<p><strong>த</strong>னக்குமேல் ஒரு தலைவன் இல்லாத மகிமை கொண்டவர் பிள்ளையார். ஆகவேதான் அவருக்கு விநாயகர் என்று திருப்பெயர். அவர் அவதரித்த - ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி திருநாளையே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். </p><p>விநாயகரே மூவருக்கும் முக்கோடி தேவர் களுக்கும் முதன்மையானவர். ‘முத்தமிழ் அடைவினை முற்படுகிரி தனில் முற்பட எழுதிய முதலோனே’ எனப் போற்றுகிறார் அருணகிரிநாதர்.</p><p>ஆம், தெய்வங்களில் மகிமை நிறைந்தவர் பிள்ளையார். அவரை மகிமை நிறைந்த தீப வழிபாட்டால் ஆராதிப்பது விசேஷம்! அவ்வகையில், சக்தி விகடனும் தீபம் எண்ணெய் உற்பத்தி நிறுவன மான காளீஸ்வரி ரீஃபைனரியும் இணைந்து </p><p>வழங்கும், `தீபங்கள் ஒளிரக் கொண்டாடுவோம் பிள்ளையாரை’ சிறப்புப் பரிசுப்போட்டி அறிவிப்பு வெளியானது. எண்ணற்ற வாசகர்கள் வெகு ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற 500 வாசகர்களில், மிகச்சிறந்த 30 வாசகர்களின் படைப்புகள் இந்த இணைப்பிதழில்! </p>.<p>வெற்றிபெற்ற மற்ற வாசகர்களுக்குச் சிறப்புப் பரிசு குறித்த விவரம், விரைவில் குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்தப்படும். ரூ.1,000 மதிப்பிலான சிறப்புப் பரிசு 21.10.19-ம் தேதிக்குள் உங்கள் வீடு தேடி வரும். வாழ்த்துகள்!</p>.<p><strong>நர்த்திகாஸ்ரீ, ஆம்பூர்</strong></p><p><strong>ம</strong>லர், அணிகலன்களோடு மணம் வீசும் பஞ்ச தீப எண்ணெய்கொண்டு தீபமேற்றி விநாயகரைக் கொண்டாடி னோம். வேழ முகத்தானின் அருள் வீடெங்கும் பிரகாசமாய் ஒளிர, வளரும் தலைமுறையும் வணங்கி நின்றது. தலை முறையாய் தொடரட்டும் இந்த `தீபம்' உறவு.</p>.<p><em><strong>ஐந்து கரத்தனை யானை முகத்தனை </strong></em></p><p><em><strong>இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை </strong></em></p><p><em><strong>நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் </strong></em></p><p><em><strong>புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.</strong></em></p> <p><strong>ஸ்ரீதேவி, சென்னை </strong></p><p><strong>பொ</strong>ங்கும் மங்கலம் எங்கும் தங்கிட ஆணை முகத்தானை பஞ்ச தீப எண்ணெய்கொண்டு அலங்கரித் தோம். ஐவகை எண்ணெய் கலந்த தீபம் விளக்கேற்றும் எண்ணெயைக்கொண்டு தீபமேற்றி வழிபட்டால், சகல தீமைகளும் விலகி வளமும் நலமும் பெருகும். </p>.<p><em><strong>கஜானனம் பூத கணாதி ஸேவிதம்</strong></em></p><p><em><strong>கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்</strong></em></p><p><em><strong>உமாஸுதம் சோக வினாச காரணம்</strong></em></p><p><em><strong>நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.</strong></em></p>.<p><strong>பரிமளா, சென்னை</strong></p><p><strong>`க</strong>ருணை வள்ளல் கணபதியைத் தொழு’ என்றும் ‘சங்கரிக்கு மூத்தபிள்ளை... சங்கரனார் பெற்ற பிள்ளை’ என்றும் பெரியோர்கள் சொல்லித் தந்ததுண்டு. அந்தப் பாடல்களோடும் தீபம் ஆராதனையோடும் சிறப்பாகக் கொண்டாடினோம், பிள்ளையாரை!</p>.<p><em><strong>திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்</strong></em></p><p><em><strong>பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்</strong></em></p><p><em><strong>ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்</strong></em></p><p><em><strong>காதலால் கூப்புவர்தம் கை.</strong></em></p> <p><em><strong>தேன்மொழி, வேலூர்</strong></em></p><p><em><strong>மு</strong></em>க்கண் முதல்வனே முதற் கடவுள். எங்கள் வீட்டுப் பிள்ளையார், உச்சிப் பிள்ளையார். நிறைவான அபிஷேகம், மலர்களால் அர்ச்சனை, தீபங்களால் அலங்காரம் என அவர் ஜொலி ஜொலிக்க... நானும் கணவரும் மகள்களும் மெய்சிலிர்த்தோம்.</p>.<p><em><strong>சுக்லாம் பரதரம் </strong></em></p><p><em><strong>விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் </strong></em></p><p><em><strong>ப்ரசன்ன வதனம் த்யாயேத் </strong></em></p><p><em><strong>சர்வ விக்நோப சாந்தயே</strong></em></p>.<p><strong>வர்ஷிகா, சென்னை</strong></p><p><strong>பி</strong>ள்ளைகள் விரும்பும் தெய்வம் பிள்ளையார். தீபங் களின் ஒளியில் வண்ண அலங்காரத்தில் அசத்திய எங்கள் வீட்டுப் பிள்ளையாரை மகள் வணங்கி நின்றபோது, ‘தொப்பை அப்பனைத் தொழுவோம் நாங்கள்’ என்று சிறு வயதில் வழிபட்ட நினைவுகள் மலர்ந்தன!</p>.