<p><strong><span style="color: rgb(255, 0, 0);">நா</span>ற்பது வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் அத்திவரதர் வைபவம், வரும் 1.7.19 முதல் 17.8.19 வரை நடைபெறுகிறது. முதல் 24 நாள்கள் சயன நிலையிலும் அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் அருள் பாலிப்பார். </strong><br /> <br /> </p>.<p> காலை 6 முதல் மதியம் 2 மணி வரையும்; மதியம் 3 முதல் 8 மணி வரையும் தரிசனத்துகாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 5 முதல் 8 மணி வரை உள்ளூர் மக்கள் தரிசனம் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆனி கருடசேவை மற்றும் ஆடி மாதம் கருடசேவை போன்ற உற்சவ காலங்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை பொது தரிசனம் இல்லை. <br /> அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்ததும் மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேறவேண்டும்.<br /> <br /> </p>.<p> பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படு கிறார்கள். பொதுதரிசனத்துக்கு எவ்வித கட்டணமும் இல்லை. சிறப்பு தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.</p>.<p> சகஸ்ர நாமம் தரிசனம் காலை 11 முதல் 12 மணி வரையும்; மாலை 5 முதல் 6 மணி வரையும் நடைபெறும். சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய நபர் ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசனத்துக்கு மேற்குக் கோபுரம் வழியாக வரும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டை ஆன்லைனில் பெறலாம். </p>.<p> தேவராஜர் மற்றும் தாயார் சந்நிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசையை ஏற்படுத்தி இருக் கிறார்கள். <br /> <br /> </p>.<p> காஞ்சிபுரம் நகரத்தில் ஓரிருக்கை, ஒலிமுகமது பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதிப்பள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒளிமுகமதுபேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.<br /> </p>.<p>சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப் பேட்டை பேருந்து நிலையத்திலும்; உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, செய்யாறு, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரிக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிருக்கை பேருந்து நிலையத்திலுமிருந்து புறப்படும். தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடையும்.<br /> <br /> </p>.<p> தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்ல 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.<br /> <br /> </p>.<p> காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் 22 தற்காலிகக் கழிப்பிடங்கள் கூடுதலாக அமைக்க வும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36; பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 என்ற எண்ணிக்கையில் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.<br /> <br /> </p>.<p> தற்காலிக பேருந்து மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு இயந்திரங்களும், வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் 6 புதிய சுத்தகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. <br /> <br /> </p>.<p> அதேபோல் 5,000 லிட்டர் கொள்ளவுகொண்ட நீர்தேக்கக் குடிநீர்த் தொட்டி, கோயிலுக்குள் ஒன்றும் கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங் களிலும் அமைக்கப்படவுள்ளது. மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்படவுள்ளது.<br /> <br /> </p>.<p> குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 100 மீட்டருக்கு ஒரு சி.சி.டி.வி கேமரா அமைக்கப் பட்டுள்ளது. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.<br /> <br /> </p>.<p> சுகாதாரத் துறையின் மூலமாக கோயிலின் உள்பகுதியில் ஐந்து மருத்துவக் குழுக்களும், வெளியில் நான்கு மருத்துவக் குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. முக்கியப் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன்கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.<br /> <br /> </p>.<p> அத்தி வரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். அந்த உணவின் மாதிரி பரிசோதனை செய்யப்படும். <br /> <br /> </p>.<p> காஞ்சிபுரத்திலுள்ள தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவருகின்றன. ஆகவே, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களைத் திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்குத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- பா. ஜெயவேல்</strong></span></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">நா</span>ற்பது வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் அத்திவரதர் வைபவம், வரும் 1.7.19 முதல் 17.8.19 வரை நடைபெறுகிறது. முதல் 24 நாள்கள் சயன நிலையிலும் அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் அருள் பாலிப்பார். </strong><br /> <br /> </p>.<p> காலை 6 முதல் மதியம் 2 மணி வரையும்; மதியம் 3 முதல் 8 மணி வரையும் தரிசனத்துகாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 5 முதல் 8 மணி வரை உள்ளூர் மக்கள் தரிசனம் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆனி கருடசேவை மற்றும் ஆடி மாதம் கருடசேவை போன்ற உற்சவ காலங்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை பொது தரிசனம் இல்லை. <br /> அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்ததும் மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேறவேண்டும்.<br /> <br /> </p>.<p> பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படு கிறார்கள். பொதுதரிசனத்துக்கு எவ்வித கட்டணமும் இல்லை. சிறப்பு தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.</p>.<p> சகஸ்ர நாமம் தரிசனம் காலை 11 முதல் 12 மணி வரையும்; மாலை 5 முதல் 6 மணி வரையும் நடைபெறும். சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய நபர் ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசனத்துக்கு மேற்குக் கோபுரம் வழியாக வரும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டை ஆன்லைனில் பெறலாம். </p>.<p> தேவராஜர் மற்றும் தாயார் சந்நிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசையை ஏற்படுத்தி இருக் கிறார்கள். <br /> <br /> </p>.<p> காஞ்சிபுரம் நகரத்தில் ஓரிருக்கை, ஒலிமுகமது பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதிப்பள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒளிமுகமதுபேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.<br /> </p>.<p>சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப் பேட்டை பேருந்து நிலையத்திலும்; உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, செய்யாறு, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரிக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிருக்கை பேருந்து நிலையத்திலுமிருந்து புறப்படும். தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடையும்.<br /> <br /> </p>.<p> தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்ல 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.<br /> <br /> </p>.<p> காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் 22 தற்காலிகக் கழிப்பிடங்கள் கூடுதலாக அமைக்க வும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36; பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 என்ற எண்ணிக்கையில் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.<br /> <br /> </p>.<p> தற்காலிக பேருந்து மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு இயந்திரங்களும், வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் 6 புதிய சுத்தகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. <br /> <br /> </p>.<p> அதேபோல் 5,000 லிட்டர் கொள்ளவுகொண்ட நீர்தேக்கக் குடிநீர்த் தொட்டி, கோயிலுக்குள் ஒன்றும் கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங் களிலும் அமைக்கப்படவுள்ளது. மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்படவுள்ளது.<br /> <br /> </p>.<p> குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 100 மீட்டருக்கு ஒரு சி.சி.டி.வி கேமரா அமைக்கப் பட்டுள்ளது. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.<br /> <br /> </p>.<p> சுகாதாரத் துறையின் மூலமாக கோயிலின் உள்பகுதியில் ஐந்து மருத்துவக் குழுக்களும், வெளியில் நான்கு மருத்துவக் குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. முக்கியப் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன்கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.<br /> <br /> </p>.<p> அத்தி வரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். அந்த உணவின் மாதிரி பரிசோதனை செய்யப்படும். <br /> <br /> </p>.<p> காஞ்சிபுரத்திலுள்ள தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவருகின்றன. ஆகவே, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களைத் திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்குத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- பா. ஜெயவேல்</strong></span></p>