<p><span style="color: #ff0000"><strong>'கு</strong></span>ரு பார்க்க கோடி நன்மை’ என்று அறிவோம் சரி! குரு பகவான், தான் இருக்கும் இடங்களைப் பொறுத்து என்னென்ன பலன்களைத் தருவார்? தெரிந்துகொள்வோமா?</p>.<p>லக்னத்தில் குரு: அழகு, அதிர்ஷ்டம், அச்சமின்மை, நீண்டஆயுள், நல்ல குழந்தைகள் அமையும்.</p>.<p>2-ம் இடம்: பேச்சாளர், வசீகரமான முகம், செல்வம், புகழ், கல்வி உடையவர், நல்ல உணவுகளை ரசித்து உண்பவர்.</p>.<p>3-ம் இடம்: கருமி, மரியாதை கிடைக்காதவர், வஞ்சகமானவர். பாவ காரியங்களில் ஈடுபடுபவர். ஆனால் இவரது சகோதரர் புகழ் உள்ளவராகத் திகழ்வார்.</p>.<p>4-ம் இடம்: அன்புமிகு தாய், நல்ல அணுக்கமான நண்பர்கள், வேலையாட்கள், மனைவி- மக்களோடு சகல செல்வத்துடன் வாழ்வார்கள்.</p>.<p>5-ம் இடம்: அறிவாளியாகத் திகழ்வார்; அரசுக்கே ஆலோசனை தரும் நிலையில் இருப்பவர். எனினும் மகன்களால் தொல்லை உண்டு.</p>.<p>6-ம் இடம்: சோம்பல் மிகுந்தவர், அவ்வப்போது அவமரியாதையைச் சந்திக்க நேரிடும். எனினும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வார். மாய-மந்திரத்தில் வல்லவர்.</p>.<p>7-ம் இடம்: நல்ல மனைவி, மகன்கள் உண்டு. நேசிக்கத் தக்கவர். தன் தந்தையைவிட தாராள குணமுடையவராக விளங்குவார்.</p>.<p>8-ம் இடம்: ஏழையாகவும், நீசத் தொழில் புரிபவராகவும் திகழ்வார்கள்.ஆனாலும் நீண்ட ஆயுளுடனும், மற்றவர்களால் விரும்பப்படுபவராகவும் வாழ்வார்கள்.</p>.<p>9-ம் இடம்: லட்சுமி கடாட்சம், மக்கட்செல்வம் நிரம்பியவர். புகழ் பெற்ற அமைச்சர் ஆவார்.</p>.<p>10-ம் இடம்: நன்னடத்தை, புகழ், மிகப்பெரும் செல்வம், அரசாங்கத் தலைவர்களிடம் நட்பு உடையவராக விளங்குவார்.</p>.<p>11-ம் இடம்: செல்வம், அச்சமின்மை, குறைவான எண்ணிக் கையில் குழந்தைச்செல்வம், நீண்ட ஆயுள், வாகன வசதிகள் உடையவர்.</p>.<p>12-ம் இடம்: பிறரால் வெறுக்கப் படுபவர். தீயச் சொல்லும், சுடு சொல்லும் பேசுபவராகவும், சோம்பல் மிகுந்தவராகவும் திகழ்வர்.</p>.<p>கோசாரத்தில் குரு சாதகமற்ற நிலைகளில் இருப்பதால் ஏற்படும் தோஷ பலன்களைக் களைவதற்கு, கீழ்க்காணும் துதியைப் படித்து, வழிபட்டு பலன் பெறலாம்.</p>.<p>தேவ மந்திரி விசாலாக்ஷ<br /> சட லோக ஹிதே சதா<br /> அநேக சிஷ்ய சம்பூர்ண<br /> பீடாம் ஹரது மே குரு</p>.<p><span style="color: #ff0000"><strong>கருத்து: </strong></span>அகன்ற விழிகளை உடையவரும், தேவர்களுக்கு அமைச்சர் போன்றவரும், எப்போதும் உலக நன்மையையே கருத்தில் கொள்பவரும், ஏராளமான சீடர்களைக் கொண்டவருமாகிய குருவை, எனது துன்பங்கள் நீங்க வணங்குகிறேன்.</p>