<p><em><strong>மூஷிக வாகன மோதக ஹஸ்த </strong></em></p><p><em><strong>சாமர கர்ண விலம்பித சூத்ர </strong></em></p><p><em><strong>வாமன ரூப மஹேஸ்வர புத்ர </strong></em></p><p><em><strong>விக்ன விநாயக பாத நமஸ்தே.</strong></em></p> <p><strong>சுதா, சென்னை</strong></p><p><strong>தீ</strong>பங்கள் ஏற்றினோம், நறுமலர்கள் சூட்டினோம், ‘நல்வாக்கு வேணும்; செல்வச்செழிப்பு வேணும்; கல்வி ஞானம் பெருகவேணும்’ என்று துதித்தோம். அசைந்தாடிய தீபச்சுடர்கள், ஆனைமுகன் அருள் நல்கியதைச் சொல்லாமல் சொல்லின!</p>.<p><em><strong>வக்ரதுண்டாய ஹீம் </strong></em></p><p><em><strong>ஓம் நமோ ஹேரம்ப மதமோதித </strong></em></p><p><em><strong>மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா </strong></em></p><p><em><strong>ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.</strong></em></p>.<p><strong>சம்யுக்தா, சென்னை</strong></p><p><strong>ந</strong>ல்லவை வேண்டும் எனக் கேட்டால், இல்லை எனச் சொல்லாமல் தந்தருளும் நாயகர் பிள்ளையார். அவருக்குப் பிடித்த அவல் - பொரி கடலையுடன், தீபம் எண்ணெய் நிரம்பிய அகல்களாலும் செய்த ஆராதனை சிறப்பானது ஆனைமுகனுக்கு!</p>.<p><em><strong>எள்ளுப்பொரியும் இடித்தஅவலும்</strong></em></p><p><em><strong>வள்ளிக்கிழங்கும் வாழைப்பழமும்</strong></em></p><p><em><strong>அள்ளித் தருவோம் ஆனை முகத்தாய்</strong></em></p><p><em><strong>உள்ளம் மகிழ அருள் தருவாய்!</strong></em></p> <p><strong>கார்த்திகேயன், சென்னை</strong></p><p><strong>க</strong>ரும்பென இனிக்கும் வாழ்வைத் தரட்டும் கணபதி. இருளில்லா இன்பத்தை நல்கட்டும் ஈசனின் மைந்தன். தீபங்களின் ஒளியென இல்லமெங்கும் நிறையட்டும் மங்கல சுபிட்சம்!</p>.<p><em><strong>அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை</strong></em></p><p><em><strong>நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்</strong></em></p><p><em><strong>தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட</strong></em></p><p><em><strong>வித்தக விநாயக விரை கழல் சரணே!</strong></em></p>.<p><strong>சுகன்யா, நாகை</strong></p><p><strong>தீ</strong>பங்கள் பேசும் அற்புத அலங்காரம். ஒளிர்ந்தது தீபச் சுடர்களா, ஆனைமுகனின் அருளொளியா! திகைக்க வைக்கும் அருள்கோலம். எப்போதுமே விசேஷமாய்த் திகழும் விநாயகர் சதுர்த்தியை, தீப அலங்காரம் மேலும் சிறப்பாக்கிவிட்டது. </p>.<p><em><strong>விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்</strong></em></p><p><em><strong>விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே</strong></em></p><p><em><strong>விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்</strong></em></p><p><em><strong>கண்ணிற் பணிமின் கனிந்து.</strong></em></p> <p><strong>அம்பிகா, சென்னை</strong></p><p><strong>ஆ</strong>னைமுகக் கடவுளுக்கு அருள்விளக்கு ஆராதனை அற்புதமாய் அமைந்தது. `தீபம்' ஐவகை எண்ணெய் நிரப்பி அகல்களை ஏற்றிவைத்ததும், பிள்ளையார் நேரிலேயே வந்தமர்ந்துவிட்ட திருப்தி; அவ்வளவு சாந்நித்தியம்!</p>.<p><em><strong>வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்</strong></em></p><p><em><strong>நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக் கொண்டு</strong></em></p><p><em><strong>தும்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்</strong></em></p><p><em><strong>தப்பாமற் சார்வார் தமக்கு.</strong></em></p>.<p><strong>பாலகிருஷ்ணா, கோவை</strong></p><p><strong>அ</strong>கத்தின் அழகு முகத்தில். முகத்தின் மலர்ச்சி பிள்ளையாரின் திருவருளால். திருவருளின் ஆரம்பம் அகல்களின் தீபங்களில். அனைத்துக்கும் ஆதாரம் கணபதியின் கருணையே!</p>.<p><em><strong>பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை</strong></em></p><p><em><strong>நான்கும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்</strong></em></p><p><em><strong>துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்குச்</strong></em></p><p><em><strong>சங்கத் தமிழ் மூன்றுந்தா.</strong></em></p> <p><strong>உமா, சென்னை</strong></p><p><strong>தீ</strong>பம் ஏற்றி வழிபட்டால் தீவினைகள் விலகுமாம். விக்னங்கள் நீங்கவும் வினைகள் பொசுங்கவும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் ஊற்றி தீபங்கள் ஏற்றினோம்; கணபதியைப் போற்றினோம்! </p>.