<p><strong>ச</strong>க்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தி வரும் மனவளக் கலை யோகா உடற்பயிற்சி முகாம், கடந்த 4.9.11 அன்று, காரைக்குடி ஆயிர வைசிய மீனாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.</p>.<p>''சக்தி விகடன்ல இந்தத் தொடரைப் படிக்கும் போதே, பயிற்சி செய்யணும்னு ஆர்வம் வந்துச்சு. இப்ப, நேரடி வழிகாட்டுதல் மூலம் பயிற்சியைச் செஞ்சப்ப, என்னோட மூட்டு வலியெல்லாம் இன்னும் சில நாள்ல பறந்தே போயிடும்னு நம்பிக்கை வந்திருக்கு'' என்றார் வாசகர் கிருஷ்ணன்.</p>.<p>''காட்டுலயும் மேட்டுலயும் ஜீப்புல சுத்தற வேலை எனக்கு. இதனால இடுப்பு, முதுகு, மார்பு எலும்புகள்லாம் ரொம்பவே தேய்மானம் ஆகிட்டதா மருத்துவர்கள் சொல்ல, ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு வரேன். எனக்கே இந்தப் பயிற்சிகள் எளிமையாவும் இருக்கு; நிறையப் பலன் கொடுக்கறதாவும் இருக்கு!'' என்று வியந்தபடி சொல்கிறார் பத்ரசாமி.</p>.<p>''என்னோட கோபத்தைக் கட்டுப்படுத்தறதுக்குத்தான் இந்தப் பயிற்சிக்கு வந்தேன்'' என்று வாசகி கலாராணியும், ''இந்த இரண்டு மணி நேரப் பயிற்சி, எனக்குள் இருந்த பயத்தை அறவே துரத்திடுச்சு'' என்று வாசகி நாகேஸ்வரியும்,</p>.<p>நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p>.<p>இந்தப் பரவசம் அனைவருக்கும் பரவட்டும்!</p>.<p>| <strong>பெ.தேவராஜ் </strong></p>.<p>படங்கள்: பா.காளிமுத்து</p>
<p><strong>ச</strong>க்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தி வரும் மனவளக் கலை யோகா உடற்பயிற்சி முகாம், கடந்த 4.9.11 அன்று, காரைக்குடி ஆயிர வைசிய மீனாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.</p>.<p>''சக்தி விகடன்ல இந்தத் தொடரைப் படிக்கும் போதே, பயிற்சி செய்யணும்னு ஆர்வம் வந்துச்சு. இப்ப, நேரடி வழிகாட்டுதல் மூலம் பயிற்சியைச் செஞ்சப்ப, என்னோட மூட்டு வலியெல்லாம் இன்னும் சில நாள்ல பறந்தே போயிடும்னு நம்பிக்கை வந்திருக்கு'' என்றார் வாசகர் கிருஷ்ணன்.</p>.<p>''காட்டுலயும் மேட்டுலயும் ஜீப்புல சுத்தற வேலை எனக்கு. இதனால இடுப்பு, முதுகு, மார்பு எலும்புகள்லாம் ரொம்பவே தேய்மானம் ஆகிட்டதா மருத்துவர்கள் சொல்ல, ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு வரேன். எனக்கே இந்தப் பயிற்சிகள் எளிமையாவும் இருக்கு; நிறையப் பலன் கொடுக்கறதாவும் இருக்கு!'' என்று வியந்தபடி சொல்கிறார் பத்ரசாமி.</p>.<p>''என்னோட கோபத்தைக் கட்டுப்படுத்தறதுக்குத்தான் இந்தப் பயிற்சிக்கு வந்தேன்'' என்று வாசகி கலாராணியும், ''இந்த இரண்டு மணி நேரப் பயிற்சி, எனக்குள் இருந்த பயத்தை அறவே துரத்திடுச்சு'' என்று வாசகி நாகேஸ்வரியும்,</p>.<p>நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p>.<p>இந்தப் பரவசம் அனைவருக்கும் பரவட்டும்!</p>.<p>| <strong>பெ.தேவராஜ் </strong></p>.<p>படங்கள்: பா.காளிமுத்து</p>