<p><strong><span style="font-size: medium">த</span></strong>னித்துவ குணம், இறை பக்தி, எடுத்த வேலையை முடிக்கும் உறுதி, எதிராளிகளை அன்பால் வெல்லும் சாதுர்யம், முன்கோபம் ஆகியவை 'மூலம்’ நட்சத்திரக்காரர்களின் இயல்புகள். தனுசு ராசி மற்றும் வியாழக் கிரகத்துடன் தொடர்பு கொண்டது, இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், மூலம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். இதன் கெட்ட கதிர் வீச்சுக்கள் நோய்களையும், நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மைகளையும் தருகின்றன.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. மூல நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், கோங்கிலம் (இலவம்) மரத்தின் நிழலில் தினமும் அரை மணி நேரம் செலவழிப்பதால், நல்ல பலன் உண்டு என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்..<p>தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறைக்கு சுமார் 3 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூருக்கு சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருமங் கலக்குடி. இங்குள்ள ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீபிராணநாதேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- இலவம். இந்தக் கோயில், திருவாவடு துறை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது.</p>.<p>அம்பாளின் திருநாமம் ஸ்ரீமங்களாம்பிகை. அத்துடன் ஸ்ரீமங்கல விநாயகர், மங்கல தீர்த்தம், மங்கல விமானம், தலம்- மங்கலக்குடி என உள்ளதால், இதனைப் பஞ்ச மங்கல க்ஷேத்திரம் என்பர். அப்பர், ஞானசம்பந்தர், ராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிப்பரவிய தலமிது.</p>.<p>தனக்கு வரவிருந்த தொழுநோய் பற்றி ஞான திருஷ்டியால் அறிந்த காலவமுனிவர், இமயமலையில் நவக்கிரகங்களை வேண்டி தவமிருந்தாராம். அவருக்கு காட்சி தந்த நவக் கிரகங்களோ, ''பூர்வஜென்ம வினையை தடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை'' என்றனராம். இதனால் கோபம் கொண்ட முனிவர், தனக்கு வரவிருக்கும் நோய் நவக்கிரகங்களையும் பீடிக்கக் கடவது என்று சபித்தார். அதன்படி நோயால் அவதிப்பட்ட நவக்கிரகங்கள், ஈசனைப் பிரார்த் தித்தனர். அப்போது, ''காவிரியின் வடகரையில், வெள்ளெருக்கு வனத்தில், ஸ்ரீபிராணநாத ஸ்வாமியை வணங்கி தவமிருங்கள். தொடர்ந்து 11 ஞாயிறுகளில் வெள்ளெருக்கு இலையில் தயிரன்னத்தை ஸ்வாமிக்குப் படைத்து, நீங்கள் சாப்பிட்டு வந்தால், விமோசனம் உண்டு!'' என்றொரு அசரீரி ஒலித்தது. அதன்படியே வழிபட்டு, சிவனருளால் நவக்கிரகங்கள் விமோசனம் அடைந்தனராம்.</p>.<p>முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சர் அலைவாணர் என்பவர், வரிப்பணத்தை செலவழித்து இங்கே சிவனாருக்கும் நவக்கிரகங் களுக்குமாக ஆலயம் எழுப்பினாராம். இதனால் கோபம் கொண்ட மன்னன், அமைச்சருக்கு மரண தண்டனை அளித்தான் அப்போது, ''நான் இறந்ததும் எனது உடலை திருமங்கலக்குடியில் புதையுங்கள்'' என்று வேண்டிக் கொண்டாராம் அமைச்சர். தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவரது உடல் இந்தத் தலத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் மனைவி அம்பாள் சந்நிதியில் நின்று, 'உனக்குக் கோயில் கட்டிய என் கணவனைத் திருப்பிக்கொடு’ என அழுது மன்றாடினாள். அவளுக்கு மனமிரங்கி அமைச்சரை உயிர்ப்பித்தார் சிவனார். இதனால் அவருக்கு ஸ்ரீபிராணநாதேஸ்வரர் என்று பெயர்! அன்று முதல், தன்னை நாடி வரும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தருள்கிறாள், ஸ்ரீமங்களாம்பிகை. </p>.<p>இங்கே, நவக்கிரக சந்நிதி இல்லை; சூரியனும் சந்திரனும் தனித்தனியே அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீசிவ துர்கை, ஸ்ரீவிஷ்ணு துர்கை இருவரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருட்சம்- இலவம்.