<p><strong>ம</strong>காகவி காளிதாசன் ஒருமுறை யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் அவருக்குத் தாகம் எடுத்தது. சற்றுத் தொலைவில் பெண் ணொருத்தி கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்.</p><p>கிணற்றடிக்குச் சென்று அவளிடம் தண்ணீர் கேட்டார். அவள் அவரிடம், “தருகிறேன்... ஆனால் நீங்கள் யார். உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றாள்.</p><p>`தான் யார் என்பதை அறியும் அருகதை அற்றவள் இந்தப் பெண்’ என்று எண்ணிய காளிதாசர், ``நான் ஒரு பயணி’’ என்றார்.</p><p>உடனே அந்தப் பெண் “இந்த உலகில் இரண்டே பயணிகள்தான் உண்டு. அவர்கள் சூரியனும் சந்திரனும். தினமும் உதிப்பதும் பிறகு அஸ்தமிப்பதுமாக சதா பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்’’ என்றாள்.</p>.<p>“சரி, அப்படியானால் நான் ஒரு விருந்தினர்” என்றார் காளிதாசர்.</p><p>அவளோ, ``இந்த உலகில் இரண்டே விருந்தினர்தான் உண்டு. இளமையும் செல்வமும்... இரண்டும் தற்காலிகமானவை. எனவே அவற்றையே விருந்தினர் என்று ஏற்க முடியும்” என்றாள்.</p><p>ஆச்சரியப்பட்ட காளிதாசர், “அப்படியானால், நான் ஒரு பொறுமைசாலி என்று வைத்துக்கொள்’’ என்றார்.</p>.<p>அதையும் அவள் ஏற்கவில்லை. ``இந்த உலகில் இரண்டே பொறுமை சாலிகள்தான் உண்டு. அவை, பூமியும் மரமும். பூமியை எவ்வளவு முறை மிதித்தாலும், பழத்துக்காக மரத்தின்மீது எவ்வளவு முறை கல்லெறிந்தாலும்... அவை பொறுமையாக இருக்கின்றன’’ என்றாள்.</p><p>காளிதாசர் பொறுமை இழந்தார். “மிகவும் சரி. நான் ஒரு பிடிவாதக்காரன்” என்றார்.</p><p>அந்தப் பெண் புன்னகையோடு சொன்னாள்: ``இந்த உலகில் பிடிவாத குணம் கொண்டவை இரண்டு - நம் நகமும் தலைமுடியும்; நாம் வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும்!” </p><p>காளிதாசர்க்குக் கடும்கோபம் ஏற்பட்டது. “எனில், நான் ஒரு முட்டாள் என்று வைத்துக்கொள்” என்றார்.</p><p>அப்போதும் அவள் சளைத்தாளில்லை. ``இந்த உலகில் அறிவும் ஆற்றலும் இன்றி ஆளும் அரசனும் அவனைப் புகழ்ந்து துதி பாடும் அமைச்சருமே இரு வகை முட்டாள்கள் ஆவர்” என்றாள்.</p><p>இப்போது அவள் சாமானியமானவள் அல்ல என்பதை காளி தாசர் உணர்ந்தார். தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். அவளின் பாதங்களில் விழுந்து எழுந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரைப் பெரும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.</p><p>ஆம், கல்வி-கலைகளுக்கெல்லாம் தலைவியான கலைமகள் சரஸ்வதியே அவர் முன் காட்சியளித்தாள்.</p><p>“காளிதாசா! நீ புத்தி உள்ளவன். ஆனால் நீ உன்னை உணர்ந்தால் மட்டுமே பூரண மனிதனாவாய். எவனொருவன் தன்னை அறிவது இல்லையோ, அவன் மனுஷ்ய உச்சத்தை அடைவதில்லை’’ என்று கூறி ஆசீர்வதித்தாள்!</p><p><em><strong>- பா.சரவணன், ஸ்ரீரங்கம்</strong></em></p>
