<p><strong>ஆ</strong><em>தெள ராம தபோ வனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்<br><br>வைதேஹீ ஹரணம் ஜடாயுமரணம் சுக்ரீவ சம்பாஷணம் வாலீ நிக்ரஹணம்<br><br>சமுத்ர தரணம் லங்காபுரி தாஹனம் பஸ்சாத் ராவணகும்பகர்ண ஹனனம் ஏதத்தி</em> <em> ராமாயணம்</em></p><p><strong>ராமாயண காவியத்தின் மிக முக்கியமான ஒன்பது கட்டங்களைச் சொல்லும் ஏகச்லோகீ ராமாயணம் இது. இந்த வரிகளைத் தினமும் படித்து வாருங்கள்; தினமும் ராமாயண பாராயணம் செய்த பலன் கிடைக்கும்; குடும்பத்தில் சகல வளங்களும் பொங்கிப் பெருகும்!</strong><br><br>'<strong>ரா</strong>ம' என்ற திருநாமமே சைவ-வைணவ ஒற்றுமைக்கு சிறப்பான அடையாளமாகும். எட்டெழுத்தான ஓம் நமோ நாராயணாய என்பதிலிருந்து `ரா', நமசிவாய என்ற ஐந்தெழுத்திலிருந்து `ம', இணைத்து உருவானதே ராம நாமம். ராமனை வணங்கினால் திருமால், ஈசன் இருவரை வணங்கிய புண்ணியமும் கிட்டும்.</p><p><strong>கா</strong>சி விஸ்வநாதர் கோயிலில் தினமும் மாலை வழிபாட்டின்போது, அதாவது சப்தரிஷி பூஜையின்போது, வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்குச் சமர்ப்பிக்கிறார்கள். இப்படி செய்வதால் காசிக்கு வரும் சகலரின் பாவங்களும் நீங்குகின்றன என்பது ஐதிகம்.</p><p><strong>ரா</strong>மனே புருஷோத்தமன் என்ற புகழைப் பெற்றவர். அணில் தொடங்கி குகன் (ஆண்), ஜடாயு (பறவை), சுக்ரீவன் (வானர அரசன்), சபரி (பெண்), விபீஷணன் (அசுரர் குலம்), அகலிகை (ரிஷி பத்தினி), வருணன் (தேவர்) என சகல குலத்தவரையும் அரவணைத்து அருள் செய்தவர்.</p><p><strong>ரா</strong>ம நாமம் ஒன்றே தாரக மந்திரம் எனப்படுகிறது. ராம நாமத்தை மட்டும் எப்படி சொன்னாலும் மோக்ஷத்தை அளித்துவிடுமாம். ரத்னாகரன் என்ற கொள்ளையன், நாரதரின் வழிகாட்டலின்படி, `மரா மரா' என்று ஜபித்தே வால்மீகி ரிஷியானார் என்கிறது புராணம்.</p><p>`<strong>ச</strong>ஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே' என்கிறது விஷ்ணு புராணம். ராம நாமத்தை ஒருமுறை ஜபிப்பதால் பரம்பொருளின் ஆயிரம் திவ்ய நாமங்களை ஜபிப்பதின் பலன் கிட்டிவிடுகிறதாம். இதை ஈசன் சக்திதேவியிடம் விளக்குவதாக புராணம் கூறுகிறது.</p>.<p><strong>எ</strong>ல்லா மந்திரங்களையும் உச்சரிக்க மனம், உடல் இரண்டும் குறிப்பிட்ட நியதிப்படி தியான நிலையில் இருந்தபடியே உச்சரிக்க வேண்டும். ஆனால் ராம நாமம் மட்டும் எந்த வேலையைச் செய்யும்போதும் சொல்லலாம். அதாவது ராம நாமம் சொல்ல மனம் மட்டுமே போதும் என்கின்றன சாஸ்திரங்கள். </p><p><strong>கா</strong>ஞ்சி ராமகிருஷ்ண யதீந்திரர் எனும் மகான் தியாகய்யரை ஆசிர்வதித்து ``நீ உன் வாழ்நாளில் 96 கோடி முறை ராமநாமத்தை ஜபித்தால், ராமரின் திவ்ய தரிசனத்தையும் திருவடிப் பேறையும் பெறுவாய்'' என்றார். அப்படியே 21 ஆண்டுகளில் ராம நாமாவளி ஜபம் செய்து பலமுறை ஸ்ரீராம தரிசனம் பெற்றார் தியாக பிரம்மம்.