<p><em><strong>தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி</strong></em></p><p><em><strong>மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்</strong></em></p><p><em><strong>திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்</strong></em></p><p><em><strong>பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (அருள்க)</strong></em></p>.<p><strong>ரித்துவர்ஷிணி, சென்னை</strong></p><p><strong>க</strong>ந்தனுக்கும் அருளிய கணபதி எல்லோருக்கும் அருளணும், வேண்டுதல் பலிக்கணும், வேண்டியதெல்லாம் கிடைக்கணும்... பிரார்த்தனையோடு விளக்கேற்றினோம்; பிள்ளையார் மகிழ்ந்திருப்பார்; சீக்கிரமே மனம் கனிவார்!</p>.<p><em><strong>சக்தி தொழிலே அனைத்து மெனிற்</strong></em></p><p><em><strong>சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்</strong></em></p><p><em><strong>வித்தைக்கிறைவா கணநாதா</strong></em></p><p><em><strong>மேன்மைத் தொழிலிற் பணியெனையே.</strong></em></p> <p><strong>சிவரஞ்சனி, கும்பகோணம்</strong></p><p><strong>ர</strong>ங்கோலி கோலமும் அகர்வத்தி மணமும் போதுமா என்ன... நம் அலங்கார நாயகனின் அகமகிழ அகல் விளக்கொளியும் அலங்காரம் சேர்க்கட்டும். அவரருளால் ஆனந்தம் சேரட்டும்.</p>.<p><em><strong>குருவடி வாகிக் குவலயந் தன்னில்</strong></em></p><p><em><strong>திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என</strong></em></p><p><em><strong>வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்</strong></em></p><p><em><strong>கோடா யுதத்தால் கொடுவினை களைவாய்!</strong></em></p>.<p><strong>சங்கீதா, கோவை</strong></p><p><strong>பா</strong>லும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நான்கோடும் ஐவகை எண்ணெய் தீப அலங்காரமும் ஆராதனையும் சமர்ப்பித்து ஆனைமுகனை வணங்கினோம். வரம்வாரி வழங்கட்டும், வலம்புரி விநாயகர்!</p>.<p><em><strong>வேழமுகத்து விநாயகனைத் தொழ</strong></em></p><p><em><strong>வாழ்வு மிகுத்து வரும்</strong></em></p><p><em><strong>வெற்றி முகத்து வேலவனைத் தொழ</strong></em></p><p><em><strong>புத்தி மிகுத்து வரும்.</strong></em></p> <p><strong>சாந்தி, சென்னை</strong></p><p><strong>ச</strong>ங்கடங்கள் அனைத்தையும் நீக்கும் திருநாள் விநாயகர் சதுர்த்தி. அன்று அறுகம்புல்லோடு, முக்கனியும் முக்கண் தேங்காயும், கொழுக்கட்டை நைவேத்தியமும் படைப்பதுடன் தீபத்தாலும் வழிபட்டால், நன்மைகள் பெருகுமாம். அப்படியே வழிபட்டோம்; வரம் கிடைக்கும்.</p>.<p><em><strong>முன்னவனே யானை முகத்தவனே முக்தி நலம்</strong></em></p><p><em><strong>சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - மன்னவனே</strong></em></p><p><em><strong>சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே</strong></em></p><p><em><strong>தற்பரனே நின்தாள் சரண்.</strong></em></p>.<p><strong>நளினி, பாண்டிச்சேரி</strong></p><p><strong>எ</strong>ட்டுத் திக்கும் ஒளிவீசும் தீபம். எல்லா திசைகளிலும் அருளைச் செலுத்துபவன் இறைவன். இல்லத்தில் தீபவொளி நிறைந்தால் உள்ளத்தில் இறையருள் பெருகும். அதற்கு தீப வழிபாடு உதவும். முதல்வனை முப்பொழுதும் தீபமேற்றி வழிபடுவோம்.</p>.<p><em><strong>செல்வ விநாயகன் சேவடி போற்றி</strong></em></p><p><em><strong>அல்லல் நீக்கி அருள்வான் போற்றி</strong></em></p><p><em><strong>நல்லன யாவும் நல்குவான் போற்றி</strong></em></p><p><em><strong>வல்லப கணேசன் மலர்த்தாள் போற்றி.</strong></em></p> <p><strong>செல்வராணி, கும்பகோணம்</strong></p><p><strong>தெ</strong>ய்வங்களில் முதன்மையானவர் பிள்ளையார். வழிபாடுகளில் முதன்மையானது ஒளி வழிபாடு. சத்தியமான வரிகள் இவை. முதல்வனுக்கு, முதன்மையான தீப வழிபாடு சமர்ப்பணம்.</p>.<p><em><strong>அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த</strong></em></p><p><em><strong>தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல</strong></em></p><p><em><strong>குணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்</strong></em></p><p><em><strong>கணபதியைக் கைதொழுதக் கால்.</strong></em></p>.<p><strong>ரத்னவேல்ரஞ்சித், திருச்சி</strong></p><p><strong>யா</strong>னை முகமும், பானை வயிறும், வெள்ளைக் கொம்பும், குள்ளத் தோற்றமும்... பிள்ளைகளின் மனத்தைக் கொள்ளைகொள்ளும் திருவடிவினன் பிள்ளையார். அதிலும் தீபவொளியில் அவர் திருமுகம் கண்டால், அற்புதம்தான்!</p>.