<p><span style="color: rgb(255, 0, 0);">வெள்ளைபிள்ளையாருக்கு நல்லெண்ணெயாம் காப்பு!</span></p>.<p>வயல்களில் பயிர்களை பாதுகாக்க அத்தி மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடும் வழக்கம், நம் முன்னோர்களிடம் உண்டு. அறுவடை முடிந்த பின் குடியானவர்கள், அந்தப் பிள்ளையாருக்குச் செய்யும் பூஜையை விவரிக்கும் பாடல் இது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">பூவாம் துளசி பிள்ளையாருக்கு சாத்த<br /> <br /> வெள்ளியரளி மாலை வேலவருக்கு சாத்த<br /> <br /> காசரளிமாலை காத்தவனுக்கு சாத்த<br /> <br /> வெள்ளைபிள்ளையாருக்கு நல்லெண்ணெயாம் காப்பு<br /> <br /> ஓடு முச்சும் தேங்காய் உடைப்பேன்<br /> பிள்ளையாருக்கு<br /> <br /> பால் இளநி தேங்காய் நான் படைப்பேன்<br /> பிள்ளையாருக்கு<br /> <br /> கொத்தோடு மாங்காய் குலை நிறைந்த தேங்காய்<br /> <br /> அச்சோடு வெல்லம் ஆலை வெல்லம் நூறு<br /> <br /> கொப்பரையாம் பாவு ஓப்புதமாம் வேறு<br /> <br /> தாரோட வாழை தலை வாழை நூறு<br /> <br /> காயோடு வாழை கரு வாழை நூறு<br /> <br /> பூனை தலை போல பொரி உருண்டை நூறு<br /> <br /> எலித்தலை போல எள்ளுருண்டை நூறு<br /> <br /> ஆனைக்காது போல அதிரசங்கள் நூறு<br /> <br /> தட்டோடு மாலை தண்டமாலை நூறு<br /> <br /> கொத்தோடு மாலை கொண்ட மாலை நூறு<br /> <br /> அத்தனையும் சேர்ந்து அமோகமாம் பூஜை<br /> <br /> சித்தி விநாயகனும் சினம் தணிந்தே வருவார்.<br /> <br /> முத்தி அருள் புரிவார் முச்சூடும் வரம் கொடுப்பார்<br /> <br /> சக்தியுள்ள எங்கள் முன்னோர் அத்திமரப் <br /> பிள்ளையாரே!</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு ஒரு பிரார்த்தனை!</span><br /> <br /> கர்நாடகாவிலுள்ள யாத்திரை தலமான தி.நர்சீபுராவில் அகஸ்தேஸ்வரர் ஆலயம் உள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் மேடை மீது குமரக் கடவுளும், விநாயகப் பெருமானும் தரிசனம் தருகிறார்கள். அவருடைய பீடத்துக்கு அடியில் ஆதிசங்கரர் எழுதிய ஓலைகள் இருக்கின்றனவாம். பக்தர்கள் விநாயகரைத் தூக்கி வைத்துக் கொண்டு தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்று பிரார்த்தித்துவிட்டு கீழே வைப்பார்களாம். ஆனால், காரியம் நிறைவேறும் என்றால் மட்டுமே விக்கிரகத்தைத் தூக்க முடியுமாம். இது ஒரு அதிசயம்தான். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">செவிசாய்த்த விநாயகர்</span><br /> <br /> சிவாலயங்களில் தேவாரப்பதிகம் பாடிவந்த சம்பந்தருக்கு திருச்சி கீழ் அன்பில் நகரிலுள்ள சத்தியவாகீஸ்வரரை வழிபட ஆசை. சிவன் சம்பந்தரைச் சோதிக்க காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடச் செய்தார். இதனால் கோயிலுக்குள் செல்ல முடியாத சம்பந்தர் கரையில் இருந்தபடியே பாடினார். எனவே கோயிலில் வீற்றிருந்த பிள்ளையார் தன் யானைக் காதை சாய்த்து சம்பந்தர் பாட்டைக் கேட்டார்.<br /> <br /> இன்றுகூட இக்கோயிலில் செவி சாய்த்த விநாயகரைத் தரிசிக்கலாம். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">குழந்தை விநாயகர்</span><br /> <br /> கும்பகோணம் அருகில் திருவைகாவூர் தலத்தில் உள்ள ஸ்ரீவில்வநாதர் ஆலயம் பிரசித்திப்பெற்றது. இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் அருகே அன்னையைப் பிரிய மனமில்லாதவராக காட்சியளிக்கிறார் குழந்தை கணபதி. சுமார் ஒன்றரை அடி உயரம். ஓரடி அகல அளவில் சிறிய மூர்த்தியாக தரிசனம் தருகிறார் இந்த பிள்ளையார்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">தான்தோன்றி விநாயகர்</span><br /> <br /> மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டுப் பாதையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது தான்தோன்றி பிள்ளையார் கோயில். இந்த விநாயகரை வணங்கிச்சென்றால் 18 படிகள் உள்ளன. சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட முடியாதவர்கள் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">‘கம்மென இரு!’</span><br /> <br /> விநாயகனை கணேசபஞ்சரத்னம், விநாயகஅஷ்டகம், விநாயகர்அகவல் மூலமாக வழிபடலாம். சிறந்த பலனை தரும். எனக்கு நேரமில்லை சுருக்கமாக வழிபட ஏதாவது சொல்லுங்கள் எனும் தோழர்களா நீங்கள்? உங்களுக்காகவே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் “கம்மென இரு” என்று.<br /> <br /> அதாவது கணேசரின் பீஜ மந்திரம் ‘கம்’. (கம் கம் என த்யானித்தால் வாழ்க்கை ஜம்ஜம் மென இருக்கும்.) “கம் கணபதயே நமஹ” இந்த மஹா மந்திரத்தை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் <br /> கணேசனின் கடாக்ஷத்தை பெறலாம். அதேபோல் கீழ்க்காணும் விநாயக மந்திரங்களும் மிக மகிமையானவை.<br /> <br /> கஜானனாயை நமஹ - யானை தலையை கொண்டவனே போற்றி. யானைக்கு ஞாபக சக்தி, சூட்சுமஅறிவு அதிகம். நமக்கு ஞானம் கிட்டவும், நமது தேவைகளை ஞாபகத்தில் வைத்து நம்மை காக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்து பலனை பெறலாம்.<br /> <br /> சூர்ப்ப கர்ணாயை நமஹ- முறம் போன்ற காதுகளை கொண்டவனுக்கு போற்றி. இந்த மந்திரம் அந்த பெரிய காதுகளுக்கு நமது சின்ன குறைகளை கொண்டு சேர்க்கும். அதன் மூலம் நமது இன்னல்கள் விலகும்.<br /> <br /> தீர்க்க துண்டாய நம - நீண்ட துதிக்கையை உடையவனே போற்றி. அகவல் பாடிய ஔவை பிராட்டியை சிவலோகத்திற்கு சேர்த்த புண்ணியம் இத் தும்பிக்கைக்கே உரியது. ஔவையை சேர்த்ததைப் போல நம்மையும் கரையேற்றும் இம் மந்திரம்.<br /> <br /> லம்போதராய நமஹ- பேழை வயிற்றோனே போற்றி. விநாயகனின் வயிறே பேரண்ட ஸ்வரூபம். இந்த மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்வதனால் அண்டத்தில் உள்ள அனைத்து நல்ல சக்திகளையும் நம் வசமாக்க முடியும். அனைத்து கடவுளர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.<br /> <br /> மோதக ஹஸ்தாயை நமஹ கொழுக்கட்டையை கையில் கொண்டவனே போற்றி. மோதகம் என்பது ஞானத்தின் குறியீடு, வெண்மை அறிவையும், அமைதியையும், உள்ளிருக்கும் பூரணம் பூரணத்துவத்தையும் குறிக்கிறது. குறிப்பாக கல்வி, ஞானம் வேண்டுவோர் ஜபிக்க வேண்டிய மந்திர இது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">- சுபா</span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);">வெள்ளைபிள்ளையாருக்கு நல்லெண்ணெயாம் காப்பு!