</p><p><strong>ரா</strong>மாயணத்தைப் பாராயணம் செய்யும் முன்பு பிரசங்கம் செய்பவர் முன்னே ஒரு ஆசனம் இட்டு அதன் முன்பு கோலமிட்டு, தூபம், தீபம் ஏற்றி வைப்பது வழக்கம். ராமாயண பாராயணத்தை அனுமன் வந்து கேட்பார் என்பதே ஐதிகம்.</p><p><strong>ரா</strong>ம நாமம் சொல்லும்போது மனம் அமைதியாகிறது; அதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. சுரப்பிகள் சரியாக வேலை செய்கின்றன. அதனால் எண்ண அலைகளில் நேர்மறை சிந்தனைகள் தோன்றி நோய்கள் கட்டுப்படுகின்றன. ஆரோக்கியம் மேம்படுகிறது என்கின்றன ஞானநூல்கள்.</p><p><strong>போ</strong>தேந்திர ஸ்வாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 59-வது பீடாதிபதி. ராம நாம நூல்களை உலகுக்கு அளித்தவர் இவர். ராம நாமத்தை ஒருமுறை சொல்லி சகல தோஷங்களையும் போக்கிக்கொண்ட ஒரு பெண்மணியிடம் பிக்ஷை வாங்கி ராம நாம மகிமையை உணர்ந்தாராம் இந்த மகாஞானி.</p><p><strong>கௌ</strong>சல்யா திருமகனான ராமருக்கு `ராமன்' என்று திருநாமம் வைத்தார்களே தவிர, `ராம ராம' என்பது ரிஷிகள் தோன்றிய காலம் முதல் உபநிஷத்தில் சொல்லப்பட்ட திருநாமமாக உள்ளது என்பார்கள். `ராமேதி ராமா' என்றால் ஆனந்தத்தை எல்லாம் அளிப்பவர் என்று பொருள். <br><br><strong>ரா</strong>ம நாமத்தால் உயர்ந்த ஞானியர் நிலையை எட்டியவர்கள் பலபேர். ராமானந்தர், கபீர்தாசர், சமர்த்தராமதாசர், தியாகபிரம்மம், பத்ராச்சல ராமதாசர், யோகி ராம்சூரத்குமார் போன்றோர் ஸ்ரீராமநாமத்தால் பேறு பெற்றவர்கள்.</p>
<p><strong>ஆ</strong><em>தெள ராம தபோ வனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்<br><br>வைதேஹீ ஹரணம் ஜடாயுமரணம் சுக்ரீவ சம்பாஷணம் வாலீ நிக்ரஹணம்<br><br>சமுத்ர தரணம் லங்காபுரி தாஹனம் பஸ்சாத் ராவணகும்பகர்ண ஹனனம் ஏதத்தி</em> <em> ராமாயணம்</em></p><p><strong>ராமாயண காவியத்தின் மிக முக்கியமான ஒன்பது கட்டங்களைச் சொல்லும் ஏகச்லோகீ ராமாயணம் இது. இந்த வரிகளைத் தினமும் படித்து வாருங்கள்; தினமும் ராமாயண பாராயணம் செய்த பலன் கிடைக்கும்; குடும்பத்தில் சகல வளங்களும் பொங்கிப் பெருகும்!</strong><br><br>'<strong>ரா</strong>ம' என்ற திருநாமமே சைவ-வைணவ ஒற்றுமைக்கு சிறப்பான அடையாளமாகும். எட்டெழுத்தான ஓம் நமோ நாராயணாய என்பதிலிருந்து `ரா', நமசிவாய என்ற ஐந்தெழுத்திலிருந்து `ம', இணைத்து உருவானதே ராம நாமம். ராமனை வணங்கினால் திருமால், ஈசன் இருவரை வணங்கிய புண்ணியமும் கிட்டும்.</p><p><strong>கா</strong>சி விஸ்வநாதர் கோயிலில் தினமும் மாலை வழிபாட்டின்போது, அதாவது சப்தரிஷி பூஜையின்போது, வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்குச் சமர்ப்பிக்கிறார்கள். இப்படி செய்வதால் காசிக்கு வரும் சகலரின் பாவங்களும் நீங்குகின்றன என்பது ஐதிகம்.</p><p><strong>ரா</strong>மனே புருஷோத்தமன் என்ற புகழைப் பெற்றவர். அணில் தொடங்கி குகன் (ஆண்), ஜடாயு (பறவை), சுக்ரீவன் (வானர அரசன்), சபரி (பெண்), விபீஷணன் (அசுரர் குலம்), அகலிகை (ரிஷி பத்தினி), வருணன் (தேவர்) என சகல குலத்தவரையும் அரவணைத்து அருள் செய்தவர்.