<p><strong>கோ</strong>தை நாச்சியார் பூதேவியின் அம்சம். பூமியில் வாழும் மக்களின் மீது மாறாத அன்பு கொண்டவள். அவர்கள் பகவானை அடைவதற்கான சகல நல்வழிகளையும் காட்டியருள்பவள். திருப்பாவையாய், பாசுரங் களாய்ப் பாடி வழிகாட்டியவள். </p><p>அவள் பாசுரங்கள் பகவானைப் போற்றும். அதே வேளையில் பக்தர்களாகிய நமக்குப் பின்பற்றவேண்டிய வழியைக்காட்டும். எப்படி ஒரு குழந்தைக்குத் தாயானவள் நற்கதைகளைச் சொல்லி வழிநடத்துவாளோ, அதேபோன்று புராண நிகழ்வுகளைச் சொல்லி பகவானின் கல்யாணக் குணங் களையும் காருண்யத்தையும் விளக்கு கிறாள் கோதை நாச்சியார். </p><p>அவ்வாறு அவள் சொல்லும் ஒரு வரியில் ஓராயிரம் தத்துவங்கள் அடங்கும். நாம் அறிந்த பாசுரத்தில் ஆண்டாள் சுட்டிச்செல்லும் சம்பவங்களை அறிந்துகொள்வதன் மூலம் பகவானை அறியும் மார்க்கத் தையும் தெரிந்துகொள்ளலாம். இதோ கோதை கதை சொல்கிறாள் நமக்காக...</p><p>திருப்பாவையின் 24 வது பாசுரம் ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று தொடங்குவது. </p><p>இந்தப் பாசுரத்தின் முதல் ஆறு வரிகளும் ‘போற்றி,’ ‘போற்றி’ என்று முடிகின்றன. </p>.<p>இந்த ஆறு வரிகளிலும் ஆறு தத்துவங்கள் அடங்கியுள்ளன. அவற்றை ஆண்டாள் கதைகளாய்ச் சுட்டிக்காட்டுகிறாள்.</p><p>சுவாமி வாமன அவதாரம் எடுத்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். இந்தக் கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான். நாராயண பட்டத்ரி, தான் எழுதிய நாராயணீயத்தில் இதில் என்ன விசேஷம் என்று விவரிக்கிறார்.</p><p>ஒருமுறை, மகாபலிச் சக்கரவர்த்தி இந்திர னோடு போரிட்டபோது இறந்துபோனான். உடனே அவனைச் சுக்கிராச்சாரியார் தன் மந்திர சக்தியால் உயிர்ப்பித்தார். </p><p>விஸ்வஜித் என்னும் யாகம் செய்து மகாபலிச் சக்கரவர்த்திக்கு எல்லாவிதமான சக்தியையும் கொடுத்தார். சக்தி கிடைத்ததும் பலிச்சக்கரவத்தி தேவர்கள் அனைவரையும் அடித்துவிரட்டி அவர்களுக்கு இருக்க இடமில்லாமல் செய்துவிட்டான்.</p><p>இதை நாராயண பட்டத்ரி குறிப்பிடும்போது,</p><p>‘சக்ரேண ஸம்யதி ஹதோபி பலிர் மஹாத்மா</p><p>சுக்ரேண ஜீவித தனு; க்ரதுவர்திதோஷ்மா’ என்கிறார்.</p><p>இதன் பொருள், `சக்ரனால் போனது சுக்கிரனால் வந்தது' என்பதாகும். சக்ரன் என்றால் இந்திரனைக் குறிக்கும். </p><p>தன் குருவான சுக்கிரனால் சகலமும் பெற்ற மகாபலி யாகம் செய்யும்போது பகவான் அவனை நோக்கித்தானே வருகிறார்.</p><p>`வந்திருப்பது யார்' என்று சுக்கிராச்சார்யர் மகாபலிக்குத் தெரிவிக்கிறார். மேலும் மகாபலி பிரகலாதாழ்வாருடைய பேரன் அல்லவா... அவனே பகவான் வந்திருப்பதை உள்ளூர உணர்ந்திருப்பான்தான். </p><p>அப்படியிருந்தும் பகவான் அவனிடம், “என் காலினால் மூன்றடி நிலம் கொடுத்தால் போதும்” என்று கேட்கிறார். இதைக் கேட்டதும் மகாபலிக்கு ஆணவம் தலைக்கு ஏறிவிட்டது.</p><p>“விச்வேஷம் மாம் - கிம் யாசஸே பாலிசஸ்த்வம்” என்று பதில் சொல்கிறான் மகாபலி. </p><p>`சகல உலகுக்கும் அரசன் நான். என்னிடம் போய் என்ன கேட்கிறாய்...'' என்பது இதன் கருத்து. அதாவது, `பெரும் அரசன் ஒருவனிடம் இந்தச் சின்ன விஷயத்தையா தானம் கேட்பது முட்டாள்தனமாக இருக்கிறதே' என்பதாக இருந்தது அவன் எண்ணம். எனில், அவனுக்கு ஆணவம் எந்த அளவில் இருந்திருக்கும்.</p><p>யார் வேண்டுமானாலும் அப்படிக் கருதலாம். ஆனால் பிரகலாதாழ்வாரின் பேரன் அப்படிக் கருதலாமா... எண்ணலாமா?