<p><strong>சு</strong>தந்திரப் போராட்ட காலம். 1916-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் ஒருநாள்... லக்னோ நகரில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாலகங்காதர திலகர், பண்டிட் மதன்மோகன் மாளவியா மற்றும் கபார்டே ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.</p><p>கவியோகி சுத்தானந்த பாரதி, பகவத் கீதையின் ஸ்லோகங்களைப் பொருளுடன் கூறி விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால், கூட்டத்தினரோ அவரின் பேச்சில் கவனம் செலுத்தாமல், தங்களுக்குள் உரக்கப் பேசிக் கொண்டிருந்தனர்.</p><p>உடனே, சுத்தானந்த பாரதி கூட்டத்தைப் பார்த்து உரத்த குரலில், ‘`இத்னா ஆவாஸ் ஸே ஸ்வராஜ் கபி நஹி மிலேகா!’’ என்றார். (‘இத்தகைய இரைச்சலினால் ஒருபோதும் சுயராஜ்ஜியத்தை பெற முடியாது’ என்பது பொருள்.)</p><p>அவர் அப்படிக் கூறியதும் கூட்டம் அமைதி யாயிற்று. இதைத் தொடர்ந்து தன்னருகில் வந்தமர்ந்த சுத்தானந்த பாரதியிடம், ‘`பிறகு, சுயராஜ்ஜியம் எவ்வாறு கிடைக்கும்?’’ எனக் கேட்டார் திலகர்.</p>.<p>‘`மகான்களின் ஆசியினால் கிட்டும்.’</p><p>‘`அப்படிப்பட்ட மகான் எங்கு இருக்கிறார்?’’</p><p>‘`ஷீர்டி ஸ்ரீசாயியே அந்த மகான்!’’</p>.<p>சுத்தானந்த பாரதியின் இந்தக் கருத்தை உடன் அமர்ந்திருந்த கபார்டேயும் ஆமோதித்தார்.அனைவரும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.</p><p>ஷீர்டி... காலை வேளையில், தான் வழக்கமாக அமரும் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்தார் சாயி.</p><p>அனைவரும் சென்று அவர் முன் பவ்யமாக அமர்ந்தனர். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சாயி, ‘`இத்னா ஆவாஸ் ஸே ஸ்வராஜ் கபி நஹி மிலேகா!” என்றார்.</p>.<p>லக்னோ கூட்டத்தில் கவியோகி சுத்தானந்த பாரதி சொன்ன அதே வார்த்தைகள்! </p><p>பாபாவிடம் திலகர் கேட்டார், ‘`சுயராஜ்யம் எப்படிக் கிடைக்கும்?’’ என்று.</p><p>அவரைப் பரிவுடன் ஏறிட்ட பாபா புன் முறுவலுடன் பதிலளித்தார். ``கவலைப்படாதே. அதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் விரைவில் வருவான். அதுவரை நீ அமைதியாக இரு’’ என்றார்.</p><p>பிறகு பாபா, ‘`இறைவன் உதவி செய்வான். தேச நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். சோதனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். தியாகம் ஒருபோதும் வீணாவதில்லை. இறைவன் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டுவிட்டு, மௌனமாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருங்கள்’’ என்றார். </p><p>பாபா அருளியது போலவே அனைத்தும் நிகழ்ந்தது. பிற்காலத்தில், சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்றார் மகாத்மா காந்தி. இந்திய திருநாடும் சுதந்திரம் பெற்றது.</p><p><strong>- சாவித்ரி, சென்னை - 14</strong></p>
<p><strong>சு</strong>தந்திரப் போராட்ட காலம். 1916-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் ஒருநாள்... லக்னோ நகரில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாலகங்காதர திலகர், பண்டிட் மதன்மோகன் மாளவியா மற்றும் கபார்டே ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.</p><p>கவியோகி சுத்தானந்த பாரதி, பகவத் கீதையின் ஸ்லோகங்களைப் பொருளுடன் கூறி விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால், கூட்டத்தினரோ அவரின் பேச்சில் கவனம் செலுத்தாமல், தங்களுக்குள் உரக்கப் பேசிக் கொண்டிருந்தனர்.</p><p>உடனே, சுத்தானந்த பாரதி கூட்டத்தைப் பார்த்து உரத்த குரலில், ‘`இத்னா ஆவாஸ் ஸே ஸ்வராஜ் கபி நஹி மிலேகா!’’ என்றார். (‘இத்தகைய இரைச்சலினால் ஒருபோதும் சுயராஜ்ஜியத்தை பெற முடியாது’ என்பது பொருள்.)</p><p>அவர் அப்படிக் கூறியதும் கூட்டம் அமைதி யாயிற்று. இதைத் தொடர்ந்து தன்னருகில் வந்தமர்ந்த சுத்தானந்த பாரதியிடம், ‘`பிறகு, சுயராஜ்ஜியம் எவ்வாறு கிடைக்கும்?’’ எனக் கேட்டார் திலகர்.</p>.<p>‘`மகான்களின் ஆசியினால் கிட்டும்.’</p><p>‘`அப்படிப்பட்ட மகான் எங்கு இருக்கிறார்?’’</p><p>‘`ஷீர்டி ஸ்ரீசாயியே அந்த மகான்!’’</p>.<p>சுத்தானந்த பாரதியின் இந்தக் கருத்தை உடன் அமர்ந்திருந்த கபார்டேயும் ஆமோதித்தார்.அனைவரும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.</p><p>ஷீர்டி... காலை வேளையில், தான் வழக்கமாக அமரும் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்தார் சாயி.</p><p>அனைவரும் சென்று அவர் முன் பவ்யமாக அமர்ந்தனர். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சாயி, ‘`இத்னா ஆவாஸ் ஸே ஸ்வராஜ் கபி நஹி மிலேகா!” என்றார்.</p>.<p>லக்னோ கூட்டத்தில் கவியோகி சுத்தானந்த பாரதி சொன்ன அதே வார்த்தைகள்! </p><p>பாபாவிடம் திலகர் கேட்டார், ‘`சுயராஜ்யம் எப்படிக் கிடைக்கும்?’’ என்று.</p><p>அவரைப் பரிவுடன் ஏறிட்ட பாபா புன் முறுவலுடன் பதிலளித்தார். ``கவலைப்படாதே. அதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் விரைவில் வருவான். அதுவரை நீ அமைதியாக இரு’’ என்றார்.</p><p>பிறகு பாபா, ‘`இறைவன் உதவி செய்வான். தேச நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். சோதனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். தியாகம் ஒருபோதும் வீணாவதில்லை. இறைவன் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டுவிட்டு, மௌனமாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருங்கள்’’ என்றார். </p><p>பாபா அருளியது போலவே அனைத்தும் நிகழ்ந்தது. பிற்காலத்தில், சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்றார் மகாத்மா காந்தி. இந்திய திருநாடும் சுதந்திரம் பெற்றது.</p><p><strong>- சாவித்ரி, சென்னை - 14</strong></p>