<p>தங்கமென</p><p>மின்னும் கந்தனின்</p><p>அங்கமெல்லாம்</p><p>அண்டபகிரண்டமும்</p><p>கண்டாள் வள்ளி!</p><p>முக்திக்கு வித்தாகும்</p><p>முருகனின் மேனியில்</p><p>விண்ணைக் கண்டாள்</p><p>மண்ணைக் கண்டாள்; </p><p>நிறைவில் தன்னையே </p><p>கண்டாள்!</p><p>அடியவர் சிந்தையில் </p><p>வைத்துப் போற்றும்</p><p>கந்தனின் மலர்ப்பதம்</p><p>பணிந்தாள்; கண்ணீர்</p><p>உகுத்தாள்!</p>.<p>வள்ளிக் குறத்தியை</p><p>அள்ளியெடுத்த வேலன்,</p><p>விழிநீர் துடைத்தான்;</p><p>வழித்துணை </p><p>நானென்றான்!</p><p>அவ்வேளை</p><p>வேடர்ப்படை</p><p>மீண்டும் வந்தது.</p><p>மாற்றான் பிடியில்</p><p>குலமகளைக் கண்டு</p><p>நம்பி மனம் கொதித்தது;</p><p>சினம் கொண்டு </p><p>வேடர்ப்படை </p><p>குதித்தது. அவர்கள்,</p><p>வில் தொடுத்தனர்; </p><p>வேல் விடுத்தனர்;</p><p>சிலர் வளரி </p><p>எய்தனர்; பலர்</p><p>களறி ஆடினர். </p><p>எனினும் பலனற்றுத் </p><p>திகைத்தனர்!</p>.<p>அந்த </p><p>விளையாட்டுச்</p><p>சமரை விரைவில் </p><p>முடிக்க எண்ணி, </p><p>திருக்கரத்தில்</p><p>வேலெடுத்தான் </p><p>முருகன்.</p><p>மயூரங்கள் அகவ </p><p>சேவல்கள் கூவ </p><p>வெள்ளிடி முழங்க</p><p>திசையெட்டும் நடுங்க</p><p>சக்திவேல் ஒளிர்ந்தது;</p><p>வேடர்க்கு, </p><p>வந்தது யாரென்று </p><p>புரிந்தது!</p><p>குலதெய்வமாம்</p><p>குமரனைக் கண்டு</p><p>உள்ளம் சிலிர்க்க, </p><p>ஊனுடம்பு குலுங்க </p><p>மண்விழுந்துப்</p><p>பணிந்தனர்; </p><p>முப்பத்துமுவர்க்கத் </p><p>தமரரும் பேணுமடி</p><p>வேணுமெனத் </p><p>தொழுதனர்!</p>.<p>தாள் பணிந்த </p><p>வேடர்க்கு </p><p>வாழ்வளித்தான் </p><p>வேலன்.</p><p>அவர்களுக்கு </p><p>மட்டுமா? </p><p>நமக்கும்தான்...</p><p>அவனருளால்</p><p>அகத்தியர் தந்தார்</p><p>இலக்கணம். நக்கீரர்</p><p>தந்தார் ஆற்றுப்படை.</p><p>ஒளவை தந்தாள்</p><p>பக்திச் சுவை. </p><p>பிணிக்கு நன்மருந்தைத் </p><p>தந்தது, போகரின் கலை!</p><p>இன்னும்...</p><p>மருதமலையின் </p><p>பாம்பாட்டிச் சித்தரும்</p><p>சென்னிமலையின்</p><p>பிண்ணாக்குச் சித்தரும்</p><p>ஞானமலையின்</p><p>பாலைச் சித்தரும்</p><p>தோரணமலைத் </p><p>தேரையரும் </p><p>ஊதிமலைக்</p><p>கொங்கணரும்</p><p>எழிலார்ந்த </p><p>பண்பொழிலின்</p><p>சிவகாமி அம்மையும்</p><p>பாம்பன் சுவாமிகளும்</p><p>பாலதேவராயரும்</p><p>சிதம்பரம் சுவாமிகளும்</p><p>வள்ளிமலை சுவாமிகளும்</p><p>வள்ளல் பெருமானும்</p><p>வாரியார் தாத்தாவும்</p><p>என...</p><p>கந்தனின் வரலாறு</p><p>புகழும் அருளாளர் பலரும், </p><p>கந்தனின் கதை</p><p>சிந்தைக்கு விருந்து;</p><p>வாழ்வுக்கு </p><p>மருந்தென்பர்!</p><p>அவர்தம் </p><p>அருள்வழியில்</p><p>சிந்தையில் கந்தனை </p><p>வைத்தால், விந்தைகள் </p><p>நிகழும்; வாழ்க்கை</p><p>வரமாகும்!</p><p>எண்ணத்தில் சிறப்பு</p><p>வண்ணத்தில் சிவப்பு </p><p>வாரத்தில் செவ்வாய்</p><p>மாதத்தில் சஷ்டி</p><p>விண்மீனில் விசாகம்</p><p>வினை தீர்க்கும்</p><p>கார்த்திகை</p><p>கந்தனுக்கு உவப்பு.</p><p>என்றாலும் நாளும்</p><p>வழிபடலாம் நம்</p><p>நாயகனை!</p><p>செவ்வரளிப் </p><p>பூ சூட்டி</p><p>நெய்யில்</p><p>தீபமிட்டு</p><p>சர்க்கரைப் </p><p>பொங்கலிட்டு</p><p>கந்தனை</p><p>தினம் துதிக்க</p><p>நாளும் கோளும்</p><p>நன்மை செய்யும்;</p><p>வேலும் மயிலும்</p><p>துணையாகும்!</p><p><em>(நிறைவுற்றது)</em></p>