<p><strong>ம</strong>காகவி காளிதாசன் ஒருமுறை யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் அவருக்குத் தாகம் எடுத்தது. சற்றுத் தொலைவில் பெண் ணொருத்தி கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்.</p><p>கிணற்றடிக்குச் சென்று அவளிடம் தண்ணீர் கேட்டார். அவள் அவரிடம், “தருகிறேன்... ஆனால் நீங்கள் யார். உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றாள்.</p><p>`தான் யார் என்பதை அறியும் அருகதை அற்றவள் இந்தப் பெண்’ என்று எண்ணிய காளிதாசர், ``நான் ஒரு பயணி’’ என்றார்.</p><p>உடனே அந்தப் பெண் “இந்த உலகில் இரண்டே பயணிகள்தான் உண்டு. அவர்கள் சூரியனும் சந்திரனும். தினமும் உதிப்பதும் பிறகு அஸ்தமிப்பதுமாக சதா பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்’’ என்றாள்.</p>.<p>“சரி, அப்படியானால் நான் ஒரு விருந்தினர்” என்றார் காளிதாசர்.</p><p>அவளோ, ``இந்த உலகில் இரண்டே விருந்தினர்தான் உண்டு. இளமையும் செல்வமும்... இரண்டும் தற்காலிகமானவை. எனவே அவற்றையே விருந்தினர் என்று ஏற்க முடியும்” என்றாள்.</p><p>ஆச்சரியப்பட்ட காளிதாசர், “அப்படியானால், நான் ஒரு பொறுமைசாலி என்று வைத்துக்கொள்’’ என்றார்.</p>.<p>அதையும் அவள் ஏற்கவில்லை. ``இந்த உலகில் இரண்டே பொறுமை சாலிகள்தான் உண்டு. அவை, பூமியும் மரமும். பூமியை எவ்வளவு முறை மிதித்தாலும், பழத்துக்காக மரத்தின்மீது எவ்வளவு முறை கல்லெறிந்தாலும்... அவை பொறுமையாக இருக்கின்றன’’ என்றாள்.</p><p>காளிதாசர் பொறுமை இழந்தார். “மிகவும் சரி. நான் ஒரு பிடிவாதக்காரன்” என்றார்.</p><p>அந்தப் பெண் புன்னகையோடு சொன்னாள்: ``இந்த உலகில் பிடிவாத குணம் கொண்டவை இரண்டு - நம் நகமும் தலைமுடியும்; நாம் வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும்!” </p><p>காளிதாசர்க்குக் கடும்கோபம் ஏற்பட்டது. “எனில், நான் ஒரு முட்டாள் என்று வைத்துக்கொள்” என்றார்.</p><p>அப்போதும் அவள் சளைத்தாளில்லை. ``இந்த உலகில் அறிவும் ஆற்றலும் இன்றி ஆளும் அரசனும் அவனைப் புகழ்ந்து துதி பாடும் அமைச்சருமே இரு வகை முட்டாள்கள் ஆவர்” என்றாள்.</p><p>இப்போது அவள் சாமானியமானவள் அல்ல என்பதை காளி தாசர் உணர்ந்தார். தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். அவளின் பாதங்களில் விழுந்து எழுந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரைப் பெரும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.</p><p>ஆம், கல்வி-கலைகளுக்கெல்லாம் தலைவியான கலைமகள் சரஸ்வதியே அவர் முன் காட்சியளித்தாள்.</p><p>“காளிதாசா! நீ புத்தி உள்ளவன். ஆனால் நீ உன்னை உணர்ந்தால் மட்டுமே பூரண மனிதனாவாய். எவனொருவன் தன்னை அறிவது இல்லையோ, அவன் மனுஷ்ய உச்சத்தை அடைவதில்லை’’ என்று கூறி ஆசீர்வதித்தாள்!</p><p><em><strong>- பா.சரவணன், ஸ்ரீரங்கம்</strong></em></p>