</p><p>பின்னர் என்ன நடந்தது. தானம் அளிக்க முன்வந்தான் மகாபலி. </p><p>சுக்கிரர் தடுத்தார். ஆனால் அவன் அவரின் வார்த்தைகளைச் செவிமடுக்கவில்லை. எனவே சுக்கிரர் கோபம் கொண்டு, </p><p>‘எவற்றையெல்லாம் நீ பெற்றாயோ அவற்றை யெல்லாம் இழக்கக் கடவாய்’ என்று சாபம் இட்டார்! </p><p>குருவின் சாபம் பலிக்காமல் இருக்குமா? சாபம் பலித்தது. </p><p>பலிச் சக்கரவர்த்தியின் வாழ்க்கை நமக்கெல் லாம் ஒரு பாடம். குருவருள் இருந்தால் இழந்தது எதுவானாலும் (அது உயிரே ஆனாலும்) பெற்று விடலாம். அதேவேளையில், ஆணவம் உண்டானால் குருவின் அருள் நீங்கும்; அதுவே சாபமாக மாறி அழித்துவிடும். </p><p>பலியின் கதையில் பின்னர் நடந்த விஷயங்கள் அனைவருக்கும் தெரியும். பகவான் வாமனர் திரிவிக்ரமனாக மாறி, அன்றே இவ்வுலகை அளந்தார். இதையே கோதை நாச்சியாரும் பாடினாள்.</p>.<p>பாசுரத்தின் அடுத்த வரி, ‘சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி’ என்பது. </p><p>அயோத்தியிலிருந்து இலங்கைக்கு நடந்தே சென்றான் இறைவன். ஏன் நடந்தே சென்றான்... குகனுக்கு அருள், சுக்கிரீவனுக்கு அருள், அனுமனுக்கு அருள், விபீடணனுக்கு அருள் என்று செல்லும் வழியெங்கும் அருள்மழை பொழிந்துகொண்டே அல்லவா அந்த கார்மேக வண்ணன் நடந்தார். </p>.<p>ஆனால் இவற்றையெல்லாம் அறிந்திருந்தும், ‘முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா’ என்பதுபோல பிடிவாதமாய்ச் செயல்பட்டவன் ராவணன். அதனால்தான் ‘சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்’ என்கிறாள் கோதை ஆண்டாள்.</p><p>அரக்கனோ, மனிதனோ ஆணவம் கொண்டால் தெய்வம் அழிக்கும். ஆள்பவர்களிடத்தில் `நான்' என்கிற கர்வம் இருக்கக்கூடாது. ‘நான் என்று நினைக்காதே தெய்வம் தான் என்று காட்டிவிடும்’ எனும் கண்ணதாசன் வரிகளைப் போல, ராவணன் கர்வம் கொண்டபோது ராமன் அவனைப் போரிட்டு அழித்தார்!</p><p>ஆள்பவர்களுக்கு ஆணவம் கூடாது சரி. நமக்கு... இன்று மன்னராட்சி இல்லை. நாம் அனைவருமே இந்நாட்டு மன்னர் என்றுதானே சொல்லிக் கொள்கிறோம். அப்படிப் பார்த்தால் நாம் ஒவ்வொருவருமே ஆணவம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான் சூட்சுமமான உண்மை.</p>.<p>`பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி’ என்று அடுத்த வரியில் பகவானைத் துதிக்கிறாள் ஆண்டாள்.</p><p>ஒரு மாட்டுவண்டி. அதன் இரண்டு சக்கரங்களுக்கு நடுவே ஒரு தூளி கட்டி, அதில் குழந்தைக் கண்ணனைப் போட்டு வைத்திருக்கிறார்கள். அப்போது சகடாசுரன் என்னும் அசுரன் கண்ணனைக் கொல்லத் திட்டமிட்டான். </p><p>அந்த வண்டியின் சக்கரம் ஒன்றில் புகுந்து விட்டான். இந்தக் கபட வேலைகள் எல்லாம் கிருஷ்ணனிடம் நடக்குமா? தன் காலால் அந்தச் சக்கரத்தை உதைத்தார். அவர் கால்களே அந்தக் கணத்தில் சக்கராயுதம்போலானது. வண்டிச் சக்கரம் துண்டு துண்டானது. அசுரன் மாண்டான். </p><p>இதில் ரகசியம் என்னவென்றால், அந்த சகடாசுரன் அதாவது சக்கரம் வேறு எதுவுமல்ல காலச்சக்கரமே. நாராயண பட்டத்ரி, ‘துர்வாரம் த்வாதஸ ஆரம்’ என்கிறார். </p><p>இந்தக் காலச்சக்கரம் இருக்கிறதே அதற்குப் பன்னிரண்டு பகுதிகள், அதாவது பன்னிரு மாதங்கள் கொண்ட வட்டம்; மீண்டும் மீண்டும் வருவன. இந்தக் காலச்சக்கரத்துக்குள் சிக்கி இருப்பவர்கள் நாம். ஆனால் அதைத் தன் காலடியில் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன் பகவான் கிருஷ்ணன். </p><p>அவன் காலடி பட்டால் நம் காலச்சுழல் உடைந்துவிடும் என்பது மறைபொருள். அதனால்தான் `சகடத்தை உதைத்த கிருஷ்ணா உன் புகழ் போற்றி' என்று பாடுகிறாள் கோதை.