<p><strong>அ</strong>ன்னையவள் </p><p>அணைக்க...</p><p>ஓராறு முகமும்</p><p>ஈராறு கரமுமாய் </p><p>பிள்ளைகள் ஆறும்</p><p>ஒன்றாயின</p><p>உருவில் திருவாயின!</p><p>கயிலையில் கந்தனின் </p><p>லீலைகள் தொடர்ந்தன...</p><p>நான்முகனால் </p><p>ஒரு கதை - அவன் மகன்</p><p>நாரதனால் ஒருகதை</p><p>நிகழ்ந்தன கயிலையில்!</p><p><strong> தகப்பன் சுவாமி ஆனான்!</strong></p><p>நான்முகன்! </p><p>அவனும் </p><p>கமலத்தில் பிறந்தவன் </p><p>ஆனால் கர்வத்தில் </p><p>சிறந்தவன். அதனால்,</p><p>அன்று அப்பனால் </p><p>தலை போனது;</p><p>இன்று சுப்பனால் </p><p>தலை கவிழ்ந்தது.</p><p>பிரணவப் </p><p>பொருளறியா</p><p>பிரம்மனைச் </p><p>சிரத்தில் </p><p>குட்டினான் </p><p>கந்தன்; சிறையில் </p><p>பூட்டினான்.</p><p>தத்துவப் </p><p>பொருளுரைத்து</p><p>தந்தைக்கே </p><p>குருவானான்...</p><p>சுவாமிமலையில் </p><p>தகப்பன்சுவாமி </p><p>ஆனான்!</p>.<p><strong> கலக முனி வந்தான்...</strong></p><p>நாரதன்</p><p>நான்முகன் மைந்தன் </p><p>உலகங்கள் சுற்றும் </p><p>முனிவன்</p><p>கலகங்கள் மூட்டுவதில் </p><p>தலைவன்!</p><p>இக் கலகமுனி </p><p>ஒருநாள் </p><p>கனியுடன் </p><p>வந்தான்.</p><p>ஞானப் பழமென்று</p><p>சொன்னான்.</p><p>பிளந்தாலோ </p><p>பகிர்ந்தாலோ</p><p>பழத்துக்கில்லை</p><p>பலன் என்றான்!</p><p>வினை விளைந்தது...</p><p>பழநிப் பெரும்பதியானது</p><p>அதன் பதியைத்</p><p>தொழுவதே உலகின்</p><p>கதியானது!</p><p>விதியோ வேறு</p><p>சதி செய்தது...</p><p><strong> இந்திராணியின் சிவபூஜை</strong></p><p>இந்திராணி!</p><p>இந்திரன் மனையாள்</p><p>தந்திரம் அறியாள்.</p><p>மந்திர முதல்வனாம்</p><p>கந்தனின் தந்தையைச்</p><p>சிந்தையில் ஏற்றி </p><p>வந்தனம் செய்வாள்.</p><p>ஒருநாள்... </p><p>சிவனின் திருநாள்!</p><p>முக்கனிச் சாறும்</p><p>பூச்சரம் பலவும்</p><p>அட்சரம் ஐந்தும்</p><p>பணிவிடை பதினாறுமாய்</p><p>அவள் பூசித்திருந்த</p><p>வேளையில்...</p><p>செய்வினைப் </p><p>பதுமையாய் வந்தாள்</p><p>தீவினைப் பதுமனின் </p><p>தங்கை!</p><p>அரக்கி </p><p>பற்றியது கையை</p><p>அமரர் தேவிக்கு</p><p>வற்றியது கண்ணீர்.</p><p>அழுதாள் </p><p>அரற்றினாள்</p><p>அபயம் </p><p>எழுப்பினாள்...</p><p>இமயம் </p><p>அசைந்தது!</p><p><strong> சாத்தன் வந்தார்...</strong></p><p>இடி முழங்க </p><p>மலை அதிர</p><p>திசை நடுங்க மண் அதிர</p><p>சாத்தன் வந்தார்</p><p>காத்து நின்றார்!</p><p>சாத்தனிடம் </p><p>உதை பட்டதால்</p><p>குறைப்பட்டது</p><p>அரக்கியின் </p><p>அவயம் </p><p>மட்டுமா...</p><p>அவுணர்தம் </p><p>பெருமையும் </p><p>அல்லவா?