<p><em><strong>சொல்லிய வித்தை வாகனம் சுபங்கள் </strong></em></p><p><em><strong>சூழ்வியா பாரமும் மனையும் </strong></em></p><p><em><strong>வெல்லுமேம் பாடும் சவுக்கியம் </strong></em></p><p><em><strong>அன்னை விரும்பநல் உறவினர் ஆகும். </strong></em></p><p><strong>ஒ</strong>ருவரின் ஜாதகத்தில் 4-ம் இடம் மிக முக்கியமான ஸ்தானங்களில் ஒன்று. அது, கேந்திர ஸ்தானங்களில் ஒன்றாக வருவதுடன், பூரண சுப ஸ்தானமாகவும் கருதப்படுகிறது. </p><p>ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் இடத்தில் இருக்கும் கிரகமே அவரின் வாகன யோகத்துக்குக் காரணமாகிறது. அந்த நான்காம் இடத்து அதிபதி யோடு எந்த கிரகம் சம்பந்தப்பட்டு நிற்கிறதோ, அதைப் பொறுத்தே ஒரு மனிதனுடைய வாகன யோகம் அமையும்.</p>.<p>ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானமான வானூர்தி, குபேரனுடையது. ஆனால், அதை அனுபவிக்கும் முழு பிராப்தம் ராவணனுக்கே கிடைத்தது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, ஜோதிட விளக்கங்களும் பலன்களும் பல மாற்றங்களைக் கண்டுள்ளன. </p><p>அந்தக் காலத்தில் குதிரை, காளை மாடுகள் போன்றவை தேர் முதலான வாகனங்களில் பூட்டப் பட்டு, பயணம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன ஆனால் இந்தக் காலத்திலோ பைக், ஆட்டோ, கார், பேருந்து என்று பல வகை வாகனங்கள் உள்ளன.</p><p>ஒன்பது கிரகங்களுமே பயணத்துக்கான வாகன யோகத்தை அளிப்பதற்கு முழுஅதிகாரம் உடையவை; அனைத்து கிரகங்களுமே பயணத்தில்தானே உள்ளன. ஒரு கிரகம் 4-ம் இடத்திலோ அல்லது 4-ம் இடத்து அதிபதியுடனோ தொடர்பில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால், அது தொடர்பான வாகன யோகம் அந்த ஜாதகத்தில் வேலை செய்யும். இதில், சுக்கிரனே முதன்மையானவராகவும் பிரதானமானவராகவும் இருந்து வாகன யோகத்தைத் தருகிறார். </p><p>அரசு சார்ந்த வாகன யோகத்தைச் சூரிய பகவான் அருள்வார். சூரியன் 4-ம் இடத்தில் இருந்தாலோ அல்லது 4-ம் இடத்து அதிபதியுடன் தொடர்பில் இருந்தாலோ, அரசு சார்ந்த வாகனங்களை அனுபவிக்கும் யோகத்தைத் தருவார்.</p>.<p>சுக்கிரன் 4-ம் இடத்திலும் 4-ம்இடத்து அதிபதி யுடன் தொடர்பில் இருந்தாலும், சுக்கிரன் ரிஷப ராசியிலோ துலாம் ராசியிலோ இருந்தாலும் சிறுவயதிலிருந்தே வாகன யோகத்தைச் அனுபவிக் கக்கூடிய அமைப்பைத் தருவார். </p><p>சனி, சரக்கேற்றும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி முன்னேற்றம் காண வழிவகுப்பார்.</p><p>செவ்வாய் பகவான் நான்காம் அதிபதியோடு தொடர்பிலிருந்தால் டிராக்டர், நெல் அறுவடை செயும் இயந்திரங்கள் முதலானவை, அந்த ஜாதகரின் ஆளுமையில் இருக்கும்.</p><p>சந்திரன், மிக உல்லாசமான பணமதிப்பு அதிகமுள்ள வாகனங்களை வாங்கக் காரணமாவார்.ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று அவரின் தசையும் நடந்தால், சொகுசு வாகனங்களை வாங்குவதற்கும் விமான பிரயாணங்கள் செய்வதற்கும் வாய்ப்பு உண்டாகும்.</p>.<p>புதன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்று அமையும் போது அல்லது கன்னி, மிதுன ராசியில் புதன் இருக்கும்போது, ஜாதகர் கடன் பெற்றாவது வாகனம் வாங்கி விடுவார்.</p>.<p>ராகு, வாகன யோகம் தொழிலாக அமையக் காரணமாகிறார். பிரமாண்டமான பெரிய வாகனங் களைக் கையாளும் நிலைக்கும் இவரே காரணம்.மிகக்குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களான ரோடு ரோலர், பேட்டரியில் இயங்கும் கார் மற்றும் டூவீலர் ஆகியவை கேதுவின் அருளால் அமையும்.</p><p>குரு பகவான், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் எளிய விலைமதிப்புடன் கூடிய வாகனங்கள் அமைய காரணமாவார்.</p><p>வாகனம் அமைந்தாலும் அந்த வாகனத்தின் நிறமானது, தனிமனிதனுடைய ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகளின் அமைப்புக்கு ஏற்றவாறே அமையும். </p><p>சுக்கிரன் வெண்மை, சிவப்பு நிறங்களுக்குக் காரணமா கிறார். </p><p>சூரியன் - சிவப்பு, ஆரஞ்சு மற்றும் வெளிர் மஞ்சள். </p><p>சனி - கறுப்பு, கருநீலம், வெளிர் நீலநிறம்.</p><p>செவ்வாய் - சிவப்பு.</p><p>ராகு - நீல நிறம்.</p><p>புதன் - இவர் ஆளுமையால் பெரும்பாலும் பச்சை நிற வாகனமே அமையும். </p><p>கேது - சகல வண்ணங்களிலும் வாகனத்தை அருள்வார்.</p><p>குரு - மஞ்சள் வண்ணமே பிரதானம்.</p><p>ஒரு ஜாதகத்தில் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால், அவர்கள் அதிகம் பிரயாணம் செய்யாமல், எந்த வாகனத்தையும் பயன்படுத்தாமல் வாழ்வார்கள். தேய்பிறைச் சந்திரனாக இருந்தால், அதிகமான பயணங்கள் செல்லும் நிலையும் வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நிலையும் உண்டு.</p>.<p><strong>வாகனம்... பரிகாரம்!</strong></p><ul><li><p> இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அமையவேண்டும் என்று விரும்புவோர், அவரவருடைய தசாபுத்தி மற்றும் கிரக அமைப்புகளின் அடிப்படையில், தெய்வங்களை வழிபாடு செய்யவேண்டும்.</p></li><li><p> வாகன யோகம் அமைவதற்குக் காரணமாக இருக்கும் ஜீவராசிகளான குதிரை, மாடு, யானை போன்றவற்றுக்கு உணவு தானம் வழங்குவதும் வாகன யோகத்துக்கு மேலும் பலம் சேர்க்கும். கருடாழ்வாரை வழிபாடு செய்து வந்தால், விமானப் பிரயாணம் மிக எளிதாகவும் சாதகமாகவும் அமையும் </p></li><li><p> சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரின் விஸ்வரூப வழிபாடு வாகன யோகத்துக்குப் பாதுகாப்பையும், பலத்தையும் தரும். </p></li><li><p> புது வாகனம் அமைந்த பிறகு, குலதெய்வச் சந்நிதிக்குச் சென்று குலதெய்வத்தின் அருளைப் பெறுவது மிகவும் சிறப்பு.</p></li></ul>.<p>வாகன யோகம் குறித்து ஜோதிடரின் விளக்கங்களை வீடியோ வடிவில் காண...</p>
