<blockquote>ஓர் ஆலயத்தில், பக்தி பிரசங்கம் நடந்தது. ஏராளமா னோர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் நடுவே கிராமத்துப் பாட்டி ஒருவரும் உட்கார்ந்திருந்தார்.</blockquote>.<p>பிரசங்கம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது, அந்தப் பாட்டி, இன்னொரு பெண்ணிடம் சொன்னார்: ``அந்தப் பெரியவர் நரகத்தைப் பற்றி எவ்வளவு பிரமாதமா பேசினார் பார்த்தியா... என்னமோ அங்கேயே பிறந்து, வளர்ந்தது மாதிரி!''</p><p>நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி தெரிந்த வரையில்தான் பேச முடியும். தெரியாத விஷயங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதனால்தான், கடவுளைப் பற்றி அதிகமாகப் பேசிக் கொண்டிருக் கிறோம்.</p><p>அவர், பெரிய ஞானி. ஒரு நாள் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அவரின் ஒரு கையில்- தீப்பந்தம். மறு கையில்- ஒரு வாளி தண்ணீர். எதிரே வந்தவர்களுக்கு இது வேடிக்கையாக இருந்தது.</p>.<p>``என்ன இது?'' என்று கேட்டனர்.</p><p>``தண்ணீரும் நெருப்பும்!''</p><p>``தெரிகிறது... அதுதான் எதற்கு என்று கேட்கிறோம்!''</p><p>ஞானி கூறினார் ``நரகத் தீயை, தண்ணீரால் அணைக்கப் போகிறேன். அப்படியே, சொர்க்கத் தையும் கொளுத்தப் போகிறேன்!''</p>.சிந்தனை விருந்து! - மகிழ்ச்சியும் நிம்மதியும்!.<p>கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஞானி தொடர்ந்தார்... ``அப்போதுதான் நரக பயமோ, சொர்க்க ஆசையோ இல்லாமல், மக்கள் சத்தியத்தை நாடி கண்டுகொள்ள முடியும்!</p>.<p>சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள், நரகத்துக்குப் போய்விடக் கூடாது என்றும் விரும்புகிறார்கள். இந்த ஞாபகத்தி லேயே வாழும் இன்றைய பக்தர்கள் சத்தியத்தை அடையாளம் கண்டுகொள்ளாமலேயே காலத்தைக் கழித்துவிடுகின்றனர்.</p><p>`கத்தினால்தான் கடவுள் கண்ணைத் திறந்து பார்ப்பார்.தட்டினால்தான் கதவு திறக்கும்!'- இது இன்றைய பக்தனது நம்பிக்கை.''</p><p>அந்த ஞானியிடம் ஒருவர் சொன்னார் ``ஒருவன் விடாமல் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தால், அந்தக் கதவு ஒரு நாள் அவனுக்காகத் திறக்கத்தானே செய்யும்?''</p>.சிந்தனை விருந்து! - கடவுள் இருக்கும் இடம் தெரியுமா?.<p>ஞானியின் முகத்தில் சிரிப்பு!</p><p>அவர் சொன்னார்: ``இப்படியே எவ்வளவு காலம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? கதவு எப்போது மூடியிருந்தது, இப்போது திறப்பதற்கு?''</p><p>8.1.2008 இதழிலிருந்து...</p>
<blockquote>ஓர் ஆலயத்தில், பக்தி பிரசங்கம் நடந்தது. ஏராளமா னோர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் நடுவே கிராமத்துப் பாட்டி ஒருவரும் உட்கார்ந்திருந்தார்.</blockquote>.<p>பிரசங்கம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது, அந்தப் பாட்டி, இன்னொரு பெண்ணிடம் சொன்னார்: ``அந்தப் பெரியவர் நரகத்தைப் பற்றி எவ்வளவு பிரமாதமா பேசினார் பார்த்தியா... என்னமோ அங்கேயே பிறந்து, வளர்ந்தது மாதிரி!''</p><p>நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி தெரிந்த வரையில்தான் பேச முடியும். தெரியாத விஷயங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதனால்தான், கடவுளைப் பற்றி அதிகமாகப் பேசிக் கொண்டிருக் கிறோம்.</p><p>அவர், பெரிய ஞானி. ஒரு நாள் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அவரின் ஒரு கையில்- தீப்பந்தம். மறு கையில்- ஒரு வாளி தண்ணீர். எதிரே வந்தவர்களுக்கு இது வேடிக்கையாக இருந்தது.</p>.<p>``என்ன இது?'' என்று கேட்டனர்.</p><p>``தண்ணீரும் நெருப்பும்!''</p><p>``தெரிகிறது... அதுதான் எதற்கு என்று கேட்கிறோம்!''</p><p>ஞானி கூறினார் ``நரகத் தீயை, தண்ணீரால் அணைக்கப் போகிறேன். அப்படியே, சொர்க்கத் தையும் கொளுத்தப் போகிறேன்!''</p>.சிந்தனை விருந்து! - மகிழ்ச்சியும் நிம்மதியும்!.<p>கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஞானி தொடர்ந்தார்... ``அப்போதுதான் நரக பயமோ, சொர்க்க ஆசையோ இல்லாமல், மக்கள் சத்தியத்தை நாடி கண்டுகொள்ள முடியும்!</p>.<p>சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள், நரகத்துக்குப் போய்விடக் கூடாது என்றும் விரும்புகிறார்கள். இந்த ஞாபகத்தி லேயே வாழும் இன்றைய பக்தர்கள் சத்தியத்தை அடையாளம் கண்டுகொள்ளாமலேயே காலத்தைக் கழித்துவிடுகின்றனர்.</p><p>`கத்தினால்தான் கடவுள் கண்ணைத் திறந்து பார்ப்பார்.தட்டினால்தான் கதவு திறக்கும்!'- இது இன்றைய பக்தனது நம்பிக்கை.''</p><p>அந்த ஞானியிடம் ஒருவர் சொன்னார் ``ஒருவன் விடாமல் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தால், அந்தக் கதவு ஒரு நாள் அவனுக்காகத் திறக்கத்தானே செய்யும்?''</p>.சிந்தனை விருந்து! - கடவுள் இருக்கும் இடம் தெரியுமா?.<p>ஞானியின் முகத்தில் சிரிப்பு!</p><p>அவர் சொன்னார்: ``இப்படியே எவ்வளவு காலம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? கதவு எப்போது மூடியிருந்தது, இப்போது திறப்பதற்கு?''</p><p>8.1.2008 இதழிலிருந்து...</p>