<p>தங்கமென</p><p>மின்னும் கந்தனின்</p><p>அங்கமெல்லாம்</p><p>அண்டபகிரண்டமும்</p><p>கண்டாள் வள்ளி!</p><p>முக்திக்கு வித்தாகும்</p><p>முருகனின் மேனியில்</p><p>விண்ணைக் கண்டாள்</p><p>மண்ணைக் கண்டாள்; </p><p>நிறைவில் தன்னையே </p><p>கண்டாள்!</p><p>அடியவர் சிந்தையில் </p><p>வைத்துப் போற்றும்</p><p>கந்தனின் மலர்ப்பதம்</p><p>பணிந்தாள்; கண்ணீர்</p><p>உகுத்தாள்!</p>.<p>வள்ளிக் குறத்தியை</p><p>அள்ளியெடுத்த வேலன்,</p><p>விழிநீர் துடைத்தான்;</p><p>வழித்துணை </p><p>நானென்றான்!</p><p>அவ்வேளை</p><p>வேடர்ப்படை</p><p>மீண்டும் வந்தது.</p><p>மாற்றான் பிடியில்</p><p>குலமகளைக் கண்டு</p><p>நம்பி மனம் கொதித்தது;</p><p>சினம் கொண்டு </p><p>வேடர்ப்படை </p><p>குதித்தது. அவர்கள்,</p><p>வில் தொடுத்தனர்; </p><p>வேல் விடுத்தனர்;</p><p>சிலர் வளரி </p><p>எய்தனர்; பலர்</p><p>களறி ஆடினர். </p><p>எனினும் பலனற்றுத் </p><p>திகைத்தனர்!</p>.<p>அந்த </p><p>விளையாட்டுச்</p><p>சமரை விரைவில் </p><p>முடிக்க எண்ணி, </p><p>திருக்கரத்தில்</p><p>வேலெடுத்தான் </p><p>முருகன்.</p><p>மயூரங்கள் அகவ </p><p>சேவல்கள் கூவ </p><p>வெள்ளிடி முழங்க</p><p>திசையெட்டும் நடுங்க</p><p>சக்திவேல் ஒளிர்ந்தது;</p><p>வேடர்க்கு, </p><p>வந்தது யாரென்று </p><p>புரிந்தது!</p><p>குலதெய்வமாம்</p><p>குமரனைக் கண்டு</p><p>உள்ளம் சிலிர்க்க, </p><p>ஊனுடம்பு குலுங்க </p><p>மண்விழுந்துப்</p><p>பணிந்தனர்; </p><p>முப்பத்துமுவர்க்கத் </p><p>தமரரும் பேணுமடி</p><p>வேணுமெனத் </p><p>தொழுதனர்!</p>.<p>தாள் பணிந்த </p><p>வேடர்க்கு </p><p>வாழ்வளித்தான் </p><p>வேலன்.</p><p>அவர்களுக்கு </p><p>மட்டுமா? </p><p>நமக்கும்தான்...</p><p>அவனருளால்</p><p>அகத்தியர் தந்தார்</p><p>இலக்கணம். நக்கீரர்</p><p>தந்தார் ஆற்றுப்படை.</p><p>ஒளவை தந்தாள்</p><p>பக்திச் சுவை. </p><p>பிணிக்கு நன்மருந்தைத் </p><p>தந்தது, போகரின் கலை!</p><p>இன்னும்...</p><p>மருதமலையின் </p><p>பாம்பாட்டிச் சித்தரும்</p><p>சென்னிமலையின்</p><p>பிண்ணாக்குச் சித்தரும்</p><p>ஞானமலையின்</p><p>பாலைச் சித்தரும்</p><p>தோரணமலைத் </p><p>தேரையரும் </p><p>ஊதிமலைக்</p><p>கொங்கணரும்</p><p>எழிலார்ந்த </p><p>பண்பொழிலின்</p><p>சிவகாமி அம்மையும்</p><p>பாம்பன் சுவாமிகளும்</p><p>பாலதேவராயரும்</p><p>சிதம்பரம் சுவாமிகளும்</p><p>வள்ளிமலை சுவாமிகளும்</p><p>வள்ளல் பெருமானும்</p><p>வாரியார் தாத்தாவும்</p><p>என...</p><p>கந்தனின் வரலாறு</p><p>புகழும் அருளாளர் பலரும், </p><p>கந்தனின் கதை</p><p>சிந்தைக்கு விருந்து;</p><p>வாழ்வுக்கு </p><p>மருந்தென்பர்!</p><p>அவர்தம் </p><p>அருள்வழியில்</p><p>சிந்தையில் கந்தனை </p><p>வைத்தால், விந்தைகள் </p><p>நிகழும்; வாழ்க்கை</p><p>வரமாகும்!</p><p>எண்ணத்தில் சிறப்பு</p><p>வண்ணத்தில் சிவப்பு </p><p>வாரத்தில் செவ்வாய்</p><p>மாதத்தில் சஷ்டி</p><p>விண்மீனில் விசாகம்</p><p>வினை தீர்க்கும்</p><p>கார்த்திகை</p><p>கந்தனுக்கு உவப்பு.</p><p>என்றாலும் நாளும்</p><p>வழிபடலாம் நம்</p><p>நாயகனை!</p><p>செவ்வரளிப் </p><p>பூ சூட்டி</p><p>நெய்யில்</p><p>தீபமிட்டு</p><p>சர்க்கரைப் </p><p>பொங்கலிட்டு</p><p>கந்தனை</p><p>தினம் துதிக்க</p><p>நாளும் கோளும்</p><p>நன்மை செய்யும்;</p><p>வேலும் மயிலும்</p><p>துணையாகும்!</p><p><em>(நிறைவுற்றது)</em></p>