<p><span style="color: #ff0000"><strong>'கு</strong></span>ரு பார்க்க கோடி நன்மை’ என்று அறிவோம் சரி! குரு பகவான், தான் இருக்கும் இடங்களைப் பொறுத்து என்னென்ன பலன்களைத் தருவார்? தெரிந்துகொள்வோமா?</p>.<p>லக்னத்தில் குரு: அழகு, அதிர்ஷ்டம், அச்சமின்மை, நீண்டஆயுள், நல்ல குழந்தைகள் அமையும்.</p>.<p>2-ம் இடம்: பேச்சாளர், வசீகரமான முகம், செல்வம், புகழ், கல்வி உடையவர், நல்ல உணவுகளை ரசித்து உண்பவர்.</p>.<p>3-ம் இடம்: கருமி, மரியாதை கிடைக்காதவர், வஞ்சகமானவர். பாவ காரியங்களில் ஈடுபடுபவர். ஆனால் இவரது சகோதரர் புகழ் உள்ளவராகத் திகழ்வார்.</p>.<p>4-ம் இடம்: அன்புமிகு தாய், நல்ல அணுக்கமான நண்பர்கள், வேலையாட்கள், மனைவி- மக்களோடு சகல செல்வத்துடன் வாழ்வார்கள்.</p>.<p>5-ம் இடம்: அறிவாளியாகத் திகழ்வார்; அரசுக்கே ஆலோசனை தரும் நிலையில் இருப்பவர். எனினும் மகன்களால் தொல்லை உண்டு.</p>.<p>6-ம் இடம்: சோம்பல் மிகுந்தவர், அவ்வப்போது அவமரியாதையைச் சந்திக்க நேரிடும். எனினும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வார். மாய-மந்திரத்தில் வல்லவர்.</p>.<p>7-ம் இடம்: நல்ல மனைவி, மகன்கள் உண்டு. நேசிக்கத் தக்கவர். தன் தந்தையைவிட தாராள குணமுடையவராக விளங்குவார்.</p>.<p>8-ம் இடம்: ஏழையாகவும், நீசத் தொழில் புரிபவராகவும் திகழ்வார்கள்.ஆனாலும் நீண்ட ஆயுளுடனும், மற்றவர்களால் விரும்பப்படுபவராகவும் வாழ்வார்கள்.</p>.<p>9-ம் இடம்: லட்சுமி கடாட்சம், மக்கட்செல்வம் நிரம்பியவர். புகழ் பெற்ற அமைச்சர் ஆவார்.</p>.<p>10-ம் இடம்: நன்னடத்தை, புகழ், மிகப்பெரும் செல்வம், அரசாங்கத் தலைவர்களிடம் நட்பு உடையவராக விளங்குவார்.</p>.<p>11-ம் இடம்: செல்வம், அச்சமின்மை, குறைவான எண்ணிக் கையில் குழந்தைச்செல்வம், நீண்ட ஆயுள், வாகன வசதிகள் உடையவர்.</p>.<p>12-ம் இடம்: பிறரால் வெறுக்கப் படுபவர். தீயச் சொல்லும், சுடு சொல்லும் பேசுபவராகவும், சோம்பல் மிகுந்தவராகவும் திகழ்வர்.</p>.<p>கோசாரத்தில் குரு சாதகமற்ற நிலைகளில் இருப்பதால் ஏற்படும் தோஷ பலன்களைக் களைவதற்கு, கீழ்க்காணும் துதியைப் படித்து, வழிபட்டு பலன் பெறலாம்.</p>.<p>தேவ மந்திரி விசாலாக்ஷ<br /> சட லோக ஹிதே சதா<br /> அநேக சிஷ்ய சம்பூர்ண<br /> பீடாம் ஹரது மே குரு</p>.<p><span style="color: #ff0000"><strong>கருத்து: </strong></span>அகன்ற விழிகளை உடையவரும், தேவர்களுக்கு அமைச்சர் போன்றவரும், எப்போதும் உலக நன்மையையே கருத்தில் கொள்பவரும், ஏராளமான சீடர்களைக் கொண்டவருமாகிய குருவை, எனது துன்பங்கள் நீங்க வணங்குகிறேன்.</p>