<p><em><strong>திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்</strong></em></p><p><em><strong>கருணை பூக்கவும் தீமையைப் போக்கவும்</strong></em></p><p><em><strong>பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்</strong></em></p><p><em><strong>பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்</strong></em></p> <p><strong>சாதனா, திருவள்ளூர்</strong></p><p><strong>கு</strong>டை சாத்தி, மலர்சூடி, இலை விரித்து, கொழுக்கட்டை- மோதகம், சுண்டல், அவல் - பொரிகடலை... அத்தனையும் படைத்து, விளக்கேற்றி வழிபட்டோம். பிள்ளையாரப்பா அருள் தருவாயப்பா!</p>.<p><em><strong>வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப்</strong></em></p><p><em><strong>பான்மைமிகு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க</strong></em></p><p><em><strong>ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்</strong></em></p><p><em><strong>ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.</strong></em></p>.<p><strong>மாயா, சென்னை</strong></p><p><strong>அ</strong>ற்புதம் நிறைந்த கற்பகக் களிரே... சுடர்முகம் அனைத்திலும் உன் காட்சிதான். தீபவொளியால் நிறைந்தது இல்லம்; கணபதியின் அனுக்கிரகத்தால் மகிழ்ந்தது உள்ளம். கணபதியே சரணம்!</p>.<p><em><strong>சித்திதரும் புத்திதருஞ் செந்திருவைச் சேர்விக்கும்</strong></em></p><p><em><strong>பக்திதரு மெய்ஞ்ஞானம் பாலிக்குங் - கொத்தி</strong></em></p><p><em><strong>அரிமுகனைக் காய்ந்த வருணேசர் தந்த</strong></em></p><p><em><strong>கரிமுகனைக் கைதொழுதக் கால்.</strong></em></p> <p><strong>விஜய சாந்தி, கன்னியாகுமரி</strong></p><p><strong>ஓ</strong>ங்கார ஒலியே ஓர் உருக்கொண்டு திரண்டால் அதுவே பிள்ளையார். பிரணவத் தத்துவம் அவர். ஒளி அவரின் சாந்நித்தியம். ஐவகை எண்ணெய்கொண்டு விளக்கேற்றி ஐங்கரனை வழிபட்டால், உள்ளொளி பெருகும்; வாழ்க்கை வரமாகும். வழிபட்டோம் - வரம்பெற்றோம்!</p>.<p><em><strong>ஓம் எனும் பொருளா உள்ளோய் போற்றி</strong></em></p><p><em><strong>பூமனும் பொருள்தோறும் பொலிவாய் போற்றி</strong></em></p><p><em><strong>அகரம் முதலென ஆனாய் போற்றி</strong></em></p><p><em><strong>அகர உகர ஆதி போற்றி!</strong></em></p>.<p><strong>கிருஷ்ணமணி, தென்காசி</strong></p><p><strong>ச</strong>ங்கரனின் மகன் ஐங்கரனை வணங்கினால் அல்லல்கள் நீங்கும். அதேபோல், ஐந்துவகை எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபட்டால், சகல சம்பத்துகளும் வாய்க்கும். சதுர்த்தியில் ஐங்கரனின் அருளால் அல்லல்கள் நீங்கிட, சம்பத்துகள் சேர்ந்திட தீபமேற்றி வழிபட்டோம்.</p>.<p><em><strong>களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்</strong></em></p><p><em><strong>ஒளியானைப் பாரோர்க்கு உதவும் அளியானைக்</strong></em></p><p><em><strong>கண்ணுவதுங் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்றாள்</strong></em></p><p><em><strong>நண்ணுவதும் நல்லோர் கடன்.</strong></em></p> <p><strong>பானுரேகா, சென்னை</strong></p><p><strong>செ</strong>ல்வம், செய்தொழிலில் மேன்மை, வாக்கு வளம், உண்மையான பெருமை, உருவப் பொலிவு... இவை யாவும், கணபதியை உள்ளன்புடன் வணங்கும் அடியாருக் குக் கைகூடுமாம். உள்ளம் எனும் அகலில் அன்பெனும் நெய் ஊற்றி விளக்கேற்றினோம்; இன்ப ஒளி நிறைந்தது!</p>.<p><em><strong>கற்பகமே தேனுவே காமருசிந் தாமணியே</strong></em></p><p><em><strong>அற்பகமார் ஐங்கையுடை ஆரமுதே - சிற்பமுறு</strong></em></p><p><em><strong>தந்தா வளமுகத்துத் தற்பரனே சாலவும்உ</strong></em></p><p><em><strong>வந்தாள நாயேன்முன் வா.</strong></em></p>.<p><strong>லாவண்யா, சென்னை</strong></p><p><strong>பி</strong>ள்ளையார் சதுர்த்தி என்றாலே எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்! சின்ன வயதிலிருந்தே அழகான குட்டிப் பிள்ளையாருக்கு அலங்காரம் செய்து, மாலை சாத்தி பூஜை செய்வது எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்! இந்தமுறை விளக்கு வைத்து அலங்கரித்ததில் பூரண மகிழ்ச்சி!</p>.<p><em><strong>கற்பக விநாயகக் கடவுளே போற்றி</strong></em></p><p><em><strong>சிற்பர மோனத் தேவன் வாழ்க</strong></em></p><p><em><strong>வாரண முகத்தான் மலர்த்தோள் வெல்க</strong></em></p><p><em><strong>ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க.</strong></em></p>