<p><em><strong>சொல்லிய வித்தை வாகனம் சுபங்கள் </strong></em></p><p><em><strong>சூழ்வியா பாரமும் மனையும் </strong></em></p><p><em><strong>வெல்லுமேம் பாடும் சவுக்கியம் </strong></em></p><p><em><strong>அன்னை விரும்பநல் உறவினர் ஆகும். </strong></em></p><p><strong>ஒ</strong>ருவரின் ஜாதகத்தில் 4-ம் இடம் மிக முக்கியமான ஸ்தானங்களில் ஒன்று. அது, கேந்திர ஸ்தானங்களில் ஒன்றாக வருவதுடன், பூரண சுப ஸ்தானமாகவும் கருதப்படுகிறது. </p><p>ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் இடத்தில் இருக்கும் கிரகமே அவரின் வாகன யோகத்துக்குக் காரணமாகிறது. அந்த நான்காம் இடத்து அதிபதி யோடு எந்த கிரகம் சம்பந்தப்பட்டு நிற்கிறதோ, அதைப் பொறுத்தே ஒரு மனிதனுடைய வாகன யோகம் அமையும்.</p>.<p>ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானமான வானூர்தி, குபேரனுடையது. ஆனால், அதை அனுபவிக்கும் முழு பிராப்தம் ராவணனுக்கே கிடைத்தது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, ஜோதிட விளக்கங்களும் பலன்களும் பல மாற்றங்களைக் கண்டுள்ளன. </p><p>அந்தக் காலத்தில் குதிரை, காளை மாடுகள் போன்றவை தேர் முதலான வாகனங்களில் பூட்டப் பட்டு, பயணம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன ஆனால் இந்தக் காலத்திலோ பைக், ஆட்டோ, கார், பேருந்து என்று பல வகை வாகனங்கள் உள்ளன.</p><p>ஒன்பது கிரகங்களுமே பயணத்துக்கான வாகன யோகத்தை அளிப்பதற்கு முழுஅதிகாரம் உடையவை; அனைத்து கிரகங்களுமே பயணத்தில்தானே உள்ளன. ஒரு கிரகம் 4-ம் இடத்திலோ அல்லது 4-ம் இடத்து அதிபதியுடனோ தொடர்பில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால், அது தொடர்பான வாகன யோகம் அந்த ஜாதகத்தில் வேலை செய்யும். இதில், சுக்கிரனே முதன்மையானவராகவும் பிரதானமானவராகவும் இருந்து வாகன யோகத்தைத் தருகிறார். </p><p>அரசு சார்ந்த வாகன யோகத்தைச் சூரிய பகவான் அருள்வார். சூரியன் 4-ம் இடத்தில் இருந்தாலோ அல்லது 4-ம் இடத்து அதிபதியுடன் தொடர்பில் இருந்தாலோ, அரசு சார்ந்த வாகனங்களை அனுபவிக்கும் யோகத்தைத் தருவார்.</p>.<p>சுக்கிரன் 4-ம் இடத்திலும் 4-ம்இடத்து அதிபதி யுடன் தொடர்பில் இருந்தாலும், சுக்கிரன் ரிஷப ராசியிலோ துலாம் ராசியிலோ இருந்தாலும் சிறுவயதிலிருந்தே வாகன யோகத்தைச் அனுபவிக் கக்கூடிய அமைப்பைத் தருவார். </p><p>சனி, சரக்கேற்றும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி முன்னேற்றம் காண வழிவகுப்பார்.</p><p>செவ்வாய் பகவான் நான்காம் அதிபதியோடு தொடர்பிலிருந்தால் டிராக்டர், நெல் அறுவடை செயும் இயந்திரங்கள் முதலானவை, அந்த ஜாதகரின் ஆளுமையில் இருக்கும்.</p><p>சந்திரன், மிக உல்லாசமான பணமதிப்பு அதிகமுள்ள வாகனங்களை வாங்கக் காரணமாவார்.ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று அவரின் தசையும் நடந்தால், சொகுசு வாகனங்களை வாங்குவதற்கும் விமான பிரயாணங்கள் செய்வதற்கும் வாய்ப்பு உண்டாகும்.</p>.<p>புதன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்று அமையும் போது அல்லது கன்னி, மிதுன ராசியில் புதன் இருக்கும்போது, ஜாதகர் கடன் பெற்றாவது வாகனம் வாங்கி விடுவார்.</p>.<p>ராகு, வாகன யோகம் தொழிலாக அமையக் காரணமாகிறார். பிரமாண்டமான பெரிய வாகனங் களைக் கையாளும் நிலைக்கும் இவரே காரணம்.மிகக்குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களான ரோடு ரோலர், பேட்டரியில் இயங்கும் கார் மற்றும் டூவீலர் ஆகியவை கேதுவின் அருளால் அமையும்.</p><p>குரு பகவான், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் எளிய விலைமதிப்புடன் கூடிய வாகனங்கள் அமைய காரணமாவார்.</p><p>வாகனம் அமைந்தாலும் அந்த வாகனத்தின் நிறமானது, தனிமனிதனுடைய ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகளின் அமைப்புக்கு ஏற்றவாறே அமையும். </p><p>சுக்கிரன் வெண்மை, சிவப்பு நிறங்களுக்குக் காரணமா கிறார். </p><p>சூரியன் - சிவப்பு, ஆரஞ்சு மற்றும் வெளிர் மஞ்சள். </p><p>சனி - கறுப்பு, கருநீலம், வெளிர் நீலநிறம்.</p><p>செவ்வாய் - சிவப்பு.</p><p>ராகு - நீல நிறம்.</p><p>புதன் - இவர் ஆளுமையால் பெரும்பாலும் பச்சை நிற வாகனமே அமையும். </p><p>கேது - சகல வண்ணங்களிலும் வாகனத்தை அருள்வார்.</p><p>குரு - மஞ்சள் வண்ணமே பிரதானம்.</p><p>ஒரு ஜாதகத்தில் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால், அவர்கள் அதிகம் பிரயாணம் செய்யாமல், எந்த வாகனத்தையும் பயன்படுத்தாமல் வாழ்வார்கள். தேய்பிறைச் சந்திரனாக இருந்தால், அதிகமான பயணங்கள் செல்லும் நிலையும் வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நிலையும் உண்டு.</p>.<p><strong>வாகனம்... பரிகாரம்!</strong></p><ul><li><p> இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அமையவேண்டும் என்று விரும்புவோர், அவரவருடைய தசாபுத்தி மற்றும் கிரக அமைப்புகளின் அடிப்படையில், தெய்வங்களை வழிபாடு செய்யவேண்டும்.</p></li><li><p> வாகன யோகம் அமைவதற்குக் காரணமாக இருக்கும் ஜீவராசிகளான குதிரை, மாடு, யானை போன்றவற்றுக்கு உணவு தானம் வழங்குவதும் வாகன யோகத்துக்கு மேலும் பலம் சேர்க்கும். கருடாழ்வாரை வழிபாடு செய்து வந்தால், விமானப் பிரயாணம் மிக எளிதாகவும் சாதகமாகவும் அமையும் </p></li><li><p> சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரின் விஸ்வரூப வழிபாடு வாகன யோகத்துக்குப் பாதுகாப்பையும், பலத்தையும் தரும். </p></li><li><p> புது வாகனம் அமைந்த பிறகு, குலதெய்வச் சந்நிதிக்குச் சென்று குலதெய்வத்தின் அருளைப் பெறுவது மிகவும் சிறப்பு.</p></li></ul>.<p>வாகன யோகம் குறித்து ஜோதிடரின் விளக்கங்களை வீடியோ வடிவில் காண...</p>