</span></p>.<p>வயல்களில் பயிர்களை பாதுகாக்க அத்தி மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடும் வழக்கம், நம் முன்னோர்களிடம் உண்டு. அறுவடை முடிந்த பின் குடியானவர்கள், அந்தப் பிள்ளையாருக்குச் செய்யும் பூஜையை விவரிக்கும் பாடல் இது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">பூவாம் துளசி பிள்ளையாருக்கு சாத்த<br /> <br /> வெள்ளியரளி மாலை வேலவருக்கு சாத்த<br /> <br /> காசரளிமாலை காத்தவனுக்கு சாத்த<br /> <br /> வெள்ளைபிள்ளையாருக்கு நல்லெண்ணெயாம் காப்பு<br /> <br /> ஓடு முச்சும் தேங்காய் உடைப்பேன்<br /> பிள்ளையாருக்கு<br /> <br /> பால் இளநி தேங்காய் நான் படைப்பேன்<br /> பிள்ளையாருக்கு<br /> <br /> கொத்தோடு மாங்காய் குலை நிறைந்த தேங்காய்<br /> <br /> அச்சோடு வெல்லம் ஆலை வெல்லம் நூறு<br /> <br /> கொப்பரையாம் பாவு ஓப்புதமாம் வேறு<br /> <br /> தாரோட வாழை தலை வாழை நூறு<br /> <br /> காயோடு வாழை கரு வாழை நூறு<br /> <br /> பூனை தலை போல பொரி உருண்டை நூறு<br /> <br /> எலித்தலை போல எள்ளுருண்டை நூறு<br /> <br /> ஆனைக்காது போல அதிரசங்கள் நூறு<br /> <br /> தட்டோடு மாலை தண்டமாலை நூறு<br /> <br /> கொத்தோடு மாலை கொண்ட மாலை நூறு<br /> <br /> அத்தனையும் சேர்ந்து அமோகமாம் பூஜை<br /> <br /> சித்தி விநாயகனும் சினம் தணிந்தே வருவார்.<br /> <br /> முத்தி அருள் புரிவார் முச்சூடும் வரம் கொடுப்பார்<br /> <br /> சக்தியுள்ள எங்கள் முன்னோர் அத்திமரப் <br /> பிள்ளையாரே!</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு ஒரு பிரார்த்தனை!</span><br /> <br /> கர்நாடகாவிலுள்ள யாத்திரை தலமான தி.நர்சீபுராவில் அகஸ்தேஸ்வரர் ஆலயம் உள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் மேடை மீது குமரக் கடவுளும், விநாயகப் பெருமானும் தரிசனம் தருகிறார்கள். அவருடைய பீடத்துக்கு அடியில் ஆதிசங்கரர் எழுதிய ஓலைகள் இருக்கின்றனவாம். பக்தர்கள் விநாயகரைத் தூக்கி வைத்துக் கொண்டு தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்று பிரார்த்தித்துவிட்டு கீழே வைப்பார்களாம். ஆனால், காரியம் நிறைவேறும் என்றால் மட்டுமே விக்கிரகத்தைத் தூக்க முடியுமாம். இது ஒரு அதிசயம்தான். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">செவிசாய்த்த விநாயகர்</span><br /> <br /> சிவாலயங்களில் தேவாரப்பதிகம் பாடிவந்த சம்பந்தருக்கு திருச்சி கீழ் அன்பில் நகரிலுள்ள சத்தியவாகீஸ்வரரை வழிபட ஆசை. சிவன் சம்பந்தரைச் சோதிக்க காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடச் செய்தார். இதனால் கோயிலுக்குள் செல்ல முடியாத சம்பந்தர் கரையில் இருந்தபடியே பாடினார். எனவே கோயிலில் வீற்றிருந்த பிள்ளையார் தன் யானைக் காதை சாய்த்து சம்பந்தர் பாட்டைக் கேட்டார்.<br /> <br /> இன்றுகூட இக்கோயிலில் செவி சாய்த்த விநாயகரைத் தரிசிக்கலாம். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">குழந்தை விநாயகர்</span><br /> <br /> கும்பகோணம் அருகில் திருவைகாவூர் தலத்தில் உள்ள ஸ்ரீவில்வநாதர் ஆலயம் பிரசித்திப்பெற்றது. இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் அருகே அன்னையைப் பிரிய மனமில்லாதவராக காட்சியளிக்கிறார் குழந்தை கணபதி. சுமார் ஒன்றரை அடி உயரம். ஓரடி அகல அளவில் சிறிய மூர்த்தியாக தரிசனம் தருகிறார் இந்த பிள்ளையார்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">தான்தோன்றி விநாயகர்</span><br /> <br /> மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டுப் பாதையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது தான்தோன்றி பிள்ளையார் கோயில். இந்த விநாயகரை வணங்கிச்சென்றால் 18 படிகள் உள்ளன. சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட முடியாதவர்கள் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">‘கம்மென இரு!’</span><br /> <br /> விநாயகனை கணேசபஞ்சரத்னம், விநாயகஅஷ்டகம், விநாயகர்அகவல் மூலமாக வழிபடலாம். சிறந்த பலனை தரும். எனக்கு நேரமில்லை சுருக்கமாக வழிபட ஏதாவது சொல்லுங்கள் எனும் தோழர்களா நீங்கள்? உங்களுக்காகவே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் “கம்மென இரு” என்று.<br /> <br /> அதாவது கணேசரின் பீஜ மந்திரம் ‘கம்’. (கம் கம் என த்யானித்தால் வாழ்க்கை ஜம்ஜம் மென இருக்கும்.) “கம் கணபதயே நமஹ” இந்த மஹா மந்திரத்தை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் <br /> கணேசனின் கடாக்ஷத்தை பெறலாம். அதேபோல் கீழ்க்காணும் விநாயக மந்திரங்களும் மிக மகிமையானவை.<br /> <br /> கஜானனாயை நமஹ - யானை தலையை கொண்டவனே போற்றி. யானைக்கு ஞாபக சக்தி, சூட்சுமஅறிவு அதிகம். நமக்கு ஞானம் கிட்டவும், நமது தேவைகளை ஞாபகத்தில் வைத்து நம்மை காக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்து பலனை பெறலாம்.<br /> <br /> சூர்ப்ப கர்ணாயை நமஹ- முறம் போன்ற காதுகளை கொண்டவனுக்கு போற்றி. இந்த மந்திரம் அந்த பெரிய காதுகளுக்கு நமது சின்ன குறைகளை கொண்டு சேர்க்கும். அதன் மூலம் நமது இன்னல்கள் விலகும்.<br /> <br /> தீர்க்க துண்டாய நம - நீண்ட துதிக்கையை உடையவனே போற்றி. அகவல் பாடிய ஔவை பிராட்டியை சிவலோகத்திற்கு சேர்த்த புண்ணியம் இத் தும்பிக்கைக்கே உரியது. ஔவையை சேர்த்ததைப் போல நம்மையும் கரையேற்றும் இம் மந்திரம்.<br /> <br /> லம்போதராய நமஹ- பேழை வயிற்றோனே போற்றி. விநாயகனின் வயிறே பேரண்ட ஸ்வரூபம். இந்த மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்வதனால் அண்டத்தில் உள்ள அனைத்து நல்ல சக்திகளையும் நம் வசமாக்க முடியும். அனைத்து கடவுளர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.<br /> <br /> மோதக ஹஸ்தாயை நமஹ கொழுக்கட்டையை கையில் கொண்டவனே போற்றி. மோதகம் என்பது ஞானத்தின் குறியீடு, வெண்மை அறிவையும், அமைதியையும், உள்ளிருக்கும் பூரணம் பூரணத்துவத்தையும் குறிக்கிறது. குறிப்பாக கல்வி, ஞானம் வேண்டுவோர் ஜபிக்க வேண்டிய மந்திர இது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">- சுபா</span></p>