<blockquote>ஆதி சங்கரர் ஏக ஸ்லோகப் ப்ரகரணம் என்ற ஒரு ஸ்லோகத்தை எழுதியிருக்கிறார். கேள்வி பதிலின் மூலம் அறிவு புகட்டுவதைப்போல இந்த ஸ்லோகம் எழுதப்பட்டிருக்கிறது</blockquote>.<p>"கிம் ஜ்யோதிஸ்தவ பானுமானஹனிமே ராத்ரௌ ப்ரதீபாதிகம்<br><br>ஸ்யாதேவம் ரவித்பதர்சனவிதௌ கிம் ஜ்யோதி ராக்யாஹிமே I<br><br>சக்ஷூ ஸ்தஸ்ய நிமீலநாதி ஸமயே கிம் தீ: தியோதர்சணே<br><br>கிம் தத்ராஹம்: அதோ பவான்பரமகம் ஜ்யோதிஸ்ததஸ் I ப்ரபோ II"<br><br>இதை ஒரு ஸ்வாரஸ்யமான உரையாடலைப் போல அமைக்கலாம்.</p>.<p>குரு : சீடனே இந்த உலகத்தை எதைக்கொண்டு பார்க்கிறோம்?<br><br>சீடன் : குருவே, நாம் ஒளியின் துணைகொண்டு பார்க்கிறோம்.<br><br>குரு : சரிதான். அப்படி உனக்குத் துணை செய்யும் ஒளி எது என்று சொல்லமுடியுமா?<br><br>சீடன் : நிச்சயமாக... பகலில் சூரியன் ஒளிதந்து உதவுகிறான். இரவிலோ சந்திரன். அதுவும் இல்லாதபோது தீபங்கள்<br><br>குரு : சூரியன், சந்திரன், தீபம் ஆகிய மூன்றிலிருந்து ஒளி புறப்படுகிறது சரி. ஆனால் இந்த ஒளியை எந்த ஒளியைக் கொண்டு காண்கிறாய்? </p>.<p>சீடன் : குருநாதா, சூரியன், சந்திரன் தீபம் என ஒளி புறப்படும் பொருள் எதுவானாலும் நான் என் கண்ணாலேயே காண்கிறேன். என் கண்ணின் ஒளிதான் அவற்றை எனக்குக் காட்டுகிறது.<br><br>குரு : சபாஷ் ... இப்போது உன் கண்ணை மூடிக்கொள்... உனக்கு எதன் மூலமாகவாவது ஒளி தெரிகிறதா?<br><br>சீடன் : குரு நாதா நான் கண்களை மூடிக்கொண்ட உடன் எதுவும் எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு பெரிய ஒளியையும் என்னால் காணமுடியவில்லை. ஆனால்...<br><br>குரு : என்ன ஆனால்?<br><br>சீடன் : மனம் எதை எதையோ சிந்தனைகளை மூடிய கண் திரைகளில் ஓட்டுகிறது. எண்ணங்களால் நிறைகிறது.<br><br>குரு : அப்படியா... அப்படி என்றால் அந்த எண்ணங்களை எந்த ஒளிகொண்டு காண்கிறாய்?<br><br>சீடன் : என் புத்தியினால். ஒருவகையில் நான்தான் அந்த புத்தி.<br><br>குரு : சரியாகச் சொன்னாய். நீதான் எப்போதும் இருக்கும் ஒளி. நீ என்றால் உன் ஆன்மா. அந்த ஆன்மா பரப்பிரம்மத்தின் சிறு சொரூபம். அதுவே சகலத்தையும் காண்கிறது. காணவைக்கிறது. காண்பவையாகவும் இருக்கிறது. ஆத்மாதான் அழியாத ஒளி.<br><br> அத்வைதத்தின் சாரமல்லவா இந்த ஸ்லோகம். அனுதினமும் இதைப் பாராயணம் செய்து உள்ளொளி பெருக்குவோம்.</p>
