<p><strong>கோ</strong>யிலுக்குக் கோட்டம் என்றும் பெயருண்டு. வளைந்து வட்டமாக அமைந்த அடித்தளத்தின் மீது வட்டக் கூம்பு வடிவம் கொண்ட ஆலயம் கோட்டம் எனப்பட்டது. ஆதியில் அமைந்த ஆலயங்கள், வட்டமாக அமைந்த சுவர்களையே கொண்டிருந்தன.</p>.<p><strong>சி</strong>லப்பதிகாரத்தில் வேற்கோட்டம், தேவர் தருக்கோட்டம், வெள்ளானைக் கோட்டம், ஆறுமுகச் செவ்வேள் கோட்டம் முதலான பல கோட்டங்கள் பூம்புகாரில் இருந்த தகவல் குறிக்கப்பட்டுள்ளது.</p>.<p><strong>தே</strong>வாரத்தில் திருவையாற்றின் ஐயாராப்பர் ஆலயம் ‘காவிரிக் கோட்டம்’ என்று குறிக்கப்படுகிறது. சென்னை முத்துகுமாரசாமி கோயில் கந்தகோட்டம் என்றும், காஞ்சி முருகன் கோயில் குமரக் கோட்டம் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் காமகோட்டம் என்றும் வழங்கப்படுகின்றன.</p>.<p><strong>ஈ</strong>ஸ்வரன் குடியிருக்கும் இடம் ஈஸ்வரம் எனப்பட்டது. அவ்வகையில் காவிரிபூம்பட்டினத்தில் பல்லவர்கள் அமைத்த ஆலயத்துக்கு பல்லவனீச்சரம் என்று பெயர். அதேபோல் கூரத்தில் உள்ள ஆலயம் அவனி பாஜன பல்லவேசுவரக் கிருகம் எனப்படுகிறது.</p>.<p><strong>கோ</strong>யிலுக்கு தளி என்றும் பெயர் உண்டு. தளம் என்றால் சீராக்கப்பட்ட உயர்ந்த இடம் என்று பெயர். அதையொட்டி மனதைச் சீராக்கும் ஆலயங்களை தளி என்று அழைத்தார்கள் போலும்! பழையாறை வடதளி, தென்தளி, கச்சி மேற்றளி ஆகியன இதற்கு தகுந்த சான்றுகள்.</p>.<p><strong>வே</strong>றுசில பெயர்களும் கோயிலைக் குறிப்பதாகத் திகழ்கின்றன. `பள்ளி’ என்ற பெயரோடு திருச்சக்கரப்பள்ளி, செம்பொன் பள்ளி ஆகிய ஆலயங்களும், `வீரஸ்தானம்’ என்ற பெயரில் சிவனாரின் அட்ட வீரட்ட தலங்களும், `காரோணம்’ என்ற பெயரில் நாகைக் காரோணம், கச்சிக்காரோணம் ஆகிய தலங்களும் திகழ்கின்றன.</p>
<p><strong>கோ</strong>யிலுக்குக் கோட்டம் என்றும் பெயருண்டு. வளைந்து வட்டமாக அமைந்த அடித்தளத்தின் மீது வட்டக் கூம்பு வடிவம் கொண்ட ஆலயம் கோட்டம் எனப்பட்டது. ஆதியில் அமைந்த ஆலயங்கள், வட்டமாக அமைந்த சுவர்களையே கொண்டிருந்தன.</p>.<p><strong>சி</strong>லப்பதிகாரத்தில் வேற்கோட்டம், தேவர் தருக்கோட்டம், வெள்ளானைக் கோட்டம், ஆறுமுகச் செவ்வேள் கோட்டம் முதலான பல கோட்டங்கள் பூம்புகாரில் இருந்த தகவல் குறிக்கப்பட்டுள்ளது.</p>.<p><strong>தே</strong>வாரத்தில் திருவையாற்றின் ஐயாராப்பர் ஆலயம் ‘காவிரிக் கோட்டம்’ என்று குறிக்கப்படுகிறது. சென்னை முத்துகுமாரசாமி கோயில் கந்தகோட்டம் என்றும், காஞ்சி முருகன் கோயில் குமரக் கோட்டம் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் காமகோட்டம் என்றும் வழங்கப்படுகின்றன.</p>.<p><strong>ஈ</strong>ஸ்வரன் குடியிருக்கும் இடம் ஈஸ்வரம் எனப்பட்டது. அவ்வகையில் காவிரிபூம்பட்டினத்தில் பல்லவர்கள் அமைத்த ஆலயத்துக்கு பல்லவனீச்சரம் என்று பெயர். அதேபோல் கூரத்தில் உள்ள ஆலயம் அவனி பாஜன பல்லவேசுவரக் கிருகம் எனப்படுகிறது.</p>.<p><strong>கோ</strong>யிலுக்கு தளி என்றும் பெயர் உண்டு. தளம் என்றால் சீராக்கப்பட்ட உயர்ந்த இடம் என்று பெயர். அதையொட்டி மனதைச் சீராக்கும் ஆலயங்களை தளி என்று அழைத்தார்கள் போலும்! பழையாறை வடதளி, தென்தளி, கச்சி மேற்றளி ஆகியன இதற்கு தகுந்த சான்றுகள்.</p>.<p><strong>வே</strong>றுசில பெயர்களும் கோயிலைக் குறிப்பதாகத் திகழ்கின்றன. `பள்ளி’ என்ற பெயரோடு திருச்சக்கரப்பள்ளி, செம்பொன் பள்ளி ஆகிய ஆலயங்களும், `வீரஸ்தானம்’ என்ற பெயரில் சிவனாரின் அட்ட வீரட்ட தலங்களும், `காரோணம்’ என்ற பெயரில் நாகைக் காரோணம், கச்சிக்காரோணம் ஆகிய தலங்களும் திகழ்கின்றன.</p>