<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>யா</strong></span></span>ர் எப்படி அவமானப் படுத்தினாலும் கோபமே படாதவர் அந்த துறவி.<br /> <br /> ‘எப்படி இவரால் இப்படி இருக்கமுடிகிறது?’ அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம். <br /> <br /> தன் கேள்வியை அந்தத் துறவியிடமே கேட்டார். துறவி பொறுமையாக விளக்கினார்.<br /> <br /> “ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு. ‘இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்...</p>.<p>அது ஒரு வெற்றுப்படகு!<br /> <br /> காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப் படகிடம் காட்டி என்ன பயன்?<br /> <br /> யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது இதுதான் நினைவுக்கு வரும்; இதுவும் வெற்றுப் படகுதான் என்று அமைதியாகிவிடுவேன்!” கேட்ட சிஷ்யர் தெளிவுபெற்றார். <br /> <br /> வள்ளுவனின் வாய்மொழி இப்படிச் சொல்கிறது...<br /> <br /> <em><strong>‘குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி<br /> கணமேயுங் காத்தல் அரிது’<br /> </strong></em><br /> குணமென்னும் குன்றேறி நின்றார் - உயர்வான பண்பான நல்ல குணங்களை உடையவர். <br /> <br /> வெகுளி - கோபம் <br /> <br /> கணமேயுங் - ஒரு கணமேனும் (நொடிப் பொழுது கூட)<br /> <br /> காத்தல் அரிது - தன்வசம் வைத்திருக்க மாட்டார்கள்.<br /> <br /> பொருள்: குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தமமான) பண்பாளர்களின் கோபம், ஒரு நொடிப்பொழுதே இருக்கும். தோன்றி மறைந்துவிடும். கோபத்தை தன் வசம் வைத்திருக்க மாட்டார்கள்.<br /> <br /> ஆறுவது சினம்! - என்கிறாள் அவ்வை... <br /> <br /> ஆறுவது தான் சினம்... தோன்றிய கனப்பொழுதில் மறைந்துவிட வேண்டும்... மறந்தும் விட வேண்டும். <br /> <br /> அறிவோம்...<br /> <br /> தெளிவோம்...!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>என்.கணேசன், சென்னை - 5. </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>யா</strong></span></span>ர் எப்படி அவமானப் படுத்தினாலும் கோபமே படாதவர் அந்த துறவி.<br /> <br /> ‘எப்படி இவரால் இப்படி இருக்கமுடிகிறது?’ அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம். <br /> <br /> தன் கேள்வியை அந்தத் துறவியிடமே கேட்டார். துறவி பொறுமையாக விளக்கினார்.<br /> <br /> “ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு. ‘இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்...</p>.<p>அது ஒரு வெற்றுப்படகு!<br /> <br /> காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப் படகிடம் காட்டி என்ன பயன்?<br /> <br /> யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது இதுதான் நினைவுக்கு வரும்; இதுவும் வெற்றுப் படகுதான் என்று அமைதியாகிவிடுவேன்!” கேட்ட சிஷ்யர் தெளிவுபெற்றார். <br /> <br /> வள்ளுவனின் வாய்மொழி இப்படிச் சொல்கிறது...<br /> <br /> <em><strong>‘குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி<br /> கணமேயுங் காத்தல் அரிது’<br /> </strong></em><br /> குணமென்னும் குன்றேறி நின்றார் - உயர்வான பண்பான நல்ல குணங்களை உடையவர். <br /> <br /> வெகுளி - கோபம் <br /> <br /> கணமேயுங் - ஒரு கணமேனும் (நொடிப் பொழுது கூட)<br /> <br /> காத்தல் அரிது - தன்வசம் வைத்திருக்க மாட்டார்கள்.<br /> <br /> பொருள்: குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தமமான) பண்பாளர்களின் கோபம், ஒரு நொடிப்பொழுதே இருக்கும். தோன்றி மறைந்துவிடும். கோபத்தை தன் வசம் வைத்திருக்க மாட்டார்கள்.<br /> <br /> ஆறுவது சினம்! - என்கிறாள் அவ்வை... <br /> <br /> ஆறுவது தான் சினம்... தோன்றிய கனப்பொழுதில் மறைந்துவிட வேண்டும்... மறந்தும் விட வேண்டும். <br /> <br /> அறிவோம்...<br /> <br /> தெளிவோம்...!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>என்.கணேசன், சென்னை - 5. </strong></span></p>