
ஆன்மிக துளிகள் - 1
மாதங்களும் தீபங்களும்
பொதுவாக, பௌர்ணமி தினங்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது. வருடத்தின் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் திருவிளக்கு பூஜையினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை ஞானநூல்கள் விவரிக்கின்றன.

சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
வைகாசி - செல்வம் செழிக்கும்.
ஆனி - திருமண பாக்கியம் உண்டாகும்.
ஆடி - ஆயுள்பலம் கூடும்.
ஆவணி - புத்தித்தடை நீங்கும்
புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
ஐப்பசி - நோய்கள் நிவர்த்தியாகும்
கார்த்திகை - நற்பேறு கிட்டும்
மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மாசி - துன்பங்கள் நீங்கும்.
பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்றவேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரண்டு கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் கார்த்திகையைக் கொண்டாடுவது மரபு.
- கதிரேசன், சென்னை-91
திருவிளக்கின் அக்னி புஷ்பங்கள்
சுடர்விடும் விளக்குகளின் திரியைத் தூண்டும்போது, அந்தத் திரியின் முனையில் படிந்திருக்கும் கரியும் எண்ணெய்த் துளிகளும் சேர்ந்து, தீப்பொறி களாகத் தெறித்து விழும். இதை விளக்குப் பூக்கள் என்பார்கள். இதைக் காண்பது நல்ல சகுனம்.
- ச. அருணவசந்தன், சென்னை-4

அவற்பொரி தீபம்
கார்த்திகை தீபத் திருநாளில் அவல் பொரியை வெல்லப் பாகில் சேர்த்துப் பிடித்து, கூம்பு போல் செய்து அதன் உச்சியில் குழி ஏற்படுத்தி, நெய் வார்த்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அவல் பொரி தீப்பிழம்புகளையும், வெல்லப் பாகு அமிர்தத்தையும், தீபம் சிவபெருமானையும் குறிக்கின்றன. வீட்டின் பூஜையறையில் அண்ணாமலையாரை நினைவூட்டும் வகையில் அவற்பொரி தீபம் ஏற்றப்படுகிறது.
- ச.ஆட்சிலிங்கம், சென்னை-4