<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>ஒ</strong></span></span>ரு ஜாதகத்தில் லக்னமாகிய 1, 4, 7 மற்றும் 10-ம் இடங்களை கேந்திர ஸ்தானம் என்பார்கள். அதேபோல் 1 ,5, 9 ஆகிய இடங்களை திரிகோண ஸ்தானம் என்பார்கள். இந்த இடங்கள் குருபகவானின் பலம் பெற்று அமைந்திருந்தால், அந்த ஜாதகருக்குச் சிறப்பான குழந்தை வரம் வாய்க்கும். <br /> <br /> ஜாதகத்தில் குருபலம் இல்லாதவர்கள், வியாழக்கிழமைகளில் சிவாலயம் சென்று, நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக் கடலை நைவேத்தியம் செய்து வழிபட்டு வரவேண்டும். இதன் மூலம் விரைவில் குழந்தைப் பாக்கியம் பெறலாம்.</p>.<p>அதேபோல், ஜாதகத்தில் 5-ம் இடம் என்பது புத்திர ஸ்தானம் ஆகும். நவகிரகங்களில் முதல் சுப கிரகமான குரு, புத்திரக்காரகன் எனப்படுவார். புத்திரக்காரகனான குருவும் புத்திர ஸ்தானாதிபதியான 5-ம் வீட்டோனும் பலம் குறைந்து 6, 8, 12-ம் இடங்களில் இருக்கும்போது, புத்திரத் தடை ஏற்படும்.<br /> <br /> இதுபோன்று மேலும் பல ஜாதகக் குறைபாடுகளால் புத்திர சம்பத்து இல்லாத தம்பதிகள், அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது சிறப்பு. அப்படி வலம் வரும்போது சொல்ல வேண்டிய `அச்வத்த ஸ்தோத்திரம்’ ஒன்று உண்டு. அதை ஜபித்துக்கொண்டே ஏழு எண்ணிக்கைக்கு குறையாமல், 108 எண்ணிக்கை வரையிலும் அரச மரத்தை வலம் வருவதால், விரைவில் புத்திர சம்பத்து உண்டாவதுடன், வயிற்றுவலி முதலான உபாதைகளும் நீங்கும்.<br /> <br /> இந்த அச்வத்த ஸ்தோத்திரம் 11 ஸ்லோகங்கள் கொண்டது. இதை முழுவதையும் ஜபிக்க இயலாவிட்டாலும் 5-வது ஸ்லோகத்தை மட்டுமாவது ஜபித்து, அரச மரத்தை வலம் வந்து வழிபடலாம். அந்த ஸ்லோகம் உங்களுக்காக...<br /> <br /> <em><strong>மூலதோ ப்ரஹ்மரூபாய மத்யதோ விஷ்ணுருபிணே<br /> அக்ரத: ஸிவரூபாய வ்ருஷராஜாயதே நம:</strong></em><br /> <br /> கருத்து: அடியில் பிரம்மதேவ ரூபமாகவும், நடுவில் விஷ்ணு ரூபமாகவும், மேற்பகுதி சிவரூபமாகவும் திகழும்... மரங்களுக்கு அரசனான தங்களை வணங்குகிறேன்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong> - அபர்ணா, சென்னை- 91</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>ஒ</strong></span></span>ரு ஜாதகத்தில் லக்னமாகிய 1, 4, 7 மற்றும் 10-ம் இடங்களை கேந்திர ஸ்தானம் என்பார்கள். அதேபோல் 1 ,5, 9 ஆகிய இடங்களை திரிகோண ஸ்தானம் என்பார்கள். இந்த இடங்கள் குருபகவானின் பலம் பெற்று அமைந்திருந்தால், அந்த ஜாதகருக்குச் சிறப்பான குழந்தை வரம் வாய்க்கும். <br /> <br /> ஜாதகத்தில் குருபலம் இல்லாதவர்கள், வியாழக்கிழமைகளில் சிவாலயம் சென்று, நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக் கடலை நைவேத்தியம் செய்து வழிபட்டு வரவேண்டும். இதன் மூலம் விரைவில் குழந்தைப் பாக்கியம் பெறலாம்.</p>.<p>அதேபோல், ஜாதகத்தில் 5-ம் இடம் என்பது புத்திர ஸ்தானம் ஆகும். நவகிரகங்களில் முதல் சுப கிரகமான குரு, புத்திரக்காரகன் எனப்படுவார். புத்திரக்காரகனான குருவும் புத்திர ஸ்தானாதிபதியான 5-ம் வீட்டோனும் பலம் குறைந்து 6, 8, 12-ம் இடங்களில் இருக்கும்போது, புத்திரத் தடை ஏற்படும்.<br /> <br /> இதுபோன்று மேலும் பல ஜாதகக் குறைபாடுகளால் புத்திர சம்பத்து இல்லாத தம்பதிகள், அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது சிறப்பு. அப்படி வலம் வரும்போது சொல்ல வேண்டிய `அச்வத்த ஸ்தோத்திரம்’ ஒன்று உண்டு. அதை ஜபித்துக்கொண்டே ஏழு எண்ணிக்கைக்கு குறையாமல், 108 எண்ணிக்கை வரையிலும் அரச மரத்தை வலம் வருவதால், விரைவில் புத்திர சம்பத்து உண்டாவதுடன், வயிற்றுவலி முதலான உபாதைகளும் நீங்கும்.<br /> <br /> இந்த அச்வத்த ஸ்தோத்திரம் 11 ஸ்லோகங்கள் கொண்டது. இதை முழுவதையும் ஜபிக்க இயலாவிட்டாலும் 5-வது ஸ்லோகத்தை மட்டுமாவது ஜபித்து, அரச மரத்தை வலம் வந்து வழிபடலாம். அந்த ஸ்லோகம் உங்களுக்காக...<br /> <br /> <em><strong>மூலதோ ப்ரஹ்மரூபாய மத்யதோ விஷ்ணுருபிணே<br /> அக்ரத: ஸிவரூபாய வ்ருஷராஜாயதே நம:</strong></em><br /> <br /> கருத்து: அடியில் பிரம்மதேவ ரூபமாகவும், நடுவில் விஷ்ணு ரூபமாகவும், மேற்பகுதி சிவரூபமாகவும் திகழும்... மரங்களுக்கு அரசனான தங்களை வணங்குகிறேன்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong> - அபர்ணா, சென்னை- 91</strong></span></p>