<p style="text-align: left;">சமய வழிபாட்டில் சேவலுக்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக, முருக வழிபாட்டில் சேவல் சிறப்பிடம் பெற்றுள்ளது. <br /> <br /> </p>.<p style="text-align: left;">சேவல் அக்னியில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதனை அக்னி மதலை (நெருப்புக் குழந்தை) என இலக்கியங்கள் கூறுகின்றன.<br /> <br /> </p>.<p style="text-align: left;">வள்ளிக் குறத்தியை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தபோது, மலையகத்தின் பறவையான கோழியும் சீதனமாகத் தரப்பட்டதாம்.<br /> <br /> </p>.<p style="text-align: left;">முருகப் பெருமான் சேவற்கொடியோன் என்றும், கோழிக் கொடியோன் என்றும் அழைக்கப்படுகின்றான். <br /> <br /> </p>.<p style="text-align: left;">தாராசுரத்திலுள்ள முருகப் பெருமானின் திருக்கரத்தில் சேவல் இருப்பதைக் காண்கிறோம். புலவர்கள் சேவல் ஏந்தும் செல்வக்குமரனாக முருகனைப் போற்றுகின்றனர்.<br /> <br /> </p>.<p style="text-align: left;">`முருகன், தனது தேரில் கோழியைக் கொடியாகக் கொண்டிருந்தார்' என்கிறது கந்தபுராணம்.<br /> <br /> </p>.<p style="text-align: left;">முருகனுக்கு அக்னிதேவன் கோழியைத் தந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. அதுபோல சூரியன், குறவர்கள், தேவர்கள் ஆகியோரும் கோழிகளைச் சமர்ப்பித்த தகவல் உண்டு.<br /> <br /> </p>.<p style="text-align: left;">சூரியன் முருகனுக்கு அளித்த சேவலுக்குத் `தாம்ர சூடன்' என்று பெயர். இலக்கியங்கள் காலைச் சூரியனை முருகனாகக் கூறுகின்றன!<br /> <br /> </p>.<p style="text-align: left;">‘கொக் கரக் கோ' என்று சேவல் கூவும். இதை `கொக்கு அறு கோ' என விரித்துப் பொருள் காண்பர், ஞானியர். `கொக்கு' எனும் சொல் மாமரத்தைக் குறிக்கும். `போரின் இறுதியில் மாமரமாகி நின்ற சூரபத்மனை சம்ஹரித்து, சேவலும் மயிலுமாகக் கொண்ட கோ' என்பது இதன் பொருளாகும்.</p>
<p style="text-align: left;">சமய வழிபாட்டில் சேவலுக்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக, முருக வழிபாட்டில் சேவல் சிறப்பிடம் பெற்றுள்ளது. <br /> <br /> </p>.<p style="text-align: left;">சேவல் அக்னியில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதனை அக்னி மதலை (நெருப்புக் குழந்தை) என இலக்கியங்கள் கூறுகின்றன.<br /> <br /> </p>.<p style="text-align: left;">வள்ளிக் குறத்தியை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தபோது, மலையகத்தின் பறவையான கோழியும் சீதனமாகத் தரப்பட்டதாம்.<br /> <br /> </p>.<p style="text-align: left;">முருகப் பெருமான் சேவற்கொடியோன் என்றும், கோழிக் கொடியோன் என்றும் அழைக்கப்படுகின்றான். <br /> <br /> </p>.<p style="text-align: left;">தாராசுரத்திலுள்ள முருகப் பெருமானின் திருக்கரத்தில் சேவல் இருப்பதைக் காண்கிறோம். புலவர்கள் சேவல் ஏந்தும் செல்வக்குமரனாக முருகனைப் போற்றுகின்றனர்.<br /> <br /> </p>.<p style="text-align: left;">`முருகன், தனது தேரில் கோழியைக் கொடியாகக் கொண்டிருந்தார்' என்கிறது கந்தபுராணம்.<br /> <br /> </p>.<p style="text-align: left;">முருகனுக்கு அக்னிதேவன் கோழியைத் தந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. அதுபோல சூரியன், குறவர்கள், தேவர்கள் ஆகியோரும் கோழிகளைச் சமர்ப்பித்த தகவல் உண்டு.<br /> <br /> </p>.<p style="text-align: left;">சூரியன் முருகனுக்கு அளித்த சேவலுக்குத் `தாம்ர சூடன்' என்று பெயர். இலக்கியங்கள் காலைச் சூரியனை முருகனாகக் கூறுகின்றன!<br /> <br /> </p>.<p style="text-align: left;">‘கொக் கரக் கோ' என்று சேவல் கூவும். இதை `கொக்கு அறு கோ' என விரித்துப் பொருள் காண்பர், ஞானியர். `கொக்கு' எனும் சொல் மாமரத்தைக் குறிக்கும். `போரின் இறுதியில் மாமரமாகி நின்ற சூரபத்மனை சம்ஹரித்து, சேவலும் மயிலுமாகக் கொண்ட கோ' என்பது இதன் பொருளாகும்.</p>