<blockquote>ஆதி சங்கரர் ஏக ஸ்லோகப் ப்ரகரணம் என்ற ஒரு ஸ்லோகத்தை எழுதியிருக்கிறார். கேள்வி பதிலின் மூலம் அறிவு புகட்டுவதைப்போல இந்த ஸ்லோகம் எழுதப்பட்டிருக்கிறது</blockquote>.<p>"கிம் ஜ்யோதிஸ்தவ பானுமானஹனிமே ராத்ரௌ ப்ரதீபாதிகம்<br><br>ஸ்யாதேவம் ரவித்பதர்சனவிதௌ கிம் ஜ்யோதி ராக்யாஹிமே I<br><br>சக்ஷூ ஸ்தஸ்ய நிமீலநாதி ஸமயே கிம் தீ: தியோதர்சணே<br><br>கிம் தத்ராஹம்: அதோ பவான்பரமகம் ஜ்யோதிஸ்ததஸ் I ப்ரபோ II"<br><br>இதை ஒரு ஸ்வாரஸ்யமான உரையாடலைப் போல அமைக்கலாம்.</p>.<p>குரு : சீடனே இந்த உலகத்தை எதைக்கொண்டு பார்க்கிறோம்?<br><br>சீடன் : குருவே, நாம் ஒளியின் துணைகொண்டு பார்க்கிறோம்.<br><br>குரு : சரிதான். அப்படி உனக்குத் துணை செய்யும் ஒளி எது என்று சொல்லமுடியுமா?<br><br>சீடன் : நிச்சயமாக... பகலில் சூரியன் ஒளிதந்து உதவுகிறான். இரவிலோ சந்திரன். அதுவும் இல்லாதபோது தீபங்கள்<br><br>குரு : சூரியன், சந்திரன், தீபம் ஆகிய மூன்றிலிருந்து ஒளி புறப்படுகிறது சரி. ஆனால் இந்த ஒளியை எந்த ஒளியைக் கொண்டு காண்கிறாய்? </p>.<p>சீடன் : குருநாதா, சூரியன், சந்திரன் தீபம் என ஒளி புறப்படும் பொருள் எதுவானாலும் நான் என் கண்ணாலேயே காண்கிறேன். என் கண்ணின் ஒளிதான் அவற்றை எனக்குக் காட்டுகிறது.<br><br>குரு : சபாஷ் ... இப்போது உன் கண்ணை மூடிக்கொள்... உனக்கு எதன் மூலமாகவாவது ஒளி தெரிகிறதா?<br><br>சீடன் : குரு நாதா நான் கண்களை மூடிக்கொண்ட உடன் எதுவும் எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு பெரிய ஒளியையும் என்னால் காணமுடியவில்லை. ஆனால்...<br><br>குரு : என்ன ஆனால்?<br><br>சீடன் : மனம் எதை எதையோ சிந்தனைகளை மூடிய கண் திரைகளில் ஓட்டுகிறது. எண்ணங்களால் நிறைகிறது.<br><br>குரு : அப்படியா... அப்படி என்றால் அந்த எண்ணங்களை எந்த ஒளிகொண்டு காண்கிறாய்?<br><br>சீடன் : என் புத்தியினால். ஒருவகையில் நான்தான் அந்த புத்தி.<br><br>குரு : சரியாகச் சொன்னாய். நீதான் எப்போதும் இருக்கும் ஒளி. நீ என்றால் உன் ஆன்மா. அந்த ஆன்மா பரப்பிரம்மத்தின் சிறு சொரூபம். அதுவே சகலத்தையும் காண்கிறது. காணவைக்கிறது. காண்பவையாகவும் இருக்கிறது. ஆத்மாதான் அழியாத ஒளி.<br><br> அத்வைதத்தின் சாரமல்லவா இந்த ஸ்லோகம். அனுதினமும் இதைப் பாராயணம் செய்து உள்ளொளி பெருக்குவோம்.</p>