<p><strong>வேடனின் வருகை!</strong><br><br><strong>சா</strong>ரலும் தூறலுமாய்<br><br>முகம் வழிந்த நீரை<br><br>வழித்தெறிந்த வேடன்,<br><br>சளைத்தானில்லை;<br><br>புள்ளினம் தேடுவதாய்<br><br>வள்ளியின் தினைப்புனம்<br><br>சேர்ந்தான்; குறவள்ளியைக்<br><br>கண்டான்!</p>.<p>அங்கே, அவன் <br><br>மனப்பட்சிக்கு <br><br>இணையாய் <br><br>வனப் பட்சிகள் <br><br>பறந்தன! அவற்றில்... <br><br>தினை கொத்த <br><br>வந்தவை பாதி; <br><br>மீனினம் என்று <br><br>அவளின்<br><br>கண்கொத்த <br><br>வந்தன மீதி!</p><p>கோவைப் பழம்<br><br>தொலைத்த <br><br>கிள்ளைகளோ,<br><br>அவளின் இதழ்<br><br>கொத்த வந்தன!<br><br>அதுகண்டு அவள்<br><br>நகைக்க, குயில்கள்<br><br>குரலடங்கி<br><br>நின்றன; வேடனோ<br><br>புலனடங்கி நின்றான்!</p>.<p><strong>கிழமாகி நின்றான்!</strong><br><br>கொடியிடையாள் -<br><br>வேல் விழியாள்,<br><br>வேடனை மனத்தில் <br><br>சிறைபிடித்தாள்!<br><br>வேடனோ <br><br>சிறைமீள <br><br>நாடவில்லை; <br><br>அவளின் அகம்நாட <br><br>விளைந்தான். <br><br>ஆகவே. காதல் <br><br>கிழமாகி நின்றான்!<br><br>உருவத்தில் மட்டுமா?<br><br>காதல் குறும்பிலும்<br><br>பழுத்தவனாய்<br><br>அவளருகில் சென்றான்.<br><br>`பசி’ என்றான்.<br><br>தீயில் சுட்டு <br><br>கிழங்களித்தாள்;<br><br>`தாகம்’ என்றான். <br><br>தொன்னையில் இட்டு<br><br>தேன் அளித்தாள்.<br><br>பின் `மோகம்’ <br><br>என்றவன், அவள் கரம்<br><br>பற்றினான். வள்ளி <br><br>சினந்தாள்; கண் <br><br>சிவந்தாள்!</p>.<p>`அறம் மழுங்கிய <br><br>கிழமே! குறவர்தம்<br><br>மறம் உமக்குத் <br><br>தெரியாது.<br><br>கரம் விடுக்கவில்லை <br><br>எனில், சிரம் இழக்க <br><br>நேரும்; விடும் என்னை’<br><br>என்றாள்!<br><br>பதிலுக்கு<br><br>வேடன் நகைத்த<br><br>வேளை, படைச் <br><br>சத்தம் கேட்டது; அருகில் <br><br>பறை ஒலித்தது.</p>.<p><strong>வேழம் வந்தது!</strong><br><br>வணங்கி <br><br>நிற்போருக்கு<br><br>இணங்கி <br><br>அருள்செய்யும் <br><br>நம் வேலன்<br><br>அணங்கினை ஏய்க்க<br><br>வேங்கை <br><br>மரமாகி நின்றான்!<br><br>வேடர் படை <br><br>வந்தது; வள்ளியிடம் <br><br>கேட்டது...<br><br>`யாது சத்தம்?<br><br>கள்வன் வந்தானோ,<br><br>காட்டுப்புலி வந்ததோ...’<br><br>என்று.</p><p>வள்ளி தேடினாள்;<br><br>காதல் கிழத்தைக் <br><br>காணாது திகைத்தாள்!<br><br>ஆகவே காவல் <br><br>படையிடம்<br><br>`யாதுமில்லை’ எனப் <br><br>பதிலுரைத்தாள்.<br><br>படை நகர்ந்ததும்<br><br>மரம் மீண்டும்<br><br>கிழமானது.<br><br>வஞ்சிக்கொடியை<br><br>பஞ்சுப் பொதிபோல்<br><br>நெஞ்சோடு <br><br>அணைத்தது!</p>.<p>குறவள்ளி <br><br>திகைத்தாள்; <br><br>திமிறினாள்; <br><br>விலகினாள்; <br><br>ஓடினாள்!<br><br>மனம் <br><br>இறையை<br><br>விலக்கும் <br><br>தருணம்...<br><br>`உற்றவனைப் <br><br>பற்றிக்கொள்<br><br>இல்லையேல் இன்பவினை<br><br>அற்றுப்போகும்’ என<br><br>அறம் உரைக்க<br><br>தோன்றுமாம் ஞானம்.<br><br>இங்கே வேழம்<br><br>தோன்றியது!