<p><strong>ம</strong>கேஸ்வர வடிவமான சிவமூர்த்தியின் பெயர்களும் அவருக்கிணையாக அமைந்த பார்வதியின் பெயர்களும் ‘ஸ்ரீதாஷிண குடித்வீப க்ஷேத்ர மகாத்மியம்’ எனும் தென்குடித் திட்டைத் தலப்புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. அதனைப் பின்வரும் பட்டியலில் காணலாம்.</p>.<p>1 லிங்கோத்பவர் - மோட்சப் பிரதாயினீ</p><p>2 திரிமூர்த்தி - வம்சவிருத்திப்பிரதாயினீ</p><p>3 கல்யாண சுந்தரர் - சர்வமங்களப் பிரதாயினீ</p><p>4 உமாசகாயர் - பார்யா சௌக்யப் பிரதாயினீ</p><p>5 சுகாசனர் - சர்வபாபப் பிரணாஸினீ</p>.<p>6 கங்காதரர் - சர்வபாபப் பிராணாஸினீ</p><p>7 நடராஜர் - ஸம்பத்யோகப் பிரதாயினீ</p><p>8 சண்டேச அனுக்கிராகர் - மகாபாதகநாசினீ</p><p>9 வ்ருஷபவாகனர் - தர்மசித்திப்ரதாயினீ</p><p>10 நீலகண்டர் - விஷதோஷப் பிராணஸினீ</p><p>11 ஹரிஹரர் - தர்மார்த்த தாயினீ</p><p>12 ஏகபாதர் - மகாரோகவிநாசினீ</p><p>13 அர்த்தநாரீசர் - சர்வசௌக்யப் பிரதாயினீ</p><p>14 தட்சிணாமூர்த்தி - மேதாபிரக்ஞா பிரதாயினீ</p><p>15 சோமாவிநாயகர் - ஸர்வசித்திப் பிரதாயினீ</p><p>16 சோமாஸ்கந்தர் - புத்ரசௌகியப் பிரதாயினீ</p><p>17 சந்திரமௌலீஸ்வரர் - தனதான்யப் பிரதாயினீ</p><p>18 வீரபத்திரர் - சத்ருவித்வேஷ்டவிநாசினீ</p><p>19 காலசம்ஹாரர் - சர்வாரிஷ்ட விநாசினீ</p><p>20 காமந்தகர் -யோகவிக்ன விநாசினீ</p><p>21 கஜாந்தகர் - பராபிசாரசமனீ</p><p>22 திரிபுரசம்காரர் - ஜன்மஜராம்ருத்யுவினாசினீ</p><p>23 பிட்சாடனர் - யோகஷித்ப்ருத்த விமோஹினீ</p><p>24 ஜலந்தரசம்ஹாரர் - துஷ்டவிநாசினீ</p><p>25 சரபர் - அரிப்பிராசினீ</p><p>26 பைரவர் - ரட்சாகரீ</p>.<p><strong>பெ</strong>ரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம். இவ்வூரில் அற்புதச் சிற்பங்களுடன் கூடிய தூண்கள், மண்டபங்கள், விசாலமான பிராகாரம், என அற்புதமாக அமைந்துள்ளது, ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.</p><p>இந்தக் கோயிலில் 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனியே (ஆலயத்தின் பல இடங்களில்) தமக்கேயுரிய மீன் வாகனத்தில் அமர்ந்து அற்புதமாகக் காட்சி தருகின்றனர் 12 குபேரர்கள்.</p>.<p>அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த குபேரனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால், செல்வம் பெருகும்; தொழிலில் விருத்தி ஏற்படும்; வீடு-மனை வாங்கி செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். அவரவரின் நட்சத்திர நாளில் வந்து வழிபடுவது இன்னும் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள். பன்னிரு குபேரர்கள் மட்டுமின்றி, இங்கே மகாகுபேரரையும் தரிசிக்கலாம்.</p><p>திருச்சி- சென்னை சாலையில், திருச்சியி லிருந்து சுமார் 44 கி.மீ. தொலைவிலும் பெரம்பலூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஆலத்தூர் கேட். இங்கேயுள்ள கோயில் நுழைவாயில் வளைவில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு பயணித்தால், செட்டிகுளத்தையும் ஆலயத்தையும் அடையலாம்.</p><p><strong>- புஷ்பா கிருஷ்ணராஜ், பங்களாபுதூர்</strong></p>
