<p><span style="font-size: larger;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span></span>த்தமிழ் முருகனைப் போற்றும் உத்தம நூல்கள் ஏராளம் உண்டு இவ்வுலகில். அவற்றில் குறிப்பிடத்தக்கது - குவிபா ஒருபது. மகான் வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளால் அருளப்பட்டது. தமிழ் எழுத்துகளில், உதடுகள் குவிவதாலும் ஒட்டுவதாலும் வரும் 119 எழுத்துக்களை மட்டும் கொண்டு உருவான 10 பாடல்களைக் கொண்ட தொகுப்பு என்பதால், `குவிபா ஒருபது' எனப் பெயர்பெற்றது. இந்தப் பாடல்களுக்கு தண்டபாணி ஸ்வாமிகளின் சீடரான சோழவந்தானூர் கந்தசாமி ஸ்வாமிகள் உரை வகுத்துள்ளார். <br /> <br /> அற்புதங்களை நிகழ்த்தவல்ல `குவிபா ஒருபது' பாடல்கள் உங்களுக்காகவும்...<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நூல் காப்பு ...</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong></strong></span><br /> <br /> <em><strong>ஒருபது குருபா ஓதுவ கோடு<br /> மருவுபேர் உவாவும் மாவடும் வேலுமே!<br /> </strong></em><br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>விநாயகரான யானையும், கயமுகாசுரனைக் கொன்ற அவரது ஆயுதமும், முருகப்பெருமானின் வேலும் இந்த நூலைக் குற்றமறப் பாடுவிக்கும் திறனை அருளட்டும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>துதிப்பாடல்கள்...</strong></span><br /> <em><strong><br /> முருகோ விபவா மூவா மேலோர் <br /> உருவா வருவாய் ஓதோ(து) ஓமூ(டு)<br /> ஒருவா துறும்ஆ வூமா வேமா <br /> குருகோ லும்அவை கொளுமால் உகுமே.</strong></em></p>.<p><em><strong><br /> </strong></em><br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>பெருமையுடைய முருகக்கடவுளே, பெரியோர் வடிவமாக அன்பரின் முன் வருபவரே, பிரணவத்தின்கண் உள்ள அகார, உகார, மகாரங்களின் பொருளை உபதேசிப்பீராக. அதனால் சகலரின் மயக்கமும் நீங்கட்டும்.<br /> <br /> <em><strong>கூவா வருமா குருகும் வேலும் <br /> பாவால் நுவலும் பவம்ஈ குவையோ <br /> கோவாழ் ஒருவா குவவாம் வாகு <br /> ஓவா ஏவா உமைகோ வதுவே </strong></em><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>மலைகளில் வசிக்கும் ஒப்பில்லாதவரே, புஜத்தின்கண் அம்புடைய சிவகுமாரரே, உமது சேவற்கொடியும் வேலாயுதமும், தமிழோதும் பிறவியை அளிக்காதோ அல்லது முக்தியைத்தான் கொடுப்பாயோ. அல்லது வேறு அருள் யாது செய்வாயோ அறியேன்!<br /> <br /> <em><strong>கோகோ அருளோ கொடுமைப் படுமோ <br /> மாகோ துறும்எம் மைவவா கொளுமோ<br /> ஆகோ டுமுவா அதுகூ டுகுகோ<br /> போகோ வுருவப் புதுமா வுருவே<br /> </strong></em><br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span> விநாயகர் விரும்பி நட்புகொள்ளத்தக்க குகக்கடவுளே, பிரணவ வடிவமான மயில் வாகனத்தையுடைய தெய்வமே, உமது அருள் எங்களை ஆட்கொள்ளுமா?</p>.<p><em><strong>பாவம் படுமிப் பரும்நோ வறுமா <br /> கோவம் பொயொடோ டுறுகோ வுகொடா <br /> மாவம் புறுமா துமைபால் உணுவா<br /> வாவம் புகுமெம் முளும்ஆம் விபுவே </strong></em><br /> <strong><br /> </strong><strong><span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span></strong>உமாதேவியின் திருப்பாலையுண்ட இளமை வடிவினரே, கண்ணீர் விடுத்து இரங்கும் எமது உள்ளத்தில் நிறைந்தவரே, பெருந் துன்பம் நீங்கும்படி ஞானக் கண்ணை அருள்வீராக!