</p>.<p>‘கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி’ என்று அடுத்த வரியில் போற்றுகிறாள் ஆண்டாள். இந்த வரியில் அவள் கண்ணனின் கழல்களைப் போற்றுகிறாள்.</p><p>வத்ஸாசுரன் என்னும் அசுரன் குழந்தைக் கண்ணனைக் கொல்ல வருகிறான். அதுவும் ஒரு கன்றாக உருமாறிவருகிறான். ஆயர்கள் வாழும் இடத்தில் கன்றுகளுக்கா பஞ்சம். எனவே கன்றாக மாறினால் அடையாளம் தெரியாமல் சென்று கண்ணனை அழித்து விடலாம் என்று திட்டமிட்டான். </p><p>அதே நேரம் கபித்தாசுரன் என்பவன் விளா மரமாக மாறி நின்றான். விளாமரம் கனிகள் நிறைந்து காணப்பட்டது. கண்ணனின் தோழர்கள் எல்லாம் அந்த மரத்தின் கனியைக் கண்டு ஆசைப்படுகிறார்கள். </p><p>அப்போது அந்த இடத்துக்கு வத்ஸாசுரன் கன்று வடிவாக வருகிறான். கிருஷ்ணன் கன்றின் பின்னங் கால்களைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி விளா மரத்தின் மீது எறிந்தான். மரம் சாய்ந்தது. கன்றும் மாண்டது. இருவரும் அசுர வடிவுக்கு மாறி உயிர்துறந்தனர்.</p><p>இதில் தத்துவ ரகசியம் என்னவென்றால் பகவானைத் தோழனாக்கிக் கொண்டால் நம் நல்வினை தீவினை ஆகிய இருவினையும் நீங்கிப் போய்விடும். தன் அடியவர்களை பகவான் இரண்டு வினைகளிலிருந்து விலக்கிக் காப்பான் என்றும் பொருள் சொல்லலாம்.</p>.<p>அடுத்த வரியில் கண்ணனின் மற்றொரு லீலையான, கோவர்த்தன கிரியைத் தூக்கிய நிகழ்வைப் பாடுகிறாள் கோதை.</p><p>கோகுலத்தில் வழக்கமாக இந்திரனுக்குப் பூஜைகள் செய்வது வழக்கம். கிருஷ்ணன் அவர் களிடம், ``நம்மை அனுதினமும் காக்கும் இந்த கோவர்த்தன கிரியையே நாம் வழிபடலாம்'' என்கிறான். ``கிரியும் உங்கள் பூஜையை ஏற்கும்'' என்றும் சொல்கிறான். </p><p>கோகுல வாசிகள் கோவர்த்தன கிரிக்குச் செய்த பூஜைகளை, அந்தக் கிரியில் அந்தர்யாமியாக நின்று அவனே ஏற்றுக்கொண்டான். தனக்குக் கிடைக்கவேண்டிய பூஜைகளை கிருஷ்ணன் தடுத்துவிட்டதை அறிந்த இந்திரன், ஏழு மழை மேகங்களை அனுப்பி கோகுலத்தையே வெள்ளத்தில் மூழ்கடித்துவிட உத்தரவிட்டான்.</p><p>கோகுலத்தில் பெருமழை பொழிந்தது. கோகுலவாசிகள் கிருஷ்ணனைச் சரண் அடைந்தனர். கிருஷ்ணனோ, கோவர்த்தன கிரியைத்தானே பூஜை செய்தோம், அதுவே நம்மைக் காக்கும் என்று சொல்லி, மலையைத் தூக்கித் தன் விரலின் நுனியில் குடை பிடிப்பதைப்போல நிறுத்தினான். </p><p>ஆயர்குல மக்களும் விலங்குகளும் அந்த மலை நிழலில் ஒடுங்கித் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். ஏழு நாள்கள் மழைபெய்து மேகங்கள் எல்லாம் தீர்ந்துபோனபின்பு மலைக்குக் கீழ் தங்கியிருந்த உயிர்கள் எல்லாம் மலைக்குக் கீழிருந்து வெளியேறிப் போயின. பின்பு கண்ணன் மலையை இறக்கிவைத்தான்.</p><p>இதையெல்லாம் பார்த்தான் இந்திரன். சிறுவன் என்று நினைத்தோமே, இவனல்லவா அந்த வாசுதேவன் என்று உணர்ந்து ஓடிவந்து கண்ணனின் பாதங்களைப் பணிந்து, அவனுக் குப் பட்டாபிஷேகமும் செய்துவைத்தான். அதுவே கோவிந்த பட்டாபிஷேகம் என்று போற்றப்படுகிறது.</p><p>இன்றைக்கு நாமெல்லாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் அவற்றையெல்லாம் வழிபாடாக்கி வைத்துப் பாதுகாத்துவந்தனர். </p><p>மலைகள், அருவிகள், ஆறுகள், மரங்கள் எல்லாவற்றையும் இறை சக்தியாக பாவிக்கும் தன்மையை உணர்த்தும் வைபவங்களே வழிபாடுகள். இவற்றை முறையாகப் பராமரித்தால் நம் சூழலை அவை பாதுகாக்கும். இல்லையேல் நமக்கு வேறு கதியில்லை.