<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பே</span></strong><span style="color: rgb(128, 0, 0);">ராசைக்கும் சுயநலத்துக்கும் சின்னமாக இருப்பதால், நரிகளைப் பற்றிய செய்திகள் சமய நூல்களில் இல்லை. எனினும், ஞானிகள் பலரும் நரிகளின் கதைகள் மூலம் பல அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்கள். </span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><br /> </span><strong><span style="color: rgb(255, 0, 0);">மா</span></strong>ணிக்கவாசகர் சரிதத்தில், நரிகளைப் பரிகளாக்கிச் சிவனார் அருளாடல் புரிந்த கதை நாமறிந்தது. பேராசையால், இருந்ததையும் தொலைத்துத் துன்புற்ற நரியின் கதையை தனது பாடலில் சொல்லியிருக்கிறார் அப்பர் பெருமான். `வேடியப்பன்' என்ற கிராமிய தெய்வத்துக்கு நரியே வாகனமாகத் திகழ்கிறது!</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சீ</span></strong>வகசிந்தாமணியை அருளிய திருத்தக்கதேவர், தன்னுடைய ஆசிரியரின் அறிவுரைப்படி, நரியின் குணங்களை ஆதாரமாகக் கொண்டு 51 பாடல்களைக் கொண்ட நூலைப் பாடியதாகக் கூறுவர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒ</strong></span>ன்றைச் செய்யவேண்டுமானால் அறத்தைச் செய்யவேண்டும்; ஒன்றைத் தவிர்க்கவேண்டுமெனில் கோபத்தைத் தவிர்க்கவேண்டும்; அறிய விரும்பினால் ஞானத்தை அறியவேண்டும்; கடைப்பிடிக்க விரும்பினால் விரதத்தைக் கடைப்பிடிக்கவும் என்கிறது நரிவிருத்தப் பாடல் ஒன்று.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ந</span></strong>ரியை வடமொழியில் `சம்பு' என்று அழைப்பார்கள். நரிக் கூட்டங்களுக்கு இடையே தோன்றி வாழ்ந்த முனிவர் ஒருவர் `சம்புகன்' எனப் பெயர்பெற்றிருந்தார்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ம</span></strong>ன்னர் வரகுணபாண்டியன், திருவிடைமருதூரில் மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வந்த காலத்த்தில், நரிகள் பெரிதாக ஊளையிட்டனவாம். அதைக் கேட்ட பாண்டியன், அவை சிவனாரைப் போற்றுவதாகவே கருதி, அவற்றுக்கு ஆடையும் முத்துமாலையும் அணிவித்து மகிழ்ந்ததாகக் கதையுண்டு.</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பே</span></strong><span style="color: rgb(128, 0, 0);">ராசைக்கும் சுயநலத்துக்கும் சின்னமாக இருப்பதால், நரிகளைப் பற்றிய செய்திகள் சமய நூல்களில் இல்லை. எனினும், ஞானிகள் பலரும் நரிகளின் கதைகள் மூலம் பல அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்கள். </span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><br /> </span><strong><span style="color: rgb(255, 0, 0);">மா</span></strong>ணிக்கவாசகர் சரிதத்தில், நரிகளைப் பரிகளாக்கிச் சிவனார் அருளாடல் புரிந்த கதை நாமறிந்தது. பேராசையால், இருந்ததையும் தொலைத்துத் துன்புற்ற நரியின் கதையை தனது பாடலில் சொல்லியிருக்கிறார் அப்பர் பெருமான். `வேடியப்பன்' என்ற கிராமிய தெய்வத்துக்கு நரியே வாகனமாகத் திகழ்கிறது!</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சீ</span></strong>வகசிந்தாமணியை அருளிய திருத்தக்கதேவர், தன்னுடைய ஆசிரியரின் அறிவுரைப்படி, நரியின் குணங்களை ஆதாரமாகக் கொண்டு 51 பாடல்களைக் கொண்ட நூலைப் பாடியதாகக் கூறுவர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒ</strong></span>ன்றைச் செய்யவேண்டுமானால் அறத்தைச் செய்யவேண்டும்; ஒன்றைத் தவிர்க்கவேண்டுமெனில் கோபத்தைத் தவிர்க்கவேண்டும்; அறிய விரும்பினால் ஞானத்தை அறியவேண்டும்; கடைப்பிடிக்க விரும்பினால் விரதத்தைக் கடைப்பிடிக்கவும் என்கிறது நரிவிருத்தப் பாடல் ஒன்று.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ந</span></strong>ரியை வடமொழியில் `சம்பு' என்று அழைப்பார்கள். நரிக் கூட்டங்களுக்கு இடையே தோன்றி வாழ்ந்த முனிவர் ஒருவர் `சம்புகன்' எனப் பெயர்பெற்றிருந்தார்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ம</span></strong>ன்னர் வரகுணபாண்டியன், திருவிடைமருதூரில் மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வந்த காலத்த்தில், நரிகள் பெரிதாக ஊளையிட்டனவாம். அதைக் கேட்ட பாண்டியன், அவை சிவனாரைப் போற்றுவதாகவே கருதி, அவற்றுக்கு ஆடையும் முத்துமாலையும் அணிவித்து மகிழ்ந்ததாகக் கதையுண்டு.</p>