<p><strong>கு</strong>ற்றாலம்- செங்கோட்டை பாதையில் சித்தேஸ்வரி பீடம் என்ற மௌனசாமி மடம் உள்ளது. இதை நிறுவியவர், சித்த புருஷரான ஸ்ரீமௌனானந்த சரஸ்வதி சுவாமிகள். இவர் ஸித்தி அடைந்த சமாதியும் அங்கு உள்ளது. தனது ஸித்து மகிமையால், மக்களின் துயரங்களைப் போக்கியவர் இந்த சுவாமிகள்.</p><p>இந்த மடத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு நாடிப்பிள்ளையார் சந்நிதி. ஸ்ரீமௌனானந்த சரஸ்வதி சுவாமிகள் காலத்தில்தான் இந்த ஸித்தி விநாயகரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. </p>.<p>கற்பூர ஆரத்தி செய்யும்போது இந்தச் சிலை அசையுமாம். இந்த விநாயகர் சிலையின் தொடையில் ஜீவநாடி துடிக்கிறது என்பர். ‘மருத்துவர்கள் தங்களது ஸ்டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துப் பார்த்தனர். முடிவில், விநாயகருக்கு நாடி துடிப்பது உண்மைதான் என ஒப்புக்கொண்டனர்’ என்பதாக ஒரு தகவல் உண்டு.</p>.<p>இந்தத் துடிப்பு நான்கு நாட்கள் தொடர்ந்து நீடித்ததாம். அதன் பிறகு இந்த விக்கிரகத்தின் பகுதிகளைச் சோதித்த சில நிபுணர்களும், இந்த அதிசயத் தன்மை கண்டு அதிசயித்தனர்.</p><p>வெள்ளைக்கார ஆட்சியின்போது ஆளுநராக இருந்த ஆர்ச்பால் துரையும் அவர் மனைவியும் இந்த மடத்துக்கு வந்து நாடிப் பிள்ளையாரைக் கண்டு வியந்தனராம். இந்தத் தகவல், வெங்கடசுப்பிரமணிய ஐயர் எழுதிய ‘ஸ்ரீமௌன சுவாமிகளின் வரலாறு’ நூலில் இடம் பெற்றுள்ளது.</p><p><em><strong>- கே.சங்கரன், திருநெல்வேலி</strong></em></p>
<p><strong>கு</strong>ற்றாலம்- செங்கோட்டை பாதையில் சித்தேஸ்வரி பீடம் என்ற மௌனசாமி மடம் உள்ளது. இதை நிறுவியவர், சித்த புருஷரான ஸ்ரீமௌனானந்த சரஸ்வதி சுவாமிகள். இவர் ஸித்தி அடைந்த சமாதியும் அங்கு உள்ளது. தனது ஸித்து மகிமையால், மக்களின் துயரங்களைப் போக்கியவர் இந்த சுவாமிகள்.</p><p>இந்த மடத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு நாடிப்பிள்ளையார் சந்நிதி. ஸ்ரீமௌனானந்த சரஸ்வதி சுவாமிகள் காலத்தில்தான் இந்த ஸித்தி விநாயகரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. </p>.<p>கற்பூர ஆரத்தி செய்யும்போது இந்தச் சிலை அசையுமாம். இந்த விநாயகர் சிலையின் தொடையில் ஜீவநாடி துடிக்கிறது என்பர். ‘மருத்துவர்கள் தங்களது ஸ்டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துப் பார்த்தனர். முடிவில், விநாயகருக்கு நாடி துடிப்பது உண்மைதான் என ஒப்புக்கொண்டனர்’ என்பதாக ஒரு தகவல் உண்டு.</p>.<p>இந்தத் துடிப்பு நான்கு நாட்கள் தொடர்ந்து நீடித்ததாம். அதன் பிறகு இந்த விக்கிரகத்தின் பகுதிகளைச் சோதித்த சில நிபுணர்களும், இந்த அதிசயத் தன்மை கண்டு அதிசயித்தனர்.</p><p>வெள்ளைக்கார ஆட்சியின்போது ஆளுநராக இருந்த ஆர்ச்பால் துரையும் அவர் மனைவியும் இந்த மடத்துக்கு வந்து நாடிப் பிள்ளையாரைக் கண்டு வியந்தனராம். இந்தத் தகவல், வெங்கடசுப்பிரமணிய ஐயர் எழுதிய ‘ஸ்ரீமௌன சுவாமிகளின் வரலாறு’ நூலில் இடம் பெற்றுள்ளது.</p><p><em><strong>- கே.சங்கரன், திருநெல்வேலி</strong></em></p>