<p><strong>ந</strong>ன்மையும் தீமையுமாய்</p><p>நமக்குள்ளும் சமர் உண்டு</p><p>கந்தனைச் சிந்தையிலேற்றி</p><p>ஆணவம், கன்மம், மாயை</p><p>மும்மலம் விலக்கினால்</p><p>துன்பத் திரை விலகும்;</p><p>இன்பவினை கூடும்.</p><p>மண்ணில் மனிதனின்</p><p>மனத்தின் இக்காட்சியைச் </p><p>செந்தூரின் விண்ணும் காட்டியது.</p><p>முகில் திரை விலக </p><p>கந்தன் அருளால் பூரணச்</p><p>சந்திரன் ஒளிர்ந்தது; மண்ணில்</p><p>தண்ணொளி பொலிந்தது!</p>.<p><strong><ins>விழி நீரில் பூத்த மலர்கள்!</ins></strong></p><p>செந்தூரில்</p><p>சூரனை ஆட்கொண்ட</p><p>அருளாடல் மட்டுமா?</p><p>சுட்ட பழம் தந்தது,</p><p>ஆற்றுப்படை கொண்டது,</p><p>வேள்வி ஆடு வென்றது,</p><p>வேடுபறி செய்தது என</p><p>முன்னும் பின்னுமாய்...</p><p>கந்தனின் அருள் சொல்லும்</p><p>இன்னும்பல கதைகள் உண்டு!</p><p>மண்ணை மட்டுமா...</p><p>முருகனின் அருள் லீலைகள்</p><p>விண்ணையும் </p><p>வியக்க வைத்தன!</p><p>அவ்விதமான </p><p>மருகனின் லீலைகளைக்</p><p>கண்டும் கேட்டும்</p><p>உண்டான களிப்பில்</p><p>மாலவனுக்கு விம்மியது மனம் </p><p>அவரின் பூவிழிகளில்</p><p>பொழிந்தது கண்ணீர்!</p><p>அவ்விழி நீரில் பூத்த </p><p>மலரிரண்டு:</p><p>அமுதவல்லி - சுந்தரவல்லி!</p><p>பாவையர் இருவரும் முருகனே</p><p>தேவையென்று தவமாய்த் </p><p>தவமிருந்து பிறந்தனர்</p><p>விண்ணிலும் மண்ணிலுமாய்.</p><p>முன்னவள் காணிக்கைப் பரிசாகக்</p><p>கந்தனை வந்தடைந்தாள்; </p><p>பின்னவளைக் காதலில்</p><p>கசிந்துருகிக் கந்தனே </p><p>சென்றடைந்தான்.</p><p>இனி, அக்கதைகளைக் </p><p>காண்போம்!</p>.<p><strong>இந்திரனின் காணிக்கை!</strong></p><p>வாழ்வளித்த </p><p>கந்தனுக்குக் </p><p>காணிக்கைப் பரிசளிக்க</p><p>நினைத்தான் இந்திரன்.</p><p>`யாது தருவது?’</p><p>அமரர்கள் வினவ...</p><p>`என்னையே தருவேன்’</p><p>என்றான் இந்திரன்.</p><p>காலம் சிரித்தது;</p><p>`நீ மனத்தால் </p><p>பிணக்குற்றவன்</p><p>அதனால் பல</p><p>இன்னலுற்றவன்.</p><p>நீயோ கந்தனுக்குக் </p><p>காணிக்கை நடந்தால்</p><p>அதுவே வேடிக்கை’</p><p>என்றது!</p><p>இந்திரன் </p><p>சிந்தித்தான் </p><p>தீர்மானித்தான்.</p><p>`உள்ளத்தில் </p><p>உயர்வானவள் - என்</p><p>உயிரினும் மேலானவள்</p><p>என் மகளை</p><p>முருகனுக்குத் தருவேன் அவரை</p><p>மருகனாக்கி வருவேன்!’ </p><p>என்றான்.</p><p>மண் மகிழ்ந்தது;</p><p>விண் புகழ்ந்தது!