<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>த</strong></span>மிழரின் தனிப்பெருங்கடவுளான முருகப்பெருமானின் வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும் சேவலும். இவை இரண்டும் பிரணவத்தின் தத்துவமென்று தத்துவ நூல்கள் கூறுகின்றன.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span>ருகன் தேவேந்திரலோகத்தில் சிம்மாசனத்தில் அரசராக வீற்றிருப்பவர். எனவே, அவருக்குச் செங்கோல் உரித்தாகுகிறது. மயில் வடிவத்தை உச்சியில் கொண்ட தண்டமே முருகனின் செங்கோலாக விளங்குகிறது.</p>.<p><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span>யில் நாகங்களைக் கடிவாளமாகவும், ரத்தினத்தாலான சேணத்தையும் கொண்டிருக்கிறது. பழநியில் உள்ள மயில்களில் அழகிய கடிவாளமும் சேணமும் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வ</strong></span>ள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விழா `மயூர வாகன சேவை' என்று சிறப்புடன் போற்றப்படுகிறது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span>யில் தோகையை விரித்து நிற்பது ஓங்காரமாகத் தோன்றுகிறது. அதன்மீது மந்திர ரகசியங்களின் தலைவனாகக் குகன் எழுந்தருள்கிறான். இக்காட்சியே குக ரகசியம், தகராலய ரகசியம் எனப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>சி</strong></span>வபெருமானுக்கு வேதம் எவ்வாறு விடை வாகனமாக இருக்கிறதோ அவ்வாறே முருகனுக்கு வேதம் மயிலாகத் திகழ்கிறது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தி</strong></span>ரிபுரகனத்தின் போது, திருமால் தன் மைத்துனனான சிவபெருமானை இடப வடிவம்கொண்டு தாங்கினார். அதுபோல சூரசம்ஹாரத்தின்போது, முருகனின் மாமனான இந்திரன், மயில் வடிவம்கொண்டு தன் மருமகனைத் தாங்கினார்.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>த</strong></span>மிழரின் தனிப்பெருங்கடவுளான முருகப்பெருமானின் வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும் சேவலும். இவை இரண்டும் பிரணவத்தின் தத்துவமென்று தத்துவ நூல்கள் கூறுகின்றன.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span>ருகன் தேவேந்திரலோகத்தில் சிம்மாசனத்தில் அரசராக வீற்றிருப்பவர். எனவே, அவருக்குச் செங்கோல் உரித்தாகுகிறது. மயில் வடிவத்தை உச்சியில் கொண்ட தண்டமே முருகனின் செங்கோலாக விளங்குகிறது.</p>.<p><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span>யில் நாகங்களைக் கடிவாளமாகவும், ரத்தினத்தாலான சேணத்தையும் கொண்டிருக்கிறது. பழநியில் உள்ள மயில்களில் அழகிய கடிவாளமும் சேணமும் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வ</strong></span>ள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விழா `மயூர வாகன சேவை' என்று சிறப்புடன் போற்றப்படுகிறது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span>யில் தோகையை விரித்து நிற்பது ஓங்காரமாகத் தோன்றுகிறது. அதன்மீது மந்திர ரகசியங்களின் தலைவனாகக் குகன் எழுந்தருள்கிறான். இக்காட்சியே குக ரகசியம், தகராலய ரகசியம் எனப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>சி</strong></span>வபெருமானுக்கு வேதம் எவ்வாறு விடை வாகனமாக இருக்கிறதோ அவ்வாறே முருகனுக்கு வேதம் மயிலாகத் திகழ்கிறது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தி</strong></span>ரிபுரகனத்தின் போது, திருமால் தன் மைத்துனனான சிவபெருமானை இடப வடிவம்கொண்டு தாங்கினார். அதுபோல சூரசம்ஹாரத்தின்போது, முருகனின் மாமனான இந்திரன், மயில் வடிவம்கொண்டு தன் மருமகனைத் தாங்கினார்.</p>