<ul><li><p><strong>க</strong>டவுளுக்கு அளிப்பதை விட ஓர் ஏழைக்கு உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சியளிக்கும்.</p> </li><li><p> விரதத்துக்காக பட்டினி கிடப்பதை விட உயிர்களைக் கொல்லாது இருப்பதே சிறந்த விரதம்.</p> </li><li><p> கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக இருக்கிறார். அவரை விட கருணைமிக்கவர் யாருமில்லை.</p> </li><li><p> அன்பையும் இரக்கத்தையும் வாழ்க்கையின் அடிப்படையாகக் கருத வேண்டும். சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும்.</p></li></ul>.<ul><li><p>பெரியவர்களைக் கண்டால், பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால், அதைத் திருத்திக்கொள்ள முயலுங்கள். நற்குணங்களைப் பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.</p> </li><li><p> கடவுளின் பெயரால் உயிர்ப்பலி செய்வது கூடாது. ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.</p> </li><li><p> உண்மையைச் சொல், அது உனது வார்த்தைகளைப் பாதுகாக்கும்.</p> </li><li><p> யாரிடத்தில் தயவு அதிகம் இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.</p> </li><li><p> எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து சம உரிமை வழங்குவோரின் மனத்தில்தான் இறைவன் வாழ்கிறான்.</p></li></ul>.<ul><li><p>ஏதும் இல்லாத ஏழைகளுக்கு இரக்கப்பட்டு மனது உவந்து ஈவதே ஜீவகாருண்யம்.</p> </li><li><p> வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்கிற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.</p> </li><li><p> சோற்றிலே மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப் போகும். ஆற்றிலே கரைத்த புளி போல அது பயன்தராது.</p> </li><li><p> யாரையும் கடுகடுத்த நோக்குடன் பார்க்க வேண்டாம். அதுபோல், பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதை விட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்.</p> </li><li><p> குரு தரிசனம், ஞானிகள் தரிசனம், சிவ தரிசனம் செய்வோரை ஒரு நாளும் தடுக்கக் கூடாது.</p></li></ul>
<ul><li><p><strong>க</strong>டவுளுக்கு அளிப்பதை விட ஓர் ஏழைக்கு உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சியளிக்கும்.</p> </li><li><p> விரதத்துக்காக பட்டினி கிடப்பதை விட உயிர்களைக் கொல்லாது இருப்பதே சிறந்த விரதம்.</p> </li><li><p> கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக இருக்கிறார். அவரை விட கருணைமிக்கவர் யாருமில்லை.</p> </li><li><p> அன்பையும் இரக்கத்தையும் வாழ்க்கையின் அடிப்படையாகக் கருத வேண்டும். சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும்.</p></li></ul>.<ul><li><p>பெரியவர்களைக் கண்டால், பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால், அதைத் திருத்திக்கொள்ள முயலுங்கள். நற்குணங்களைப் பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.</p> </li><li><p> கடவுளின் பெயரால் உயிர்ப்பலி செய்வது கூடாது. ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.</p> </li><li><p> உண்மையைச் சொல், அது உனது வார்த்தைகளைப் பாதுகாக்கும்.</p> </li><li><p> யாரிடத்தில் தயவு அதிகம் இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.</p> </li><li><p> எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து சம உரிமை வழங்குவோரின் மனத்தில்தான் இறைவன் வாழ்கிறான்.</p></li></ul>.<ul><li><p>ஏதும் இல்லாத ஏழைகளுக்கு இரக்கப்பட்டு மனது உவந்து ஈவதே ஜீவகாருண்யம்.</p> </li><li><p> வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்கிற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.</p> </li><li><p> சோற்றிலே மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப் போகும். ஆற்றிலே கரைத்த புளி போல அது பயன்தராது.</p> </li><li><p> யாரையும் கடுகடுத்த நோக்குடன் பார்க்க வேண்டாம். அதுபோல், பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதை விட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்.</p> </li><li><p> குரு தரிசனம், ஞானிகள் தரிசனம், சிவ தரிசனம் செய்வோரை ஒரு நாளும் தடுக்கக் கூடாது.</p></li></ul>