</p><p><strong><ins>தெய்வயானை திருக்கல்யாணம்</ins></strong></p><p>பாக்கும் கமுகும்</p><p>தென்னங்கீற்றும் வாழையும் </p><p>செவ்விள நீரும் கனிகளும்</p><p>தோரணமாய்த் திகழ</p><p>நான்முகனார் </p><p>வேதம் சொல்ல</p><p>கலைமகளும் </p><p>நலங்கு வைக்க</p><p>மாலவனும் மலர்விழியாள்</p><p>திருமகளும் பூமகளும்</p><p>வந்தோரை வரவேற்க</p><p>அன்னையவள் </p><p>கன்னம் கிள்ள</p><p>அரனாரோ ஆசிகூற</p><p>நந்தி வாகனரும்</p><p>தொந்தி வயிற்றோனும்</p><p>முந்தி வந்து இசைபாட</p><p>மனிதரும் முனிவரும்</p><p>முக்கோடி தேவரும்</p><p>மனம் கனிந்து</p><p>வாழ்த்துசொல்ல</p><p>கல்யாணம் நடந்தது</p><p>தெய்வயானையின்</p><p>திருக்கல்யாணம் நிகழ்ந்தது!</p><p>காலம் சுழன்றது</p><p>இரவு - பகல் விழுங்கி</p><p>இயற்கை பருவ நிலை மாற்ற</p><p>கார்காலம் வந்தது!</p><p><strong>வேடனின் வருகை!</strong></p><p>வானவில்லின் </p><p>கோலம் கண்டு - மயில்</p><p>வண்ணத் தோகை விரித்தாடும் </p><p>குறிஞ்சியின் மண் </p><p>உறிஞ்சிய நீர் விருட்சங்களின் </p><p>வேர்வழி புகுந்து</p><p>கிளை வழி ஊதலாய் எழுந்து</p><p>காதலர் மனம் கசிய</p><p>கூதலாய் வளர்ந்து</p><p>ஆற்றின் நீர்மிசை பாய்ந்தது </p><p>பின்னும் </p><p>வேகம் தணியாது - </p><p>குளிர்த் தென்றலாய் </p><p>எழுந்து வான்முகில் </p><p>சேர்ந்து மலைச் சாரலில் </p><p>மோதி மழைச் சாரலைப் </p><p>பொழிந்தது!</p><p>சாரலும் தூறலுமாய்</p><p>முகம் வழிந்த நீரை</p><p>வழித்தெறிந்த வேடன்,</p><p>சளைத்தானில்லை</p><p>புள்ளினம் தேடுவதாய்</p><p>வள்ளியின் தினைப்புனம்</p><p>சேர்ந்தான்!</p><p><strong>- கந்தன் வருவான்...</strong></p>
<p><strong>ந</strong>ன்மையும் தீமையுமாய்</p><p>நமக்குள்ளும் சமர் உண்டு</p><p>கந்தனைச் சிந்தையிலேற்றி</p><p>ஆணவம், கன்மம், மாயை</p><p>மும்மலம் விலக்கினால்</p><p>துன்பத் திரை விலகும்;</p><p>இன்பவினை கூடும்.</p><p>மண்ணில் மனிதனின்</p><p>மனத்தின் இக்காட்சியைச் </p><p>செந்தூரின் விண்ணும் காட்டியது.</p><p>முகில் திரை விலக </p><p>கந்தன் அருளால் பூரணச்</p><p>சந்திரன் ஒளிர்ந்தது; மண்ணில்</p><p>தண்ணொளி பொலிந்தது!</p>.<p><strong><ins>விழி நீரில் பூத்த மலர்கள்!</ins></strong></p><p>செந்தூரில்</p><p>சூரனை ஆட்கொண்ட</p><p>அருளாடல் மட்டுமா?</p><p>சுட்ட பழம் தந்தது,</p><p>ஆற்றுப்படை கொண்டது,</p><p>வேள்வி ஆடு வென்றது,</p><p>வேடுபறி செய்தது என</p><p>முன்னும் பின்னுமாய்...</p><p>கந்தனின் அருள் சொல்லும்</p><p>இன்னும்பல கதைகள் உண்டு!</p><p>மண்ணை மட்டுமா...</p><p>முருகனின் அருள் லீலைகள்</p><p>விண்ணையும் </p><p>வியக்க வைத்தன!</p><p>அவ்விதமான </p><p>மருகனின் லீலைகளைக்</p><p>கண்டும் கேட்டும்</p><p>உண்டான களிப்பில்</p><p>மாலவனுக்கு விம்மியது மனம் </p><p>அவரின் பூவிழிகளில்</p><p>பொழிந்தது கண்ணீர்!</p><p>அவ்விழி நீரில் பூத்த </p><p>மலரிரண்டு:</p><p>அமுதவல்லி - சுந்தரவல்லி!</p><p>பாவையர் இருவரும் முருகனே</p><p>தேவையென்று தவமாய்த் </p><p>தவமிருந்து பிறந்தனர்</p><p>விண்ணிலும் மண்ணிலுமாய்.