<p><strong>த</strong>னக்குமேல் ஒரு தலைவன் இல்லாத மகிமை கொண்டவர் பிள்ளையார். ஆகவேதான் அவருக்கு விநாயகர் என்று திருப்பெயர். அவர் அவதரித்த - ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி திருநாளையே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். </p><p>விநாயகரே மூவருக்கும் முக்கோடி தேவர் களுக்கும் முதன்மையானவர். ‘முத்தமிழ் அடைவினை முற்படுகிரி தனில் முற்பட எழுதிய முதலோனே’ எனப் போற்றுகிறார் அருணகிரிநாதர்.</p><p>ஆம், தெய்வங்களில் மகிமை நிறைந்தவர் பிள்ளையார். அவரை மகிமை நிறைந்த தீப வழிபாட்டால் ஆராதிப்பது விசேஷம்! அவ்வகையில், சக்தி விகடனும் தீபம் எண்ணெய் உற்பத்தி நிறுவன மான காளீஸ்வரி ரீஃபைனரியும் இணைந்து </p><p>வழங்கும், `தீபங்கள் ஒளிரக் கொண்டாடுவோம் பிள்ளையாரை’ சிறப்புப் பரிசுப்போட்டி அறிவிப்பு வெளியானது. எண்ணற்ற வாசகர்கள் வெகு ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற 500 வாசகர்களில், மிகச்சிறந்த 30 வாசகர்களின் படைப்புகள் இந்த இணைப்பிதழில்! </p>.<p>வெற்றிபெற்ற மற்ற வாசகர்களுக்குச் சிறப்புப் பரிசு குறித்த விவரம், விரைவில் குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்தப்படும். ரூ.1,000 மதிப்பிலான சிறப்புப் பரிசு 21.10.19-ம் தேதிக்குள் உங்கள் வீடு தேடி வரும். வாழ்த்துகள்!</p>.<p><strong>நர்த்திகாஸ்ரீ, ஆம்பூர்</strong></p><p><strong>ம</strong>லர், அணிகலன்களோடு மணம் வீசும் பஞ்ச தீப எண்ணெய்கொண்டு தீபமேற்றி விநாயகரைக் கொண்டாடி னோம். வேழ முகத்தானின் அருள் வீடெங்கும் பிரகாசமாய் ஒளிர, வளரும் தலைமுறையும் வணங்கி நின்றது. தலை முறையாய் தொடரட்டும் இந்த `தீபம்' உறவு.</p>.<p><em><strong>ஐந்து கரத்தனை யானை முகத்தனை </strong></em></p><p><em><strong>இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை </strong></em></p><p><em><strong>நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் </strong></em></p><p><em><strong>புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.</strong></em></p> <p><strong>ஸ்ரீதேவி, சென்னை </strong></p><p><strong>பொ</strong>ங்கும் மங்கலம் எங்கும் தங்கிட ஆணை முகத்தானை பஞ்ச தீப எண்ணெய்கொண்டு அலங்கரித் தோம். ஐவகை எண்ணெய் கலந்த தீபம் விளக்கேற்றும் எண்ணெயைக்கொண்டு தீபமேற்றி வழிபட்டால், சகல தீமைகளும் விலகி வளமும் நலமும் பெருகும். </p>.<p><em><strong>கஜானனம் பூத கணாதி ஸேவிதம்</strong></em></p><p><em><strong>கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்</strong></em></p><p><em><strong>உமாஸுதம் சோக வினாச காரணம்</strong></em></p><p><em><strong>நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.</strong></em></p>.<p><strong>பரிமளா, சென்னை</strong></p><p><strong>`க</strong>ருணை வள்ளல் கணபதியைத் தொழு’ என்றும் ‘சங்கரிக்கு மூத்தபிள்ளை... சங்கரனார் பெற்ற பிள்ளை’ என்றும் பெரியோர்கள் சொல்லித் தந்ததுண்டு. அந்தப் பாடல்களோடும் தீபம் ஆராதனையோடும் சிறப்பாகக் கொண்டாடினோம், பிள்ளையாரை!</p>.<p><em><strong>திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்</strong></em></p><p><em><strong>பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்</strong></em></p><p><em><strong>ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்</strong></em></p><p><em><strong>காதலால் கூப்புவர்தம் கை.</strong></em></p> <p><em><strong>தேன்மொழி, வேலூர்</strong></em></p><p><em><strong>மு</strong></em>க்கண் முதல்வனே முதற் கடவுள். எங்கள் வீட்டுப் பிள்ளையார், உச்சிப் பிள்ளையார். நிறைவான அபிஷேகம், மலர்களால் அர்ச்சனை, தீபங்களால் அலங்காரம் என அவர் ஜொலி ஜொலிக்க... நானும் கணவரும் மகள்களும் மெய்சிலிர்த்தோம்.</p>.<p><em><strong>சுக்லாம் பரதரம் </strong></em></p><p><em><strong>விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் </strong></em></p><p><em><strong>ப்ரசன்ன வதனம் த்யாயேத் </strong></em></p><p><em><strong>சர்வ விக்நோப சாந்தயே</strong></em></p>.<p><strong>வர்ஷிகா, சென்னை</strong></p><p><strong>பி</strong>ள்ளைகள் விரும்பும் தெய்வம் பிள்ளையார். தீபங் களின் ஒளியில் வண்ண அலங்காரத்தில் அசத்திய எங்கள் வீட்டுப் பிள்ளையாரை மகள் வணங்கி நின்றபோது, ‘தொப்பை அப்பனைத் தொழுவோம் நாங்கள்’ என்று சிறு வயதில் வழிபட்ட நினைவுகள் மலர்ந்தன!</p>.