
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ராஜா தேசிங்கு வழிபட்ட ஆலயம், மலையடிவாரத்தில் ஸ்ரீஅனுமன், புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்கை என இந்தத் தலத்தின் சிறப்புகள் ஏராளம்.
பள்ளி கொண்ட ஸ்ரீரங்கநாதரை, தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அப்படியரு அழகு. போருக்குச் செல்ல வேண்டாம் என்று ராஜா தேசிங்கிடம் சொல்லியும் அவர் கேட்காததால், கோபத் துடன் தெற்கு நோக்கி முகம் திருப்பிக் கொண்டு காட்சி தருகிறார் என்பது ஐதீகம்! தவிர, நீண்ட ஆயுளுக்கான திசை பார்த்து தரிசனம் தருகிறார் ரங்கநாதபெருமாள் என்றும் சொல்வர்!

இந்தத் தலத்தில், மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மக நாளில் செஞ்சியில் தீர்த்தவாரியில் பங்கேற்று தரிசனம் தரும் உத்ஸவர், மறுநாள் புதுச்சேரியில் நடை பெறும் தீர்த்தவாரியிலும் கலந்துகொள்வாராம்!
சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள வசந்த மண்டபத் தில், சர்வ அலங்காரத்துடன் வந்து காட்சி தரும் உத்ஸவரைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நிற்பார்கள். பிறகு 'ரங்கா... ரங்கா...’ எனும் கோஷங்கள் விண்ணைத் தொட... தீர்த்தவாரி நடைபெறும்.
அரங்கனுக்கு தீர்த்தவாரி நடைபெறும்போது, அருகில் உள்ள சிவாலயத்தில் இருந்து ஸ்வாமியும் அம்பாளும் கலந்து கொள்வது சைவ-வைணவ ஒற்றுமைக்குச் சான்று!
சிங்கவரம் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு ஸ்ரீரங்கனைத் தரிசியுங்கள்; நம் சிக்கல்கள் யாவும் விலகும்!
கட்டுரை, படங்கள்: பூ.கொ.சரவணன்