</p><p>முன்னவள் காணிக்கைப் பரிசாகக்</p><p>கந்தனை வந்தடைந்தாள்; </p><p>பின்னவளைக் காதலில்</p><p>கசிந்துருகிக் கந்தனே </p><p>சென்றடைந்தான்.</p><p>இனி, அக்கதைகளைக் </p><p>காண்போம்!</p>.<p><strong>இந்திரனின் காணிக்கை!</strong></p><p>வாழ்வளித்த </p><p>கந்தனுக்குக் </p><p>காணிக்கைப் பரிசளிக்க</p><p>நினைத்தான் இந்திரன்.</p><p>`யாது தருவது?’</p><p>அமரர்கள் வினவ...</p><p>`என்னையே தருவேன்’</p><p>என்றான் இந்திரன்.</p><p>காலம் சிரித்தது;</p><p>`நீ மனத்தால் </p><p>பிணக்குற்றவன்</p><p>அதனால் பல</p><p>இன்னலுற்றவன்.</p><p>நீயோ கந்தனுக்குக் </p><p>காணிக்கை நடந்தால்</p><p>அதுவே வேடிக்கை’</p><p>என்றது!</p><p>இந்திரன் </p><p>சிந்தித்தான் </p><p>தீர்மானித்தான்.</p><p>`உள்ளத்தில் </p><p>உயர்வானவள் - என்</p><p>உயிரினும் மேலானவள்</p><p>என் மகளை</p><p>முருகனுக்குத் தருவேன் அவரை</p><p>மருகனாக்கி வருவேன்!’ </p><p>என்றான்.</p><p>மண் மகிழ்ந்தது;</p><p>விண் புகழ்ந்தது!</p><p><strong><ins>தெய்வயானை திருக்கல்யாணம்</ins></strong></p><p>பாக்கும் கமுகும்</p><p>தென்னங்கீற்றும் வாழையும் </p><p>செவ்விள நீரும் கனிகளும்</p><p>தோரணமாய்த் திகழ</p><p>நான்முகனார் </p><p>வேதம் சொல்ல</p><p>கலைமகளும் </p><p>நலங்கு வைக்க</p><p>மாலவனும் மலர்விழியாள்</p><p>திருமகளும் பூமகளும்</p><p>வந்தோரை வரவேற்க</p><p>அன்னையவள் </p><p>கன்னம் கிள்ள</p><p>அரனாரோ ஆசிகூற</p><p>நந்தி வாகனரும்</p><p>தொந்தி வயிற்றோனும்</p><p>முந்தி வந்து இசைபாட</p><p>மனிதரும் முனிவரும்</p><p>முக்கோடி தேவரும்</p><p>மனம் கனிந்து</p><p>வாழ்த்துசொல்ல</p><p>கல்யாணம் நடந்தது</p><p>தெய்வயானையின்</p><p>திருக்கல்யாணம் நிகழ்ந்தது!</p><p>காலம் சுழன்றது</p><p>இரவு - பகல் விழுங்கி</p><p>இயற்கை பருவ நிலை மாற்ற</p><p>கார்காலம் வந்தது!</p><p><strong>வேடனின் வருகை!</strong></p><p>வானவில்லின் </p><p>கோலம் கண்டு - மயில்</p><p>வண்ணத் தோகை விரித்தாடும் </p><p>குறிஞ்சியின் மண் </p><p>உறிஞ்சிய நீர் விருட்சங்களின் </p><p>வேர்வழி புகுந்து</p><p>கிளை வழி ஊதலாய் எழுந்து</p><p>காதலர் மனம் கசிய</p><p>கூதலாய் வளர்ந்து</p><p>ஆற்றின் நீர்மிசை பாய்ந்தது </p><p>பின்னும் </p><p>வேகம் தணியாது - </p><p>குளிர்த் தென்றலாய் </p><p>எழுந்து வான்முகில் </p><p>சேர்ந்து மலைச் சாரலில் </p><p>மோதி மழைச் சாரலைப் </p><p>பொழிந்தது!</p><p>சாரலும் தூறலுமாய்</p><p>முகம் வழிந்த நீரை</p><p>வழித்தெறிந்த வேடன்,</p><p>சளைத்தானில்லை</p><p>புள்ளினம் தேடுவதாய்</p><p>வள்ளியின் தினைப்புனம்</p><p>சேர்ந்தான்!</p><p><strong>- கந்தன் வருவான்...</strong></p>