<p><em><strong>மூஷிக வாகன மோதக ஹஸ்த </strong></em></p><p><em><strong>சாமர கர்ண விலம்பித சூத்ர </strong></em></p><p><em><strong>வாமன ரூப மஹேஸ்வர புத்ர </strong></em></p><p><em><strong>விக்ன விநாயக பாத நமஸ்தே.</strong></em></p> <p><strong>சுதா, சென்னை</strong></p><p><strong>தீ</strong>பங்கள் ஏற்றினோம், நறுமலர்கள் சூட்டினோம், ‘நல்வாக்கு வேணும்; செல்வச்செழிப்பு வேணும்; கல்வி ஞானம் பெருகவேணும்’ என்று துதித்தோம். அசைந்தாடிய தீபச்சுடர்கள், ஆனைமுகன் அருள் நல்கியதைச் சொல்லாமல் சொல்லின!</p>.<p><em><strong>வக்ரதுண்டாய ஹீம் </strong></em></p><p><em><strong>ஓம் நமோ ஹேரம்ப மதமோதித </strong></em></p><p><em><strong>மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா </strong></em></p><p><em><strong>ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.</strong></em></p>.<p><strong>சம்யுக்தா, சென்னை</strong></p><p><strong>ந</strong>ல்லவை வேண்டும் எனக் கேட்டால், இல்லை எனச் சொல்லாமல் தந்தருளும் நாயகர் பிள்ளையார். அவருக்குப் பிடித்த அவல் - பொரி கடலையுடன், தீபம் எண்ணெய் நிரம்பிய அகல்களாலும் செய்த ஆராதனை சிறப்பானது ஆனைமுகனுக்கு!</p>.<p><em><strong>எள்ளுப்பொரியும் இடித்தஅவலும்</strong></em></p><p><em><strong>வள்ளிக்கிழங்கும் வாழைப்பழமும்</strong></em></p><p><em><strong>அள்ளித் தருவோம் ஆனை முகத்தாய்</strong></em></p><p><em><strong>உள்ளம் மகிழ அருள் தருவாய்!</strong></em></p> <p><strong>கார்த்திகேயன், சென்னை</strong></p><p><strong>க</strong>ரும்பென இனிக்கும் வாழ்வைத் தரட்டும் கணபதி. இருளில்லா இன்பத்தை நல்கட்டும் ஈசனின் மைந்தன். தீபங்களின் ஒளியென இல்லமெங்கும் நிறையட்டும் மங்கல சுபிட்சம்!</p>.<p><em><strong>அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை</strong></em></p><p><em><strong>நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்</strong></em></p><p><em><strong>தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட</strong></em></p><p><em><strong>வித்தக விநாயக விரை கழல் சரணே!</strong></em></p>.<p><strong>சுகன்யா, நாகை</strong></p><p><strong>தீ</strong>பங்கள் பேசும் அற்புத அலங்காரம். ஒளிர்ந்தது தீபச் சுடர்களா, ஆனைமுகனின் அருளொளியா! திகைக்க வைக்கும் அருள்கோலம். எப்போதுமே விசேஷமாய்த் திகழும் விநாயகர் சதுர்த்தியை, தீப அலங்காரம் மேலும் சிறப்பாக்கிவிட்டது. </p>.<p><em><strong>விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்</strong></em></p><p><em><strong>விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே</strong></em></p><p><em><strong>விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்</strong></em></p><p><em><strong>கண்ணிற் பணிமின் கனிந்து.</strong></em></p> <p><strong>அம்பிகா, சென்னை</strong></p><p><strong>ஆ</strong>னைமுகக் கடவுளுக்கு அருள்விளக்கு ஆராதனை அற்புதமாய் அமைந்தது. `தீபம்' ஐவகை எண்ணெய் நிரப்பி அகல்களை ஏற்றிவைத்ததும், பிள்ளையார் நேரிலேயே வந்தமர்ந்துவிட்ட திருப்தி; அவ்வளவு சாந்நித்தியம்!</p>.<p><em><strong>வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்</strong></em></p><p><em><strong>நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக் கொண்டு</strong></em></p><p><em><strong>தும்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்</strong></em></p><p><em><strong>தப்பாமற் சார்வார் தமக்கு.</strong></em></p>.<p><strong>பாலகிருஷ்ணா, கோவை</strong></p><p><strong>அ</strong>கத்தின் அழகு முகத்தில். முகத்தின் மலர்ச்சி பிள்ளையாரின் திருவருளால். திருவருளின் ஆரம்பம் அகல்களின் தீபங்களில். அனைத்துக்கும் ஆதாரம் கணபதியின் கருணையே!</p>.<p><em><strong>பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை</strong></em></p><p><em><strong>நான்கும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்</strong></em></p><p><em><strong>துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்குச்</strong></em></p><p><em><strong>சங்கத் தமிழ் மூன்றுந்தா.</strong></em></p> <p><strong>உமா, சென்னை</strong></p><p><strong>தீ</strong>பம் ஏற்றி வழிபட்டால் தீவினைகள் விலகுமாம். விக்னங்கள் நீங்கவும் வினைகள் பொசுங்கவும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் ஊற்றி தீபங்கள் ஏற்றினோம்; கணபதியைப் போற்றினோம்! </p>.