</p><p>சேதி சூரனின் </p><p>செவிக்கெட்டியது;</p><p>ஈரேழ் உலகுக்கும் </p><p>துன்பத் </p><p>தீ மூட்டியது!</p><p>அமர்கள் </p><p>கலங்கினர்.</p><p>அவுணரை வென்றாட </p><p>வேண்டுமென</p><p>கொன்றைவார் </p><p>சடையனை</p><p>மன்றாடி நின்றனர்.</p><p>அமரர்தம் </p><p>கொடுவேளை நீங்க</p><p>கந்தவேளை </p><p>அழைத்தார் ஈசன்!</p><p>அவுணரின் </p><p>போறாத காலம்</p><p>ஓராறு முகத்திலும்</p><p>தீராத சினத்துடன்</p><p>வந்தான் கந்தன்!</p><p>`சூரனை </p><p>அடக்கி வருக’</p><p>உலகின்</p><p>கொடுவிதி தீர </p><p>ஒருவரிக் கட்டளை </p><p>தந்தது சிவம்!</p><p>`செல்கிறேன் </p><p>வெல்கிறேன்</p><p>ஆசிபுரிக'வென</p><p>பெற்றோரின் </p><p>தாள் பற்றிய </p><p>கந்தனுக்கு,</p><p>வேல் பற்றும் </p><p>வரம் தந்தாள் அன்னை...</p><p>சக்தி வேல் தந்தாள்!</p><p>கூர்ந்த நுட்பமும்</p><p>அகன்ற ஞானமும்</p><p>ஆழ்ந்து நீன்ற </p><p>சிந்தையுமாய் - உருவில்</p><p>கந்தனையே காட்டியது</p><p>ஞானவேல்!</p><p>இந்திர மயில் </p><p>கந்தனைச் சுமக்க </p><p>வந்த வினையும் வருகின்ற</p><p>வல்வினையும்</p><p>கந்தனென்றால் விலகும்;</p><p>மந்திரவடிவேல்</p><p>விந்தைகள் புரியுமென</p><p>நகர்ந்தது கந்தனின் சேனை!</p><p><em><strong>-கந்தன் வருவான்...</strong></em></p>
<p><strong>அ</strong>ன்னையவள் </p><p>அணைக்க...</p><p>ஓராறு முகமும்</p><p>ஈராறு கரமுமாய் </p><p>பிள்ளைகள் ஆறும்</p><p>ஒன்றாயின</p><p>உருவில் திருவாயின!</p><p>கயிலையில் கந்தனின் </p><p>லீலைகள் தொடர்ந்தன...</p><p>நான்முகனால் </p><p>ஒரு கதை - அவன் மகன்</p><p>நாரதனால் ஒருகதை</p><p>நிகழ்ந்தன கயிலையில்!</p><p><strong> தகப்பன் சுவாமி ஆனான்!</strong></p><p>நான்முகன்! </p><p>அவனும் </p><p>கமலத்தில் பிறந்தவன் </p><p>ஆனால் கர்வத்தில் </p><p>சிறந்தவன். அதனால்,</p><p>அன்று அப்பனால் </p><p>தலை போனது;</p><p>இன்று சுப்பனால் </p><p>தலை கவிழ்ந்தது.</p><p>பிரணவப் </p><p>பொருளறியா</p><p>பிரம்மனைச் </p><p>சிரத்தில் </p><p>குட்டினான் </p><p>கந்தன்; சிறையில் </p><p>பூட்டினான்.</p><p>தத்துவப் </p><p>பொருளுரைத்து</p><p>தந்தைக்கே </p><p>குருவானான்...</p><p>சுவாமிமலையில் </p><p>தகப்பன்சுவாமி </p><p>ஆனான்!</p>.<p><strong> கலக முனி வந்தான்...</strong></p><p>நாரதன்</p><p>நான்முகன் மைந்தன் </p><p>உலகங்கள் சுற்றும் </p><p>முனிவன்</p><p>கலகங்கள் மூட்டுவதில் </p><p>தலைவன்!</p><p>இக் கலகமுனி </p><p>ஒருநாள் </p><p>கனியுடன் </p><p>வந்தான்.</p><p>ஞானப் பழமென்று</p><p>சொன்னான்.</p><p>பிளந்தாலோ </p><p>பகிர்ந்தாலோ</p><p>பழத்துக்கில்லை</p><p>பலன் என்றான்!