<p><span style="color: #ff0000"><strong>ந</strong></span>வகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர். ஜாதகத்தில் குருபகவான் சுப பலம் பெற்று, நல்ல இடத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் மற்றவர்கள் போற்றும்படியாக வாழ்வர்.</p>.<p>குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடத்துக்கே அதிகம் நன்மை புரிவார். குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்வையிடுவார்.</p>.<p>ஒருவரின் சுய ஜாதகத்திலும் சரி, கோசாரப்படியும் சரி, குரு தன் பார்வையால் வழங்கக்கூடிய பலன்கள்:</p>.<p>1-ம் இடத்தை, அதாவது ஜன்ம ராசியைப் பார்த்தால், பேரும் புகழும் உண்டாகும். அந்தஸ்து, மதிப்பு உயரும்.</p>.<p>2-ம் இடத்தை, குடும்ப ஸ்தானத்தைப் பார்த்தால், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.</p>.<p>3-ம் இடத்தை, தைரிய ஸ்தானத்தைப் பார்த்தால், எதிரிகளின் தொல்லை விலகும்.</p>.<p>4-ம் இடத்தை, சுக ஸ்தானத்தைப் பார்க்கும்போது வீடு- மனை வாங்கும் யோகமும், வாகன பிராப்தியும் ஏற்படும்.</p>.<p>5-ம் இடத்தை, பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்குக் குருவருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்து வகையில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி, அந்தச் சொத்து கைக்கு வரும்.</p>.<p>6-ம் இடத்தில், ருண ரோக ஸ்தானத்தில் குருவின் பார்வை படும்போது, நீண்டகாலமாக உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் பூரண நலம் பெறுவர்.</p>.<p>7-ம் இடத்தை, களத்திர ஸ்தானத்தை குரு பார்க்க, பெற்றோர் ஆசிகளுடன் நல்ல மணவாழ்க்கை அமையும்.</p>.<p>8-ம் இடத்தை, ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கும்போது, மரண பயம் நீங்கும்; விபத்துகள் ஏற்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்.</p>.<p>9-ம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.</p>.<p>10-ம் இடத்தை, ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும்போது, பதவியில் உயர்வும் நல்ல மாற்றமும் ஏற்படும். பெற்றோரின் உடல்நிலை சீராகும்.</p>.<p>11-ம் இடத்தை, லாப ஸ்தானத்தைப் பார்க்கும்போது, எதிர்பாராத பொருள்வரவு போன்ற சுப பலன்கள் ஏற்படும்.</p>.<p>12-ம் இடத்தில், சயன மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை பதியும்போது, ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்; தெய்வ தரிசனமும் மகான்களின் அருளாசிகளும் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஜோதிடமாமணி கிருஷ்ணதுளசி</strong></span></p>
<p><span style="color: #ff0000"><strong>ந</strong></span>வகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர். ஜாதகத்தில் குருபகவான் சுப பலம் பெற்று, நல்ல இடத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் மற்றவர்கள் போற்றும்படியாக வாழ்வர்.</p>.<p>குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடத்துக்கே அதிகம் நன்மை புரிவார். குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்வையிடுவார்.</p>.<p>ஒருவரின் சுய ஜாதகத்திலும் சரி, கோசாரப்படியும் சரி, குரு தன் பார்வையால் வழங்கக்கூடிய பலன்கள்:</p>.<p>1-ம் இடத்தை, அதாவது ஜன்ம ராசியைப் பார்த்தால், பேரும் புகழும் உண்டாகும். அந்தஸ்து, மதிப்பு உயரும்.</p>.<p>2-ம் இடத்தை, குடும்ப ஸ்தானத்தைப் பார்த்தால், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.</p>.<p>3-ம் இடத்தை, தைரிய ஸ்தானத்தைப் பார்த்தால், எதிரிகளின் தொல்லை விலகும்.</p>.<p>4-ம் இடத்தை, சுக ஸ்தானத்தைப் பார்க்கும்போது வீடு- மனை வாங்கும் யோகமும், வாகன பிராப்தியும் ஏற்படும்.</p>.<p>5-ம் இடத்தை, பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்குக் குருவருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்து வகையில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி, அந்தச் சொத்து கைக்கு வரும்.</p>.<p>6-ம் இடத்தில், ருண ரோக ஸ்தானத்தில் குருவின் பார்வை படும்போது, நீண்டகாலமாக உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் பூரண நலம் பெறுவர்.</p>.<p>7-ம் இடத்தை, களத்திர ஸ்தானத்தை குரு பார்க்க, பெற்றோர் ஆசிகளுடன் நல்ல மணவாழ்க்கை அமையும்.</p>.<p>8-ம் இடத்தை, ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கும்போது, மரண பயம் நீங்கும்; விபத்துகள் ஏற்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்.</p>.<p>9-ம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.</p>.<p>10-ம் இடத்தை, ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும்போது, பதவியில் உயர்வும் நல்ல மாற்றமும் ஏற்படும். பெற்றோரின் உடல்நிலை சீராகும்.</p>.<p>11-ம் இடத்தை, லாப ஸ்தானத்தைப் பார்க்கும்போது, எதிர்பாராத பொருள்வரவு போன்ற சுப பலன்கள் ஏற்படும்.</p>.<p>12-ம் இடத்தில், சயன மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை பதியும்போது, ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்; தெய்வ தரிசனமும் மகான்களின் அருளாசிகளும் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஜோதிடமாமணி கிருஷ்ணதுளசி</strong></span></p>