<p><strong>ஒ</strong>ரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று குழம்பிப் போய், இறுதியில் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார்.</p><p>மகாவிஷ்ணு நாரதரிடம், ‘`பேரானந்த ஸ்வரூபமான என் அருகில் இருக்கும் நீயும் எப்போதும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். சரி, உன் துயர் நீங்குவதற்கு ரிஷிகேசம் என்ற தலத்துக்குச் செல். துக்கத்தில் இருந்து நீ மீள்வாய்’’ என்று அறிவுரை கூறினார்.</p><p>அவ்வாறே நாரதரும் ரிஷிகேசத்துக்குப் புறப்பட்டார். </p><p>வழியில் கங்கையில் நீராடியபோது ஒரு மீன் நாரதர் அருகில் வந்தது. அந்த மீனிடம், ‘`என்ன மீனே, நலமா?’’ என்று கேட்டார்.</p>.<p>‘`நாரத முனிவரே! தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் துன்புறுகிறேன்’’ என்றது மீன் சோகமாக.</p><p>இதைக் கேட்ட நாரதர் சிரித்துவிட்டார்.</p>.<p>‘`என்ன உளறுகிறாய், முட்டாள் மீனே. தண்ணீரில் இருந்து கொண்டே தாகத்தால் துன்பப்படுகிறாயா?’’ என்றார்.</p><p>அதற்கு மீன் பதில் சொன்னது:</p><p>‘`ஆனந்த அமிர்த வடிவான விஷ்ணு பகவானின் அருகிலேயே இருந்துகொண்டு தாங்கள் துன்பப்படுவதைவிட, இது ஒன்றும் வியப்பில்லையே!’’</p><p>அந்தப் பதிலால் நாரதர் தெளிவுற்றார். மீனுக்கு நன்றி சொன்னார்.</p><p>பகவானின் ஸாந்நித்தியத்தைத் தான் மறந்ததே தன்னுடைய துயருக்குக் காரணம் என்பதை நாரதர் உணர்ந்த மறுகணமே அந்த மீன், மகாவிஷ்ணுவாகக் காட்சி அளித்தது.</p><p>தன்னைச் சரணடைந்தவர்களைக் காத்து அருள்பாலிக்கும் கருணைக் கடலான பகவானின் தரிசனத்தால் நாரதர் துக்கத்தில் இருந்து விடுபட்டார்; மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.</p><p><em><strong>-ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி</strong></em></p>
<p><strong>ஒ</strong>ரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று குழம்பிப் போய், இறுதியில் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார்.</p><p>மகாவிஷ்ணு நாரதரிடம், ‘`பேரானந்த ஸ்வரூபமான என் அருகில் இருக்கும் நீயும் எப்போதும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். சரி, உன் துயர் நீங்குவதற்கு ரிஷிகேசம் என்ற தலத்துக்குச் செல். துக்கத்தில் இருந்து நீ மீள்வாய்’’ என்று அறிவுரை கூறினார்.</p><p>அவ்வாறே நாரதரும் ரிஷிகேசத்துக்குப் புறப்பட்டார். </p><p>வழியில் கங்கையில் நீராடியபோது ஒரு மீன் நாரதர் அருகில் வந்தது. அந்த மீனிடம், ‘`என்ன மீனே, நலமா?’’ என்று கேட்டார்.</p>.<p>‘`நாரத முனிவரே! தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் துன்புறுகிறேன்’’ என்றது மீன் சோகமாக.</p><p>இதைக் கேட்ட நாரதர் சிரித்துவிட்டார்.</p>.<p>‘`என்ன உளறுகிறாய், முட்டாள் மீனே. தண்ணீரில் இருந்து கொண்டே தாகத்தால் துன்பப்படுகிறாயா?’’ என்றார்.</p><p>அதற்கு மீன் பதில் சொன்னது:</p><p>‘`ஆனந்த அமிர்த வடிவான விஷ்ணு பகவானின் அருகிலேயே இருந்துகொண்டு தாங்கள் துன்பப்படுவதைவிட, இது ஒன்றும் வியப்பில்லையே!’’</p><p>அந்தப் பதிலால் நாரதர் தெளிவுற்றார். மீனுக்கு நன்றி சொன்னார்.</p><p>பகவானின் ஸாந்நித்தியத்தைத் தான் மறந்ததே தன்னுடைய துயருக்குக் காரணம் என்பதை நாரதர் உணர்ந்த மறுகணமே அந்த மீன், மகாவிஷ்ணுவாகக் காட்சி அளித்தது.</p><p>தன்னைச் சரணடைந்தவர்களைக் காத்து அருள்பாலிக்கும் கருணைக் கடலான பகவானின் தரிசனத்தால் நாரதர் துக்கத்தில் இருந்து விடுபட்டார்; மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.</p><p><em><strong>-ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி</strong></em></p>