</p><p>தேவேந்திரன் என்பவன் நம் இந்திரியங்களின் அதிபதி. இந்திரியங்களால் ஆன நாமே தேவேந்திரர்கள். அவற்றின் விருப்பங்களுக்கு ஏற்ப நாம் நடந்துகொண்டால் உண்டாகும் தீய விளைவுகள்தான் மழை. </p><p>தீய விளைவுகளான பெருமழை நம்மை அழிக்காமல் இருக்கவேண்டும் என்றால் நாம் தெய்வத்தின் நிழலில் சரணடைய வேண்டும். அப்போது, தெய்வம் அருள்செய்து நம்மைக் காக்கும். இதில் சந்தேகமே கிடையாது. </p><p>இந்திரனின் அகங்காரம் போக்கியதால் உண்டான விழாவே போக்கிப் பண்டிகை என்று ஆகி, பின் போகிப் பண்டிகை ஆனது.</p>.<p>அடுத்த வரியில் நாச்சியார், ‘வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி’ என்று பாடுகிறாள். </p><p>பகவானின் கை வேல் பகைவர்களை அழிப்பதற்காக அல்ல. பகையைக் கெடுப்பதற் காக. நியாயம் கேட்டு வந்திருப்பவன் இறைவன் என்று தெளிந்து, தன் பகையை மாற்றிக் கொண்டால் நல்லது. </p><p>அவ்வாறு இல்லாமல் எதிர்த்தால் முதலில் அவனுள் இருக்கும் பகைத் திறம் அழியுமாறு செய்வார். அதிலும் அவன் அகந்தை அழியாமல் எதிர்த்து நின்றால்தான் அவனை சம்ஹாரம் செய்வார். </p><p>அப்படித்தான் மகாபலியும் ராவணனும், சகடாசுரனும், வத்ஸாசுரனும் அழிந்தனர். ஆணவத்தை விட்டுச் சரணடைந்த இந்திரன் பிழைத்தான். எனவே கிருஷ்ணரின் கை வேலின் வேலை பகை கெடுப்பதுதானே அன்றி, அழிப்பது அல்ல. </p><p>ஏன் இந்தப் பாசுரத்தில் ஆறு போற்றிகள்.</p><p>நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆறு பகைகள் உள்ளன. ஆறில் ஒன்று இருந்தாலே நாம் கெடுவோம். ஆறும் இருந்தால்... என்னவாகும்?</p><p>சரி... அதென்ன ஆறு பகைகள்? </p><p>காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் ஆகியவையே ஆறு பகைகள். இந்த ஆறு பகைகளும் கெட வேண்டும். இவை கெட்டுவிட்டால் இறைவனை அடைந்துவிடலாம். ஏதேனும் ஒன்று கெட மறுத்தாலும் பகவானின் கை வேல் அதைக் கெடுத்து, நம்மைக் காக்கும் வல்லமையுடையது.</p><p>எனவேதான் ஆண்டாள் நாச்சியார் நமக்காக இறைவனிடம், இந்த ஆறு பகைகளையும் நீக்கி உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வோம் என்று போற்றிப் பாடுகிறாள்.</p><p>“கிருஷ்ணா, நாங்கள் உன் சந்நிதிக்கு வந்து பாடி நிற்பதன் காரணம், உன் அருள் பெறுவ தற்காகவே. அதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அதை எல்லாம் நாங்கள் செய்வோம். எங்களுக்கு இரக்கம் காட்டி அருள வேண்டியது உன் கடமை” என்று வேண்டுகிறாள் நாச்சியார்.</p><p>ஆண்டாள் நாச்சியார் நம் தாயார். நமக்காகவே இறைவனின் அருளை வேண்டி நிற்கிறாள். அவள் சொல்லும் கதைகளில் ஒழிந்திருப்பவை ஆயிரம் ஆயிரம் உள்ளர்த்தங்கள். அவற்றை உணர்ந்து இந்த மார்கழியில் அந்த மாயவனைச் சரணடைவோம்.</p>.<p><strong>கண்ணா போற்றி!</strong></p><p>அன்று இவ்வுலகம் </p><p>அளந்தாய் அடி போற்றி</p><p>சென்றங்குத் தென்னிலங்கை </p><p>செற்றாய் திறல் போற்றி</p><p>பொன்றச் சகடம் </p><p>உதைத்தாய் புகழ் போற்றி</p><p>கன்று குணிலா எறிந்தாய் </p><p>கழல் போற்றி</p><p>குன்று குடையாய் </p><p>எடுத்தாய் குணம் போற்றி</p><p>வென்று பகைகெடுக்கும் </p><p>நின்கையில் வேல் போற்றி</p><p>என்றுஎன்றுஉன் சேவகமே </p><p>ஏத்திப் பறை கொள்வாய்</p><p>இன்று யாம் வந்தோம் </p><p>இரங்கேலோர் எம்பாவாய்</p><p>ஆறு போற்றிகளால் பகவானைப் பாடும் இந்தப் பாசுரத்தை அனு தினமும் படித்து வழிபட்டால், நம் அறியாமைகள் நீங்கும்; அதனால் நம்முடைய வினைகள் யாவும் நீங்கி நம் வாழ்வு சிறக்கும்!</p>
