<p><strong><span style="color: rgb(255, 0, 0);">‘சி</span></strong>ந்தையில் கந்தனை வைத்தால் வாழ்வில் கவலைகளே வராது’ என்பார்கள் பெரியோர்கள். ஆமாம், எக்காரியத்தைத் துவங்கினாலும் முருகப் பெருமானின் திருவுருவை, பாதாதிகேசமாக மனதில் தியானித்து வழிபட்டால், அதன்பிறகு அந்தக் காரியத்தில் வெகு எளிதில் வெற்றிபெறலாம்.<br /> <br /> இதோ, வரும் 14.4.17 அன்று `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புதுவருடத்தின் ராஜாதிபதி செவ்வாய். <br /> <br /> அவருக்கு உகந்த தெய்வமும் வேலவனே. ஆக, வரும் வருடம் வளமுடன் திகழ, நாமும் ஆனந்தவேலவனின் அழகுத் திருவுருவைத் தியானித்து வழிபட்டு வரம்பெறுவோம். அதற்குக் கீழ்க்காணும் அற்புதப் பாடல் நமக்கு உதவும்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஆறுமுகமும் பனிரண்டுகையும் வேலும்<br /> அலங்கார ஆபரணமும் அணிந்த மார்பும்<br /> திருமுகமும் வெண்ணீறும் புனைந்தமெய்யும்<br /> ஜெகமெல்லாம் புகழ்படைத்த சுப்ரமண்யா<br /> முருகா சரவணபவனே கார்த்திகேயா<br /> முக்கணனார் புத்திரனே உக்ரவேலா<br /> இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா<br /> இதுசமயம் அடியாரை <br /> உயிர்க்காத்து ரட்சிப்பாயே!</span></strong><br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">- ஆறுமுகசுவாமி விருத்தம்</span><br /> <br /> இந்தப் பாடலை அனுதினமும் பாடி, முருகனுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும். <br /> <br /> வேலுண்டு வினையில்லை!</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">‘சி</span></strong>ந்தையில் கந்தனை வைத்தால் வாழ்வில் கவலைகளே வராது’ என்பார்கள் பெரியோர்கள். ஆமாம், எக்காரியத்தைத் துவங்கினாலும் முருகப் பெருமானின் திருவுருவை, பாதாதிகேசமாக மனதில் தியானித்து வழிபட்டால், அதன்பிறகு அந்தக் காரியத்தில் வெகு எளிதில் வெற்றிபெறலாம்.<br /> <br /> இதோ, வரும் 14.4.17 அன்று `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புதுவருடத்தின் ராஜாதிபதி செவ்வாய். <br /> <br /> அவருக்கு உகந்த தெய்வமும் வேலவனே. ஆக, வரும் வருடம் வளமுடன் திகழ, நாமும் ஆனந்தவேலவனின் அழகுத் திருவுருவைத் தியானித்து வழிபட்டு வரம்பெறுவோம். அதற்குக் கீழ்க்காணும் அற்புதப் பாடல் நமக்கு உதவும்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஆறுமுகமும் பனிரண்டுகையும் வேலும்<br /> அலங்கார ஆபரணமும் அணிந்த மார்பும்<br /> திருமுகமும் வெண்ணீறும் புனைந்தமெய்யும்<br /> ஜெகமெல்லாம் புகழ்படைத்த சுப்ரமண்யா<br /> முருகா சரவணபவனே கார்த்திகேயா<br /> முக்கணனார் புத்திரனே உக்ரவேலா<br /> இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா<br /> இதுசமயம் அடியாரை <br /> உயிர்க்காத்து ரட்சிப்பாயே!</span></strong><br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">- ஆறுமுகசுவாமி விருத்தம்</span><br /> <br /> இந்தப் பாடலை அனுதினமும் பாடி, முருகனுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும். <br /> <br /> வேலுண்டு வினையில்லை!</p>