வைகாசி பௌர்ணமி நாளில் 3-6-2023 அன்று சக்திவிகடனும் புதுச்சேரி நவகோள் லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நவகிரக மகாஹோமம் நடத்த உள்ளது. இதில் கலந்து கொண்டால் நவகிரகங்களால் உருவாகும் தோஷங்கள், பாவங்கள் யாவும் தீரும்.
நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவது நவகிரகங்களே என்பது உங்களுக்குத் தெரியும். நம்முடைய ஜாதகத்தில் கிரகங்களின் அமைவைப் பொறுத்தே நம்முடைய இன்ப துன்பங்கள் அமையும் என்பது அறிவோம். அதேபோல் நாம் பெறும் யோகங்கள் வெற்றி-தோல்விகள் அனைத்தையும் நிர்ணயிப்பது கிரகங்களே. ஒன்பது கிரகங்களையும் திருப்தி செய்து அவற்றை வசப்படுத்தும் சிறப்பு வழிபாடே நவகிரக ஹோமம் எனப்படும். இதை ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

இந்த நவகிரக ஹோமத்தில் பங்கு கொண்டு சங்கல்பம் செய்து கொள்வதால், கிரக தோஷங்கள் அகலும். மேலும் காரிய ஸித்தி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, வெற்றிகள், அச்சமற்ற வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை. ஆரோக்கியமான வாழ்வைப் பெற சூரியனின் அருள் வேண்டும். அதேபோல நீடித்த வெற்றிக்கு சந்திரன், விரயமற்ற வாழ்க்கை பெற செவ்வாய், அறிவான கலை இலக்கியங்களில் தேர்ச்சி பெற புதனும், ஞானமும் கல்வியும் பெற குருவும், செல்வம், சுகபோக வாழ்வு பெற சுக்கிரனும், ஒழுக்கம் நிம்மதியான வாழ்வு பெற சனீஸ்வரனும், பலமான வாழ்வு பெற ராகுவும், வளமான வாழ்வு பெற கேதுவும் துணை செய்ய வேண்டும் என ஜோதிட நூல்கள் கூறும். இந்த ஒன்பது கிரகங்களின் பேரருளைப் பெற்று தரும் ஒரே வழிபாடு நவகிரக மாஹோமம் தான் ஒரே வழி என்கின்றன ஞானநூல்கள்.
அதிலும் இந்த நவகிரக மகாஹோமத்தை புதுச்சேரி அடுத்துள்ள கண்டமங்கலம் ஒன்றியம் பங்கூர் அருகே நவம்மாள் காப்பேர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயத்தில் செய்வது சிறப்பு என்கிறார்கள். உலகிலேயே இந்தக் கோயிலுக்குள் மட்டும்தான் கருவறையில் உள்ள சிவபெருமானை நவகோள்களும் வணங்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். அதனாலேயே இங்கு ஈசன் நவகோள் லிங்கேசுவரராக விளங்குகிறார். நவகோள் லிங்கேஸ்வரரை பௌர்ணமி நாளில் வணங்கி வழிபட்டால் நம் வாழ்வில் ஏற்படும் இடர்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அதிலும் பௌர்ணமி நாளில் இங்கு நடைபெறும் நவகிரக மகாஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டால் நவகிரக தோஷங்கள் நீங்கி காரிய ஸித்தி, நல்ல வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு யோகம், திருமணப் பேறு, குழந்தைப் பேறு, அளவற்ற செல்வம், ஆயுள் விருத்தி, ஆரோக்கிய மேம்பாடு, தம்பதி இடையே ஒற்றுமை, பிள்ளைகளின் நலமான வாழ்வு என பல நன்மைகளைப் பெறலாம் என்கிறது தலவரலாறு. சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த ஆலயத்தில் நவகிரகங்களும் வழிபட்டு தங்கள் ஆற்றலைப் பெற்றன என்கிறது தலவரலாறு.
சுமார் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சோழர் இந்த ஆலயம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சிதைந்து போய் கிடந்தது. சிவலிங்கத் திருமேனி மட்டும் அழகே உருவாக சிதைவின்றி காட்சி தந்துள்ளது. சுவாமியின் திருப்பெயர் கூடத் தெரியாத நிலையில் இவ்வூர் மக்கள் ஏதோ அவர்களுக்குத் தெரிந்த வகையில் பூஜைகள் செய்து ஈசனைக் கொண்டாடி வந்தனர். 2013-ம் ஆண்டு திருவண்ணாமலையில் வாழும் சித்தர் ஒருவர் தனது அடியார்களை இவ்வூரின் கோயிலைப் பற்றித் தெரிந்து வர அனுப்பியுள்ளார். அடியார்கள் இவ்வூரில் உள்ள ஈசன், ஆலயம் இன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த தகவலால்தான் இவ்விடத்தில் சோழர் காலத்தில் சிவாலயம் இருந்ததாகவும், இங்குள்ள மூல மூர்த்திகள் ஸ்ரீநவாம்பிகை உடனுறை நவகோள்லிங்கேசுவரர் என்றும் அறிந்தனர்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
தற்போது ஆலயம் எழும்பி சிறப்புடன் விளங்கி வருகிறது. மேலும் நவகோள் லிங்கேசுவரர் சேவை அறக்கட்டளையின் கீழ் அன்னதானம், கோசாலை, ஏழை மாணவ மாணவிகளுக்குப் படிப்பு போன்ற தரும காரியங்கள் செய்தும் வருகின்றனர். இங்கு வந்தாலே நவகிரக பிரச்னைகள் தீர்ந்துவிடுகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.
தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்ட நவகிரகங்களுக்கு ஈசன் இந்த தலத்தில்தான் அறிவு புகட்டி அவைகளுக்கு தகுந்த வரங்களை அளித்தான் என்கிறது தலவரலாறு. எனவே இங்கு வந்து ஈசனை வணங்கினால் தகுந்த வரங்களைப் பெறலாம் என்பதும், இங்குள்ள நவாம்பிகை மங்கலங்கள் அருளும் மகாபிரசாதி என்றும் போற்றப்படுகிறாள். தீயப் பழக்கங்களில் இருந்து விடுபட முடியாதவர்கள் இங்கு வந்து ஈசனையும் அம்பிகையையும் வழிபட விரைவில் மீள்வார்கள் என்பதும் நம்பிக்கை.

நிறைந்த வைகாசி பௌர்ணமி நாளில்தான் இங்கே நவகிரகங்கள் கூடி ஐயனை வழிபட்டு, பிணக்குகள் நீங்கிப் பெருமை கொண்டன என்கிறது தலவரலாறு. இதேநாளில் இங்கே 3-6-2023 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை இங்கே நவகிரக இடரரு வேள்வி எனும் நவகிரக மகாஹோமம் நடைபெற உள்ளது. இதில கலந்து கொண்டு உங்களின் எல்லா வேண்டுதல்களும் நிறைவேற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். குறிப்பாக நோய்நொடிகள் நீங்கி பூரண ஆயுள் பெற, காரியத் தடைகள் நீங்க, கல்வி-கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு, சம்பள உயர்வு, நல்ல வேலை வாய்ப்பு - வெளிநாட்டு யோகங்கள் பெற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம் மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404