<p><strong><span style="color: rgb(255, 0, 0);">எ</span></strong>ழுத்துகளை அக்ஷரம் என்பர்; அழிவில்லாதது என்று பொருள் சொல்வர். சைவ சித்தாந்தங்கள் எழுத்துகளை ‘வன்னங்கள்’ என்கின்றன. உலகப் படைப்புக்கு மூலமாக வழங்கும் ஆறு அத்துவாக்களில் வன்னமும் ஒன்று.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ப</span></strong>ஞ்சாட்சரம் என வழங்கும் `நமசிவாய' எனும் ஐந்தெழுத்துகளும் சிவனாரின் நடராஜ திருமேனியாக விளங்குவதாகக் கூறுவர். அதேபோல் ‘ங’ என்ற எழுத்தைக் காளையின் உருவமாகக் கொள்வர். <br /> அப்பர் சுவாமிகள் ‘ஙகரவெல்கொடியாய்’ என்று சிவபெருமானைத் துதிக்கிறார்.<br /> <br /> <strong>கா</strong>ளிங்க நாகம் ‘ல’ போன்று வளைந்து நெளிந்திருக்க, அதன் மீது கண்ணன் நாட்டியமாடினான் என்று சித்திரிக்கிறார் பாம்பன் சுவாமிகள். ‘ய’ எனும் எழுத்து சூலம்போல் உள்ளது என்பதை ‘யகரமேபோல் சூலம் ஏந்தும் நறும்புயன்’ என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">அ</span>க்ஷரங்களில் முதன்மைபெற்றது ஓம்காரம் என்பர். அகரம், உகரம், மகாரம் ஆகியவற்றின் கூட்டமைப்பே ஓம்காரமாகும். இவற்றில் அகரம் - படைத்தலையும், உகரம் - காத்தலையும், மகாரம் - அழித்தல் அல்லது ஒடுங்குதலையும் குறிக்கும். ஆக, ஓம் முத்தொழிலையும் குறிப்பது. இதன் அதிதேவதை விநாயகர். அதேபோல் `ஈம்’ என்பதை காமகலாமேசுவரி பீஜம் என்பர்.<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> ஆ</span></strong>திநாள்களில் எழுத்துகளுக்கு அவற்றின் தெய்வத் தன்மையை விளக்கும் வகையில் உரிய வரி வடிவங்களை அமைத்தனர். கால மாற்றத்தில் வடிவங்கள் மாறிவிட்டன என்றாலும் பல இலக்கியங்களின்மூலம் வரி வடிவங்களின் பெருமையை அறியமுடிகிறது.</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">எ</span></strong>ழுத்துகளை அக்ஷரம் என்பர்; அழிவில்லாதது என்று பொருள் சொல்வர். சைவ சித்தாந்தங்கள் எழுத்துகளை ‘வன்னங்கள்’ என்கின்றன. உலகப் படைப்புக்கு மூலமாக வழங்கும் ஆறு அத்துவாக்களில் வன்னமும் ஒன்று.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ப</span></strong>ஞ்சாட்சரம் என வழங்கும் `நமசிவாய' எனும் ஐந்தெழுத்துகளும் சிவனாரின் நடராஜ திருமேனியாக விளங்குவதாகக் கூறுவர். அதேபோல் ‘ங’ என்ற எழுத்தைக் காளையின் உருவமாகக் கொள்வர். <br /> அப்பர் சுவாமிகள் ‘ஙகரவெல்கொடியாய்’ என்று சிவபெருமானைத் துதிக்கிறார்.<br /> <br /> <strong>கா</strong>ளிங்க நாகம் ‘ல’ போன்று வளைந்து நெளிந்திருக்க, அதன் மீது கண்ணன் நாட்டியமாடினான் என்று சித்திரிக்கிறார் பாம்பன் சுவாமிகள். ‘ய’ எனும் எழுத்து சூலம்போல் உள்ளது என்பதை ‘யகரமேபோல் சூலம் ஏந்தும் நறும்புயன்’ என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">அ</span>க்ஷரங்களில் முதன்மைபெற்றது ஓம்காரம் என்பர். அகரம், உகரம், மகாரம் ஆகியவற்றின் கூட்டமைப்பே ஓம்காரமாகும். இவற்றில் அகரம் - படைத்தலையும், உகரம் - காத்தலையும், மகாரம் - அழித்தல் அல்லது ஒடுங்குதலையும் குறிக்கும். ஆக, ஓம் முத்தொழிலையும் குறிப்பது. இதன் அதிதேவதை விநாயகர். அதேபோல் `ஈம்’ என்பதை காமகலாமேசுவரி பீஜம் என்பர்.<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> ஆ</span></strong>திநாள்களில் எழுத்துகளுக்கு அவற்றின் தெய்வத் தன்மையை விளக்கும் வகையில் உரிய வரி வடிவங்களை அமைத்தனர். கால மாற்றத்தில் வடிவங்கள் மாறிவிட்டன என்றாலும் பல இலக்கியங்களின்மூலம் வரி வடிவங்களின் பெருமையை அறியமுடிகிறது.</p>