<p><em><strong>தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி</strong></em></p><p><em><strong>மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்</strong></em></p><p><em><strong>திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்</strong></em></p><p><em><strong>பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (அருள்க)</strong></em></p>.<p><strong>ரித்துவர்ஷிணி, சென்னை</strong></p><p><strong>க</strong>ந்தனுக்கும் அருளிய கணபதி எல்லோருக்கும் அருளணும், வேண்டுதல் பலிக்கணும், வேண்டியதெல்லாம் கிடைக்கணும்... பிரார்த்தனையோடு விளக்கேற்றினோம்; பிள்ளையார் மகிழ்ந்திருப்பார்; சீக்கிரமே மனம் கனிவார்!</p>.<p><em><strong>சக்தி தொழிலே அனைத்து மெனிற்</strong></em></p><p><em><strong>சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்</strong></em></p><p><em><strong>வித்தைக்கிறைவா கணநாதா</strong></em></p><p><em><strong>மேன்மைத் தொழிலிற் பணியெனையே.</strong></em></p> <p><strong>சிவரஞ்சனி, கும்பகோணம்</strong></p><p><strong>ர</strong>ங்கோலி கோலமும் அகர்வத்தி மணமும் போதுமா என்ன... நம் அலங்கார நாயகனின் அகமகிழ அகல் விளக்கொளியும் அலங்காரம் சேர்க்கட்டும். அவரருளால் ஆனந்தம் சேரட்டும்.</p>.<p><em><strong>குருவடி வாகிக் குவலயந் தன்னில்</strong></em></p><p><em><strong>திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என</strong></em></p><p><em><strong>வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்</strong></em></p><p><em><strong>கோடா யுதத்தால் கொடுவினை களைவாய்!</strong></em></p>.<p><strong>சங்கீதா, கோவை</strong></p><p><strong>பா</strong>லும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நான்கோடும் ஐவகை எண்ணெய் தீப அலங்காரமும் ஆராதனையும் சமர்ப்பித்து ஆனைமுகனை வணங்கினோம். வரம்வாரி வழங்கட்டும், வலம்புரி விநாயகர்!</p>.<p><em><strong>வேழமுகத்து விநாயகனைத் தொழ</strong></em></p><p><em><strong>வாழ்வு மிகுத்து வரும்</strong></em></p><p><em><strong>வெற்றி முகத்து வேலவனைத் தொழ</strong></em></p><p><em><strong>புத்தி மிகுத்து வரும்.</strong></em></p> <p><strong>சாந்தி, சென்னை</strong></p><p><strong>ச</strong>ங்கடங்கள் அனைத்தையும் நீக்கும் திருநாள் விநாயகர் சதுர்த்தி. அன்று அறுகம்புல்லோடு, முக்கனியும் முக்கண் தேங்காயும், கொழுக்கட்டை நைவேத்தியமும் படைப்பதுடன் தீபத்தாலும் வழிபட்டால், நன்மைகள் பெருகுமாம். அப்படியே வழிபட்டோம்; வரம் கிடைக்கும்.</p>.<p><em><strong>முன்னவனே யானை முகத்தவனே முக்தி நலம்</strong></em></p><p><em><strong>சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - மன்னவனே</strong></em></p><p><em><strong>சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே</strong></em></p><p><em><strong>தற்பரனே நின்தாள் சரண்.</strong></em></p>.<p><strong>நளினி, பாண்டிச்சேரி</strong></p><p><strong>எ</strong>ட்டுத் திக்கும் ஒளிவீசும் தீபம். எல்லா திசைகளிலும் அருளைச் செலுத்துபவன் இறைவன். இல்லத்தில் தீபவொளி நிறைந்தால் உள்ளத்தில் இறையருள் பெருகும். அதற்கு தீப வழிபாடு உதவும். முதல்வனை முப்பொழுதும் தீபமேற்றி வழிபடுவோம்.</p>.<p><em><strong>செல்வ விநாயகன் சேவடி போற்றி</strong></em></p><p><em><strong>அல்லல் நீக்கி அருள்வான் போற்றி</strong></em></p><p><em><strong>நல்லன யாவும் நல்குவான் போற்றி</strong></em></p><p><em><strong>வல்லப கணேசன் மலர்த்தாள் போற்றி.</strong></em></p> <p><strong>செல்வராணி, கும்பகோணம்</strong></p><p><strong>தெ</strong>ய்வங்களில் முதன்மையானவர் பிள்ளையார். வழிபாடுகளில் முதன்மையானது ஒளி வழிபாடு. சத்தியமான வரிகள் இவை. முதல்வனுக்கு, முதன்மையான தீப வழிபாடு சமர்ப்பணம்.</p>.<p><em><strong>அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த</strong></em></p><p><em><strong>தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல</strong></em></p><p><em><strong>குணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்</strong></em></p><p><em><strong>கணபதியைக் கைதொழுதக் கால்.</strong></em></p>.<p><strong>ரத்னவேல்ரஞ்சித், திருச்சி</strong></p><p><strong>யா</strong>னை முகமும், பானை வயிறும், வெள்ளைக் கொம்பும், குள்ளத் தோற்றமும்... பிள்ளைகளின் மனத்தைக் கொள்ளைகொள்ளும் திருவடிவினன் பிள்ளையார். அதிலும் தீபவொளியில் அவர் திருமுகம் கண்டால், அற்புதம்தான்!</p>.