<p><span style="color: rgb(255, 0, 0);">வே</span>தத்தில் கா்மகாண்டம் - ஞானகாண்டம் என இரண்டு பகுதிகள் எதற்கு? விருப்பம் நிறைவேற இது இதைச் செய் எனக் கூறுகிறது ஒன்று. மற்றொன்றோ, அதையெல்லாம் விடுத்து ஞானத்தைப் போதிக்கிறது. ஞானம் போதும் என்றால் கா்மகாண்டம் எதற்கு? - என்ற சீடனின் கேள்விக்குக் குரு பதில் சொன்னார். ஆசை வசப்பட்டு உண்ணக் கூடாததையெல்லாம் உண்ட குழந்தைக்கு, இனிப்புப் பண்டத்தில் மருந்தை மறைத்துக் கொடுப்பதைப்போல, வேதம் அவ்வாறு கூறுகிறது என்றார். மேலே தொடா்கிறது!<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"> நாய்கள் கடிப்பதும் கழுதை உதைப்பதும்<br /> இயற்கை குணமென்று தெரியும்<br /> புலிகள் பாய்வதும் நாரிகள் ஏய்ப்பதும்<br /> பிறவிக்குணம் என்று புரியும்<br /> எந்தெந்த வேளையில் கடிப்பான் - இவன்<br /> எந்தெந்த வேளையில் உதைப்பான்<br /> யாருக்கு இவா்களைத் தெரியும்?<br /> பார்வையில் குணம் என்ன புரியும்?</span><br /> <br /> பழைய திரைப்படப் பாடல் இது. இப்பாடலில் சொல்லப்பட்டதெல்லாம் சுபாவம்; இயற்கை. அதுபோல, கண்டதை உண்பதும் கண்ட இடங்களில் சோ்வதும் சுபாவம். இந்த சுபாவத்தைச் சொல்லி விளக்குகிறார் குருநாதா். எப்படி? <br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"> போகமாருயிர் கண்டதை உண்பதும்<br /> புணா்வதும் இயல்பே காண்<br /> ஆகமங்களும் சுபாவத்தை விதிக்குமோ?<br /> அத்தனை தெரியாதோ?<br /> காகமே கறுத்திடு நெருப்பே சுடு<br /> கசந்திடு வேம்பே நீ<br /> வேக வாயுவே அசை என ஒருவரும்<br /> விதித்திடல்வேண்டாவே</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"> (சந்தேகம் தெளிதல் படலம் - 74)</span><br /> <br /> "போக பாக்கியங்களை அனுபவிக்க, வேதம் விதிக்காது. கண்டதை உண்பதும் கண்டதைச் சோ்வதும் உயிர்களின் சுபாவம். உதாரணமாக, காக்கையே நீ கறுப்பாயிரு ; நெருப்பே நீ சுடு ; வேம்பே நீ கசப்பாக இரு - என்று யாரும் கட்டளையிட வேண்டாமே!<br /> <br /> காக்கைக்குக் கறுப்பும், நெருப்புக்குச் சூடும், வேம்புக்குக் கசப்பும் -சுபாவம். அதுபோலத்தான் உயிர்கள் கண்டதை உண்பதும், கண்டதைச் சோ்வதும் அவற்றின் சுபாவம். அந்த சுபாவம் வேதம் விதித்ததல்ல."<br /> <br /> இவ்வாறு சொல்லிக்கொண்டு வந்த குருநாதா், மெள்ள மெள்ள, வேத உண்மையை விவரிக்கிறார்.<br /> <br /> "மதுவையும் மாமிசத்தையும் உண்பதற்கு நீ ஆசைப்பட்டால், யாகம்செய்து உண் காமத்தை விரும்பினால், திருமணம் செய்துகொள். மனைவியிடம் காமத்தை நிறைவேற்றிக்கொள் - என வேதத்தின் பூா்வ பாகம் சொல்லக் காரணம்...<br /> <br /> "அப்போதுதான் இவன் மற்ற மாதா்களைத் தீண்ட மாட்டான் என்பதற்காகவே தவிர, பெண்ணாசையிலேயே மூழ்கிக் கிட என்பதற்காக அல்ல. பிற்பாடு இந்த எண்ணத்தையும் நீக்கச் சொல்வதே வேதம்" என்ற குருநாதா் மேலே சொன்ன தகவல்களைப் பார்த்தால்...