<p><strong>கோ</strong>தை நாச்சியார் பூதேவியின் அம்சம். பூமியில் வாழும் மக்களின் மீது மாறாத அன்பு கொண்டவள். அவர்கள் பகவானை அடைவதற்கான சகல நல்வழிகளையும் காட்டியருள்பவள். திருப்பாவையாய், பாசுரங் களாய்ப் பாடி வழிகாட்டியவள். </p><p>அவள் பாசுரங்கள் பகவானைப் போற்றும். அதே வேளையில் பக்தர்களாகிய நமக்குப் பின்பற்றவேண்டிய வழியைக்காட்டும். எப்படி ஒரு குழந்தைக்குத் தாயானவள் நற்கதைகளைச் சொல்லி வழிநடத்துவாளோ, அதேபோன்று புராண நிகழ்வுகளைச் சொல்லி பகவானின் கல்யாணக் குணங் களையும் காருண்யத்தையும் விளக்கு கிறாள் கோதை நாச்சியார். </p><p>அவ்வாறு அவள் சொல்லும் ஒரு வரியில் ஓராயிரம் தத்துவங்கள் அடங்கும். நாம் அறிந்த பாசுரத்தில் ஆண்டாள் சுட்டிச்செல்லும் சம்பவங்களை அறிந்துகொள்வதன் மூலம் பகவானை அறியும் மார்க்கத் தையும் தெரிந்துகொள்ளலாம். இதோ கோதை கதை சொல்கிறாள் நமக்காக...</p><p>திருப்பாவையின் 24 வது பாசுரம் ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று தொடங்குவது. </p><p>இந்தப் பாசுரத்தின் முதல் ஆறு வரிகளும் ‘போற்றி,’ ‘போற்றி’ என்று முடிகின்றன. </p>.<p>இந்த ஆறு வரிகளிலும் ஆறு தத்துவங்கள் அடங்கியுள்ளன. அவற்றை ஆண்டாள் கதைகளாய்ச் சுட்டிக்காட்டுகிறாள்.</p><p>சுவாமி வாமன அவதாரம் எடுத்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். இந்தக் கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான். நாராயண பட்டத்ரி, தான் எழுதிய நாராயணீயத்தில் இதில் என்ன விசேஷம் என்று விவரிக்கிறார்.</p><p>ஒருமுறை, மகாபலிச் சக்கரவர்த்தி இந்திர னோடு போரிட்டபோது இறந்துபோனான். உடனே அவனைச் சுக்கிராச்சாரியார் தன் மந்திர சக்தியால் உயிர்ப்பித்தார். </p><p>விஸ்வஜித் என்னும் யாகம் செய்து மகாபலிச் சக்கரவர்த்திக்கு எல்லாவிதமான சக்தியையும் கொடுத்தார். சக்தி கிடைத்ததும் பலிச்சக்கரவத்தி தேவர்கள் அனைவரையும் அடித்துவிரட்டி அவர்களுக்கு இருக்க இடமில்லாமல் செய்துவிட்டான்.</p><p>இதை நாராயண பட்டத்ரி குறிப்பிடும்போது,</p><p>‘சக்ரேண ஸம்யதி ஹதோபி பலிர் மஹாத்மா</p><p>சுக்ரேண ஜீவித தனு; க்ரதுவர்திதோஷ்மா’ என்கிறார்.</p><p>இதன் பொருள், `சக்ரனால் போனது சுக்கிரனால் வந்தது' என்பதாகும். சக்ரன் என்றால் இந்திரனைக் குறிக்கும். </p><p>தன் குருவான சுக்கிரனால் சகலமும் பெற்ற மகாபலி யாகம் செய்யும்போது பகவான் அவனை நோக்கித்தானே வருகிறார்.</p><p>`வந்திருப்பது யார்' என்று சுக்கிராச்சார்யர் மகாபலிக்குத் தெரிவிக்கிறார். மேலும் மகாபலி பிரகலாதாழ்வாருடைய பேரன் அல்லவா... அவனே பகவான் வந்திருப்பதை உள்ளூர உணர்ந்திருப்பான்தான். </p><p>அப்படியிருந்தும் பகவான் அவனிடம், “என் காலினால் மூன்றடி நிலம் கொடுத்தால் போதும்” என்று கேட்கிறார். இதைக் கேட்டதும் மகாபலிக்கு ஆணவம் தலைக்கு ஏறிவிட்டது.</p><p>“விச்வேஷம் மாம் - கிம் யாசஸே பாலிசஸ்த்வம்” என்று பதில் சொல்கிறான் மகாபலி. </p><p>`சகல உலகுக்கும் அரசன் நான். என்னிடம் போய் என்ன கேட்கிறாய்...'' என்பது இதன் கருத்து. அதாவது, `பெரும் அரசன் ஒருவனிடம் இந்தச் சின்ன விஷயத்தையா தானம் கேட்பது முட்டாள்தனமாக இருக்கிறதே' என்பதாக இருந்தது அவன் எண்ணம். எனில், அவனுக்கு ஆணவம் எந்த அளவில் இருந்திருக்கும்.</p><p>யார் வேண்டுமானாலும் அப்படிக் கருதலாம். ஆனால் பிரகலாதாழ்வாரின் பேரன் அப்படிக் கருதலாமா... எண்ணலாமா?