<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பூ</span></strong>தப்பாண்டி மிக அற்புதமான நாட்டுவைத்தியர். ஒருமுறை இளம் பெண் ஒருத்தியின் உயிரைக் காக்க சிகிச்சை அளித்தார். இதைத் தவறாகப் புரிந்துகொண்ட அந்தப் பெண்ணின் உறவினர்கள், பூதப்பாண்டியைத் தாக்கினார்கள். காலில் வெட்டுப்பட்டு உயிர்நீத்த பூதப்பாண்டி, பிற்காலத்தில் ஊருக்கே காவல் தெய்வமானார்.</p>.<p>தூத்துக்குடி மாவட்டம், செய்துங்க நல்லூரில் அருள்மிகு குழலி அம்மன் திருக்கோயிலில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பூதப்பாண்டி ‘சப்பாணி மாடசாமி’ என்ற திருப்பெயரில் பக்தர்களால் வழிபடப்படுகிறார். குழலியம்மனும் சிறந்த வரப்பிரசாதி.<br /> <br /> தீபாவளித் திருநாளன்று நள்ளிரவில் இந்தத் திருக்கோயிலில் விசேஷ பூஜைகள் நடக்கும். பலவித பலகாரங்கள் சாமிக்குப் படைக்கப்படும். அப்போது அருள் வந்து ஆடும் சாமியாடி, யார் வீட்டு பலகாரங்களைச் சாப்பிடுகிறாரோ, அந்த வீட்டில் வளங்கள் பெருகும்; செல்வம் செழிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். தீபாவளி அன்று சப்பாணி மாடனுக்குப் படையல் போட்டு பூஜை செய்து வணங்கினால், அந்த ஆண்டு முழுவதும் சுற்றுவட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதும் கிராம மக்களின் நம்பிக்கை. </p>.<p><strong>ஆலயம் இருக்குமிடம் : </strong> தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகிலுள்ளது செய்துங்கநல்லூர். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியிலிருந்து பேருந்து வசதி உண்டு.</p>.<p>- ச. முத்துகிருஷ்ணன்</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பூ</span></strong>தப்பாண்டி மிக அற்புதமான நாட்டுவைத்தியர். ஒருமுறை இளம் பெண் ஒருத்தியின் உயிரைக் காக்க சிகிச்சை அளித்தார். இதைத் தவறாகப் புரிந்துகொண்ட அந்தப் பெண்ணின் உறவினர்கள், பூதப்பாண்டியைத் தாக்கினார்கள். காலில் வெட்டுப்பட்டு உயிர்நீத்த பூதப்பாண்டி, பிற்காலத்தில் ஊருக்கே காவல் தெய்வமானார்.</p>.<p>தூத்துக்குடி மாவட்டம், செய்துங்க நல்லூரில் அருள்மிகு குழலி அம்மன் திருக்கோயிலில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பூதப்பாண்டி ‘சப்பாணி மாடசாமி’ என்ற திருப்பெயரில் பக்தர்களால் வழிபடப்படுகிறார். குழலியம்மனும் சிறந்த வரப்பிரசாதி.<br /> <br /> தீபாவளித் திருநாளன்று நள்ளிரவில் இந்தத் திருக்கோயிலில் விசேஷ பூஜைகள் நடக்கும். பலவித பலகாரங்கள் சாமிக்குப் படைக்கப்படும். அப்போது அருள் வந்து ஆடும் சாமியாடி, யார் வீட்டு பலகாரங்களைச் சாப்பிடுகிறாரோ, அந்த வீட்டில் வளங்கள் பெருகும்; செல்வம் செழிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். தீபாவளி அன்று சப்பாணி மாடனுக்குப் படையல் போட்டு பூஜை செய்து வணங்கினால், அந்த ஆண்டு முழுவதும் சுற்றுவட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதும் கிராம மக்களின் நம்பிக்கை. </p>.<p><strong>ஆலயம் இருக்குமிடம் : </strong> தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகிலுள்ளது செய்துங்கநல்லூர். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியிலிருந்து பேருந்து வசதி உண்டு.</p>.<p>- ச. முத்துகிருஷ்ணன்</p>