<p><strong>ம</strong>கேஸ்வர வடிவமான சிவமூர்த்தியின் பெயர்களும் அவருக்கிணையாக அமைந்த பார்வதியின் பெயர்களும் ‘ஸ்ரீதாஷிண குடித்வீப க்ஷேத்ர மகாத்மியம்’ எனும் தென்குடித் திட்டைத் தலப்புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. அதனைப் பின்வரும் பட்டியலில் காணலாம்.</p>.<p>1 லிங்கோத்பவர் - மோட்சப் பிரதாயினீ</p><p>2 திரிமூர்த்தி - வம்சவிருத்திப்பிரதாயினீ</p><p>3 கல்யாண சுந்தரர் - சர்வமங்களப் பிரதாயினீ</p><p>4 உமாசகாயர் - பார்யா சௌக்யப் பிரதாயினீ</p><p>5 சுகாசனர் - சர்வபாபப் பிரணாஸினீ</p>.<p>6 கங்காதரர் - சர்வபாபப் பிராணாஸினீ</p><p>7 நடராஜர் - ஸம்பத்யோகப் பிரதாயினீ</p><p>8 சண்டேச அனுக்கிராகர் - மகாபாதகநாசினீ</p><p>9 வ்ருஷபவாகனர் - தர்மசித்திப்ரதாயினீ</p><p>10 நீலகண்டர் - விஷதோஷப் பிராணஸினீ</p><p>11 ஹரிஹரர் - தர்மார்த்த தாயினீ</p><p>12 ஏகபாதர் - மகாரோகவிநாசினீ</p><p>13 அர்த்தநாரீசர் - சர்வசௌக்யப் பிரதாயினீ</p><p>14 தட்சிணாமூர்த்தி - மேதாபிரக்ஞா பிரதாயினீ</p><p>15 சோமாவிநாயகர் - ஸர்வசித்திப் பிரதாயினீ</p><p>16 சோமாஸ்கந்தர் - புத்ரசௌகியப் பிரதாயினீ</p><p>17 சந்திரமௌலீஸ்வரர் - தனதான்யப் பிரதாயினீ</p><p>18 வீரபத்திரர் - சத்ருவித்வேஷ்டவிநாசினீ</p><p>19 காலசம்ஹாரர் - சர்வாரிஷ்ட விநாசினீ</p><p>20 காமந்தகர் -யோகவிக்ன விநாசினீ</p><p>21 கஜாந்தகர் - பராபிசாரசமனீ</p><p>22 திரிபுரசம்காரர் - ஜன்மஜராம்ருத்யுவினாசினீ</p><p>23 பிட்சாடனர் - யோகஷித்ப்ருத்த விமோஹினீ</p><p>24 ஜலந்தரசம்ஹாரர் - துஷ்டவிநாசினீ</p><p>25 சரபர் - அரிப்பிராசினீ</p><p>26 பைரவர் - ரட்சாகரீ</p>.<p><strong>பெ</strong>ரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம். இவ்வூரில் அற்புதச் சிற்பங்களுடன் கூடிய தூண்கள், மண்டபங்கள், விசாலமான பிராகாரம், என அற்புதமாக அமைந்துள்ளது, ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.</p><p>இந்தக் கோயிலில் 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனியே (ஆலயத்தின் பல இடங்களில்) தமக்கேயுரிய மீன் வாகனத்தில் அமர்ந்து அற்புதமாகக் காட்சி தருகின்றனர் 12 குபேரர்கள்.</p>.<p>அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த குபேரனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால், செல்வம் பெருகும்; தொழிலில் விருத்தி ஏற்படும்; வீடு-மனை வாங்கி செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். அவரவரின் நட்சத்திர நாளில் வந்து வழிபடுவது இன்னும் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள். பன்னிரு குபேரர்கள் மட்டுமின்றி, இங்கே மகாகுபேரரையும் தரிசிக்கலாம்.</p><p>திருச்சி- சென்னை சாலையில், திருச்சியி லிருந்து சுமார் 44 கி.மீ. தொலைவிலும் பெரம்பலூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஆலத்தூர் கேட். இங்கேயுள்ள கோயில் நுழைவாயில் வளைவில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு பயணித்தால், செட்டிகுளத்தையும் ஆலயத்தையும் அடையலாம்.</p><p><strong>- புஷ்பா கிருஷ்ணராஜ், பங்களாபுதூர்</strong></p>