<p><em><strong>திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்</strong></em></p><p><em><strong>கருணை பூக்கவும் தீமையைப் போக்கவும்</strong></em></p><p><em><strong>பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்</strong></em></p><p><em><strong>பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்</strong></em></p> <p><strong>சாதனா, திருவள்ளூர்</strong></p><p><strong>கு</strong>டை சாத்தி, மலர்சூடி, இலை விரித்து, கொழுக்கட்டை- மோதகம், சுண்டல், அவல் - பொரிகடலை... அத்தனையும் படைத்து, விளக்கேற்றி வழிபட்டோம். பிள்ளையாரப்பா அருள் தருவாயப்பா!</p>.<p><em><strong>வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப்</strong></em></p><p><em><strong>பான்மைமிகு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க</strong></em></p><p><em><strong>ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்</strong></em></p><p><em><strong>ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.</strong></em></p>.<p><strong>மாயா, சென்னை</strong></p><p><strong>அ</strong>ற்புதம் நிறைந்த கற்பகக் களிரே... சுடர்முகம் அனைத்திலும் உன் காட்சிதான். தீபவொளியால் நிறைந்தது இல்லம்; கணபதியின் அனுக்கிரகத்தால் மகிழ்ந்தது உள்ளம். கணபதியே சரணம்!</p>.<p><em><strong>சித்திதரும் புத்திதருஞ் செந்திருவைச் சேர்விக்கும்</strong></em></p><p><em><strong>பக்திதரு மெய்ஞ்ஞானம் பாலிக்குங் - கொத்தி</strong></em></p><p><em><strong>அரிமுகனைக் காய்ந்த வருணேசர் தந்த</strong></em></p><p><em><strong>கரிமுகனைக் கைதொழுதக் கால்.</strong></em></p> <p><strong>விஜய சாந்தி, கன்னியாகுமரி</strong></p><p><strong>ஓ</strong>ங்கார ஒலியே ஓர் உருக்கொண்டு திரண்டால் அதுவே பிள்ளையார். பிரணவத் தத்துவம் அவர். ஒளி அவரின் சாந்நித்தியம். ஐவகை எண்ணெய்கொண்டு விளக்கேற்றி ஐங்கரனை வழிபட்டால், உள்ளொளி பெருகும்; வாழ்க்கை வரமாகும். வழிபட்டோம் - வரம்பெற்றோம்!</p>.<p><em><strong>ஓம் எனும் பொருளா உள்ளோய் போற்றி</strong></em></p><p><em><strong>பூமனும் பொருள்தோறும் பொலிவாய் போற்றி</strong></em></p><p><em><strong>அகரம் முதலென ஆனாய் போற்றி</strong></em></p><p><em><strong>அகர உகர ஆதி போற்றி!</strong></em></p>.<p><strong>கிருஷ்ணமணி, தென்காசி</strong></p><p><strong>ச</strong>ங்கரனின் மகன் ஐங்கரனை வணங்கினால் அல்லல்கள் நீங்கும். அதேபோல், ஐந்துவகை எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபட்டால், சகல சம்பத்துகளும் வாய்க்கும். சதுர்த்தியில் ஐங்கரனின் அருளால் அல்லல்கள் நீங்கிட, சம்பத்துகள் சேர்ந்திட தீபமேற்றி வழிபட்டோம்.</p>.<p><em><strong>களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்</strong></em></p><p><em><strong>ஒளியானைப் பாரோர்க்கு உதவும் அளியானைக்</strong></em></p><p><em><strong>கண்ணுவதுங் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்றாள்</strong></em></p><p><em><strong>நண்ணுவதும் நல்லோர் கடன்.</strong></em></p> <p><strong>பானுரேகா, சென்னை</strong></p><p><strong>செ</strong>ல்வம், செய்தொழிலில் மேன்மை, வாக்கு வளம், உண்மையான பெருமை, உருவப் பொலிவு... இவை யாவும், கணபதியை உள்ளன்புடன் வணங்கும் அடியாருக் குக் கைகூடுமாம். உள்ளம் எனும் அகலில் அன்பெனும் நெய் ஊற்றி விளக்கேற்றினோம்; இன்ப ஒளி நிறைந்தது!</p>.<p><em><strong>கற்பகமே தேனுவே காமருசிந் தாமணியே</strong></em></p><p><em><strong>அற்பகமார் ஐங்கையுடை ஆரமுதே - சிற்பமுறு</strong></em></p><p><em><strong>தந்தா வளமுகத்துத் தற்பரனே சாலவும்உ</strong></em></p><p><em><strong>வந்தாள நாயேன்முன் வா.</strong></em></p>.<p><strong>லாவண்யா, சென்னை</strong></p><p><strong>பி</strong>ள்ளையார் சதுர்த்தி என்றாலே எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்! சின்ன வயதிலிருந்தே அழகான குட்டிப் பிள்ளையாருக்கு அலங்காரம் செய்து, மாலை சாத்தி பூஜை செய்வது எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்! இந்தமுறை விளக்கு வைத்து அலங்கரித்ததில் பூரண மகிழ்ச்சி!</p>.<p><em><strong>கற்பக விநாயகக் கடவுளே போற்றி</strong></em></p><p><em><strong>சிற்பர மோனத் தேவன் வாழ்க</strong></em></p><p><em><strong>வாரண முகத்தான் மலர்த்தோள் வெல்க</strong></em></p><p><em><strong>ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க.</strong></em></p>