<p><strong>இ</strong>ந்திர மயில் </p><p>கந்தனைச் சுமக்க</p><p>வந்த வினையும் </p><p>வருகின்ற</p><p>வல்வினையும்</p><p>கந்தனென்றால் </p><p>விலகும்;</p><p>மந்திரவடிவேல்</p><p>விந்தைகள் புரியுமென</p><p>நகர்ந்தது </p><p>கந்தனின் சேனை!</p><p>அலை விளையாடும்</p><p>திருச்சீரலைவாய் தீரம்!</p><p>வீரபாகு பகர்ந்தான்...</p><p>`கந்தா அதோ பார்!</p><p>வீரமகேந்திரம்...</p><p>அதர்மத்தின் கேந்திரம்.</p><p>விதிகெட்ட சூரனின்</p><p>அதர்மத் தலைநகரம்!</p><p>இனி அவன்</p><p>கதியற்றுப் போகட்டும்</p><p>விடுக வேலை’ என்றான்!</p><p>கந்தன் சிரித்தான்;</p><p>`அறமற்றுப் போன</p><p>அரக்கனின் சிந்தையில்</p><p>ஒளியேற்றி வருக...</p><p>இன்சொல்லால்</p><p>ஞான விளக்கேற்றி</p><p>வருக’ என்றான்.</p><p>சடுதியில் மறுத்தான் </p><p>வீரபாகு.</p><p>`கந்தா! கல்லில்கூட </p><p>நார் உரிக்கலாம் - </p><p>இன்சொல்லில் அசுரனுக்கு</p><p>அறமூட்டுவது </p><p>வீண். ஆகவே </p><p>சொல் வேண்டாம்;</p><p>வேல் பேசட்டும்’ என்றான்!</p><p>கந்தன் கடிந்தான்;</p><p>கடமையாற்றப் பணித்தான்.</p><p>ஆகவே, வீரபாகு</p><p>சென்றான்; அவுணன்முன்</p><p>நின்றான்; அறம்</p><p>பகன்றான்.</p><p>உதிர்ந்த கனி </p><p>மரம் சேருமா - காய்ந்து</p><p>கரைந்த பனி மீண்டும்</p><p>திரளாகுமா - ஆணவத்தால்</p><p>முதிர்ந்த மனம்</p><p>அறம் ஏற்குமா?!</p><p>பதுமகோமளை -</p><p>இன்சொல்லில் நிகர் மாதுளை;</p><p>சேற்றில் முளைத்தச்</p><p>செந்தாமரை - சூரனின் மனையாள்!</p><p>அவள் சொன்னாள்...</p><p>வந்திருப்பது கந்தனென்று</p><p>சிவமைந்தனென்று!</p><p>அவள் மட்டுமா...</p><p>சூரனின் தம்பியொருவன்</p><p>கந்தபுராணத்து விபீடணன்.</p><p>அவனும் சொன்னான்...</p><p>`அண்ணா </p><p>அவசரம் வேண்டாம் </p><p>அசுரகுலம் கெடும்’ என்றான்.</p><p>கேட்டானா சூரன்... </p><p>நல்லோரின் நல்லுரைகளைக் </p><p>கேளாமல் கெட்டான்!</p><p>விளைவு...</p><p>பெரும்போர் மூண்டது;</p><p>சமராபுரியானது</p><p>செந்திலம்பதி!</p><p>படையோடு படை மோதின</p><p>வாளோடு வாள் மோதின</p><p>வில்லும் வேலும் சீறின!</p>.<p>கரம் முறிந்தது சிரம் அறுந்தது</p><p>செந்தூரின் கடலில்</p><p>செங்குருதி கலந்தது!</p><p>சிங்கமுகன் வந்தான்; </p><p>அங்கம் அறுபட வீழ்ந்தான்.</p><p>தாருகன் வந்தான்;</p><p>வேரற்ற மரமாய் சாய்ந்தான்;</p><p>கிரெளஞ்சன் வந்தான்;</p><p>மலையாகித் தடுத்தான்.</p><p>முருகன் விடுத்தான் வேலை;</p><p>பிளந்தான் மலையை!</p><p>சூரன் மகன்</p><p>பானுகோபனும் </p><p>வந்தான்</p><p>மண்ணில் </p><p>சாய்ந்தான்...</p><p>இங்ஙனம் முன்னும் </p><p>பின்னுமாய்</p><p>எத்தனையோ பேர்</p><p>வந்தனர் வீழ்ந்தனர்.</p><p>நிறைவில் சூரனே </p><p>வந்தான்!