<br><br><strong>தன்னையே கண்டாள்!</strong><br><br>பருத்த <br><br>உடல் குலுங்க<br><br>விருத்தன் மகளை<br><br>விரட்டியது யானை!<br><br>வஞ்சியவள்<br><br>அஞ்சி ஓடினாள்;<br><br>தன்னையுமறியாமல்<br><br>கிழவனின் நெஞ்சில்<br><br>தஞ்சம் புகுந்தாள்!<br><br>கணநேரம் <br><br>ஏதோ உறுத்தவே <br><br>நிமிர்ந்தாள்<br><br>திகைத்தாள்! <br><br>அங்கே...<br><br>வெண்தாடி இல்லை;<br><br>தோல்சுருக்கம் இல்லை;<br><br>நரைகூடிய கிழமும் <br><br>இல்லை! பின்னே...<br><br>நிமிர்ந்து நோக்கியவள்<br><br>ஓராறு முகம் கண்டாள்<br><br>ஆறிரு திண்புயம் கண்டாள்.<br><br>முத்தாரம் துலங்கும்<br><br>மணி மார்பைக் <br><br>கண்டாள் - புலவர்கள்<br><br>பித்தாகிப் புலம்பும்<br><br>அணி அழகைக் <br><br>கண்டாள்!</p>.<p>தங்கமென <br><br>மின்னும் அவன்<br><br>அங்கமெல்லாம்<br><br>அண்டபகிரண்டமும்<br><br>கண்டாள்! <br><br>மூவரைக் <br><br>கண்டாள் - முக்கோடித்<br><br>தேவரைக் கண்டாள்.<br><br>தேவசேனையைக் <br><br>கண்டாள்; <br><br>தெய்வயானையைக்<br><br>கண்டாள்! <br><br>முனிவரைக் <br><br>கண்டாள் - புவி <br><br>மனிதரைக் கண்டாள்!<br><br>புள்ளினம் <br><br>கண்டாள் விலங்கினம் <br><br>கண்டாள் வல்லினம், <br><br>இடையினம் மெல்லினம் <br><br>துலங்கும் உலகு<br><br>முதலாம் கன்னித்<br><br>தமிழையும் கண்டாள்!<br><br>விண்ணைக் <br><br>கண்டாள் மண்ணைக் <br><br>கண்டாள் நிறைவில் <br><br>கந்தனிடம் தன்னையே <br><br>கண்டாள்!</p><p><strong>- கந்தன் வருவான்...</strong></p>
<p><strong>வேடனின் வருகை!</strong><br><br><strong>சா</strong>ரலும் தூறலுமாய்<br><br>முகம் வழிந்த நீரை<br><br>வழித்தெறிந்த வேடன்,<br><br>சளைத்தானில்லை;<br><br>புள்ளினம் தேடுவதாய்<br><br>வள்ளியின் தினைப்புனம்<br><br>சேர்ந்தான்; குறவள்ளியைக்<br><br>கண்டான்!</p>.<p>அங்கே, அவன் <br><br>மனப்பட்சிக்கு <br><br>இணையாய் <br><br>வனப் பட்சிகள் <br><br>பறந்தன! அவற்றில்... <br><br>தினை கொத்த <br><br>வந்தவை பாதி; <br><br>மீனினம் என்று <br><br>அவளின்<br><br>கண்கொத்த <br><br>வந்தன மீதி!</p><p>கோவைப் பழம்<br><br>தொலைத்த <br><br>கிள்ளைகளோ,<br><br>அவளின் இதழ்<br><br>கொத்த வந்தன!<br><br>அதுகண்டு அவள்<br><br>நகைக்க, குயில்கள்<br><br>குரலடங்கி<br><br>நின்றன; வேடனோ<br><br>புலனடங்கி நின்றான்!</p>.<p><strong>கிழமாகி நின்றான்!</strong><br><br>கொடியிடையாள் -<br><br>வேல் விழியாள்,<br><br>வேடனை மனத்தில் <br><br>சிறைபிடித்தாள்!<br><br>வேடனோ <br><br>சிறைமீள <br><br>நாடவில்லை; <br><br>அவளின் அகம்நாட <br><br>விளைந்தான். <br><br>ஆகவே. காதல் <br><br>கிழமாகி நின்றான்!<br><br>உருவத்தில் மட்டுமா?<br><br>காதல் குறும்பிலும்<br><br>பழுத்தவனாய்<br><br>அவளருகில் சென்றான்.<br><br>`பசி’ என்றான்.<br><br>தீயில் சுட்டு <br><br>கிழங்களித்தாள்;<br><br>`தாகம்’ என்றான். <br><br>தொன்னையில் இட்டு<br><br>தேன் அளித்தாள்.<br><br>பின் `மோகம்’ <br><br>என்றவன், அவள் கரம்<br><br>பற்றினான். வள்ளி <br><br>சினந்தாள்; கண் <br><br>சிவந்தாள்!