Published:Updated:

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த கெங்கையம்மன் சிரசு... மெய்சிலிர்க்க வைத்த கண் திறப்பு நிகழ்வு!

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த கெங்கையம்மன் சிரசு

புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்காம மக்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த அம்மனின் சிரசு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Published:Updated:

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த கெங்கையம்மன் சிரசு... மெய்சிலிர்க்க வைத்த கண் திறப்பு நிகழ்வு!

புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்காம மக்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த அம்மனின் சிரசு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த கெங்கையம்மன் சிரசு
மிழகத்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் திருவிழாக்களில், வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் கெங்கையம்மன் சிரசுப் பெருவிழாவும் ஒன்று. ஆண்டுதோறும், வைகாசி முதல்நாள் இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், முக்கிய வீதிகளின் வழியாக மிதந்துவரும் அம்மனின் சிரசு மெய்சிலிர்க்க வைக்கும். இந்த ஆண்டுத் திருவிழா வெகுவிமர்சையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது. தேர்த் திருவிழாவில், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். மிளகு கலந்த உப்பைத் தேர் மீது வீசியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த கெங்கையம்மன் சிரசு
பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த கெங்கையம்மன் சிரசு

இதையடுத்து, சிறப்பம்சமான ‘சிரசு’ பெருவிழா இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று அதிகாலை 4 மணிக்குத் தாரை, தப்பட்டை, மேள தாளங்கள் முழங்க அம்மனுக்குச் சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. பின்னர், தரணம்பேட்டை முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிரசு ஊர்வலம் புறப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் 5 மணி நேரமாக பவனிவந்த சிரசு காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாகக் கெங்கையம்மன் கோயிலைச் சென்றடைந்தது.

சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்வலத்தின்போது, அம்மன் சிரசு மீது பக்தர்கள் மலர்கள், பூமாலைகள் தூவி வரவேற்றனர். வழிநெடுகிலும் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். அம்மன் சிரசு கோயிலுக்கு வந்ததும், சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சி அம்மன் உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்

அதன்பிறகு, கெங்கையம்மன் சாந்த சொரூபியாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். இன்றிரவு சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு கௌண்டன்ய மகா நதி வழியாகப் புங்கனூர் அம்மன் கோயிலை அடைகிறது. அப்போது, கௌண்டன்ய நதிக்கரையில் கண்ணைக் கவரும் சிறப்பு வாணவேடிக்கை நடைபெறும். இதையடுத்து, மீண்டும் முத்தாலம்மன் கோயிலில் அம்மன் சிரசு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் குடியாத்தத்துக்கு இயக்கப்பட்டுவருகின்றன. இந்தத் திருவிழாவையொட்டி, வேலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டிருக்கிறது.

காவல்துறையினரின் பாதுகாப்பு

சிரசுத் திருவிழாவில் 1,500 போலீஸார், 200 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 1,700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள். வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்களை ஒழுங்குப் படுத்திப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டுவருகின்றனர். நேற்றைய தினம் வேலூர் மாவட்டத்தில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. தொடர்ந்து, இன்றைய தினமும் அதே அளவு வெயில் வாட்டுவதும் குறிப்பிடத்தக்கது.