</p><p>பின்னர் என்ன நடந்தது. தானம் அளிக்க முன்வந்தான் மகாபலி. </p><p>சுக்கிரர் தடுத்தார். ஆனால் அவன் அவரின் வார்த்தைகளைச் செவிமடுக்கவில்லை. எனவே சுக்கிரர் கோபம் கொண்டு, </p><p>‘எவற்றையெல்லாம் நீ பெற்றாயோ அவற்றை யெல்லாம் இழக்கக் கடவாய்’ என்று சாபம் இட்டார்! </p><p>குருவின் சாபம் பலிக்காமல் இருக்குமா? சாபம் பலித்தது. </p><p>பலிச் சக்கரவர்த்தியின் வாழ்க்கை நமக்கெல் லாம் ஒரு பாடம். குருவருள் இருந்தால் இழந்தது எதுவானாலும் (அது உயிரே ஆனாலும்) பெற்று விடலாம். அதேவேளையில், ஆணவம் உண்டானால் குருவின் அருள் நீங்கும்; அதுவே சாபமாக மாறி அழித்துவிடும். </p><p>பலியின் கதையில் பின்னர் நடந்த விஷயங்கள் அனைவருக்கும் தெரியும். பகவான் வாமனர் திரிவிக்ரமனாக மாறி, அன்றே இவ்வுலகை அளந்தார். இதையே கோதை நாச்சியாரும் பாடினாள்.</p>.<p>பாசுரத்தின் அடுத்த வரி, ‘சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி’ என்பது. </p><p>அயோத்தியிலிருந்து இலங்கைக்கு நடந்தே சென்றான் இறைவன். ஏன் நடந்தே சென்றான்... குகனுக்கு அருள், சுக்கிரீவனுக்கு அருள், அனுமனுக்கு அருள், விபீடணனுக்கு அருள் என்று செல்லும் வழியெங்கும் அருள்மழை பொழிந்துகொண்டே அல்லவா அந்த கார்மேக வண்ணன் நடந்தார். </p>.<p>ஆனால் இவற்றையெல்லாம் அறிந்திருந்தும், ‘முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா’ என்பதுபோல பிடிவாதமாய்ச் செயல்பட்டவன் ராவணன். அதனால்தான் ‘சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்’ என்கிறாள் கோதை ஆண்டாள்.</p><p>அரக்கனோ, மனிதனோ ஆணவம் கொண்டால் தெய்வம் அழிக்கும். ஆள்பவர்களிடத்தில் `நான்' என்கிற கர்வம் இருக்கக்கூடாது. ‘நான் என்று நினைக்காதே தெய்வம் தான் என்று காட்டிவிடும்’ எனும் கண்ணதாசன் வரிகளைப் போல, ராவணன் கர்வம் கொண்டபோது ராமன் அவனைப் போரிட்டு அழித்தார்!</p><p>ஆள்பவர்களுக்கு ஆணவம் கூடாது சரி. நமக்கு... இன்று மன்னராட்சி இல்லை. நாம் அனைவருமே இந்நாட்டு மன்னர் என்றுதானே சொல்லிக் கொள்கிறோம். அப்படிப் பார்த்தால் நாம் ஒவ்வொருவருமே ஆணவம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான் சூட்சுமமான உண்மை.</p>.<p>`பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி’ என்று அடுத்த வரியில் பகவானைத் துதிக்கிறாள் ஆண்டாள்.</p><p>ஒரு மாட்டுவண்டி. அதன் இரண்டு சக்கரங்களுக்கு நடுவே ஒரு தூளி கட்டி, அதில் குழந்தைக் கண்ணனைப் போட்டு வைத்திருக்கிறார்கள். அப்போது சகடாசுரன் என்னும் அசுரன் கண்ணனைக் கொல்லத் திட்டமிட்டான். </p><p>அந்த வண்டியின் சக்கரம் ஒன்றில் புகுந்து விட்டான். இந்தக் கபட வேலைகள் எல்லாம் கிருஷ்ணனிடம் நடக்குமா? தன் காலால் அந்தச் சக்கரத்தை உதைத்தார். அவர் கால்களே அந்தக் கணத்தில் சக்கராயுதம்போலானது. வண்டிச் சக்கரம் துண்டு துண்டானது. அசுரன் மாண்டான். </p><p>இதில் ரகசியம் என்னவென்றால், அந்த சகடாசுரன் அதாவது சக்கரம் வேறு எதுவுமல்ல காலச்சக்கரமே. நாராயண பட்டத்ரி, ‘துர்வாரம் த்வாதஸ ஆரம்’ என்கிறார். </p><p>இந்தக் காலச்சக்கரம் இருக்கிறதே அதற்குப் பன்னிரண்டு பகுதிகள், அதாவது பன்னிரு மாதங்கள் கொண்ட வட்டம்; மீண்டும் மீண்டும் வருவன. இந்தக் காலச்சக்கரத்துக்குள் சிக்கி இருப்பவர்கள் நாம். ஆனால் அதைத் தன் காலடியில் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன் பகவான் கிருஷ்ணன். </p><p>அவன் காலடி பட்டால் நம் காலச்சுழல் உடைந்துவிடும் என்பது மறைபொருள். அதனால்தான் `சகடத்தை உதைத்த கிருஷ்ணா உன் புகழ் போற்றி' என்று பாடுகிறாள் கோதை.