</p><p>வீரத்தின் </p><p>விளைநிலம் கந்தன்.</p><p>அவனிடம் எடுபடுமா</p><p>சூரனின் தீரம்? </p><p>ஆகவே, </p><p>மாயாவின் மகனவன் </p><p>மலையானான்;</p><p>முகிலானான்; </p><p>காற்றில் கலந்தான்;</p><p>விண்ணில் மறைந்தான்; </p><p>இன்னும்பல </p><p>மாயங்கள் புரிந்தான்.</p><p>ஒன்றும் பலன் இல்லை. </p><p>நிறைவில் </p><p>மாமரமாகி நின்றான். </p><p>வேலால் விறகாகி </p><p>வீழ்ந்தான்; சேவற்</p><p>கொடியாகி எழுந்தான்; </p><p>மயிலாகிப் பறந்தான். </p><p>நம் மயிலோன்</p><p>யாவர்க்கும் இறையாகி</p><p>நின்றான்!</p><p>பற்றற்ற முனிவரும் </p><p>நட்புற்ற அமரரும்</p><p>வெற்றிவேல் வீரவேலென</p><p>ஜயகோஷம் செய்தனர். </p><p>முருகனோ</p><p>சிவகோஷம் செய்தான்.</p><p>ஐந்தெழுத்து நாதனை தமிழ் </p><p>மந்திரத்தால் போற்றினான்.</p><p>நன்மையும் தீமையுமாய்</p><p>நமக்குள்ளும் சமர் உண்டு.</p><p>கந்தனைச் சிந்தையிலேற்றி</p><p>ஆணவம், கன்மம், மாயை</p><p>மும்மலம் விலக்கினால்,</p><p>துன்பத் திரை விலகும்;</p><p>இன்பவினை கூடும்.</p><p>மண்ணில் மனிதருக்கான</p><p>இக்காட்சியை </p><p>செந்தூரின் விண்ணும் காட்டியது.</p><p>முகில் திரை விலக, </p><p>கந்தன் அருளால் பூரணச்</p><p>சந்திரன் ஒளிர்ந்தது; மண்ணில்</p><p>தண்ணொளி பொலிந்தது!</p>.<p><em>- கந்தன் வருவான்...</em></p>
<p><strong>இ</strong>ந்திர மயில் </p><p>கந்தனைச் சுமக்க</p><p>வந்த வினையும் </p><p>வருகின்ற</p><p>வல்வினையும்</p><p>கந்தனென்றால் </p><p>விலகும்;</p><p>மந்திரவடிவேல்</p><p>விந்தைகள் புரியுமென</p><p>நகர்ந்தது </p><p>கந்தனின் சேனை!</p><p>அலை விளையாடும்</p><p>திருச்சீரலைவாய் தீரம்!</p><p>வீரபாகு பகர்ந்தான்...</p><p>`கந்தா அதோ பார்!</p><p>வீரமகேந்திரம்...</p><p>அதர்மத்தின் கேந்திரம்.</p><p>விதிகெட்ட சூரனின்</p><p>அதர்மத் தலைநகரம்!</p><p>இனி அவன்</p><p>கதியற்றுப் போகட்டும்</p><p>விடுக வேலை’ என்றான்!</p><p>கந்தன் சிரித்தான்;</p><p>`அறமற்றுப் போன</p><p>அரக்கனின் சிந்தையில்</p><p>ஒளியேற்றி வருக...</p><p>இன்சொல்லால்</p><p>ஞான விளக்கேற்றி</p><p>வருக’ என்றான்.</p><p>சடுதியில் மறுத்தான் </p><p>வீரபாகு.</p><p>`கந்தா! கல்லில்கூட </p><p>நார் உரிக்கலாம் - </p><p>இன்சொல்லில் அசுரனுக்கு</p><p>அறமூட்டுவது </p><p>வீண். ஆகவே </p><p>சொல் வேண்டாம்;</p><p>வேல் பேசட்டும்’ என்றான்!</p><p>கந்தன் கடிந்தான்;</p><p>கடமையாற்றப் பணித்தான்.</p><p>ஆகவே, வீரபாகு</p><p>சென்றான்; அவுணன்முன்</p><p>நின்றான்; அறம்</p><p>பகன்றான்.</p><p>உதிர்ந்த கனி </p><p>மரம் சேருமா - காய்ந்து</p><p>கரைந்த பனி மீண்டும்</p><p>திரளாகுமா - ஆணவத்தால்</p><p>முதிர்ந்த மனம்</p><p>அறம் ஏற்குமா?!