இதன் இலையை அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் நீங்கும்; இதன் பூவைத் தண்ணீரில் கலந்து சாப்பிட, மலச்சிக்கல் சீராகும். இலவத்தில் இருந்து கிடைக்கிற கோந்து, வெள்ளைப்படுதல் மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்த வல்லது.</p>.<p>இலவம், இலவு என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்த மரத்தின் செந்நிறப் பூக்கள் குறித்து, குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் தங்களது தினவைப் போக்கிக்கொள்வதற்கு, முள் அமைந்த அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்கின்றன என்றும், அந்த மரம் பாலை நிலத்தில் வளரும் என்றும் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.</p>.<p>திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருக்கோடி, திருக்கைச்சினம் ஆகிய கோயில்களிலும் இலவ மரமே தலவிருட்சம். </p>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="100%"> <tbody> <tr> <td> <p style="text-align: center"><span style="color: #cc0099"><span style="font-size: medium"><strong>'பூர்வ ஷென்ம தோஜம் விலகும்!’</strong></span></span></p> <p style="text-align: left"><span style="font-size: medium"></span></p></td></tr></tbody></table>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="100%"><tbody><tr><td><p style="text-align: left"><span style="font-size: medium"></span><strong><span style="font-size: medium">'’ஸ்ரீ</span></strong><span style="font-size: small">பிராணநாதருக்கு, 11 ஞாயிற்றுக்கிழமைகள் எருக்கன் இலையில் தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்நிதிக்கு எதிரே சாப்பிட்டால், ரோகப் பிணிகள் யாவும் நீங்கும்; ஆயுள் கூடும். அதே நாளில் அர்ச்சித்து, தயிர்சாத நைவேத்தியத்தை அன்னதானம் செய்து பிரார்த்தித்தால், பூர்வஜென்ம தோஷங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம் என சகல தோஷங்களும் விலகும்!'' என்கிறார் கோயில் அர்ச்சகர், சுவாமிநாத சிவம் குருக்கள். </span></p> <p style="text-align: left"><span style="font-size: small">''ஸ்ரீமங்களாம்பிகைக்கு வெள்ளிக்கிழமையன்று, அர்ச்சனை செய்து வேண்டினால், திருமணத் தடை மற்றும் தோஷங்கள் நீங்கும். திருமணமாகி, மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், சந்நிதிக்கு வந்து, 'மறு மாங்கல்யதாரணம்’ செய்துகொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள்'' என்கிறார் சுவாமிநாத சிவம் குருக்கள்.</span></p> </td> </tr> </tbody> </table>.<p><strong><span style="font-size: medium">தை</span></strong>ரியம், நேர்மை, கண்ணியம், பயணத்தில் ஆர்வம், வாசனைப் பிரியர்கள், பெற்றோரிடம் பாசம் ஆகியவை பூராடம் நட்சத்திரத்துக்காரர்களின் குணங்கள். தனுசு ராசி மற்றும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல், டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், பூராடம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள்.</p>.<p>பூராட நட்சத்திரத்துக்கு உகந்தது, பவழ மல்லிகை மரம்; அதன் நல்ல கதிர்வீச்சுக்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. பூராட தோஷம் உள்ளவர்கள், மல்லிகை மரத்தின் நிழலில் தினமும் அரைமணி நேரம் அமர்ந்திருந்தால், அதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொண்டால், நற்பலன்கள் கிடைக்கும்.</p>.<p>நாகை மாவட்டம், சீர்காழி ஸ்ரீதிருநிலை நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம், பவழ மல்லிகை. தருமை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயம் இது.</p>.