</p>.<p>‘கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி’ என்று அடுத்த வரியில் போற்றுகிறாள் ஆண்டாள். இந்த வரியில் அவள் கண்ணனின் கழல்களைப் போற்றுகிறாள்.</p><p>வத்ஸாசுரன் என்னும் அசுரன் குழந்தைக் கண்ணனைக் கொல்ல வருகிறான். அதுவும் ஒரு கன்றாக உருமாறிவருகிறான். ஆயர்கள் வாழும் இடத்தில் கன்றுகளுக்கா பஞ்சம். எனவே கன்றாக மாறினால் அடையாளம் தெரியாமல் சென்று கண்ணனை அழித்து விடலாம் என்று திட்டமிட்டான். </p><p>அதே நேரம் கபித்தாசுரன் என்பவன் விளா மரமாக மாறி நின்றான். விளாமரம் கனிகள் நிறைந்து காணப்பட்டது. கண்ணனின் தோழர்கள் எல்லாம் அந்த மரத்தின் கனியைக் கண்டு ஆசைப்படுகிறார்கள். </p><p>அப்போது அந்த இடத்துக்கு வத்ஸாசுரன் கன்று வடிவாக வருகிறான். கிருஷ்ணன் கன்றின் பின்னங் கால்களைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி விளா மரத்தின் மீது எறிந்தான். மரம் சாய்ந்தது. கன்றும் மாண்டது. இருவரும் அசுர வடிவுக்கு மாறி உயிர்துறந்தனர்.</p><p>இதில் தத்துவ ரகசியம் என்னவென்றால் பகவானைத் தோழனாக்கிக் கொண்டால் நம் நல்வினை தீவினை ஆகிய இருவினையும் நீங்கிப் போய்விடும். தன் அடியவர்களை பகவான் இரண்டு வினைகளிலிருந்து விலக்கிக் காப்பான் என்றும் பொருள் சொல்லலாம்.</p>.<p>அடுத்த வரியில் கண்ணனின் மற்றொரு லீலையான, கோவர்த்தன கிரியைத் தூக்கிய நிகழ்வைப் பாடுகிறாள் கோதை.</p><p>கோகுலத்தில் வழக்கமாக இந்திரனுக்குப் பூஜைகள் செய்வது வழக்கம். கிருஷ்ணன் அவர் களிடம், ``நம்மை அனுதினமும் காக்கும் இந்த கோவர்த்தன கிரியையே நாம் வழிபடலாம்'' என்கிறான். ``கிரியும் உங்கள் பூஜையை ஏற்கும்'' என்றும் சொல்கிறான். </p><p>கோகுல வாசிகள் கோவர்த்தன கிரிக்குச் செய்த பூஜைகளை, அந்தக் கிரியில் அந்தர்யாமியாக நின்று அவனே ஏற்றுக்கொண்டான். தனக்குக் கிடைக்கவேண்டிய பூஜைகளை கிருஷ்ணன் தடுத்துவிட்டதை அறிந்த இந்திரன், ஏழு மழை மேகங்களை அனுப்பி கோகுலத்தையே வெள்ளத்தில் மூழ்கடித்துவிட உத்தரவிட்டான்.</p><p>கோகுலத்தில் பெருமழை பொழிந்தது. கோகுலவாசிகள் கிருஷ்ணனைச் சரண் அடைந்தனர். கிருஷ்ணனோ, கோவர்த்தன கிரியைத்தானே பூஜை செய்தோம், அதுவே நம்மைக் காக்கும் என்று சொல்லி, மலையைத் தூக்கித் தன் விரலின் நுனியில் குடை பிடிப்பதைப்போல நிறுத்தினான். </p><p>ஆயர்குல மக்களும் விலங்குகளும் அந்த மலை நிழலில் ஒடுங்கித் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். ஏழு நாள்கள் மழைபெய்து மேகங்கள் எல்லாம் தீர்ந்துபோனபின்பு மலைக்குக் கீழ் தங்கியிருந்த உயிர்கள் எல்லாம் மலைக்குக் கீழிருந்து வெளியேறிப் போயின. பின்பு கண்ணன் மலையை இறக்கிவைத்தான்.</p><p>இதையெல்லாம் பார்த்தான் இந்திரன். சிறுவன் என்று நினைத்தோமே, இவனல்லவா அந்த வாசுதேவன் என்று உணர்ந்து ஓடிவந்து கண்ணனின் பாதங்களைப் பணிந்து, அவனுக் குப் பட்டாபிஷேகமும் செய்துவைத்தான். அதுவே கோவிந்த பட்டாபிஷேகம் என்று போற்றப்படுகிறது.</p><p>இன்றைக்கு நாமெல்லாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் அவற்றையெல்லாம் வழிபாடாக்கி வைத்துப் பாதுகாத்துவந்தனர். </p><p>மலைகள், அருவிகள், ஆறுகள், மரங்கள் எல்லாவற்றையும் இறை சக்தியாக பாவிக்கும் தன்மையை உணர்த்தும் வைபவங்களே வழிபாடுகள். இவற்றை முறையாகப் பராமரித்தால் நம் சூழலை அவை பாதுகாக்கும். இல்லையேல் நமக்கு வேறு கதியில்லை.