</p><p>பதுமகோமளை -</p><p>இன்சொல்லில் நிகர் மாதுளை;</p><p>சேற்றில் முளைத்தச்</p><p>செந்தாமரை - சூரனின் மனையாள்!</p><p>அவள் சொன்னாள்...</p><p>வந்திருப்பது கந்தனென்று</p><p>சிவமைந்தனென்று!</p><p>அவள் மட்டுமா...</p><p>சூரனின் தம்பியொருவன்</p><p>கந்தபுராணத்து விபீடணன்.</p><p>அவனும் சொன்னான்...</p><p>`அண்ணா </p><p>அவசரம் வேண்டாம் </p><p>அசுரகுலம் கெடும்’ என்றான்.</p><p>கேட்டானா சூரன்... </p><p>நல்லோரின் நல்லுரைகளைக் </p><p>கேளாமல் கெட்டான்!</p><p>விளைவு...</p><p>பெரும்போர் மூண்டது;</p><p>சமராபுரியானது</p><p>செந்திலம்பதி!</p><p>படையோடு படை மோதின</p><p>வாளோடு வாள் மோதின</p><p>வில்லும் வேலும் சீறின!</p>.<p>கரம் முறிந்தது சிரம் அறுந்தது</p><p>செந்தூரின் கடலில்</p><p>செங்குருதி கலந்தது!</p><p>சிங்கமுகன் வந்தான்; </p><p>அங்கம் அறுபட வீழ்ந்தான்.</p><p>தாருகன் வந்தான்;</p><p>வேரற்ற மரமாய் சாய்ந்தான்;</p><p>கிரெளஞ்சன் வந்தான்;</p><p>மலையாகித் தடுத்தான்.</p><p>முருகன் விடுத்தான் வேலை;</p><p>பிளந்தான் மலையை!</p><p>சூரன் மகன்</p><p>பானுகோபனும் </p><p>வந்தான்</p><p>மண்ணில் </p><p>சாய்ந்தான்...</p><p>இங்ஙனம் முன்னும் </p><p>பின்னுமாய்</p><p>எத்தனையோ பேர்</p><p>வந்தனர் வீழ்ந்தனர்.</p><p>நிறைவில் சூரனே </p><p>வந்தான்!</p><p>வீரத்தின் </p><p>விளைநிலம் கந்தன்.</p><p>அவனிடம் எடுபடுமா</p><p>சூரனின் தீரம்? </p><p>ஆகவே, </p><p>மாயாவின் மகனவன் </p><p>மலையானான்;</p><p>முகிலானான்; </p><p>காற்றில் கலந்தான்;</p><p>விண்ணில் மறைந்தான்; </p><p>இன்னும்பல </p><p>மாயங்கள் புரிந்தான்.</p><p>ஒன்றும் பலன் இல்லை. </p><p>நிறைவில் </p><p>மாமரமாகி நின்றான். </p><p>வேலால் விறகாகி </p><p>வீழ்ந்தான்; சேவற்</p><p>கொடியாகி எழுந்தான்; </p><p>மயிலாகிப் பறந்தான். </p><p>நம் மயிலோன்</p><p>யாவர்க்கும் இறையாகி</p><p>நின்றான்!</p><p>பற்றற்ற முனிவரும் </p><p>நட்புற்ற அமரரும்</p><p>வெற்றிவேல் வீரவேலென</p><p>ஜயகோஷம் செய்தனர். </p><p>முருகனோ</p><p>சிவகோஷம் செய்தான்.</p><p>ஐந்தெழுத்து நாதனை தமிழ் </p><p>மந்திரத்தால் போற்றினான்.</p><p>நன்மையும் தீமையுமாய்</p><p>நமக்குள்ளும் சமர் உண்டு.</p><p>கந்தனைச் சிந்தையிலேற்றி</p><p>ஆணவம், கன்மம், மாயை</p><p>மும்மலம் விலக்கினால்,</p><p>துன்பத் திரை விலகும்;</p><p>இன்பவினை கூடும்.</p><p>மண்ணில் மனிதருக்கான</p><p>இக்காட்சியை </p><p>செந்தூரின் விண்ணும் காட்டியது.</p><p>முகில் திரை விலக, </p><p>கந்தன் அருளால் பூரணச்</p><p>சந்திரன் ஒளிர்ந்தது; மண்ணில்</p><p>தண்ணொளி பொலிந்தது!</p>.<p><em>- கந்தன் வருவான்...</em></p>