<p><strong>ஏ</strong>ற்றமும் இறக்கமும் நிறைந்த வாழ்வில் சில தருணங்களில் மனித சக்தியால் தீர்க்கமுடியாத துயரங்கள் சூழும்போது, இறையருளை வேண்டிப் பிரார்த்திப்பது ஒன்றே துயரம் தீர்வதற்கான வழி. தற்போதும் அறிவியலால் தீர்வு காண இயலாதவாறு தொற்று நோய்ப் பிரச்னை மனித குலத்தைப் பயமுறுத்துகிறது.</p><p>திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை. தெய்வ வழிபாடு மனத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும். தன்னம்பிக்கை தேகத்தில் வலு சேர்க்கும். </p><p>ஆகவேதான், தீராத பிணிகளால் மக்கள் வருந்தும் நிலையில், அந்தப் பிணிகளின் தீவிரம் தணியவும், அவற்றால் உண்டாகும் பாதிப்புகள் முற்றிலும் அகலவும் துணைசெய்யும் துதிப்பாடல்களைப் பெரியோர்கள் பாடி வைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று இங்கே...</p>.<p><em><strong>மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு</strong></em></p><p><em><strong>சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு</strong></em></p><p><em><strong>தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு</strong></em></p><p><em><strong>செந்துவர் வாயுமை பங்கன் </strong></em></p><p><em><strong> திருஆல வாயான் திருநீறே. </strong></em></p><p><em><strong>வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு</strong></em></p><p><em><strong>போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு</strong></em></p><p><em><strong>ஓதத் தகுவது நீறுஉண்மையி லுள்ளது நீறு</strong></em></p><p><em><strong>சீதப் புனல்வயல் சூழ்ந்த</strong></em></p><p><em><strong> திருஆல வாயான் திருநீறே.</strong></em></p><p>திருஞானசம்பந்தர் அருளிய இந்தப் பதிகத்தை அனுதினமும் பாடி, இறைவனைத் தியானித்து திருநீறு அணிந்து வர, சகல பிணிகளும் துன்பங்களும் நீங்குவதோடு, இல்லத்தில் சர்வ சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்.</p><p><em><strong>- நமசிவாயம், சென்னை-44</strong></em></p>.<p><strong>உ</strong>லக நன்மையின் பொருட்டு எத்தனையோ விரத வழிபாடுகளையும், விழாக்களையும், ஆராதனைகளையும் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது வசந்த நவராத்திரி. இறையின் பேரருளைப் பெற்றுத் தரும் வசந்த நவராத்திரி நாள்களில், உன்னதமான பல வைபவங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள், சென்னை - அம்பத்தூர் ஸ்வபாவானந்த குருமண்டலி அமைப்பினர்.</p>.<p>ஶ்ரீகுஹாநந்த மண்டலியின் குருமார்களின் அனுக்ரஹத்தோடும் ஶ்ரீஜகத் குருக்களான சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் ஶ்ரீஓங்காரானந்த ஸ்வாமிகள் ஆகிய மகான்களின் அனுக்ரஹத்தோடும் வரும் ஏப்ரல் மாதம் 2, 3, 4, 5 ஆகிய நாள்களில் வஸந்த நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படவுள்ளது. </p><p>அம்பத்தூர் ஶ்ரீமகாலக்ஷ்மி கல்யாண மண்டபத்தில்... சுவாஸினி பூஜைகள், வேதபிராமண தம்பதி பூஜைகள், ஆவரண பூஜைகள் மற்றும் சிறப்பு உபன்யாசங்களுடன் நடைபெறவுள்ள விழாவில் பக்த அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு, குருவருளும் திருவருளும் பெற்றுச் செல்லலாம் (தொடர்புக்கு: 98401 08403).</p>
<p><strong>ஏ</strong>ற்றமும் இறக்கமும் நிறைந்த வாழ்வில் சில தருணங்களில் மனித சக்தியால் தீர்க்கமுடியாத துயரங்கள் சூழும்போது, இறையருளை வேண்டிப் பிரார்த்திப்பது ஒன்றே துயரம் தீர்வதற்கான வழி. தற்போதும் அறிவியலால் தீர்வு காண இயலாதவாறு தொற்று நோய்ப் பிரச்னை மனித குலத்தைப் பயமுறுத்துகிறது.</p><p>திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை. தெய்வ வழிபாடு மனத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும். தன்னம்பிக்கை தேகத்தில் வலு சேர்க்கும். </p><p>ஆகவேதான், தீராத பிணிகளால் மக்கள் வருந்தும் நிலையில், அந்தப் பிணிகளின் தீவிரம் தணியவும், அவற்றால் உண்டாகும் பாதிப்புகள் முற்றிலும் அகலவும் துணைசெய்யும் துதிப்பாடல்களைப் பெரியோர்கள் பாடி வைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று இங்கே...</p>.<p><em><strong>மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு</strong></em></p><p><em><strong>சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு</strong></em></p><p><em><strong>தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு</strong></em></p><p><em><strong>செந்துவர் வாயுமை பங்கன் </strong></em></p><p><em><strong> திருஆல வாயான் திருநீறே. </strong></em></p><p><em><strong>வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு</strong></em></p><p><em><strong>போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு</strong></em></p><p><em><strong>ஓதத் தகுவது நீறுஉண்மையி லுள்ளது நீறு</strong></em></p><p><em><strong>சீதப் புனல்வயல் சூழ்ந்த</strong></em></p><p><em><strong> திருஆல வாயான் திருநீறே.</strong></em></p><p>திருஞானசம்பந்தர் அருளிய இந்தப் பதிகத்தை அனுதினமும் பாடி, இறைவனைத் தியானித்து திருநீறு அணிந்து வர, சகல பிணிகளும் துன்பங்களும் நீங்குவதோடு, இல்லத்தில் சர்வ சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்.</p><p><em><strong>- நமசிவாயம், சென்னை-44</strong></em></p>.<p><strong>உ</strong>லக நன்மையின் பொருட்டு எத்தனையோ விரத வழிபாடுகளையும், விழாக்களையும், ஆராதனைகளையும் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது வசந்த நவராத்திரி. இறையின் பேரருளைப் பெற்றுத் தரும் வசந்த நவராத்திரி நாள்களில், உன்னதமான பல வைபவங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள், சென்னை - அம்பத்தூர் ஸ்வபாவானந்த குருமண்டலி அமைப்பினர்.</p>.<p>ஶ்ரீகுஹாநந்த மண்டலியின் குருமார்களின் அனுக்ரஹத்தோடும் ஶ்ரீஜகத் குருக்களான சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் ஶ்ரீஓங்காரானந்த ஸ்வாமிகள் ஆகிய மகான்களின் அனுக்ரஹத்தோடும் வரும் ஏப்ரல் மாதம் 2, 3, 4, 5 ஆகிய நாள்களில் வஸந்த நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படவுள்ளது. </p><p>அம்பத்தூர் ஶ்ரீமகாலக்ஷ்மி கல்யாண மண்டபத்தில்... சுவாஸினி பூஜைகள், வேதபிராமண தம்பதி பூஜைகள், ஆவரண பூஜைகள் மற்றும் சிறப்பு உபன்யாசங்களுடன் நடைபெறவுள்ள விழாவில் பக்த அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு, குருவருளும் திருவருளும் பெற்றுச் செல்லலாம் (தொடர்புக்கு: 98401 08403).</p>