
சுவாமி மலை சஷ்டிக் கவசம்
தீபத்தால் வழிபடுவோம் கந்தனை
முருகப் பெருமான் சூரனை அழிக்காமல் ஆட்கொண்டருளிய திருக்கதையை நாமறிவோம். ஆணவம் அழிந்து ஞானம் பெற்றுவிட்டால், எந்த ஆன்மாவும் அந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பதே கந்தசஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம். அந்த ஞானத்தைப் பெற்றுத் தரும் அற்புத விரதமே கந்த சஷ்டி. ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி சஷ்டி வரையிலும் 6 நாள்கள் விரதம் இருந்து, ஆலய வழிபாடுகள் செய்வதுடன் வீட்டில் 6 தீபங்கள் ஏற்றிவைத்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, சஷ்டிக்கவசம் பாடி கந்தனை வழிபடுவது விசேஷம். இதன் பலனாக குழந்தை வரம், கல்வியில் மேன்மை, தொழில் முன்னேற்றம் முதலான சகல நன்மைகளும் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும்! முருகப்பெருமானின் திருவருள் நமக்கு அரணாக இருகவேண்டும் என்று பிரார்த்திக்கும் அற்புதத் துதிப்பாடல்தான், பாலன்தேவராய சுவாமிகள் அருளிய கந்தர்சஷ்டிக் கவசம். கந்தர் சஷ்டிக் கவசம் என்றதுமே `சஷ்டியை நோக்கச் சரவண பவனார்...’ எனத் தொடங்கும் பாடலே நம் நினைவுக்கு வரும். திருச்செந்தூருக்கான பாடல் இது. இதேபோல் மற்ற படை வீடுகள் குறித் தும் கவசப் பாடல்கள் அருளியுள்ளார் பாலன்தேவராய சுவாமிகள். அந்தப் பாடல் ஒவ்வொன்றும் பெரும் புண்ணியம் அளிப்பவை. அவற்றுள் திருஏரகம் எனப் போற்றப்படும் சுவாமிமலை தலத்துக் கந்தசஷ்டிக் கவசப் பாடல் உங்களுக் காகத் தரப்பட்டுள்ளது. இந்தக் கவசம் அறிவுத் தெளிவையும் நினைவுச் சக்தியையும் அருள்வது. கல்வி கற்கும் பிள்ளைகள், வியாழக் கிழமைகளில் காலை வேளையில் இந்தப் பாடலைப் பாராயணம் செய்துவிட்டு, அன்றைய பாடங்களைப் படிக்கத் தொடங்குவது விசேஷம். இதன் மூலம் அந்தப் பிள்ளைகள், தங்களின் குலத்தில் இதுவரை எவரும் அடைய முடியாத உயரத்தை அடைவர். கல்விச் செல்வமும் பொருள் செல்வமும் அவர்களை வந்தடையும். மட்டுமன்றி பிணிகள் இல்லாத வாழ்க்கையும் சுபிட்சம் நிறைந்த எதிர்காலமும் குடும்பத்தார் எல்லோருக்கும் வாய்க்கும்.

சுவாமி மலை! கந்தர் சஷ்டிக் கவசம்
ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே ஓங்கா ரமாக
உதயத் தெழுந்தே ஆங்கா ரமான அரக்கர் குலத்தை
வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசிஅறுத்த பாலா போற்றி
பழநியின் கோவே நான்கு மறைகள் நாடியே தேடும்
மான் மருகோனே வள்ளி மணாளனே
நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காண நீ வந்து காப்பதுன் கடனே
காளி கூளி கங்காளி ஓங்காரி சூலி

கபாலி துர்கை யேமாளி போற்றும் முதல்வா
புனித குமாரா சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
ஏகாட்சரமாய் எங்கும் தானாகி வாகாய் நின்ற
மறைமுதல் பொருளே துவியட்சரத்தால் தொல்லுல(கு)
எல்லாம் அதிசயமாக அமைத்தவா போற்றி
திரியட்சரத்தால் சிவனயன் மாலும் விரிபா ருலகில்
மேன்மையுற்றவனே சதுரட்சரத்தால் சாற்றுநல் யோகம்
மதுரமாய் அளிக்கும் மயில்வாகனனே பஞ்சாட்சரத்தால் பரமன்
உருவத்தாய்த் தஞ்சமென்றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம் அஞ்சலி செய்த
அமரரைக் காக்கும் ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி ஆறு
சிரமும் அழகிய முகமும் ஆறிரு செவியும் அமர்ந்த மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும் சரவணை வந்த சடாட்சரப்
பொருளே அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா கரங்கள்


பன்னிரண்டில் கதிரும் ஆயுதத்தால் தரங்குலைந்(து) ஓடத்
தாரகாசுரன் முதல் வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச் செந்தூர்த் தேவசேனாபதி அஷ்ட குலாசலம் யாவையும்
ஆகி இஷ்டசித் திகளருள் ஈசன் புதல்வா துட்டசங் காரா
சுப்பிரமண்யா மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோணத்துள் இயங்கிய நாரணன் கண்கொளாக் காட்சி
காட்டிய சடாட்சரா சைவம் வைணவம் சமரசமாகத் தெய்வமாய்
விளங்கும் சரவணபவனே சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி எதுசெய் திடினும் என்பால்
இரங்கிக் கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித் தரிசனம்
கண்ட சாதுவோ(டு) உடன்யான் அருச்சனை செய்ய அனுக்ரகம்
அருள்வாய் பில்லிவல் வினையும் பீனிச மேகம் வல்ல பூதங்கள்
மாயமாய்ப் பறக்க அல்லலைப் போக்கி நின் அன்பரொ(டு)
என்னைச் சல்லாப மாகச் சகலரும் போற்ற கண்டு களிப்புறக்
கருணை அருள்வாய் அண்டர் நாயகனே அருமறைப் பொருளே

குட்டிச் சாத்தான் குணமிலா மாடன் தட்டிலா இருளன் சண்டி
வேதாளம் சண்டமா முனியும் தக்கராக்கதரும் மண்டை
வலியொடு வாதமும் குன்மமும் சூலைகா மாலை சொக்கலும்
சயமும் மூல ரோகங்கள் முடக்குள் வலிப்பு தீட்டு முறைகள்
தெய்வத சாபம் குட்டம் சோம்பல் கொடிய வாந்தியும் கட்டிலாக்
கண்ணோய் கண்ணேறு முதலா வெட்டுக் காயம் வெவ்விடம்
அனைத்தும் உன்னுடை நாமம் ஓதியே நீறிடக் கன்னலொன்
றதனில் களைந்திடக் கருணை செய்வதுடன் கடனே செந்தில்
நாயகனே தெய்வநா யகனே தீரனே சரணம் சரணம் சரணம்
சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் அறுபடைத்
தலங்களுக்குமான கந்த சஷ்டிக் கவசப் பாடல்களைக் கேட்டு மகிழ...