<p>`பிறரை விட உயர்ந்தவன்’ என்றோ, ‘மாபெரும் ஞானி’ என்றோ தன்னை ஒருபோதும் கருதியதே இல்லை ஸ்ரீரமணர். தன்னை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எளிமையாகவே வாழ்ந்தார் இந்த மகான். </p>.<p><br><br>ஒருமுறை திருவண்ணாமலை விரூபாக்ஷி குகையில் சிறிய அளவில் ஒரு கட்டடப் பணியை ரமணரே மேற்கொண்டு செய்தார். அப்போது நடந்த வேடிக்கைச் சம்பவம் ஒன்று... <br><br>முதன் முறையாக ஸ்ரீரமணரை தரிசிக்க வந்த அன்பர் ஒருவர், ‘ஸ்வாமி எங்கே?’ என அவரிடமே கேட்டார். உடனே ரமணரும், ‘ஸ்வாமியா... இப்பதான் எங்கேயோ போனார்’ என்று கூறிவிட்டு வேலையைத் தொடர்ந்தார்.<br><br>வந்தவர், மலையிலிருந்து இறங்க ஆரம்பித்துவிட்டார். பகவானைத் தரிசிக்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தை, எதிரில் வந்த எச்சம்மா என்ற பக்தையிடம் சொன்னார். ‘வாருங்கள் என்னுடன். ஸ்வாமியைக் காட்டுகிறேன்’ என்று அவரை அழைத்து வந்து பகவான் முன் நிறுத்தினார் அந்த பக்தை. <br><br>அன்பர் திகைத்தார்; தான் இங்கே வந்து சென்ற விவரத்தை எச்சம்மாவிடம் சொன்னார். ‘இவரிடம் ஏன் இப்படிச் சொன்னீர்கள்?’ என்று உரிமையுடன் ரமணரிடம் கேட்டார் எச்சம்மா. பகவான் சிரித்தபடி, ‘நான்தான் ஸ்வாமி என்று அட்டையில் எழுதித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமா என்ன?’ என்றாராம்!<br><br><em><strong>- ஜெயா ராஜாமணி, மதுரை-2</strong></em></p>
<p>`பிறரை விட உயர்ந்தவன்’ என்றோ, ‘மாபெரும் ஞானி’ என்றோ தன்னை ஒருபோதும் கருதியதே இல்லை ஸ்ரீரமணர். தன்னை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எளிமையாகவே வாழ்ந்தார் இந்த மகான். </p>.<p><br><br>ஒருமுறை திருவண்ணாமலை விரூபாக்ஷி குகையில் சிறிய அளவில் ஒரு கட்டடப் பணியை ரமணரே மேற்கொண்டு செய்தார். அப்போது நடந்த வேடிக்கைச் சம்பவம் ஒன்று... <br><br>முதன் முறையாக ஸ்ரீரமணரை தரிசிக்க வந்த அன்பர் ஒருவர், ‘ஸ்வாமி எங்கே?’ என அவரிடமே கேட்டார். உடனே ரமணரும், ‘ஸ்வாமியா... இப்பதான் எங்கேயோ போனார்’ என்று கூறிவிட்டு வேலையைத் தொடர்ந்தார்.<br><br>வந்தவர், மலையிலிருந்து இறங்க ஆரம்பித்துவிட்டார். பகவானைத் தரிசிக்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தை, எதிரில் வந்த எச்சம்மா என்ற பக்தையிடம் சொன்னார். ‘வாருங்கள் என்னுடன். ஸ்வாமியைக் காட்டுகிறேன்’ என்று அவரை அழைத்து வந்து பகவான் முன் நிறுத்தினார் அந்த பக்தை. <br><br>அன்பர் திகைத்தார்; தான் இங்கே வந்து சென்ற விவரத்தை எச்சம்மாவிடம் சொன்னார். ‘இவரிடம் ஏன் இப்படிச் சொன்னீர்கள்?’ என்று உரிமையுடன் ரமணரிடம் கேட்டார் எச்சம்மா. பகவான் சிரித்தபடி, ‘நான்தான் ஸ்வாமி என்று அட்டையில் எழுதித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமா என்ன?’ என்றாராம்!<br><br><em><strong>- ஜெயா ராஜாமணி, மதுரை-2</strong></em></p>