<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> அ</strong>.சுரர்களுடன் போரிட்டு அவர்களை வதைத்த தேவி சக்தியின் வெற்றியை தேவர்கள் யாவரும் கொண்டாடி மகிழ்ந்த திருநாள் விஜய தசமி..<p>பத்து தலைகளை உடைய ராவணனை வதம் செய்ததால் இந்த நவராத்திரியின் கடைசி நாளான விஜய தசமி’ 'தசரா’ என்றும் அழைக்கப்படுகிறது (தச ஹரா - தசரா). இதையட்டி, வட மாநிலங்களில் ராம்லீலா வைபவம் நிகழும். மேலும், வில்லுக்கு விஜயன் எனப் போற்றப்படும் அர்ஜுனனுக்கு வெற்றி நல்கிய திருநாளும் கூட! அதோடு, நாம் துவங்கும் நல்ல காரியங்கள் வெற்றி பெற துணையாக நிற்கும் திருநாளும் இதுவே. எனவேதான், நம் முன்னோர் கல்வி ஆலைகளையும், கலாசாலைகளையும் இந்த நாளிலேயே தொடங்கினார்கள். அதேபோன்று, புதிய கலைகளைத் துவக்கவும், வித்யையில் சிறந்து விளங்கிட அக்ஷராப்யாஸம் என சொல்லக்கூடிய சடங்கினை ஆரம்பிக்கவும் சிறந்த நாள் விஜய தசமி.</p>.<p>இந்த நாளில் கீழ்க்காணும் அபிராமி அம்மை பதிகத்தைப் பாடி அம்பிகையை வழிபட, குறையாத செல்வமும் நிறைவான வாழ்வும் பெற்று சிறக்கலாம்.</p>.<p style="text-align: center"><span style="color: #cc0099"><span style="font-size: medium"><strong>அபிராமி அம்மைப் பதிகம்</strong></span></span></p>.<p>கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்<br /> கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்<br /> சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்<br /> தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்<br /> தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்<br /> துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்<br /> அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே<br /> அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!</p>.<p style="text-align: center"><span style="color: #cc0099"><span style="font-size: medium"><strong>வன்னி மர வழிபாடு!</strong></span></span></p>.<p>மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமி தினத்தன்று வழிபடுவதோடு அதன் இலைகளையும் பறிப்பர். அங்கு வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். இளைஞர்கள் இந்த நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து அவர்களது ஆசியைப் பெறுவார்கள்.</p>.<p style="text-align: right"><strong>- நெ.இராமன், சென்னை-74</strong></p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> அ</strong>.சுரர்களுடன் போரிட்டு அவர்களை வதைத்த தேவி சக்தியின் வெற்றியை தேவர்கள் யாவரும் கொண்டாடி மகிழ்ந்த திருநாள் விஜய தசமி..<p>பத்து தலைகளை உடைய ராவணனை வதம் செய்ததால் இந்த நவராத்திரியின் கடைசி நாளான விஜய தசமி’ 'தசரா’ என்றும் அழைக்கப்படுகிறது (தச ஹரா - தசரா). இதையட்டி, வட மாநிலங்களில் ராம்லீலா வைபவம் நிகழும். மேலும், வில்லுக்கு விஜயன் எனப் போற்றப்படும் அர்ஜுனனுக்கு வெற்றி நல்கிய திருநாளும் கூட! அதோடு, நாம் துவங்கும் நல்ல காரியங்கள் வெற்றி பெற துணையாக நிற்கும் திருநாளும் இதுவே. எனவேதான், நம் முன்னோர் கல்வி ஆலைகளையும், கலாசாலைகளையும் இந்த நாளிலேயே தொடங்கினார்கள். அதேபோன்று, புதிய கலைகளைத் துவக்கவும், வித்யையில் சிறந்து விளங்கிட அக்ஷராப்யாஸம் என சொல்லக்கூடிய சடங்கினை ஆரம்பிக்கவும் சிறந்த நாள் விஜய தசமி.</p>.<p>இந்த நாளில் கீழ்க்காணும் அபிராமி அம்மை பதிகத்தைப் பாடி அம்பிகையை வழிபட, குறையாத செல்வமும் நிறைவான வாழ்வும் பெற்று சிறக்கலாம்.</p>.<p style="text-align: center"><span style="color: #cc0099"><span style="font-size: medium"><strong>அபிராமி அம்மைப் பதிகம்</strong></span></span></p>.<p>கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்<br /> கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்<br /> சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்<br /> தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்<br /> தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்<br /> துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்<br /> அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே<br /> அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!</p>.<p style="text-align: center"><span style="color: #cc0099"><span style="font-size: medium"><strong>வன்னி மர வழிபாடு!</strong></span></span></p>.<p>மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமி தினத்தன்று வழிபடுவதோடு அதன் இலைகளையும் பறிப்பர். அங்கு வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். இளைஞர்கள் இந்த நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து அவர்களது ஆசியைப் பெறுவார்கள்.</p>.<p style="text-align: right"><strong>- நெ.இராமன், சென்னை-74</strong></p>