் இல்லாமல் கிடைத்தல் ஆகிய பலன்களைப் பெறலாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மூல மந்திரம்</strong></span><br /> <em>ஓம் ஸ்ரீம் கும் நமோ பகவதே ஸ்ரீத்யான ரூபிணே<br /> சிந்முத்ராங்கித ரூபே உத்யோக குரவே ஸ்ரீம் கும்<br /> மம நட்சத்திர ராசௌ மம ஜென்ம ஸ்திர உத்யோகம்<br /> குரு குரு ஸ்வாஹா</em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> பிரஹஸ்பதி கவசம்</strong></span><br /> <em>ப்ருஹஸ்பதி சிர: பாது லலாடம் பாதுமே குரு<br /> கர்ணௌ சுரகுரு: பாது: நேத்ரேமே அபீஷ்ட தாயக:<br /> நாசாம்பாது சுராசார்ய ஜிஹ்வாமே வேதபாரக:<br /> முகம் மே பாது ஸர்க்ஞா: புஜவ்பாது சுபப்ரத<br /> கரௌ வஜ்ரதர: பாது பக்ஷளமே பாதுகிஷ்பதி<br /> ஸ்தனௌமே பாதுவாகீச குஷிம்மே சுபலக்ஷண:<br /> நாபிம்பாது அநீதிக்ஞ கடிம்மே பாதுசர்வத:<br /> ஊரூமே பாது புண்யாத்மா ஜங்கேமே ஜ்ஞாநத ப்ரபு:<br /> பாதௌமே பாதுவிஸ்வாத்மா ஸர்வாங்கம் ஸர்வதா குரு</em></p>