<br /> <br /> <em><strong>உருவோ அருவோ உறுமா றுறுவாய்<br /> உருகோம் உயுமா ஒருவா வருவாய் <br /> ஒருவே றுமையோ குளுவார் உளுள்ஓர்<br /> ஒருவா குருவா உவவா விகுவே </strong></em><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>ஆட்டு வாகனத்தில் ஏறும் கடவுளே, தியானிப்பவர்களின் மனதுள் எழுந்தருளும் ஒப்பற்றவரே, பரம குருநாதனாய் இருந்தும் அதனால் இறுமாப்பு அடையாத கம்பீரம் கொண்டவரே, உருவ மாயினும் அருவமாயினும் அன்பர் விரும்பியவாறு வரும் பண்புடையீர் நீர். ஆதலால் எங்கள் முன் ஒரேவிதமாக வருதல் வேண்டும்.<br /> <br /> <em><strong>ஓவா வேலோ(டு) ஒருதூர் வல்உறோம் <br /> மாவா மதுமீ வருகோ முருகோ <br /> வீவா குவனோ வீணோ விதுவே <br /> ஊவா வருளோய் உறுமே றுதுவே</strong></em></p>.<p><em><strong></strong></em><br /> <br /> <strong><span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span></strong>வீணே வாழ்ந்து பயன்கெட்டு மடிவேனோ என்று அஞ்சுகிறேன். துஷ்டருக்கு இடியேறு போன்ற அச்சம் தரும் கருணை கொண்ட முருகப்பெருமானே, உமது வாகனமான மயில் மீதேறி வந்து, எம்மைக் காத்தருளவேண்டும்.<br /> <br /> <em><strong>குவ்வூ டுறுவா குபலோ புவிமே(வு)<br /> அவ்வூ மனுமாம் அதுலோ வவமே <br /> வெவ்வூ றுகொளோம் வழுவோ விழுமம்<br /> மிவ்வூ ழொடுமே விடுமா தொகுவே </strong></em><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>முருகனே! `கு’ எனும் மந்திர எழுத்தின் உட்பொருளாய்த் திகழும் பெருமையைக் கொண்டவரே, மதுரையில் உருத்திரசன்மர் என்ற வாய்ப்பேச இயலா பிள்ளையாக அவதரித்த குமரக்கடவுளே, பெரும்பயன் விழைந்த சிறப்பை இப்பிறப்பிலேயே அருள்வீராக!<br /> <em><strong><br /> வாளோ வெனுமை வாகோ மதுவீ <br /> வேளோ டுபல்நோ மிகுமோ சுடுமா <br /> கோளோ வுவையோ குமவே வுவையோ<br /> ஆளோ வருகோ அறுகோ ணொருமே </strong></em></p>.<p><em><strong></strong></em><br /> <br /> <strong><span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span></strong>மலைகளுக்கும் அறுகோணத்துக்கும் சூட்சுமமான கடவுளே, மாதர்களாலும் மன்மதனாலும் உண்டாகின்ற பெருந் துன்பங்களை நீக்கி அருளவேண்டும். <br /> <em><strong><br /> கோவோ டுவமா குருகோ வுவணோ <br /> மாவே யுணுமா மறுகோ ருருவா <br /> கூவே குகுகூ குகுகூ நுவலும் <br /> வீவே றுவமை வெலுமே ணுதுவே<br /> </strong></em><br /> <strong><span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span></strong>வள்ளிநாயகி தந்த தினை மாவை உண்பதற்காக, மனமயக்கமுடைய ஒரு வடிவு கொண்டவரே, சேவற் கொடியானது தனக்குத் தானே சமமானது. அதன் பெருமையை உலகறியும்படி செய்யவேண்டும்.<br /> <br /> <em><strong>ஒப்பா வொருவேல் உறுதோ ளுறுமீ<br /> முப்பா விடுமா முருகோ முருகு <br /> துப்பா மருவு தொடுபூ மிகுவா <br /> அப்பா பவநோ வணுகோ வெதுவே</strong></em></p>.<p><em><strong></strong></em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>பொருள் : </strong></span>வேலாயுதம் தாங்கிய புஜத்தில் முத்தமிழ் பாமாலைகளை அணியும் முருகக்கடவுளே, தேன்மிக்க பூமாலைகளை மிகப் புனைந்த எந்தையே, எங்கள் பிறவியைப் போக்கத்தக்க மாலை யாது? சொல்வீராக!<br /> <br /> கந்தனின் பெருமை சொல்லும் - விந்தைகள் நிகழ்த்தும் இந்தப் பாடல்களைப் படித்து முருகனைத் துதிப்பவர்களுக்கு இப்பிறவியில் சகல போகங்களும் உண்டாகும். அத்துடன் பெறுதற்கரிய முக்திப் பேறும் வாய்க்கும். </p>