<p>காளிங்கப் பாம்பு பூஜித்த தலம் ஆதலால், ஸ்ரீகாளிபுரம் எனப் பெயர் பெற்று, அதுவே பின்னாளில் சீகாழி, சீர்காழி என மருவியதாம். ஸ்ரீபிரம்மன் ஸ்தாபித்த சிவலிங்கம் என்பதால், ஸ்வாமிக்கு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்று திருப்பெயர் அமைந்ததாம்.</p>.<p>நாற்புறமும் கோபுரங்களுடன் பிரமாண்ட மாகத் திகழ்கிறது ஆலயம் முதல் தளத்தில் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீபெரியநாயகராக சிவனார் எழுந்தருளியுள்ள ஸ்ரீதோணியப்பரே இங்கே குரு மூர்த்தம்.</p>.<p>ஊழிக்காலத்தில், பிரணவத்தைத் தோணி யாகக் கொண்டு உலகை வலம் வரும்போது, பிரளயத்தில் அழியாத இந்தத் தலத்தை மூலாதார க்ஷேத்திரம் எனச் சொல்லி அருளி னாராம் சிவனார்.</p>.<p>இரண்டாவது தளத்தில், மலையுச்சியில் காட்சி தருகிறார் ஸ்ரீசட்டைநாதர். திருஞான சம்பந்தருக்கு அம்பிகை திருமுலைப்பால் தந்தருளிய அற்புதமான இந்தத் தலத்தின் விருட்சம், பவழ மல்லிகை மரம். பாரிஜாத மரம் என்றும் சொல்வார்கள்.</p>.<p>இதன் மூன்று இலைகளில் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் அமர்ந்திருப்பதாக ஐதீகம். பாரிஜாதகா என்னும் இளவரசி ஒருத்தி, கதிரவன் மீது காதல் கொண்டாளாம். ஆனால், அவளை ஏற்கவில்லை கதிரவன். இதில் விரக்தியுற்றவள், தன்னைத்தானே எரித்துக்கொண்டு இறந்தாள். அந்தச் சாம்பலில் இருந்து உருவானதுதான் பவழ மல்லிச் செடி என்றொரு கதை உண்டு. பகலில் சூரியனுக்கு முன்னே உதிர்ந்து, இரவில் செழித்து மணக்கும் குணம் கொண்டது பவழ மல்லிகை. இங்கே ஒரு முக்கியமான விஷயம்... தரையில் விழுந்து கிடக்கும் பூக்களை நாம் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டோம். ஆனால், இதில் பவழ மல்லிகைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.</p>.<p>பவழ மல்லிகையைக் கஷாயமாக்கி குடித்தால் நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்னைகள் விரைவில் குணமாகும். இதன் இலைச் சாறு, வயிற்றுக் கோளாறுக்கு வடிகாலாகும். பித்தக் காய்ச்சல், தொடை நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதன் வேர், பல் ஈறில் உள்ள வலியை நீக்கவல்லது. இதன் தளிர் இலைகள், மூல நோயிலிருந்து நிவாரணம் தருகின்றன. பவழ மல்லிகைப் பூக்களோ இருமலை குணமாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. விதைகள் சொறி, சிரங்கு, நமைச்சலைக் குணமாக்குகின்றன.</p>.<p>'சேடல் செம்மல் சிறு செங்குரலி’ என்கிற குறிஞ்சிப் பாட்டில், 'சேடல்’ என்பது 'பவழக்கால் மல்லிகை’ என விளக்கவுரை தந்துள்ளார் நச்சினார்க்கினியர்.</p>.<p>திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்களர் ஆலயத்திலும், கும்பகோணம்- திருநரையூர் சித்தீச்சரம் ஆலயத்திலும் பவழ மல்லிகையே, தல விருட்சம்!</p>.<p style="text-align: right"><strong>- விருட்சம் வளரும்...<br /> படங்கள்: கே.குணசீலன்</strong></p>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="100%"> <tbody> <tr> <td> <p style="text-align: center"><span style="color: #0000ff"><span style="font-size: medium"><strong>'ஞானம் கிடைக்கும் தலம்!’</strong></span></span></p> <p><strong><span style="font-size: medium"></span></strong></p></td></tr></tbody></table>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="100%"><tbody><tr><td><p><strong><span style="font-size: medium">''இ</span></strong>ங்கேயுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை வணங்கிய பிறகே, தனது படைப்புத் தொழிலைத் துவக்கினார் பிரம்மா என்கிறது புராணம். இந்தத் தலத்து சிவ- பார்வதியை வணங்கினால் ஞானம் கிடைக்கும்; தோஷங்கள் நிவர்த்தியாகும்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் வெங்கட்ராம சிவாச்சார்யர். மேலும், ''பிரளயத்தில் உலகம் அழிந்த பிறகு, உலகை இங்கிருந்துதான் இறைவன் உருவாக்கினார். அதனால், இது சக்தி வாய்ந்த திருத்தலமாகப் போற்றப்படுகிறது'' என்கிறார் அவர்.</p> </td> </tr> </tbody> </table>