<br /> <br /> "ஆஹா! ஆஹா! எப்படிப்பட்ட ஞானத் தகவல்கள்! அவற்றையெல்லாம் எவ்வளவு அழகாகச் சொல்கிறது இந்தப் பாடல்" எனும் பிரமிப்பு ஏற்படும். 54</p>.<p><br /> <span style="color: rgb(128, 0, 0);"> மது இறைச்சி உண் என்ற சுருதி<br /> பின் மணந்து பார் எனல்பாராய்<br /> மிதுன இச்சையும் புத்திர உற்பத்தியால்<br /> விரும்பு என்ற விதி பாராய்<br /> இதையும் விட்டு ஒழி அதி நயிட்டிக<br /> வன்னிக்கு இகழ்ச்சி அற்றதும் பாராய்<br /> அதை அறிந்து கன்மங்கள் ஆசைகள்<br /> ஒழிந்து ஆனந்தம் அடைவாயே<br /> </span></p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> (சந்தேகம் தெளிதல் படலம் - 76)</span><br /> <br /> பெண்ணாசை வேண்டாம் என்று சொன்ன வேதம், ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி, விவாக விதிமுறைகளையும் விதித்திருக்கிறதே - என்ற சந்தேகம் எழும். சந்தேக நிவா்த்தி செய்துகொள்ளலாம். வாருங்கள்!<br /> <br /> மதுவும் இறைச்சியும் உண்ண ஆசைப்பட்டால், யாகம் செய்து உண் என்று சொன்ன வேதம், அதன்பிறகு 'முகா்ந்து பார் போதும்', அதாவது வாசனையை மட்டும் நுகா் என்கிறது. அடுத்து.. .காம இச்சை.<br /> <br /> ஒருத்தியை மணந்துகொண்டு அவளிடம்உன் விருப் பத்தை நிறைவேற்றிக்கொள். அதுவும் பிள்ளைப் பேற்றுக்காக விரும்பு என்று சொல்லி, சோ்க்கைக்கான கால நேரத்தையும் குறிப்பிடுகிறது.<br /> <br /> சேரக்கூடாத காலத்தில் சோ்ந்தால், துா்புத்திரன் - தீய பிள்ளை உண்டாவான். அவனால் பழிபாவம் வரும். நரகம் தான் கிடைக்கும்.<br /> <br /> நல்ல நேரத்தில் கணவனும் மனைவியும் சோ்ந்தால், சத்புத்திரன் தோன்றுவான். நற்பெயா் கிடைப்பதுடன், மறு மையில் சொர்க்கமும் கிடைக்கும்.<br /> <br /> விலக்கான நாள் தொடங்கி நான்கு நாட்கள், ஏகாதசி, திரயோதசி தினங்களில் சேரக்கூடாது.<br /> <br /> விலக்கான நாள் தொடங்கி; ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினான்கு என இரட்டைப்படை நாட்களில் சோ்ந்தால், ஆண் குழந்தை பிறக்கும். அதே...<br /> <br /> ஐந்து, ஏழு, ஒன்பது என ஒற்றைப்படை நாட்களில் சோ்ந்தால், பெண் குழந்தை பிறக்கும்.<br /> <br /> முதல் நான்கு நாட்கள், ஏகாதசி, திரயோதசி, அமாவாசை, பௌர்ணமி எனும் நாட்களை நீக்கி, மற்றைய நாட்களில் மனைவியுடன் சோ்பவன் இல்லறத்தானாக இருந்தாலும், அவன் பிரம்மசாரியே எனத் தா்மசாஸ்திரம் கூறுகிறது.<br /> <br /> இவ்வாறு முறைப்படுத்திய அதே ஞான நூல்கள், போகங்களால் விளையும் துன்பங்களை விவரித்து, அவற்றை விடுத்துப் பரம சுகம் அடையும் வழியான ஞானத்தை விவரிக்கிறது.<br /> <br /> அதாவது ஞானத்தால் அன்றிப் பரமாத்மாவை அறிய முடியாது என்பதே வேதம்கூறும் கருத்து.