</p><p>வினை விளைந்தது...</p><p>பழநிப் பெரும்பதியானது</p><p>அதன் பதியைத்</p><p>தொழுவதே உலகின்</p><p>கதியானது!</p><p>விதியோ வேறு</p><p>சதி செய்தது...</p><p><strong> இந்திராணியின் சிவபூஜை</strong></p><p>இந்திராணி!</p><p>இந்திரன் மனையாள்</p><p>தந்திரம் அறியாள்.</p><p>மந்திர முதல்வனாம்</p><p>கந்தனின் தந்தையைச்</p><p>சிந்தையில் ஏற்றி </p><p>வந்தனம் செய்வாள்.</p><p>ஒருநாள்... </p><p>சிவனின் திருநாள்!</p><p>முக்கனிச் சாறும்</p><p>பூச்சரம் பலவும்</p><p>அட்சரம் ஐந்தும்</p><p>பணிவிடை பதினாறுமாய்</p><p>அவள் பூசித்திருந்த</p><p>வேளையில்...</p><p>செய்வினைப் </p><p>பதுமையாய் வந்தாள்</p><p>தீவினைப் பதுமனின் </p><p>தங்கை!</p><p>அரக்கி </p><p>பற்றியது கையை</p><p>அமரர் தேவிக்கு</p><p>வற்றியது கண்ணீர்.</p><p>அழுதாள் </p><p>அரற்றினாள்</p><p>அபயம் </p><p>எழுப்பினாள்...</p><p>இமயம் </p><p>அசைந்தது!</p><p><strong> சாத்தன் வந்தார்...</strong></p><p>இடி முழங்க </p><p>மலை அதிர</p><p>திசை நடுங்க மண் அதிர</p><p>சாத்தன் வந்தார்</p><p>காத்து நின்றார்!</p><p>சாத்தனிடம் </p><p>உதை பட்டதால்</p><p>குறைப்பட்டது</p><p>அரக்கியின் </p><p>அவயம் </p><p>மட்டுமா...</p><p>அவுணர்தம் </p><p>பெருமையும் </p><p>அல்லவா?</p><p>சேதி சூரனின் </p><p>செவிக்கெட்டியது;</p><p>ஈரேழ் உலகுக்கும் </p><p>துன்பத் </p><p>தீ மூட்டியது!</p><p>அமர்கள் </p><p>கலங்கினர்.</p><p>அவுணரை வென்றாட </p><p>வேண்டுமென</p><p>கொன்றைவார் </p><p>சடையனை</p><p>மன்றாடி நின்றனர்.</p><p>அமரர்தம் </p><p>கொடுவேளை நீங்க</p><p>கந்தவேளை </p><p>அழைத்தார் ஈசன்!</p><p>அவுணரின் </p><p>போறாத காலம்</p><p>ஓராறு முகத்திலும்</p><p>தீராத சினத்துடன்</p><p>வந்தான் கந்தன்!</p><p>`சூரனை </p><p>அடக்கி வருக’</p><p>உலகின்</p><p>கொடுவிதி தீர </p><p>ஒருவரிக் கட்டளை </p><p>தந்தது சிவம்!</p><p>`செல்கிறேன் </p><p>வெல்கிறேன்</p><p>ஆசிபுரிக'வென</p><p>பெற்றோரின் </p><p>தாள் பற்றிய </p><p>கந்தனுக்கு,</p><p>வேல் பற்றும் </p><p>வரம் தந்தாள் அன்னை...</p><p>சக்தி வேல் தந்தாள்!</p><p>கூர்ந்த நுட்பமும்</p><p>அகன்ற ஞானமும்</p><p>ஆழ்ந்து நீன்ற </p><p>சிந்தையுமாய் - உருவில்</p><p>கந்தனையே காட்டியது</p><p>ஞானவேல்!</p><p>இந்திர மயில் </p><p>கந்தனைச் சுமக்க </p><p>வந்த வினையும் வருகின்ற</p><p>வல்வினையும்</p><p>கந்தனென்றால் விலகும்;</p><p>மந்திரவடிவேல்</p><p>விந்தைகள் புரியுமென</p><p>நகர்ந்தது கந்தனின் சேனை!</p><p><em><strong>-கந்தன் வருவான்...</strong></em></p>