<p><strong><span style="font-size: medium">த</span></strong>னித்துவ குணம், இறை பக்தி, எடுத்த வேலையை முடிக்கும் உறுதி, எதிராளிகளை அன்பால் வெல்லும் சாதுர்யம், முன்கோபம் ஆகியவை 'மூலம்’ நட்சத்திரக்காரர்களின் இயல்புகள். தனுசு ராசி மற்றும் வியாழக் கிரகத்துடன் தொடர்பு கொண்டது, இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், மூலம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். இதன் கெட்ட கதிர் வீச்சுக்கள் நோய்களையும், நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மைகளையும் தருகின்றன.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. மூல நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், கோங்கிலம் (இலவம்) மரத்தின் நிழலில் தினமும் அரை மணி நேரம் செலவழிப்பதால், நல்ல பலன் உண்டு என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்..<p>தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறைக்கு சுமார் 3 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூருக்கு சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருமங் கலக்குடி. இங்குள்ள ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீபிராணநாதேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- இலவம். இந்தக் கோயில், திருவாவடு துறை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது.</p>.<p>அம்பாளின் திருநாமம் ஸ்ரீமங்களாம்பிகை. அத்துடன் ஸ்ரீமங்கல விநாயகர், மங்கல தீர்த்தம், மங்கல விமானம், தலம்- மங்கலக்குடி என உள்ளதால், இதனைப் பஞ்ச மங்கல க்ஷேத்திரம் என்பர். அப்பர், ஞானசம்பந்தர், ராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிப்பரவிய தலமிது.</p>.<p>தனக்கு வரவிருந்த தொழுநோய் பற்றி ஞான திருஷ்டியால் அறிந்த காலவமுனிவர், இமயமலையில் நவக்கிரகங்களை வேண்டி தவமிருந்தாராம். அவருக்கு காட்சி தந்த நவக் கிரகங்களோ, ''பூர்வஜென்ம வினையை தடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை'' என்றனராம். இதனால் கோபம் கொண்ட முனிவர், தனக்கு வரவிருக்கும் நோய் நவக்கிரகங்களையும் பீடிக்கக் கடவது என்று சபித்தார். அதன்படி நோயால் அவதிப்பட்ட நவக்கிரகங்கள், ஈசனைப் பிரார்த் தித்தனர். அப்போது, ''காவிரியின் வடகரையில், வெள்ளெருக்கு வனத்தில், ஸ்ரீபிராணநாத ஸ்வாமியை வணங்கி தவமிருங்கள். தொடர்ந்து 11 ஞாயிறுகளில் வெள்ளெருக்கு இலையில் தயிரன்னத்தை ஸ்வாமிக்குப் படைத்து, நீங்கள் சாப்பிட்டு வந்தால், விமோசனம் உண்டு!'' என்றொரு அசரீரி ஒலித்தது. அதன்படியே வழிபட்டு, சிவனருளால் நவக்கிரகங்கள் விமோசனம் அடைந்தனராம்.</p>.<p>முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சர் அலைவாணர் என்பவர், வரிப்பணத்தை செலவழித்து இங்கே சிவனாருக்கும் நவக்கிரகங் களுக்குமாக ஆலயம் எழுப்பினாராம். இதனால் கோபம் கொண்ட மன்னன், அமைச்சருக்கு மரண தண்டனை அளித்தான் அப்போது, ''நான் இறந்ததும் எனது உடலை திருமங்கலக்குடியில் புதையுங்கள்'' என்று வேண்டிக் கொண்டாராம் அமைச்சர். தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவரது உடல் இந்தத் தலத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் மனைவி அம்பாள் சந்நிதியில் நின்று, 'உனக்குக் கோயில் கட்டிய என் கணவனைத் திருப்பிக்கொடு’ என அழுது மன்றாடினாள். அவளுக்கு மனமிரங்கி அமைச்சரை உயிர்ப்பித்தார் சிவனார். இதனால் அவருக்கு ஸ்ரீபிராணநாதேஸ்வரர் என்று பெயர்! அன்று முதல், தன்னை நாடி வரும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தருள்கிறாள், ஸ்ரீமங்களாம்பிகை. </p>.<p>இங்கே, நவக்கிரக சந்நிதி இல்லை; சூரியனும் சந்திரனும் தனித்தனியே அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீசிவ துர்கை, ஸ்ரீவிஷ்ணு துர்கை இருவரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருட்சம்- இலவம்.