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);">வே</span>தத்தில் கா்மகாண்டம் - ஞானகாண்டம் என இரண்டு பகுதிகள் எதற்கு? விருப்பம் நிறைவேற இது இதைச் செய் எனக் கூறுகிறது ஒன்று. மற்றொன்றோ, அதையெல்லாம் விடுத்து ஞானத்தைப் போதிக்கிறது. ஞானம் போதும் என்றால் கா்மகாண்டம் எதற்கு? - என்ற சீடனின் கேள்விக்குக் குரு பதில் சொன்னார். ஆசை வசப்பட்டு உண்ணக் கூடாததையெல்லாம் உண்ட குழந்தைக்கு, இனிப்புப் பண்டத்தில் மருந்தை மறைத்துக் கொடுப்பதைப்போல, வேதம் அவ்வாறு கூறுகிறது என்றார். மேலே தொடா்கிறது!<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"> நாய்கள் கடிப்பதும் கழுதை உதைப்பதும்<br /> இயற்கை குணமென்று தெரியும்<br /> புலிகள் பாய்வதும் நாரிகள் ஏய்ப்பதும்<br /> பிறவிக்குணம் என்று புரியும்<br /> எந்தெந்த வேளையில் கடிப்பான் - இவன்<br /> எந்தெந்த வேளையில் உதைப்பான்<br /> யாருக்கு இவா்களைத் தெரியும்?<br /> பார்வையில் குணம் என்ன புரியும்?</span><br /> <br /> பழைய திரைப்படப் பாடல் இது. இப்பாடலில் சொல்லப்பட்டதெல்லாம் சுபாவம்; இயற்கை. அதுபோல, கண்டதை உண்பதும் கண்ட இடங்களில் சோ்வதும் சுபாவம். இந்த சுபாவத்தைச் சொல்லி விளக்குகிறார் குருநாதா். எப்படி? <br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"> போகமாருயிர் கண்டதை உண்பதும்<br /> புணா்வதும் இயல்பே காண்<br /> ஆகமங்களும் சுபாவத்தை விதிக்குமோ?<br /> அத்தனை தெரியாதோ?<br /> காகமே கறுத்திடு நெருப்பே சுடு<br /> கசந்திடு வேம்பே நீ<br /> வேக வாயுவே அசை என ஒருவரும்<br /> விதித்திடல்வேண்டாவே</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"> (சந்தேகம் தெளிதல் படலம் - 74)</span><br /> <br /> "போக பாக்கியங்களை அனுபவிக்க, வேதம் விதிக்காது. கண்டதை உண்பதும் கண்டதைச் சோ்வதும் உயிர்களின் சுபாவம். உதாரணமாக, காக்கையே நீ கறுப்பாயிரு ; நெருப்பே நீ சுடு ; வேம்பே நீ கசப்பாக இரு - என்று யாரும் கட்டளையிட வேண்டாமே!<br /> <br /> காக்கைக்குக் கறுப்பும், நெருப்புக்குச் சூடும், வேம்புக்குக் கசப்பும் -சுபாவம். அதுபோலத்தான் உயிர்கள் கண்டதை உண்பதும், கண்டதைச் சோ்வதும் அவற்றின் சுபாவம். அந்த சுபாவம் வேதம் விதித்ததல்ல."<br /> <br /> இவ்வாறு சொல்லிக்கொண்டு வந்த குருநாதா், மெள்ள மெள்ள, வேத உண்மையை விவரிக்கிறார்.<br /> <br /> "மதுவையும் மாமிசத்தையும் உண்பதற்கு நீ ஆசைப்பட்டால், யாகம்செய்து உண் காமத்தை விரும்பினால், திருமணம் செய்துகொள். மனைவியிடம் காமத்தை நிறைவேற்றிக்கொள் - என வேதத்தின் பூா்வ பாகம் சொல்லக் காரணம்...<br /> <br /> "அப்போதுதான் இவன் மற்ற மாதா்களைத் தீண்ட மாட்டான் என்பதற்காகவே தவிர, பெண்ணாசையிலேயே மூழ்கிக் கிட என்பதற்காக அல்ல. பிற்பாடு இந்த எண்ணத்தையும் நீக்கச் சொல்வதே வேதம்" என்ற குருநாதா் மேலே சொன்ன தகவல்களைப் பார்த்தால்...