</p><p><strong>ரா</strong>ம நாமம் ஒன்றே தாரக மந்திரம் எனப்படுகிறது. ராம நாமத்தை மட்டும் எப்படி சொன்னாலும் மோக்ஷத்தை அளித்துவிடுமாம். ரத்னாகரன் என்ற கொள்ளையன், நாரதரின் வழிகாட்டலின்படி, `மரா மரா' என்று ஜபித்தே வால்மீகி ரிஷியானார் என்கிறது புராணம்.</p><p>`<strong>ச</strong>ஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே' என்கிறது விஷ்ணு புராணம். ராம நாமத்தை ஒருமுறை ஜபிப்பதால் பரம்பொருளின் ஆயிரம் திவ்ய நாமங்களை ஜபிப்பதின் பலன் கிட்டிவிடுகிறதாம். இதை ஈசன் சக்திதேவியிடம் விளக்குவதாக புராணம் கூறுகிறது.</p>.<p><strong>எ</strong>ல்லா மந்திரங்களையும் உச்சரிக்க மனம், உடல் இரண்டும் குறிப்பிட்ட நியதிப்படி தியான நிலையில் இருந்தபடியே உச்சரிக்க வேண்டும். ஆனால் ராம நாமம் மட்டும் எந்த வேலையைச் செய்யும்போதும் சொல்லலாம். அதாவது ராம நாமம் சொல்ல மனம் மட்டுமே போதும் என்கின்றன சாஸ்திரங்கள். </p><p><strong>கா</strong>ஞ்சி ராமகிருஷ்ண யதீந்திரர் எனும் மகான் தியாகய்யரை ஆசிர்வதித்து ``நீ உன் வாழ்நாளில் 96 கோடி முறை ராமநாமத்தை ஜபித்தால், ராமரின் திவ்ய தரிசனத்தையும் திருவடிப் பேறையும் பெறுவாய்'' என்றார். அப்படியே 21 ஆண்டுகளில் ராம நாமாவளி ஜபம் செய்து பலமுறை ஸ்ரீராம தரிசனம் பெற்றார் தியாக பிரம்மம்.</p><p><strong>ரா</strong>மாயணத்தைப் பாராயணம் செய்யும் முன்பு பிரசங்கம் செய்பவர் முன்னே ஒரு ஆசனம் இட்டு அதன் முன்பு கோலமிட்டு, தூபம், தீபம் ஏற்றி வைப்பது வழக்கம். ராமாயண பாராயணத்தை அனுமன் வந்து கேட்பார் என்பதே ஐதிகம்.</p><p><strong>ரா</strong>ம நாமம் சொல்லும்போது மனம் அமைதியாகிறது; அதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. சுரப்பிகள் சரியாக வேலை செய்கின்றன. அதனால் எண்ண அலைகளில் நேர்மறை சிந்தனைகள் தோன்றி நோய்கள் கட்டுப்படுகின்றன. ஆரோக்கியம் மேம்படுகிறது என்கின்றன ஞானநூல்கள்.</p><p><strong>போ</strong>தேந்திர ஸ்வாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 59-வது பீடாதிபதி. ராம நாம நூல்களை உலகுக்கு அளித்தவர் இவர். ராம நாமத்தை ஒருமுறை சொல்லி சகல தோஷங்களையும் போக்கிக்கொண்ட ஒரு பெண்மணியிடம் பிக்ஷை வாங்கி ராம நாம மகிமையை உணர்ந்தாராம் இந்த மகாஞானி.</p><p><strong>கௌ</strong>சல்யா திருமகனான ராமருக்கு `ராமன்' என்று திருநாமம் வைத்தார்களே தவிர, `ராம ராம' என்பது ரிஷிகள் தோன்றிய காலம் முதல் உபநிஷத்தில் சொல்லப்பட்ட திருநாமமாக உள்ளது என்பார்கள். `ராமேதி ராமா' என்றால் ஆனந்தத்தை எல்லாம் அளிப்பவர் என்று பொருள். <br><br><strong>ரா</strong>ம நாமத்தால் உயர்ந்த ஞானியர் நிலையை எட்டியவர்கள் பலபேர். ராமானந்தர், கபீர்தாசர், சமர்த்தராமதாசர், தியாகபிரம்மம், பத்ராச்சல ராமதாசர், யோகி ராம்சூரத்குமார் போன்றோர் ஸ்ரீராமநாமத்தால் பேறு பெற்றவர்கள்.</p>