<p><span style="font-size: larger;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span></span>த்தமிழ் முருகனைப் போற்றும் உத்தம நூல்கள் ஏராளம் உண்டு இவ்வுலகில். அவற்றில் குறிப்பிடத்தக்கது - குவிபா ஒருபது. மகான் வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளால் அருளப்பட்டது. தமிழ் எழுத்துகளில், உதடுகள் குவிவதாலும் ஒட்டுவதாலும் வரும் 119 எழுத்துக்களை மட்டும் கொண்டு உருவான 10 பாடல்களைக் கொண்ட தொகுப்பு என்பதால், `குவிபா ஒருபது' எனப் பெயர்பெற்றது. இந்தப் பாடல்களுக்கு தண்டபாணி ஸ்வாமிகளின் சீடரான சோழவந்தானூர் கந்தசாமி ஸ்வாமிகள் உரை வகுத்துள்ளார். <br /> <br /> அற்புதங்களை நிகழ்த்தவல்ல `குவிபா ஒருபது' பாடல்கள் உங்களுக்காகவும்...<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நூல் காப்பு ...</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong></strong></span><br /> <br /> <em><strong>ஒருபது குருபா ஓதுவ கோடு<br /> மருவுபேர் உவாவும் மாவடும் வேலுமே!<br /> </strong></em><br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>விநாயகரான யானையும், கயமுகாசுரனைக் கொன்ற அவரது ஆயுதமும், முருகப்பெருமானின் வேலும் இந்த நூலைக் குற்றமறப் பாடுவிக்கும் திறனை அருளட்டும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>துதிப்பாடல்கள்...</strong></span><br /> <em><strong><br /> முருகோ விபவா மூவா மேலோர் <br /> உருவா வருவாய் ஓதோ(து) ஓமூ(டு)<br /> ஒருவா துறும்ஆ வூமா வேமா <br /> குருகோ லும்அவை கொளுமால் உகுமே.</strong></em></p>.<p><em><strong><br /> </strong></em><br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>பெருமையுடைய முருகக்கடவுளே, பெரியோர் வடிவமாக அன்பரின் முன் வருபவரே, பிரணவத்தின்கண் உள்ள அகார, உகார, மகாரங்களின் பொருளை உபதேசிப்பீராக. அதனால் சகலரின் மயக்கமும் நீங்கட்டும்.<br /> <br /> <em><strong>கூவா வருமா குருகும் வேலும் <br /> பாவால் நுவலும் பவம்ஈ குவையோ <br /> கோவாழ் ஒருவா குவவாம் வாகு <br /> ஓவா ஏவா உமைகோ வதுவே </strong></em><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>மலைகளில் வசிக்கும் ஒப்பில்லாதவரே, புஜத்தின்கண் அம்புடைய சிவகுமாரரே, உமது சேவற்கொடியும் வேலாயுதமும், தமிழோதும் பிறவியை அளிக்காதோ அல்லது முக்தியைத்தான் கொடுப்பாயோ. அல்லது வேறு அருள் யாது செய்வாயோ அறியேன்!<br /> <br /> <em><strong>கோகோ அருளோ கொடுமைப் படுமோ <br /> மாகோ துறும்எம் மைவவா கொளுமோ<br /> ஆகோ டுமுவா அதுகூ டுகுகோ<br /> போகோ வுருவப் புதுமா வுருவே<br /> </strong></em><br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span> விநாயகர் விரும்பி நட்புகொள்ளத்தக்க குகக்கடவுளே, பிரணவ வடிவமான மயில் வாகனத்தையுடைய தெய்வமே, உமது அருள் எங்களை ஆட்கொள்ளுமா?</p>.<p><em><strong>பாவம் படுமிப் பரும்நோ வறுமா <br /> கோவம் பொயொடோ டுறுகோ வுகொடா <br /> மாவம் புறுமா துமைபால் உணுவா<br /> வாவம் புகுமெம் முளும்ஆம் விபுவே </strong></em><br /> <strong><br /> </strong><strong><span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span></strong>உமாதேவியின் திருப்பாலையுண்ட இளமை வடிவினரே, கண்ணீர் விடுத்து இரங்கும் எமது உள்ளத்தில் நிறைந்தவரே, பெருந் துன்பம் நீங்கும்படி ஞானக் கண்ணை அருள்வீராக!