<br /> <br /> "ஆஹா! ஆஹா! எப்படிப்பட்ட ஞானத் தகவல்கள்! அவற்றையெல்லாம் எவ்வளவு அழகாகச் சொல்கிறது இந்தப் பாடல்" எனும் பிரமிப்பு ஏற்படும். 54</p>.<p><br /> <span style="color: rgb(128, 0, 0);"> மது இறைச்சி உண் என்ற சுருதி<br /> பின் மணந்து பார் எனல்பாராய்<br /> மிதுன இச்சையும் புத்திர உற்பத்தியால்<br /> விரும்பு என்ற விதி பாராய்<br /> இதையும் விட்டு ஒழி அதி நயிட்டிக<br /> வன்னிக்கு இகழ்ச்சி அற்றதும் பாராய்<br /> அதை அறிந்து கன்மங்கள் ஆசைகள்<br /> ஒழிந்து ஆனந்தம் அடைவாயே<br /> </span></p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> (சந்தேகம் தெளிதல் படலம் - 76)</span><br /> <br /> பெண்ணாசை வேண்டாம் என்று சொன்ன வேதம், ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி, விவாக விதிமுறைகளையும் விதித்திருக்கிறதே - என்ற சந்தேகம் எழும். சந்தேக நிவா்த்தி செய்துகொள்ளலாம். வாருங்கள்!<br /> <br /> மதுவும் இறைச்சியும் உண்ண ஆசைப்பட்டால், யாகம் செய்து உண் என்று சொன்ன வேதம், அதன்பிறகு 'முகா்ந்து பார் போதும்', அதாவது வாசனையை மட்டும் நுகா் என்கிறது. அடுத்து.. .காம இச்சை.<br /> <br /> ஒருத்தியை மணந்துகொண்டு அவளிடம்உன் விருப் பத்தை நிறைவேற்றிக்கொள். அதுவும் பிள்ளைப் பேற்றுக்காக விரும்பு என்று சொல்லி, சோ்க்கைக்கான கால நேரத்தையும் குறிப்பிடுகிறது.<br /> <br /> சேரக்கூடாத காலத்தில் சோ்ந்தால், துா்புத்திரன் - தீய பிள்ளை உண்டாவான். அவனால் பழிபாவம் வரும். நரகம் தான் கிடைக்கும்.<br /> <br /> நல்ல நேரத்தில் கணவனும் மனைவியும் சோ்ந்தால், சத்புத்திரன் தோன்றுவான். நற்பெயா் கிடைப்பதுடன், மறு மையில் சொர்க்கமும் கிடைக்கும்.<br /> <br /> விலக்கான நாள் தொடங்கி நான்கு நாட்கள், ஏகாதசி, திரயோதசி தினங்களில் சேரக்கூடாது.<br /> <br /> விலக்கான நாள் தொடங்கி; ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினான்கு என இரட்டைப்படை நாட்களில் சோ்ந்தால், ஆண் குழந்தை பிறக்கும். அதே...<br /> <br /> ஐந்து, ஏழு, ஒன்பது என ஒற்றைப்படை நாட்களில் சோ்ந்தால், பெண் குழந்தை பிறக்கும்.<br /> <br /> முதல் நான்கு நாட்கள், ஏகாதசி, திரயோதசி, அமாவாசை, பௌர்ணமி எனும் நாட்களை நீக்கி, மற்றைய நாட்களில் மனைவியுடன் சோ்பவன் இல்லறத்தானாக இருந்தாலும், அவன் பிரம்மசாரியே எனத் தா்மசாஸ்திரம் கூறுகிறது.<br /> <br /> இவ்வாறு முறைப்படுத்திய அதே ஞான நூல்கள், போகங்களால் விளையும் துன்பங்களை விவரித்து, அவற்றை விடுத்துப் பரம சுகம் அடையும் வழியான ஞானத்தை விவரிக்கிறது.<br /> <br /> அதாவது ஞானத்தால் அன்றிப் பரமாத்மாவை அறிய முடியாது என்பதே வேதம்கூறும் கருத்து.</p>