Published:Updated:

கொன்னையூர் நாடு செலுத்துதல் திருவிழா: சேறு, சகதிகளைப் பூசி, ஈட்டி கம்புகளுடன் குவிந்த பக்தர்கள்!

கொன்னையூர் நாடு செலுத்துதல் திருவிழா

சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கோயிலின் அருகே இருக்கும் கண்மாயில் படுத்து உருண்டு, சேறு, சகதிகளை உடம்பு முழுவதும் பூசிக் கொண்டனர்.

Published:Updated:

கொன்னையூர் நாடு செலுத்துதல் திருவிழா: சேறு, சகதிகளைப் பூசி, ஈட்டி கம்புகளுடன் குவிந்த பக்தர்கள்!

சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கோயிலின் அருகே இருக்கும் கண்மாயில் படுத்து உருண்டு, சேறு, சகதிகளை உடம்பு முழுவதும் பூசிக் கொண்டனர்.

கொன்னையூர் நாடு செலுத்துதல் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொன்னையூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் பங்குனித் திருவிழாவில், நடைபெறும் நாடு செலுத்துதல் விழா புகழ்பெற்றது. விழாவின் தொடக்கமாக, கடந்த மாதம் 19-ம் தேதி சுவாமிக்குப் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து, கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, 14 நாள்கள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தினசரி இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மண்டகப்படி நாள்களில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான நாடு செலுத்துதல் நிகழ்வு நடைபெற்றது.இதில், பொன்னமராவதி நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி நாடு,செவலூர் நாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஈட்டி போன்ற கம்புகளுடன், உடலில் சேறு, சகதிகளைப் பூசிக்கொண்டு நூதன முறையில் கொம்பு, பறை இசை, வான வேடிக்கைகள் முழங்க ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கொன்னையூர் நாடு செலுத்துதல் திருவிழா
கொன்னையூர் நாடு செலுத்துதல் திருவிழா

தொடர்ந்து, பொங்கல் வைத்தும், மாவிளக்கு வைத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நாடு செலுத்துதல் நிகழ்வில், முக்கியமான நிகழ்வு உடலில், சேறு, சகதி பூசிக்கொள்ளுதல் நிகழ்வு. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை பலரும் கோயிலின் அருகே இருக்கும் கண்மாயில் படுத்து உருண்டு, சேறு,சகதிகளை உடம்பு முழுவதும் பூசிக் கொண்டனர்.

இந்த நேர்த்திக்கடன் செய்வதால், வெயிலின் தாக்கத்தால் வரும் நோய்களிலிருந்து மக்களை காப்பதுடன், விவசாயம் செழிக்க மழைபெய்யவும் மாரியம்மன் அருள்புரிகிறார் என்கின்றனர் கிராமமக்கள். இன்று நேற்றில்ல, பல தலைமுறைகளாக இந்த நேர்த்திக்கடன் தொடர்கிறது" என்கின்றனர்.