<p><strong>அ</strong>னலாசுரனை விழுங்கிய கணபதியின் திருமேனி குளிர, சப்த ரிஷிகள் அறுகம்புல்லைச் சமர்ப்பித்தனர். மேனி குளிர்ந்தது. அதனால் மகிழ்ந்த கணநாதர் அறுகம் புல்லை தனக்கான பத்ரமாக ஏற்றுக்கொண்டார்.</p>.<p>மற்ற தெய்வங்களை விட, விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர். எனவேதான் அவரை `முந்தி விநாயகர்' என வழிபடுகிறோம்!</p>.<p>விநாயகர் மந்திரங்களைப் பிரம்ம முகூர்த்த வேளை எனும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் உச்சரிப்பது, கூடுதல் பலனளிக்கும் என்று கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.</p>.<p><strong>விநாயகரின் 12 அவதாரங்கள்</strong></p><p>1. வக்ரதுண்ட விநாயகர்</p><p>2. சிந்தாமணி விநாயகர்</p><p>3. கஜானனர்</p><p>4. விக்னராஜர்</p><p>5. மயூரேசர்</p><p>6. பாலச்சந்திர விநாயகர்</p><p>7. தூமகேது விநாயகர்</p><p>8. கணேச விநாயகர்</p><p>9. கணபதி விநாயகர்</p><p>10. மகோற்கட விநாயகர்</p><p>11. துண்டி விநாயகர்</p><p>12. வல்லப விநாயகர்</p>.<p>மோதகத்தில் வெண்மையான அரிசி மாவுதான் உடல். அதனுள்ளே பூரணமாக விளங்கும் இனிப்புதான் ஆத்மா. இரண்டையும் அவர் கையில் ஒப்படைத்துச் சரணடைகிறோம் என்பதே மோதக தத்துவம்.</p>.<p>அரசு, அத்தி, மந்தாரை,வில்வம், வேம்பு, நாவல், அரை நெல்லி, வாகை ஆகிய மரங்களின் அடியில் அருளும் பிள்ளையார் விசேஷமானவர். தோஷங்கள் நீங்கிட இம்மரங்களைச் சுற்றி வந்து வணங்குவது நல்லது.</p>.<p>சாணம், புற்றுமண்,மஞ்சள், வெள்ளெருக்கு, வெல்லம், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் செய்து வழிபட்டால், எல்லாவித நலன்களும் பெற்று நிறைவில் மோட்சம் அடைவர் என்கிறது விநாயக புராணம்.</p><p>எல்லா தெய்வ வடிவங்களும் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. ஆனால், கணபதி உருவம் அப்படியல்ல. மஞ்சளால் பிடித்து வைத்தால்கூட போதும்; கணபதி அவ்வடிவில் எழுந்தருளி வரம் தருவார்.</p>.<p>கணபதி, விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை, என்று ஐந்து மூல தெய்வங்களையும் ஒரே பீடத்தில் வைத்து பூஜிப்பதை `கணபதி பஞ்சாயதனம்' என்பர். இதில் விநாயகப்பெருமானை நடுவில் வைத்து வழிபட்டால் அரசாளும் யோகம் கிட்டும்.</p>
<p><strong>அ</strong>னலாசுரனை விழுங்கிய கணபதியின் திருமேனி குளிர, சப்த ரிஷிகள் அறுகம்புல்லைச் சமர்ப்பித்தனர். மேனி குளிர்ந்தது. அதனால் மகிழ்ந்த கணநாதர் அறுகம் புல்லை தனக்கான பத்ரமாக ஏற்றுக்கொண்டார்.</p>.<p>மற்ற தெய்வங்களை விட, விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர். எனவேதான் அவரை `முந்தி விநாயகர்' என வழிபடுகிறோம்!</p>.<p>விநாயகர் மந்திரங்களைப் பிரம்ம முகூர்த்த வேளை எனும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் உச்சரிப்பது, கூடுதல் பலனளிக்கும் என்று கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.</p>.<p><strong>விநாயகரின் 12 அவதாரங்கள்</strong></p><p>1. வக்ரதுண்ட விநாயகர்</p><p>2. சிந்தாமணி விநாயகர்</p><p>3. கஜானனர்</p><p>4. விக்னராஜர்</p><p>5. மயூரேசர்</p><p>6. பாலச்சந்திர விநாயகர்</p><p>7. தூமகேது விநாயகர்</p><p>8. கணேச விநாயகர்</p><p>9. கணபதி விநாயகர்</p><p>10. மகோற்கட விநாயகர்</p><p>11. துண்டி விநாயகர்</p><p>12. வல்லப விநாயகர்</p>.<p>மோதகத்தில் வெண்மையான அரிசி மாவுதான் உடல். அதனுள்ளே பூரணமாக விளங்கும் இனிப்புதான் ஆத்மா. இரண்டையும் அவர் கையில் ஒப்படைத்துச் சரணடைகிறோம் என்பதே மோதக தத்துவம்.</p>.<p>அரசு, அத்தி, மந்தாரை,வில்வம், வேம்பு, நாவல், அரை நெல்லி, வாகை ஆகிய மரங்களின் அடியில் அருளும் பிள்ளையார் விசேஷமானவர். தோஷங்கள் நீங்கிட இம்மரங்களைச் சுற்றி வந்து வணங்குவது நல்லது.</p>.<p>சாணம், புற்றுமண்,மஞ்சள், வெள்ளெருக்கு, வெல்லம், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் செய்து வழிபட்டால், எல்லாவித நலன்களும் பெற்று நிறைவில் மோட்சம் அடைவர் என்கிறது விநாயக புராணம்.</p><p>எல்லா தெய்வ வடிவங்களும் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. ஆனால், கணபதி உருவம் அப்படியல்ல. மஞ்சளால் பிடித்து வைத்தால்கூட போதும்; கணபதி அவ்வடிவில் எழுந்தருளி வரம் தருவார்.</p>.<p>கணபதி, விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை, என்று ஐந்து மூல தெய்வங்களையும் ஒரே பீடத்தில் வைத்து பூஜிப்பதை `கணபதி பஞ்சாயதனம்' என்பர். இதில் விநாயகப்பெருமானை நடுவில் வைத்து வழிபட்டால் அரசாளும் யோகம் கிட்டும்.</p>