<br /> <br /> <em><strong>உருவோ அருவோ உறுமா றுறுவாய்<br /> உருகோம் உயுமா ஒருவா வருவாய் <br /> ஒருவே றுமையோ குளுவார் உளுள்ஓர்<br /> ஒருவா குருவா உவவா விகுவே </strong></em><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>ஆட்டு வாகனத்தில் ஏறும் கடவுளே, தியானிப்பவர்களின் மனதுள் எழுந்தருளும் ஒப்பற்றவரே, பரம குருநாதனாய் இருந்தும் அதனால் இறுமாப்பு அடையாத கம்பீரம் கொண்டவரே, உருவ மாயினும் அருவமாயினும் அன்பர் விரும்பியவாறு வரும் பண்புடையீர் நீர். ஆதலால் எங்கள் முன் ஒரேவிதமாக வருதல் வேண்டும்.<br /> <br /> <em><strong>ஓவா வேலோ(டு) ஒருதூர் வல்உறோம் <br /> மாவா மதுமீ வருகோ முருகோ <br /> வீவா குவனோ வீணோ விதுவே <br /> ஊவா வருளோய் உறுமே றுதுவே</strong></em></p>.<p><em><strong></strong></em><br /> <br /> <strong><span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span></strong>வீணே வாழ்ந்து பயன்கெட்டு மடிவேனோ என்று அஞ்சுகிறேன். துஷ்டருக்கு இடியேறு போன்ற அச்சம் தரும் கருணை கொண்ட முருகப்பெருமானே, உமது வாகனமான மயில் மீதேறி வந்து, எம்மைக் காத்தருளவேண்டும்.<br /> <br /> <em><strong>குவ்வூ டுறுவா குபலோ புவிமே(வு)<br /> அவ்வூ மனுமாம் அதுலோ வவமே <br /> வெவ்வூ றுகொளோம் வழுவோ விழுமம்<br /> மிவ்வூ ழொடுமே விடுமா தொகுவே </strong></em><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span>முருகனே! `கு’ எனும் மந்திர எழுத்தின் உட்பொருளாய்த் திகழும் பெருமையைக் கொண்டவரே, மதுரையில் உருத்திரசன்மர் என்ற வாய்ப்பேச இயலா பிள்ளையாக அவதரித்த குமரக்கடவுளே, பெரும்பயன் விழைந்த சிறப்பை இப்பிறப்பிலேயே அருள்வீராக!<br /> <em><strong><br /> வாளோ வெனுமை வாகோ மதுவீ <br /> வேளோ டுபல்நோ மிகுமோ சுடுமா <br /> கோளோ வுவையோ குமவே வுவையோ<br /> ஆளோ வருகோ அறுகோ ணொருமே </strong></em></p>.<p><em><strong></strong></em><br /> <br /> <strong><span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span></strong>மலைகளுக்கும் அறுகோணத்துக்கும் சூட்சுமமான கடவுளே, மாதர்களாலும் மன்மதனாலும் உண்டாகின்ற பெருந் துன்பங்களை நீக்கி அருளவேண்டும். <br /> <em><strong><br /> கோவோ டுவமா குருகோ வுவணோ <br /> மாவே யுணுமா மறுகோ ருருவா <br /> கூவே குகுகூ குகுகூ நுவலும் <br /> வீவே றுவமை வெலுமே ணுதுவே<br /> </strong></em><br /> <strong><span style="color: rgb(0, 0, 255);"><strong>கருத்து: </strong></span></strong>வள்ளிநாயகி தந்த தினை மாவை உண்பதற்காக, மனமயக்கமுடைய ஒரு வடிவு கொண்டவரே, சேவற் கொடியானது தனக்குத் தானே சமமானது. அதன் பெருமையை உலகறியும்படி செய்யவேண்டும்.<br /> <br /> <em><strong>ஒப்பா வொருவேல் உறுதோ ளுறுமீ<br /> முப்பா விடுமா முருகோ முருகு <br /> துப்பா மருவு தொடுபூ மிகுவா <br /> அப்பா பவநோ வணுகோ வெதுவே</strong></em></p>.<p><em><strong></strong></em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>பொருள் : </strong></span>வேலாயுதம் தாங்கிய புஜத்தில் முத்தமிழ் பாமாலைகளை அணியும் முருகக்கடவுளே, தேன்மிக்க பூமாலைகளை மிகப் புனைந்த எந்தையே, எங்கள் பிறவியைப் போக்கத்தக்க மாலை யாது? சொல்வீராக!<br /> <br /> கந்தனின் பெருமை சொல்லும் - விந்தைகள் நிகழ்த்தும் இந்தப் பாடல்களைப் படித்து முருகனைத் துதிப்பவர்களுக்கு இப்பிறவியில் சகல போகங்களும் உண்டாகும். அத்துடன் பெறுதற்கரிய முக்திப் பேறும் வாய்க்கும். </p>