இதன் இலையை அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் நீங்கும்; இதன் பூவைத் தண்ணீரில் கலந்து சாப்பிட, மலச்சிக்கல் சீராகும். இலவத்தில் இருந்து கிடைக்கிற கோந்து, வெள்ளைப்படுதல் மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்த வல்லது.</p>.<p>இலவம், இலவு என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்த மரத்தின் செந்நிறப் பூக்கள் குறித்து, குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் தங்களது தினவைப் போக்கிக்கொள்வதற்கு, முள் அமைந்த அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்கின்றன என்றும், அந்த மரம் பாலை நிலத்தில் வளரும் என்றும் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.</p>.<p>திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருக்கோடி, திருக்கைச்சினம் ஆகிய கோயில்களிலும் இலவ மரமே தலவிருட்சம். </p>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="100%"> <tbody> <tr> <td> <p style="text-align: center"><span style="color: #cc0099"><span style="font-size: medium"><strong>'பூர்வ ஷென்ம தோஜம் விலகும்!’</strong></span></span></p> <p style="text-align: left"><span style="font-size: medium"></span></p></td></tr></tbody></table>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="100%"><tbody><tr><td><p style="text-align: left"><span style="font-size: medium"></span><strong><span style="font-size: medium">'’ஸ்ரீ</span></strong><span style="font-size: small">பிராணநாதருக்கு, 11 ஞாயிற்றுக்கிழமைகள் எருக்கன் இலையில் தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்நிதிக்கு எதிரே சாப்பிட்டால், ரோகப் பிணிகள் யாவும் நீங்கும்; ஆயுள் கூடும். அதே நாளில் அர்ச்சித்து, தயிர்சாத நைவேத்தியத்தை அன்னதானம் செய்து பிரார்த்தித்தால், பூர்வஜென்ம தோஷங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம் என சகல தோஷங்களும் விலகும்!'' என்கிறார் கோயில் அர்ச்சகர், சுவாமிநாத சிவம் குருக்கள். </span></p> <p style="text-align: left"><span style="font-size: small">''ஸ்ரீமங்களாம்பிகைக்கு வெள்ளிக்கிழமையன்று, அர்ச்சனை செய்து வேண்டினால், திருமணத் தடை மற்றும் தோஷங்கள் நீங்கும். திருமணமாகி, மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், சந்நிதிக்கு வந்து, 'மறு மாங்கல்யதாரணம்’ செய்துகொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள்'' என்கிறார் சுவாமிநாத சிவம் குருக்கள்.</span></p> </td> </tr> </tbody> </table>.<p><strong><span style="font-size: medium">தை</span></strong>ரியம், நேர்மை, கண்ணியம், பயணத்தில் ஆர்வம், வாசனைப் பிரியர்கள், பெற்றோரிடம் பாசம் ஆகியவை பூராடம் நட்சத்திரத்துக்காரர்களின் குணங்கள். தனுசு ராசி மற்றும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல், டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், பூராடம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள்.</p>.<p>பூராட நட்சத்திரத்துக்கு உகந்தது, பவழ மல்லிகை மரம்; அதன் நல்ல கதிர்வீச்சுக்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. பூராட தோஷம் உள்ளவர்கள், மல்லிகை மரத்தின் நிழலில் தினமும் அரைமணி நேரம் அமர்ந்திருந்தால், அதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொண்டால், நற்பலன்கள் கிடைக்கும்.</p>.<p>நாகை மாவட்டம், சீர்காழி ஸ்ரீதிருநிலை நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம், பவழ மல்லிகை. தருமை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயம் இது.</p>.