<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>செல்வ வளம் அருளும் காங்கேயன் தரிசனம்!</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span>ருகப்பெருமானின் திருப்பெயர்களில் ஒன்று காங்கேயன். கங்கையின் மைந்தன் எனும் பொருளில் அமைந்தது. இதற்கு வேறொரு காரணமும் உண்டு. சூரபதுமனின் மைந்தர்களில் ஒருவன் இரண்யன் (திருமால் அழித்த இரண்யாட்சன், இரண்யகசிபு ஆகியோர் வேறு). <br /> <br /> கடலுக்கடியில் வசித்த இந்த அசுரனிடமிருந்து தேவர்களைக் காக்க திருவுளம் கொண்ட முருகப்பெருமான், நெடிய வில்லையும் அம்பையும் ஏந்தியபடி போர்க்கோலம் கொண்டு கடற்கரையை அடைந்தார். அங்கே நீர்ப்பரப்பில் மகர மீனாக மேலெழுந்து வந்தான் அசுரன். அக்கணமே, முருகப் பெருமான் எய்த அஸ்திரம் அவனது ஆணவத்தை அழித்தது. மகர வடிவுடன் வந்து முருகனின் தாள்களைப் பணிந்தான்.</p>.<p><br /> <br /> அவனை வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். மகர வாகனத்தில் பவனி வரும் முருகனை காங்கேயன் எனப்போற்றுவர். இந்தத் திருவடிவில் நீலோற்பவம், தீயகலாகிய பந்தம், பூரணக்கும்பம் ஏந்தியவராகத் திகழ்கிறார் முருகன். கங்கு என்றால் சிறிய ஜ்வாலையுடன் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு. உலகையே அழிக்கவல்ல வடவைக் கனலாகவும் திகழும். இந்தக் கங்கினை எளிய தீப்பந்தமாக்கி ஏந்தியிருப்பதால் முருகனுக்குக் காங்கேயன் எனப் பெயர். இவரை வழிபட்டால் வறுமைப்பிணி நீங்கும்; செல்வம் செழிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong> - பூசை ச.அருணவசந்தன், சென்னை-4</strong></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>சிரித்தான் முருகன்!</strong></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> தி</strong></span>ருத்தலங்களின் மகிமைகளை ஒன்றுக்குமேற்பட்ட பாடல்களில் தொகுத்துப் பாடுவார்கள் அடியார்கள். இவ்வகை பாடல் தொகுப்புகளைத் திருத்தலக் கோவை என்பார்கள். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் முதலான அடியார்கள் இவ்வாறு திருத்தலக்கோவை பாடியருளியுள்ளனர். அருணகிரிநாதரும் திருத்தலக்கோவை பாட விரும்பினாராம். <br /> <br /> அதன்படி, கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் எனத் தொடங்கி 29 தலங்களைப் பாடிக்கொண்டே வந்தார். அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது. அவ்வாறு நகைத்தது முருகன் என்பதையும் ‘இத்தலங்களில் மட்டும்தான் யாம் இருக்கிறோமா’ என்று முருகன் கேட்பதாகவும் உணர்ந்தார் அருணகிரியார். ஆகவே, ‘உலகெங்கு மேவிய தேவாலயம் தொரு பெருமாளே’ என்று பாடலை நிறைவு செய்தார் அருணகிரியார். ஆமாம், அகிலங்கள் யாவும் அழகன் முருகனின் அரசாங்கம்தானே? நாமும் அகிலம் செழிக்க, அழகனை வழிபட்டு அருள்பெறுவோம்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong> - கே.கந்தசாமி, சத்தியமங்கலம் <br /> </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>செல்வ வளம் அருளும் காங்கேயன் தரிசனம்!</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span>ருகப்பெருமானின் திருப்பெயர்களில் ஒன்று காங்கேயன். கங்கையின் மைந்தன் எனும் பொருளில் அமைந்தது. இதற்கு வேறொரு காரணமும் உண்டு. சூரபதுமனின் மைந்தர்களில் ஒருவன் இரண்யன் (திருமால் அழித்த இரண்யாட்சன், இரண்யகசிபு ஆகியோர் வேறு). <br /> <br /> கடலுக்கடியில் வசித்த இந்த அசுரனிடமிருந்து தேவர்களைக் காக்க திருவுளம் கொண்ட முருகப்பெருமான், நெடிய வில்லையும் அம்பையும் ஏந்தியபடி போர்க்கோலம் கொண்டு கடற்கரையை அடைந்தார். அங்கே நீர்ப்பரப்பில் மகர மீனாக மேலெழுந்து வந்தான் அசுரன். அக்கணமே, முருகப் பெருமான் எய்த அஸ்திரம் அவனது ஆணவத்தை அழித்தது. மகர வடிவுடன் வந்து முருகனின் தாள்களைப் பணிந்தான்.</p>.<p><br /> <br /> அவனை வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். மகர வாகனத்தில் பவனி வரும் முருகனை காங்கேயன் எனப்போற்றுவர். இந்தத் திருவடிவில் நீலோற்பவம், தீயகலாகிய பந்தம், பூரணக்கும்பம் ஏந்தியவராகத் திகழ்கிறார் முருகன். கங்கு என்றால் சிறிய ஜ்வாலையுடன் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு. உலகையே அழிக்கவல்ல வடவைக் கனலாகவும் திகழும். இந்தக் கங்கினை எளிய தீப்பந்தமாக்கி ஏந்தியிருப்பதால் முருகனுக்குக் காங்கேயன் எனப் பெயர். இவரை வழிபட்டால் வறுமைப்பிணி நீங்கும்; செல்வம் செழிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong> - பூசை ச.அருணவசந்தன், சென்னை-4</strong></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>சிரித்தான் முருகன்!</strong></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> தி</strong></span>ருத்தலங்களின் மகிமைகளை ஒன்றுக்குமேற்பட்ட பாடல்களில் தொகுத்துப் பாடுவார்கள் அடியார்கள். இவ்வகை பாடல் தொகுப்புகளைத் திருத்தலக் கோவை என்பார்கள். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் முதலான அடியார்கள் இவ்வாறு திருத்தலக்கோவை பாடியருளியுள்ளனர். அருணகிரிநாதரும் திருத்தலக்கோவை பாட விரும்பினாராம். <br /> <br /> அதன்படி, கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் எனத் தொடங்கி 29 தலங்களைப் பாடிக்கொண்டே வந்தார். அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது. அவ்வாறு நகைத்தது முருகன் என்பதையும் ‘இத்தலங்களில் மட்டும்தான் யாம் இருக்கிறோமா’ என்று முருகன் கேட்பதாகவும் உணர்ந்தார் அருணகிரியார். ஆகவே, ‘உலகெங்கு மேவிய தேவாலயம் தொரு பெருமாளே’ என்று பாடலை நிறைவு செய்தார் அருணகிரியார். ஆமாம், அகிலங்கள் யாவும் அழகன் முருகனின் அரசாங்கம்தானே? நாமும் அகிலம் செழிக்க, அழகனை வழிபட்டு அருள்பெறுவோம்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong> - கே.கந்தசாமி, சத்தியமங்கலம் <br /> </strong></span></p>