</p><p>தேவேந்திரன் என்பவன் நம் இந்திரியங்களின் அதிபதி. இந்திரியங்களால் ஆன நாமே தேவேந்திரர்கள். அவற்றின் விருப்பங்களுக்கு ஏற்ப நாம் நடந்துகொண்டால் உண்டாகும் தீய விளைவுகள்தான் மழை. </p><p>தீய விளைவுகளான பெருமழை நம்மை அழிக்காமல் இருக்கவேண்டும் என்றால் நாம் தெய்வத்தின் நிழலில் சரணடைய வேண்டும். அப்போது, தெய்வம் அருள்செய்து நம்மைக் காக்கும். இதில் சந்தேகமே கிடையாது. </p><p>இந்திரனின் அகங்காரம் போக்கியதால் உண்டான விழாவே போக்கிப் பண்டிகை என்று ஆகி, பின் போகிப் பண்டிகை ஆனது.</p>.<p>அடுத்த வரியில் நாச்சியார், ‘வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி’ என்று பாடுகிறாள். </p><p>பகவானின் கை வேல் பகைவர்களை அழிப்பதற்காக அல்ல. பகையைக் கெடுப்பதற் காக. நியாயம் கேட்டு வந்திருப்பவன் இறைவன் என்று தெளிந்து, தன் பகையை மாற்றிக் கொண்டால் நல்லது. </p><p>அவ்வாறு இல்லாமல் எதிர்த்தால் முதலில் அவனுள் இருக்கும் பகைத் திறம் அழியுமாறு செய்வார். அதிலும் அவன் அகந்தை அழியாமல் எதிர்த்து நின்றால்தான் அவனை சம்ஹாரம் செய்வார். </p><p>அப்படித்தான் மகாபலியும் ராவணனும், சகடாசுரனும், வத்ஸாசுரனும் அழிந்தனர். ஆணவத்தை விட்டுச் சரணடைந்த இந்திரன் பிழைத்தான். எனவே கிருஷ்ணரின் கை வேலின் வேலை பகை கெடுப்பதுதானே அன்றி, அழிப்பது அல்ல. </p><p>ஏன் இந்தப் பாசுரத்தில் ஆறு போற்றிகள்.</p><p>நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆறு பகைகள் உள்ளன. ஆறில் ஒன்று இருந்தாலே நாம் கெடுவோம். ஆறும் இருந்தால்... என்னவாகும்?</p><p>சரி... அதென்ன ஆறு பகைகள்? </p><p>காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் ஆகியவையே ஆறு பகைகள். இந்த ஆறு பகைகளும் கெட வேண்டும். இவை கெட்டுவிட்டால் இறைவனை அடைந்துவிடலாம். ஏதேனும் ஒன்று கெட மறுத்தாலும் பகவானின் கை வேல் அதைக் கெடுத்து, நம்மைக் காக்கும் வல்லமையுடையது.</p><p>எனவேதான் ஆண்டாள் நாச்சியார் நமக்காக இறைவனிடம், இந்த ஆறு பகைகளையும் நீக்கி உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வோம் என்று போற்றிப் பாடுகிறாள்.</p><p>“கிருஷ்ணா, நாங்கள் உன் சந்நிதிக்கு வந்து பாடி நிற்பதன் காரணம், உன் அருள் பெறுவ தற்காகவே. அதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அதை எல்லாம் நாங்கள் செய்வோம். எங்களுக்கு இரக்கம் காட்டி அருள வேண்டியது உன் கடமை” என்று வேண்டுகிறாள் நாச்சியார்.</p><p>ஆண்டாள் நாச்சியார் நம் தாயார். நமக்காகவே இறைவனின் அருளை வேண்டி நிற்கிறாள். அவள் சொல்லும் கதைகளில் ஒழிந்திருப்பவை ஆயிரம் ஆயிரம் உள்ளர்த்தங்கள். அவற்றை உணர்ந்து இந்த மார்கழியில் அந்த மாயவனைச் சரணடைவோம்.</p>.<p><strong>கண்ணா போற்றி!</strong></p><p>அன்று இவ்வுலகம் </p><p>அளந்தாய் அடி போற்றி</p><p>சென்றங்குத் தென்னிலங்கை </p><p>செற்றாய் திறல் போற்றி</p><p>பொன்றச் சகடம் </p><p>உதைத்தாய் புகழ் போற்றி</p><p>கன்று குணிலா எறிந்தாய் </p><p>கழல் போற்றி</p><p>குன்று குடையாய் </p><p>எடுத்தாய் குணம் போற்றி</p><p>வென்று பகைகெடுக்கும் </p><p>நின்கையில் வேல் போற்றி</p><p>என்றுஎன்றுஉன் சேவகமே </p><p>ஏத்திப் பறை கொள்வாய்</p><p>இன்று யாம் வந்தோம் </p><p>இரங்கேலோர் எம்பாவாய்</p><p>ஆறு போற்றிகளால் பகவானைப் பாடும் இந்தப் பாசுரத்தை அனு தினமும் படித்து வழிபட்டால், நம் அறியாமைகள் நீங்கும்; அதனால் நம்முடைய வினைகள் யாவும் நீங்கி நம் வாழ்வு சிறக்கும்!</p>