<p>காளிங்கப் பாம்பு பூஜித்த தலம் ஆதலால், ஸ்ரீகாளிபுரம் எனப் பெயர் பெற்று, அதுவே பின்னாளில் சீகாழி, சீர்காழி என மருவியதாம். ஸ்ரீபிரம்மன் ஸ்தாபித்த சிவலிங்கம் என்பதால், ஸ்வாமிக்கு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்று திருப்பெயர் அமைந்ததாம்.</p>.<p>நாற்புறமும் கோபுரங்களுடன் பிரமாண்ட மாகத் திகழ்கிறது ஆலயம் முதல் தளத்தில் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீபெரியநாயகராக சிவனார் எழுந்தருளியுள்ள ஸ்ரீதோணியப்பரே இங்கே குரு மூர்த்தம்.</p>.<p>ஊழிக்காலத்தில், பிரணவத்தைத் தோணி யாகக் கொண்டு உலகை வலம் வரும்போது, பிரளயத்தில் அழியாத இந்தத் தலத்தை மூலாதார க்ஷேத்திரம் எனச் சொல்லி அருளி னாராம் சிவனார்.</p>.<p>இரண்டாவது தளத்தில், மலையுச்சியில் காட்சி தருகிறார் ஸ்ரீசட்டைநாதர். திருஞான சம்பந்தருக்கு அம்பிகை திருமுலைப்பால் தந்தருளிய அற்புதமான இந்தத் தலத்தின் விருட்சம், பவழ மல்லிகை மரம். பாரிஜாத மரம் என்றும் சொல்வார்கள்.</p>.<p>இதன் மூன்று இலைகளில் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் அமர்ந்திருப்பதாக ஐதீகம். பாரிஜாதகா என்னும் இளவரசி ஒருத்தி, கதிரவன் மீது காதல் கொண்டாளாம். ஆனால், அவளை ஏற்கவில்லை கதிரவன். இதில் விரக்தியுற்றவள், தன்னைத்தானே எரித்துக்கொண்டு இறந்தாள். அந்தச் சாம்பலில் இருந்து உருவானதுதான் பவழ மல்லிச் செடி என்றொரு கதை உண்டு. பகலில் சூரியனுக்கு முன்னே உதிர்ந்து, இரவில் செழித்து மணக்கும் குணம் கொண்டது பவழ மல்லிகை. இங்கே ஒரு முக்கியமான விஷயம்... தரையில் விழுந்து கிடக்கும் பூக்களை நாம் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டோம். ஆனால், இதில் பவழ மல்லிகைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.</p>.<p>பவழ மல்லிகையைக் கஷாயமாக்கி குடித்தால் நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்னைகள் விரைவில் குணமாகும். இதன் இலைச் சாறு, வயிற்றுக் கோளாறுக்கு வடிகாலாகும். பித்தக் காய்ச்சல், தொடை நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதன் வேர், பல் ஈறில் உள்ள வலியை நீக்கவல்லது. இதன் தளிர் இலைகள், மூல நோயிலிருந்து நிவாரணம் தருகின்றன. பவழ மல்லிகைப் பூக்களோ இருமலை குணமாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. விதைகள் சொறி, சிரங்கு, நமைச்சலைக் குணமாக்குகின்றன.</p>.<p>'சேடல் செம்மல் சிறு செங்குரலி’ என்கிற குறிஞ்சிப் பாட்டில், 'சேடல்’ என்பது 'பவழக்கால் மல்லிகை’ என விளக்கவுரை தந்துள்ளார் நச்சினார்க்கினியர்.</p>.<p>திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்களர் ஆலயத்திலும், கும்பகோணம்- திருநரையூர் சித்தீச்சரம் ஆலயத்திலும் பவழ மல்லிகையே, தல விருட்சம்!</p>.<p style="text-align: right"><strong>- விருட்சம் வளரும்...<br /> படங்கள்: கே.குணசீலன்</strong></p>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="100%"> <tbody> <tr> <td> <p style="text-align: center"><span style="color: #0000ff"><span style="font-size: medium"><strong>'ஞானம் கிடைக்கும் தலம்!’</strong></span></span></p> <p><strong><span style="font-size: medium"></span></strong></p></td></tr></tbody></table>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="100%"><tbody><tr><td><p><strong><span style="font-size: medium">''இ</span></strong>ங்கேயுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை வணங்கிய பிறகே, தனது படைப்புத் தொழிலைத் துவக்கினார் பிரம்மா என்கிறது புராணம். இந்தத் தலத்து சிவ- பார்வதியை வணங்கினால் ஞானம் கிடைக்கும்; தோஷங்கள் நிவர்த்தியாகும்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் வெங்கட்ராம சிவாச்சார்யர். மேலும், ''பிரளயத்தில் உலகம் அழிந்த பிறகு, உலகை இங்கிருந்துதான் இறைவன் உருவாக்கினார். அதனால், இது சக்தி வாய்ந்த திருத்தலமாகப் போற்றப்படுகிறது'' என்கிறார் அவர்.</p> </td> </tr> </tbody> </table>