</p>.<p>`அறம் மழுங்கிய <br><br>கிழமே! குறவர்தம்<br><br>மறம் உமக்குத் <br><br>தெரியாது.<br><br>கரம் விடுக்கவில்லை <br><br>எனில், சிரம் இழக்க <br><br>நேரும்; விடும் என்னை’<br><br>என்றாள்!<br><br>பதிலுக்கு<br><br>வேடன் நகைத்த<br><br>வேளை, படைச் <br><br>சத்தம் கேட்டது; அருகில் <br><br>பறை ஒலித்தது.</p>.<p><strong>வேழம் வந்தது!</strong><br><br>வணங்கி <br><br>நிற்போருக்கு<br><br>இணங்கி <br><br>அருள்செய்யும் <br><br>நம் வேலன்<br><br>அணங்கினை ஏய்க்க<br><br>வேங்கை <br><br>மரமாகி நின்றான்!<br><br>வேடர் படை <br><br>வந்தது; வள்ளியிடம் <br><br>கேட்டது...<br><br>`யாது சத்தம்?<br><br>கள்வன் வந்தானோ,<br><br>காட்டுப்புலி வந்ததோ...’<br><br>என்று.</p><p>வள்ளி தேடினாள்;<br><br>காதல் கிழத்தைக் <br><br>காணாது திகைத்தாள்!<br><br>ஆகவே காவல் <br><br>படையிடம்<br><br>`யாதுமில்லை’ எனப் <br><br>பதிலுரைத்தாள்.<br><br>படை நகர்ந்ததும்<br><br>மரம் மீண்டும்<br><br>கிழமானது.<br><br>வஞ்சிக்கொடியை<br><br>பஞ்சுப் பொதிபோல்<br><br>நெஞ்சோடு <br><br>அணைத்தது!</p>.<p>குறவள்ளி <br><br>திகைத்தாள்; <br><br>திமிறினாள்; <br><br>விலகினாள்; <br><br>ஓடினாள்!<br><br>மனம் <br><br>இறையை<br><br>விலக்கும் <br><br>தருணம்...<br><br>`உற்றவனைப் <br><br>பற்றிக்கொள்<br><br>இல்லையேல் இன்பவினை<br><br>அற்றுப்போகும்’ என<br><br>அறம் உரைக்க<br><br>தோன்றுமாம் ஞானம்.<br><br>இங்கே வேழம்<br><br>தோன்றியது!<br><br><strong>தன்னையே கண்டாள்!</strong><br><br>பருத்த <br><br>உடல் குலுங்க<br><br>விருத்தன் மகளை<br><br>விரட்டியது யானை!<br><br>வஞ்சியவள்<br><br>அஞ்சி ஓடினாள்;<br><br>தன்னையுமறியாமல்<br><br>கிழவனின் நெஞ்சில்<br><br>தஞ்சம் புகுந்தாள்!<br><br>கணநேரம் <br><br>ஏதோ உறுத்தவே <br><br>நிமிர்ந்தாள்<br><br>திகைத்தாள்! <br><br>அங்கே...<br><br>வெண்தாடி இல்லை;<br><br>தோல்சுருக்கம் இல்லை;<br><br>நரைகூடிய கிழமும் <br><br>இல்லை! பின்னே...<br><br>நிமிர்ந்து நோக்கியவள்<br><br>ஓராறு முகம் கண்டாள்<br><br>ஆறிரு திண்புயம் கண்டாள்.<br><br>முத்தாரம் துலங்கும்<br><br>மணி மார்பைக் <br><br>கண்டாள் - புலவர்கள்<br><br>பித்தாகிப் புலம்பும்<br><br>அணி அழகைக் <br><br>கண்டாள்!</p>.<p>தங்கமென <br><br>மின்னும் அவன்<br><br>அங்கமெல்லாம்<br><br>அண்டபகிரண்டமும்<br><br>கண்டாள்! <br><br>மூவரைக் <br><br>கண்டாள் - முக்கோடித்<br><br>தேவரைக் கண்டாள்.<br><br>தேவசேனையைக் <br><br>கண்டாள்; <br><br>தெய்வயானையைக்<br><br>கண்டாள்! <br><br>முனிவரைக் <br><br>கண்டாள் - புவி <br><br>மனிதரைக் கண்டாள்!<br><br>புள்ளினம் <br><br>கண்டாள் விலங்கினம் <br><br>கண்டாள் வல்லினம், <br><br>இடையினம் மெல்லினம் <br><br>துலங்கும் உலகு<br><br>முதலாம் கன்னித்<br><br>தமிழையும் கண்டாள்!<br><br>விண்ணைக் <br><br>கண்டாள் மண்ணைக் <br><br>கண்டாள் நிறைவில் <br><br>கந்தனிடம் தன்னையே <br><br>கண்டாள்!</p><p><strong>- கந்தன் வருவான்...</strong></p>