<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> த</strong>.ஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்- திருவைகாவூருக்கு அருகில் உள்ள திருத்தலம், பட்டவர்த்தி. இங்கேயுள்ள ஸ்ரீதான்தோன்றிநாதர் ஆலயம், மகா சிவராத்திரிக்குப் பெயர்பெற்ற ஸ்தலமாகப் போற்றப்படுகிறது..<p>அதுமட்டுமா? எம பயம் போக்கி அருளும் திருத்தலம் எனத் தெரிவிக்கிறது, ஸ்தல புராணம். இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீதான்தோன்றி நாதரையும் ஸ்ரீதையல்நாயகி அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், மரண பயம் நீங்கும்; நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்.</p>.<p>இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு... இங்கு ஸ்ரீசனீஸ்வர பகவான், தனிச் சந்நிதியில் இருந்தபடி, அழகுறத் தரிசனம் தருகிறார். சனிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீசனீஸ்வரரைத் தொடர்ந்து தரிசித்து எள் தீபமேற்றி வழிபடுவதை, தஞ்சாவூர்- கும்பகோணம் மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். </p>.<p>சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளாக வந்து, ஸ்ரீசனீஸ்வரரைத் தரிசித்துச் செல்கின்றனர். ஸ்ரீசனீஸ்வரருக்கு உரிய கறுப்பு வஸ்திரத்தைச் சார்த்தி, எள் தீபமேற்றி, எள் சாத நைவேத்தியம் செய்து, சிறப்பு பூஜையில் பங்கேற்றால், சனி தோஷம் விலகும்; சங்கடங்கள் அகலும் என்பது ஐதீகம்!</p>.<p>தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து திருவைகாவூர் செல்லும் பேருந்தில் சுமார் 15 கி.மீ. பயணித்தால், பட்டவர்த்தி திருத்தலத்தை அடையலாம். திருவையாறில் இருந்து அண்டக்குடி வந்து, அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தாலும் இந்தத் தலத்தை அடையலாம்.</p>.<p>எம பயம் போக்கும் பட்டவர்த்தி தலத்துக்கு வந்து, ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீதான்தோன்றிநாதரையும் ஸ்ரீசனீஸ்வரரையும் வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!</p>.<p style="text-align: right"> <strong> - கோ.சுதர்சனன்<br /> படங்கள்: இ.ராஜவிபீஷிகா</strong></p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> த</strong>.ஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்- திருவைகாவூருக்கு அருகில் உள்ள திருத்தலம், பட்டவர்த்தி. இங்கேயுள்ள ஸ்ரீதான்தோன்றிநாதர் ஆலயம், மகா சிவராத்திரிக்குப் பெயர்பெற்ற ஸ்தலமாகப் போற்றப்படுகிறது..<p>அதுமட்டுமா? எம பயம் போக்கி அருளும் திருத்தலம் எனத் தெரிவிக்கிறது, ஸ்தல புராணம். இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீதான்தோன்றி நாதரையும் ஸ்ரீதையல்நாயகி அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், மரண பயம் நீங்கும்; நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்.</p>.<p>இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு... இங்கு ஸ்ரீசனீஸ்வர பகவான், தனிச் சந்நிதியில் இருந்தபடி, அழகுறத் தரிசனம் தருகிறார். சனிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீசனீஸ்வரரைத் தொடர்ந்து தரிசித்து எள் தீபமேற்றி வழிபடுவதை, தஞ்சாவூர்- கும்பகோணம் மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். </p>.<p>சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளாக வந்து, ஸ்ரீசனீஸ்வரரைத் தரிசித்துச் செல்கின்றனர். ஸ்ரீசனீஸ்வரருக்கு உரிய கறுப்பு வஸ்திரத்தைச் சார்த்தி, எள் தீபமேற்றி, எள் சாத நைவேத்தியம் செய்து, சிறப்பு பூஜையில் பங்கேற்றால், சனி தோஷம் விலகும்; சங்கடங்கள் அகலும் என்பது ஐதீகம்!</p>.<p>தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து திருவைகாவூர் செல்லும் பேருந்தில் சுமார் 15 கி.மீ. பயணித்தால், பட்டவர்த்தி திருத்தலத்தை அடையலாம். திருவையாறில் இருந்து அண்டக்குடி வந்து, அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தாலும் இந்தத் தலத்தை அடையலாம்.</p>.<p>எம பயம் போக்கும் பட்டவர்த்தி தலத்துக்கு வந்து, ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீதான்தோன்றிநாதரையும் ஸ்ரீசனீஸ்வரரையும் வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!</p>.<p style="text-align: right"> <strong> - கோ.சுதர்சனன்<br /> படங்கள்: இ.ராஜவிபீஷிகா</strong></p>